Monday, December 28, 2009

திப்பு கோட்டையில் ராம்கி.




திப்பு கோட்டையில் ராம்கி.

நானும் எனது பாலக்காடு ஆட்டோ நண்பர் திரு ஹைதர் அலியும் பாலக்காடு கோட்டைக்கு 27.12.09 அனறு சென்றுவந்தோம். இதோ அக்கோட்டை பற்றிய விவரங்கள்.

பாலக்காட்டில் அமைநதுள்ளது பாலக்காடு கோட்டை (அ) திப்பு கோட்டை. 15 ஏக்க்ர் நிலபரப்பில் கட்டப்பட்டுள்ளது. 1788 ஆம் ஆண்டு ஹைதர் அலியால் பிரான்ஸ் நாட்டு இன்ஜ்னீயர்களின் உதவியோடு கட்டப்பட்டது. அலியின் படைத் தலைமையகமாக இக்கோட்டை இருந்ததாம். பிறகு இக்கோட்டையை ஆங்கியேர்களிடமிருந்து ஹைதர் அலியின் மகன் திப்பு சுல்லதான் கைபற்றினான். சதுர வடிவில் அமைக்கப்ட்டுள்ள இந்தக்கோட்டைக்குள் எதிராளி எளிதில் உள்ளே நுழையாதவண்ணம் சுற்றிலும் ஆழமான தண்ணீர் தொட்டி உள்ளது, இதன் அருகில் உள்ள மைதானத்தில் தான் திப்பு சுல்தான் தனது யாணைகளையும் குதிரைகளையும் நிறுத்திவைப்பானாம், அதற்கு கோட்டை மைதானம் என்று பெயர், இந்த திறந்த வெளிமைதானத்தில் தற்போது மீட்டிங். சர்க்கஸ் மற்றும் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. இக்கோட்டைக்குள் ஒரு சிறிய அனுமான் கோவிலும் உள்ளது, அக்காலத்தில் கட்டப்பட்டதாம். உள்ளே நுழைந்த்தும், ஒரே வெண்ணை மணம். மேலும் சிறைச்சாலை, சமையல் அறைகளும் உள்ளே பாழடைந்துகிடக்கிறது,. மிகப்பெரிய, பழமையான மரங்கள் தன்கிளை வரித்து கோட்டைக்குள் நமக்கு குளிர்ச்சியூட்டுகிறது.

அனுமதி இலவசம். அக்கோட்டையின் மீது மேலே ஏறிப்பார்த்தால் பாலக்காட்டின் அழகை ரசிக்கலாம். வாக்கிங் செல்ல ஏற்ற இடம். தற்போது அங்கு படகுசவாரி இல்லை...ரசிக்க வேண்டிய புராதன கோட்டை இது. பாலக்காடு சென்றால் இனி இதை ஒரு முறையாவது பாராமல் வரமாட்டீர்கள் அல்லவா?

ராம்கி

Saturday, December 26, 2009

வாழ்க்கை எனும் பந்து



வாழ்க்கை எனும் பந்து

சர்க்கஸ்களில் ஒரு கோமாளி தன் கைகளில் ஐந்து பந்துகளை ஒன்றின்பின்ஒன்றாக மேலே தூக்கிப்போட்டுக்கொண்டே இருப்பான். அவன் கையில் ஒவ்வொரு பந்தும் ஒருசில நொடிகளே
இருக்கும், மாறிமாறி பந்துகள் மேலும் கீழும் வேகமாக இரண்டு கைகளுக்குமிடயே பறந்து கொண்டுயிருப்பதை பார்த்து நாம் கைதட்டி மகிழ்ந்திருக்கிறோம் அல்லவா? இந்த எளிய விளையாட்டைக்கொண்டு COCO COLA நிறுவனத்தின் தலைவர் பிரேயான் டைசன் என்ன சொல்கிறார் தெரிமா?

“அப்படி அந்தரத்தில் சுழன்று கொண்டிருக்கும் அந்த ஐந்து பந்துகளுக்கும் நாம் ஒரு பெயர் இடுவோம். முதல் பந்தின் பெயர் நம் “வேலை”. இரண்டாவது பந்தின் பெயர் நம் “குடும்பம்”. மூன்றாவது பந்தின் பெயர் நம் “உடல்நலம்”, நான்காவது பந்தின் பெயர் நம் “நண்பர்கள்”, ஐந்தாவது பந்தின் பெயர் நம் “தைரியம்”. இப்போது இந்த ஐந்துபந்துகளையும் (அதாவது வேலை, குடும்பம், உடல்நலம், நண்பர்கள், தைரியம்) மேலேதூக்கிபோட்டு அந்த கோமாளி விளையாடுவது போன்று இன்று வாழ்கையில் நாம் விளையாடிக்கொண்டிருக்கிறோம். “வேலை” என்ற பந்தானது ரப்பரால் ஆனது போன்றது. அதை கீழே போட்டால், தானாக மேலே எழும்பி விடும்.

ஆனால், மற்ற பந்துகளான நம் குடும்பம், உடல்நலம், நண்பர்கள், தைரியம் போன்றவை கண்ணாடிகளால் செய்யப்பட்டது போன்றது. இவற்றில் நாம் எதைத் தவறவிட்டாலும், சட்டென உடைந்து, சுக்கு நூறாக போய்விடும். எடுத்து ஒட்டவைக்கவோ அல்லது பழையவடிவத்திற்கு கொண்டுவரவோ யாராலும் இயலாது. இதை புரிந்து கொண்டு வாழ்க்கையில் இந்த நான்கு பந்துகளையும் மிக கவனமாக கையாளவேண்டும்”.
(அட சாச்சுபுட்டாரய்யா !!.......)

PORUR RAMKI

Thursday, December 24, 2009

அந்த 7 வார்த்தைகள் - வெற்றிக்கு ரகசியம்



அந்த 7 வார்த்தைகள்

1870ம் ஆண்டுகளில் நியூ ஜெர்சியில் தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார விளக்கை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். பலமுறை தொடர்ந்து ஆராய்ச்சிகள் செய்தபோதிலும் தோல்வி அடைந்தன அவரது முயற்சிகள். அப்போது அவரது தோல்வி பற்றி ஊரே பேசியது. 500 விதமான முயற்சிகளிலும் அவர் தோல்வியை தழுவினார். அப்போது ஒரு பத்திரிகையாளர், இத்தனை முறை தோல்வி கண்ட பிறகும், ஏன் இந்த ஆராய்ச்சி, பேசாமல் விட்டுவிடவேண்டியதுதானே? என எடிசனிடம் கேட்டார். அப்படி இல்லையம்மா..நான் 500 முறை தோற்கவில்லை. மாறாக 500 மாற்று வழிகளை கண்டுபிடித்தேன் ஆனால் அது பயன் அளிக்கவில்லை. ஆனால் விரைவில் வெற்றிபெறுவேன் என்று நம்பிக்கையோடு பதில் அளித்தார். அவரது நம்பிக்கை 1879ம் ஆண்டு பெற்றிபெற்று முதன்முதலில் மின்சார விளக்கை அமைத்து பின் உலகையே ஒளிமயமாக்கினார். அவர் மறையும்போது 1024 வித பேட்டன்கள் அவரது பெயரில் இருந்தது, மேலும் ஜென்ரல் எலெக்ட்ரிக் கம்பெனியும் உதயமானது. அவர் உலகைமட்டும் ஒளிமயமாக்கவில்லை. முயற்சி திருவினையாக்கும் என்பது போல் தோல்விகளே வெற்றியின் படிகற்கள் என்று நமக்கு ஒரு படிப்பினை தந்ததை மறுக்க இயலுமா?

நாம் தோல்வியை கண்டு துவண்டுவிடக்கூடாது. தோல்விகள் நமக்கு வாழ்வில் பல படிப்பினை சொல்லாமல் சொல்லித்தருகிறது. நாம் நமது இலக்கில் வெற்றிபெற வேண்டுமானால், தோல்விகள் இரட்டிப்பாக இருக்கவேண்டும், யாரையும் குறைசொல்லி பயன்இல்லை. உங்களது திறமையில் சந்தேகம் அடையவேண்டாம். செய்த தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய உள்ளது. மீண்டும் நமது இலக்கில் கவனம் வைத்து முன்னேற வேண்டியதுதான்.
சிலசமயம் ஒருகாரியத்தில் இறங்கிவிட்டு நாம் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லையெனில் அப்படியே விட்டுவிடுகிறோம். இன்னும் கொஞ்சம் முயற்சி செய்திருந்தால் நமது இலக்கை கட்டயம் எட்டியிருப்போம், உங்களது வெற்றி இன்னும் ஒரு கிலோ மீட்டர் துரத்தில் உள்ளது என யாரும் சொல்லமாட்டாகள். எத்தனையோ பேர் வெற்றி அருகில் வரும் சமயத்தில் நமக்கு கிடைக்காது என்று விட்டுவிடுகிறார்கள்.
ஒரு மரத்தை உடைக்க கோடாரியால் ஒருமுறை வெட்டினால் இரண்டாக பிளந்துவிடுமா? பலமுறை வெட்டிபிறகுதான் மரத்தில் ஒரு சிறிய கீரலே தெரியும், பிறகு மீண்டும் பலமுறை கொத்திய பின்பே மரம் இரண்டாக பிளக்கும். மரம் பிளந்த்து அந்த சிறய கீரலால் அல்ல..முன்பு பலமுறை கோடாரியால் உடைத்ததால், அது போல் தான் வெற்றியும்.
நம் குழந்தைகள் முதன்முதலில் நடக்க முற்படும்போது பலமுறை கீழே விழுந்து, விழுந்து எழுந்து பிறகு தான் நடக்க ஆரம்பிப்பார்கள். கீழே விழுவதை பற்றி குழந்தைகள் கலைப்படாமல் பல முறை மீண்டும், மீண்டும் முயற்சிசெய்வார்கள் விடாமுயற்சியோடு. குழந்தைகள் பெரியவர்கள்போன்று ஒரு சில முறைமட்டும் நடக்க முயற்சிசெய்துவிட்டு பிறகு விட்டுவிட்டால் அவர்களால் நடந்திருக்க முடியுமா என்று நாம் யோசிக்கவேண்டும்.
பெரியவர்களான நாம் அந்த பாடத்தை மறந்துவிட்டோம். நாம் முதல் அடி எடுத்தவைக்கவே பயப்படுகிறோம். காரணம் எங்கே நாம் தோற்றுவிடுவோமோ, எழமுடியாமல் போய்விடுமோ என்ற அச்சம். முதல் முயற்சியில் நாம் தோல்விகண்டால் அப்படி துவண்டுவிடுகிறோம். சர் வின்ஸ்டன் சர்ச்சிலிடம் சில குழந்தைகள் அவரின் வெற்றியின் ரகசியம் என்ன என்று கேட்டார்கள். அவர் சொன்ன அந்த 7 வார்த்தை “NEVER GIVE UP, NEVER, NEVER GIVE UP!”
மேலும் ஒரு ஆங்கில பதம் உண்டு, அது WINNERS NEVER QUIT. AND QUITTERS NEVER WIN.
பல முறை தோல்வி அடைந்தாலும் நமது இலக்கிலிருந்து மனதை திசைதிருப்பக்கூடாது. தொலைவிலோ, அருகிலோ தொடந்து முயன்றால் வெற்றிக்கனி நிச்சம் நம் கையில். வாழ்த்துக்கள்.

ராம்கி

Monday, December 21, 2009

MR. D. SIVANANDHAN IPS, MUMBAI POLICE COMMISSIONER AND RAMKI



MR. D. SIVANANDHAN IPS, MUMBAI POLICE COMMISSIONER AND RAMKI at a function at Aditya Jyot Eye Hospital.

Saturday, December 19, 2009

லேட் திருமதி நாராயணி



நாராயணி அத்தங்காள்.
எங்கள் குடும்பத்தோடு மிகவும் நெருக்கமானவர். தலைமை ஆசிரியராக இருந்தமையால் நான் அன்போடு டீச்சர் அல்லது HM இருக்காங்களா என்று பேசுவேன். பலமுறை மாற்றுக்குரலில் பேசி அவர்களை சிரிக்க வைப்பேன். ஆத்துக்கு வாடா கோந்தே என்று அன்போடு அழைப்பார்கள். அவர்கள் பேசும் போது அடிக்கடி கேளு...கேளு...கேளு என்று சொல்லுவார்கள். அவரது அகால மரணம் எங்கள் உறவினர்கள் அனைவருக்கும் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியது, அவரது மரணம் ஒரு இடியாக விழுந்தது. அவரது ஆத்மா சாந்தி அடைய நாங்கள் அனைவரும் வேண்டுகிறோம். அவரது நல்ல மனம் வாழ்க...

ராம்கியின் புதிய வீட்டுக்கு


சிரிங்க சிரிங்க

திரு சிவானந்தன் மற்றும் ராமகி

Friday, December 18, 2009

இறைவன், மனிதன் - மறைந்த கே. எஸ். ராமசாமி



இறைவன், மனிதன்

ஒருகால் தவத்தால் உயர்வான் மனிதன்
ஒன்றாய் நினைத்தால் வருவான் இறைவன்

ஒருவன் கொடுத்தால் என்றும் பெறுவான்
ஒன்றாய் இணைந்தால் உயர்வான் மனிதன்!

தன்னலம் விடுப்பது தவமாகும்
தனக்கில்லாதளிப்பது புகழாகும்

தாழ்வை உயர்த்திட சமமாகும்
வாழ்வு செழித்திட ஒருவழியாகும்!!

என்றும் திருநாள் இறைவனுக்கு
ஒருநாள் திருநாள் மனிதனுக்கு

மற்ற உயிர்களுக்கு வெறுநாள்
வாழ்நாள் எல்லோருக்கும் சிலநாள்!!!


மறைந்த கே. எஸ். ராமசாமி

Saturday, December 12, 2009

ஸ்ரீராம் பூஜா நேரம்



VERY RARE PHOTO........

எளிமைக்கு மறுபெயர் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத்




எளிமைக்கு மறுபெயர்
டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத்
-ராம்கி,

சென்னை சங்கர நேத்ராலயா மருத்துவ மனையின் தலைவர் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் அவர்களை பல முறை சந்தி்த்த வேலை.........

பல ஆண்டுகளுக்கு முன்பு சைல்டு டிரஸ்ட் மருத்துவமனையை சங்கர மடம் நிர்வாகிக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்ட போது ஒரு பத்திரிக்கைக்காக மருத்துவனை துவக்க விழாவிற்கு சென்றேன். காஞ்சி மடாதிபதிகள் அவ்விழாவிற்கு வருகை தந்தார்கள். அப்போது டாக்டர் பத்ரிநாத் அவர்களும் வந்திருந்தார்கள். அந்த இடம் முழுவதும் ஒரே மக்கள் கூட்டம். சுவாமிகள் ஒரு அறையிலிருந்து வெளியே வருவதைக் கண்ட டாக்டர் பத்ரிநாத் அவர்கள் சாஷ்டாங்கமாக கீழே விழுந்து பொது இடம் என்றும் பாராமல் நமஸ்காரம் செய்வதை கண்டேன். இத்தனை பெரிய கண் மருத்துவர் இவ்வளவு பெரிய கூட்டங்களுக்கு இடையேயும் காஞ்சிமட சுவாமிகள் பாதம் பணிந்து வணங்கியது என்னை மிகவும் நெகிழ வைத்தது, அப்போதே அவரின் பணிவு எனக்கு மிகவும் பிடித்துப்போனது,

வேறோரு சமயம் அகில இந்திய கண் மருத்துவர்கள் மாநாட்டிற்கு சென்ற போது, மும்பை டாக்டர் எஸ் நடராஜன் அவர்கள் விஞ்ஞான குழு தலைவராக இருந்தார். அப்போது அந்த மாநாட்டில் டாக்டர் நடராஜன் அவர்கள் எனக்கு டாக்டர் பத்ரிநாத் அவர்களை தனியே அறிமுகம் செய்து வைத்தார். “சார். இவர் தான் ராம்கி.... டாக்டர் பாபு அவர்களிடம் பயிற்சி பெற்று தற்போது மும்பை வந்து என்னுடன் இருக்கிறார்..நம்ம அப்ஸ்டாரக்ட் புத்தகத்தை தயாரித்தவரும் இவர் தான்”, என்று அறிமுகப்படுத்தினார். இருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்து என்னை மனதார பாராட்டினார். அன்று காஞ்சி மடசுவாமிகளிடம் அவர் நடந்து கொண்ட பணிவு எனக்கு சட்டென நினைவுக்கு வர நானும் அவரது பாதம் தொட்டு ஆசிர்வாதம் வாங்கினேன். “அடடே” என்றவாறு என் தோள்களை எடுத்து “நீங்க நடராஜன் கூட இருப்பது எனக்கு முன் கூட்டியே தெரியும். புத்தகம் ரொம்ப நல்லா வந்திருக்கு....டாக்டர் நடராஜனுக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது கீப் அட் அப் ராம்கி” என்று பாராட்டினார். “எல்லாம் உங்கள் ஆசிர்வாதம்” என்று கூறி விடைபெற்றேன். இது எனது முதல் சந்திப்பு. பிறகு அதற்கு அடுத்த நாள் அந்த மாநாட்டில் மதிய உணவு உட்கொள்ளும் இடத்தில் டாக்டர் பத்ரிநாத் தனியாக இருப்பதை பார்த்தேன். நானே மீண்டும் அறிமுகம் செய்து கொண்டு “என்ன சார் நன்றாக சாப்பிட்டீர்களா?” என்று விசாரித்தேன், “ஓ ஆச்சுப்பா…” என்ற என் தோள்களில் கைபோட்டு மெல்ல நடந்தார். அத்தனை பெரிய மருத்துவர் இத்தனை எளிமையாக இருக்கிறாரே என்று வியந்தேன்,. அவ்வாறு நாங்கள் மெல்ல நடக்கையில் எனது குடும்பத்தாரை பற்றி விசாரித்தார். “மும்பை சௌகரியமாக இருக்கா.. மும்பை பிடிச்சிருக்கா” என்றல்லாம் சாதராணமாக ஒரு பந்தா இல்லாமல் என்னிடம் பழகியதை கண்டு நெகிழ்ந்து போனேன்.


பலமுறை டாக்டர் நடராஜன் அவர்கள், தான் டாக்டர் பத்ரிநாத் அவர்களுடன் பணியாற்றிய போது நடந்த நிகழ்ச்சிகளை எங்களுக்கு சொல்வார். சில சிக்கல்களை எவ்வாறு டாக்டர் பத்ரிநாத் அவர்கள் கையாள்வார் என்பதையும் அடிக்கடி சொல்லுவார். மற்றும் எவ்வாறு தன்னை சந்திக்க வரும் நோயாளிகளிடம் அவர் நடந்து கொள்வார் என்பதையும் மிக உயர்வாக டாக்டர் நடராஜன் சொல்லும் போது மிகவும் ஆவலாக கேட்போம். இவரது பல பண்புகளை டாக்டர் நடராஜன் அப்படியே பின்பற்றி வருகிறார் என்றால் அது மிகையாகாது. டாக்டர் நடராஜன் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் டாக்டர் பத்ரிநாத் தம்பதிகள் வைத்துள்ளதை கண்கூடாக கண்டேன்.


ஒரு சில மாதங்கள் கழித்து டாக்டர் பத்ரிநாத் அவர்கள் மும்பை வழியாக வேறு ஒரு மாநிலத்திற்கு செல்வதாக டாக்டர் நடராஜன் அவர்களுக்கு தகவல் வந்தது. அப்போது அவரது மருத்துவ மனையில் ஏகப்பட்ட நோயாளிகள் இருந்ததால், அவரால் விமான நிலையம்செல்ல முடியாத நிலை ஏற்பட்டது, என்னை அழைத்து உடனே விமான நிலையம் சென்று டாக்டர் பத்ரிநாத் அவர்களை சந்தித்து ஒரு பூங்கொத்து கொடுத்து, நான் வரமுடியாதை நிலையை விளக்கச் சொன்னார். காரில் விமான நிலையம் அடைந்தும் டாக்டர் பத்ரிநாத் தம்பதிகள் தங்கள் பெட்டிகளை எடுப்பதில் மும்மரமாக இருந்தனர். அப்போது நான் வெளியே இருந்து கையசைக்க திருமதி பத்ரிநாத் அவர்கள் என்னை பார்த்துவிட்டார்கள், “யாரோ வெளியே உங்களை பார்த்து கையசைக்கிறார்கள்” என்று தனது கணவரிடம் சொல்ல, டாக்டர் பத்ரிநாத் அவர்கள் என் பக்கம் திரும்பி கையசைத்து நேரே என்னிடம் வந்தார், “சார் டாக்டர் நடராஜன் வர இயலாததால் நான் வந்தேன்” என்று அவரது கையில் அந்த பூங்கொத்தை கொடுத்தேன். மகிழ்ச்சியோடு வாங்கிக்கொண்ட அவர் “எதுக்கு இதெல்லாம்....” என்றவாறு நன்றி சொல்லி கைகொடுத்தார். “கொஞ்சம் இருங்கோ என் பெட்டியை கொண்டு வந்துவிடுகிறேன்” என்றபடி உள்ளே மீண்டும் சென்று தன் பெட்டியுடன் வெளியே வந்தார். வெளியே வந்ததும் தன் துணைவிக்கு “இவர் தான் ராம்கி..டாக்டர் நடராஜன் கிட்டே இருக்கார். நடராஜன் பூச்சென்டு கொடுத்து அனுப்பியிருக்கார்” என்றபடி பூச்சென்டை துணைவியாரிடம் கொடுத்தார் டாக்டர் பத்ரிநாத் அவர்கள். “சார் தங்களுக்கு கார் ஏதாவது வேண்டுமா? வேறு ஏதாவது உதவிகள் தேவைப்படுகிறதா” என்ற நான் பணிவுடன் கேட்க, “எல்லாம் ஓகே ராம்கி. இதோ இவங்க என்னை கூட்டிகிட்டு போகத்தான் வந்திருக்காங்க” என்று பக்கத்தில் இருவந்தவரை அறிமுகம் செய்தார். “நடராஜன் கிட்டே ரொம்ப கேட்டதா சொல்லுங்க. ரொம்ப தேங்ஸ் சொல்லிடுங்க” என்று கூறியபடி விடைபெற்றார்,

ஒரு சமயம் ஆதித்ய ஜோத் மருத்துவமனைக்கு டாக்டர் பத்ரிநாத் அவர்கள் விஜயம் செய்த போது எனது இருப்பிடத்திற்கும் வந்தார்... “சார் இதுநான் எனது இருக்கை” என்றேன். உடனே அதிர்ந்தவர் “இந்த சின்ன இடத்தில் அமர்ந்தா அவ்வளவு பெரிய வேலைகளை செய்கிறீர்கள்..உடனே டாக்டர் நடராஜன் அவர்களிடம் சொல்லி உங்களுக்கு பெரிய ரூம் கொடுக்கச்சொல்கிறேன்” என்றார்.


மற்றொரு முறை டாக்டர் பத்ரிநாத் அவர்கள் மும்பைக்கு வந்திருந்தார்கள். அன்று டாக்டர் நடராஜன் அவர்கள் ஊரில் இல்லை. முதலில் ஆதித்ய ஜோத் மருத்துவமனைக்கு வந்தபிறகு அவர்களை அழைத்துக்கொண்டு டாக்டர் நடராஜன் அவர்களின் இல்லத்தில் அவரது அன்னையை சந்திப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டது. நான் வரவேற்பரையில் வரவேற்று அவரது பாதம் பணிய, யாரும் எதிர்பாராத விதத்தில் டாக்டர் பத்ரிநாத் அவர்கள் என் கையை எடு்த்து அவரது தலைக்கு மேலே வைத்து குனிந்துவிட்டார். ஒரு நிமிடம் பதறிப்போனேன். என்னே அவரது பணிவு, அங்குள்ள டாக்டர்களுக்கும் ஊழியர்களுக்கும் அறிமுகப்படுத்தினேன். பிறகு டாக்டர் நடராஜன் அவர்களின் இல்லத்திற்கு அழைத்துச்சென்றேன். அப்போது மிக அன்போடும் கனிவோடும் என்னிடம் பேசினார். வீட்டில் என்னையும் அவர் அருகே அமரச்சொன்னார். அப்போது சில ஊழியர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டு என்னிடம் கேட்டனர். டாக்டர் பத்ரிநாத் அவர்களிடம் ஊழியர்களின் விருப்பத்தை சொன்னபோது, “இதோ வருகிறேன்” என்று அனைவருடனும் புகைப்படம் எடுத்துகொண்டு அவர்களின் கைகளை குலுக்கி தன் மகிழ்ச்சியை தெரிவித்தார். ஒவ்வொரு புகைப்படம் எடுக்கும் போதும் “அட, நீங்களும் வாங்க ராம்கி” என்று உரிமையோடு கைபற்றி இழுத்து தன்னுடன் நிறுத்திக்கொண்டார். அப்போது அவரது துணைவியாரும் சகோதரரும் உடன் வந்திருந்தார்கள்.

மும்பையில் இகோனோமிக்ஸ் டைம்ஸ் நாளிதழின் சாதனையாளர் வருதினை வாங்க மறு சமயம் மும்பை வந்த டாக்டர் பத்ரிநாத் அவர்கள், எனக்கும் அழைப்பிதழ் கொடுத்து, டாக்டர் நடராஜன் அவர்களின் தந்தை டாக்டர் சுந்தரம் அவர்களையும் பத்திரமாக விழாவிற்கு அழைத்துவரும் படி கூறினார். மாலையில் விழா துவங்கும் முன் அவரை சந்தித்த போது இன்முகத்துடன் வரவேற்றார். அப்போதும் டாக்டர் பத்ரிநாத் அவர்கள் மிகவும் எளிமையாக இருந்தார். அனைவருடனும பணிவாகவே பேசுவதைக் கண்டேன். தனக்கு அருகே இருந்த லக்மே நிறுவனத்தில் மூத்த அதிகாரியான ஒரு பெண்மணியிடம் எங்களை அறிமுகப்படுத்தினார். இதுபோல அவரை சந்திக்க வந்த பெரிய விஐபிக்களையும் எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். அவ்விழாவிற்கு மத்திய அமைச்சர் திரு, பா. சிதம்பரம் அவர்கள் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். விழாவில் டாக்டர் பத்ரிநாத் அவர்கள் பேசும் போது, “தான் இவ்விருதினை தன் ஊழியர்கள் சார்பாக வாங்க வந்துள்ளேன்” என்று பணிவுடன் கூறியபோது பெரிய கைதட்டல். விழா முடிந்ததும் திரு. சிதம்பரம் அவர்களையும் சந்தித்து பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இவ்விழா முடிந்ததும் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த விருந்திலும் நாங்கள் கலந்து கொள்ள வேண்டும், “சாப்பிட்டுவிட்டுத்தான் செல்லவேண்டும்” என்றார் டாக்டர் பத்ரிநாத் அவர்கள். இந்நிகழ்ச்சியின் போது அவருடன் பேச நிறைய சந்தர்ப்பம் கிடைத்தது. நான் சொல்வதை மிக பொறுமையாகவும் கவனமாகவும் கேட்டார். எனது குடும்ப சுழ்நிலையை விளக்கினேன். “உங்களைப்பற்றியும் உங்களின் திறமையும் எனக்கு நல்லா தெரியம். எப்போது வேண்டுமானாலும் நீங்கள் எங்கள் மருத்துவமனைக்கு வரலாம். சென்னைக்கு வரும் போது என்னை வந்து பாருங்க”, என்று தட்டிக்கொடுத்து ஊக்கம் அளித்தார்.

மும்பையிலிருந்து கோவை வந்த உடன் நான் கோவைக்கு வந்துவிட்டதை அவருக்கு தெரியப்படுத்தியதற்கு இமெயில் மூலமாக வாழ்த்தினார்,
2009 ஜனவரி 1ம் தேதி அவருக்கு போன் செய்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தேன். அப்போது மிகவும் மகிழ்ந்த அவர், அவ்வருடம் நான் தயாரித்த அப்ஸ்டராக்ட் புக் பற்றி மறவாமல் குறிப்பிட்டு “ரொம்ப நன்றாக வந்துள்ளது, நான் மிகவும் மகிழ்கிறேன். டாக்டர் ராமமூர்த்தி விஞ்ஞான குழு தலைவர் ஆன உடன் இந்த புத்தகம் கொண்டு வருவதுதான் முதல் சவால். அது பற்றி டாக்டர் ராமமூர்த்தியின் தந்தையை சந்தித்தபோதும் சொன்னேன். வாழ்த்துக்கள்” என்று நீண்ட நேரம் தானாகவே நினைவுகொண்டு அப்புத்தகத்தைப்பற்றி தன் கருத்துக்களை மனம்விட்டு சொல்லி எனக்கு உற்சாகமளித்தார் டாக்டர் பத்ரிநாத் அவர்கள். மேலும், அடுத்த முறை சென்னைக்கு வரும்போது கட்டயாம் வாங்க...நாம் சந்திப்போம் என்றார்.

பலமுறை போனில் பேசும் வாய்ப்பு ஏற்பட்டது. இவர் படிக்கும் காலத்தில் தன் பெற்றோர் இறந்த பின் கிடைத்த இன்சூரன்ஸ் பணத்தில் தான் படித்து மருத்துவ படிப்பை முடிந்தார் என்று ஒரு பத்திரிக்கையில் படித்த பின், அச்செய்தியை படித்தபோது நான் மிகவும் நெகிழ்ந்ததாக போனில் சொன்னேன். அப்போது அவர் எப்படி கஷ்டப்பட்டு படிப்படியாக உயர்ந்துள்ளார் என்பது புரிந்தது,


டாக்டர் பத்ரிநாத் அவர்கள் நான் எப்பொது இமெயில் அனுப்பினாலும் தவறால் இரத்தின சுருக்கமாக ஆனால் “நச்” என்று தவறாமல் பதில் அனுப்புவார்.

நான் பழகிய படதயாரிப்பாளரும், ஸ்டூடியோ நிறுவனருமான மறைந்த நாகிரெட்டி அவர்களும் மிகவும் எளிமையாகவே எப்போதும் இருப்பார். அதுபோன்றே டாக்டர் பத்ரிநாத் அவர்களும் இவ்வளவு பெயரும், புகழும் இருந்தாலும் எளிமையாக இருந்து பலருக்கு முன்னோடியாக திகழ்கிறார் என்றால் மிகையாது, பல கண்மருத்துவர்களுக்கு குலதெய்வமாகவும், குருவாகவும் டாக்டர் பத்ரிநாத் திகழ்கிறார். லட்சக்கணக்கான கண்களுக்கு வெளிச்சம் காட்டியவர் நமக்கு எல்லாம் சிறந்த வழிகாட்டியாக திகழ்கிறார் என்பதை எவராலும் மறுக்க முடியுமா என்ன?

ராம்கி
09790684708

பல்லாண்டு வாழ்க டாக்டர் நடராஜன்



PORUR RAMKI GARLANDING DR. S.NATARAJANAN ON HIS BIRTHDAY AT ADITYA JYOT EYE HOSPITAL, MUMBAI

நான் சந்தித்த நட்சத்திரங்கள்



நான் சந்தித்த நட்சத்திரங்கள் / பிரமுகர்கள்




PORUR ராம்கி

நான் சிறிய பாலகனாக இருந்தபோது வடபழனில் பெருமாள் கோவில் தெரிருவில் பல ஆண்டுகள் வசித்தோம், எனது நெருங்கிய உறவினர் மறைந்த ராமகிருஷ்ணன் (கிருஷ்ணமூர்த்தி) அவர்கள் வாகினி ஸ்டூடியோவில் மேனேஜராக வேலைபார்த்து வந்தார். எங்களது அடுத்த சுவர் விஜயா கார்டன். மிகவும் உயரமாக இருக்கும். அங்கு அடிக்கடி படபிடிப்பு நடக்கும். பக்கத்துவீட்டு டெல்லி ராசு என்பரின் வீட்டு மாடிக்கு சென்றால் விஜயா கார்டனில் நடக்கும் படபிடிப்பு நன்றாக தெரியும்... போட்ட வரிகளையே பலமுறை போட்டு படம் பிடிப்பதை பார்த்து சில சமயம் போர் அடித்துவிடும். அப்படி பார்த்த படபிடிப்பில் மறக்க முடியாதது எங்கே அவள்...என்றே மனம் என்ற பாடல் காட்சி. அதில் எம்ஜிஆர், ஜெயலலிதா நடித்தனர். இதுபோன்ற இரவு பகலாக படபிடிப்பை பார்ப்போம், அது போல நல்ல நேரம் பாடல் காட்சியில் எம்ஜிஆர் மற்றும் பல யாணைகளுடன் நாள்கணக்கில் படமாக்கப்பட்டதையும் மாடியில் இருந்து ரசித்தோம். சில சமயம் நாங்கள் நிற்பது கேமராவில் விழும் என்பதால் எங்களை அந்தப்பக்கம் போகச்சொல்லி அங்கிருந்து கையசைப்பார்கள். விசில் ஊதுவார்கள். சில நாட்கள் பாடல் சப்தத்தால் நிம்மதியாக துஙககூட முடியாது. மறக்க முடியாத அனுபவம், சென்னை வரும் விருந்தினர்கள் எங்கள் வீட்டுக்கு வராமல் போகமாட்டார்கள். காரணம் பாசம் மட்டும் அல்ல, இங்கே வந்தால் ஏதாவது படபிடிப்பில் நடிகர்களை பார்க்கலாமே என்ற எண்ணத்திலும் கூட.........



விஜயா வாகினி ஸ்டூடியோவிற்கு அவ்வப்போது செல்வோம், ஒரு முறை நான் சென்ற சமயம் எம்ஜிஆர் அவர்கள் நடிக்கும் நம்நாடு படபிடிப்பு நடந்து கொண்டு இருந்தது. அப்போது தளத்தில் விளக்குகள் மாட்டியிருக்கும் மிகவும் உயரமான இடத்திலிருந்து எம்ஜிஆர் அவர்களை பார்க்க அனுமதி கொடுத்தார்கள். எங்களது உறவினர் அங்கு வேலை செய்வதால் எல்லா தளத்திற்கு செல்வோம். யாரும் எதுவும் சொல்லமாட்டார்கள். கட். ஸ்டார்ட் போன்ற வார்த்தைகள் எங்கள் காதில் விழாத நாட்கள் இல்லை எனலாம். ஒவ்வாரு மாதமும் முதல் நாள் (சம்பள நாள்)அன்று ராமகிருஷ்ணன் அவர்கள் வடபழனி கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து பிறகுதான் சம்பளத்திலிருந்து பணத்தை செலவுக்கு எடுப்பார், அதனால் மாதம் முதல் நாள் மாலை 4மணிக்கே வாகினி ஸ்டூடியோவிற்கு சென்று எல்லா தளங்களுக்கும் ஒரு ரவுட் கட்டி வருவோம், பிறகு அவருடன் வடபழனி முருகன் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து திரும்புவோம். ஒரு முறை ஸ்டூடியோவிற்கு சென்ற போது நடிகை கே. ஆர். விஜயா மற்றும் தேங்காய் சீனிவாசன் ஒர் இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள், எங்களைப் பார்த்ததும் வீட்டிலே சொல்லிட்டு தானே இங்கே வந்திருக்கீங்க என்று கே. ஆர். விஜயா கேட்டார். ஆமாம் என்றோம். அவர் பேசியதால் எங்களுக்கு ஒரே குஷி,,,,,, துள்ளி குதித்து அதை எல்லோரிடம் சொல்லி மகிழ்ந்ததை நினைத்தால் சிரிப்பு வருகிறது,

குலதெய்வம் ராஜகோபால் எங்கள் வீட்டிற்கு அருகாமையில் தான் இருந்தார். அடிக்கடி அவரை பார்ப்போம், அவரது மகன்கள் எனது பள்ளி நண்பர்கள், அதில் ஒருவர் தீ விபத்தில் இறந்துவிட்டான். அது போன்று மறைந்த இயக்குநர் ஜம்புலிங்கம் அவர்களும் நல்ல பழக்கம். அவரது மகன் சித்தி தொடர் புகழ் பாஸ்கரும் நானும் ஒன்றாக பள்ளியில் படித்தவர்கள். அடிக்கடி அவர்களது வீட்டிற்கு சென்று விளையாடுவோம். டைட்டில் ஜெயராமன் என்பவர் எங்கள் அடுத்த வீட்டில் இருந்தார். அவர் டைட்டில் கார்டுகளை அழகாக கோடு இட்டு எழுதுவதைப்பார்த்து பார்த்து நானும் எழுதும்போது எழுத்துக்களை பிரித்து அழகாக எழுத ஆரம்பித்தேன். என்னை குமரு என்று செல்லமாக அழைப்பார். அவரது மகள் துளசி கேமரா வுமனாக பயிற்சி பெற்றாள்.

அதுபோன்று வசந்த மாளிகை படபிடிப்புக்காக கண்ணாடியால் ஒரு பெரிய அரண்மனை வாகி்னி ஸ்டூடியோவில் கட்டப்பட்டது. எனது மூத்த சகோதரர் மணி அவர்கள் தான் அப்படத்திற்கு நிர்வாக அதிகாரியாக இருந்தார். அதனால் உள்ளே நாங்கள் செல்ல அனுமதி எளிதாக கிடைத்தது,. அந்த படத்தை இந்தியில் தயாரிக்கும்போது ராஜேஷ்கண்ணாவை சந்தித்தேன். வெறும் ஹாய் என்றவாறு கைகொடுத்தார். நிறைய படங்கள் படம் வெளிவரும் முன்பே ஸ்டூடியோவில் பார்த்துவிடுவோம்.

சிவாஜி அவர்களை சந்திக்க வாய்ப்பும் கிடைத்தது. கே. ஆர். விஜயா கார்டனில் அவரை சந்திக்க பொம்மை ஆசிரியர் திரு. வீரபத்திரன் என்னையும் அழைத்துச்சென்றார். என்னை அறிமுகப்படுத்தியதும் வாங்க உட்காருங்க என்று கை கொடுத்தார் சிவாஜி அவர்கள். எனக்கு இருக்கை கொண்டு வரச்சொல்லி அவர் அருகே அமரச்செய்தார். எங்களுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது அவ்வப்போது படபிடிப்புக்கு செல்லும் சிவாஜிகணேசன் அவர்கள் சில காட்சிகளுக்கு நடுகே கண்மூடி தன் நாற்காலியில் அமர்ந்துவிடுவார். கண்களை அப்படியே மூடியபடி இருக்க ஒருவர் அவரது நெற்றிப்பொட்டை மெல்ல மெல்ல அமுக்கி கொடுப்பதை பார்த்தேன். அண்ணே ஷாட் ரெடி என்று ஒரு முறை இயக்குநர் சொன்னதும், அடுத்து வினாடி துடித்து எழுந்து கண்ணாடி முன் தன் முகத்தை பார்த்துவிட்டு நடிக்க ஆரம்பித்துவிட்டார். நான் சென்ற சமயம் ஒரே காட்சியை பல முறை இயக்குர் முக்தா சீனிவாசன் எடுத்துக்கொண்டிருக்க, எரிச்சல் அடைந்த சிவாஜி அவர்கள், எடுத்து தொலைங்கடா என்று கோபமாக முனுமுனுத்ததை பார்த்தேன். பிறகு மதியம் வீட்டிற்கு செல்ல கார் ரெடியானதும் என்னிடம் அப்பறமா பார்க்கலாம் என்று கை கொடுத்து விடைபெற்றார். அதே படத்தில் அவரது மகன் நடிகர் பிரபுவும் நடித்துக்கொண்டு இருந்தார், பிரபுவிடமும் என்னை திரு வீரபத்திரன் அறிமுகப்படுத்தினார். அப்பா போயாச்சா என்று கேட்டுக்கொண்டே சிகரட்டை பற்றவைத்தார் பிரபு. விடைபெறும் போது நாளைக்கு அப்பாவோட எங்க வீட்டிலே போட்டோ செஷன் இருக்கு, நீங்களும் வீரபத்திரன் சார் கூட வாங்க என்று அன்போடு அழைத்தார்,. ஆனால் என்னால் செல்லமுடியவில்லை.

கமலஹாசன் அவர்களை அவரது எல்டாம்ஸ் ரோடு இல்லத்தில் பத்திரிகையாளர் விஜயன் மற்றும் மேஜர் தாசன் என்பவருடன் சந்தித்தேன். வணக்கம் என்று கைகொடுத்தார். அதிக கூட்டமாக இருந்ததால் அதிகம் பேசமுடியவில்லை. அடுத்து சந்தமாமா கட்டிடத்தில் கமல் அவர்களின் நம்மவர் படபிடிப்பு தொடர்ந்து பலநாட்கள் நடந்தது, அப்போது அவருடன் மீண்டும் சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது, ஒரு முறை அவரது மனைவி சரிகாவும் படபிடிப்பை காண வந்திருந்தார்,


விஜயன் மற்றும் மேஜர் தாசனுடன் நிழல்கள் ரவியை சைதாப்பேட்டையில் உள்ள அவரது அறையில் சந்தித்தோம். அவர் தனது படபிடிப்பு அனுபவங்களை விஜயனிடம் சொல்லிக்கொண்டே இருந்தார். அப்போது ஒரு ஊரில் படபிடிப்புக்கு சென்ற போது அந்த ஓட்டலில் வேலையும் செய்யும் பெண்மணி தன்னுடன் அன்று இரவு இன்பமாக கழிக்க சொன்னதை விவரமாக சொல்லிக்கொண்டிருந்தார். என்னிடம் பேசும் போது உங்களை எங்கேயோ பார்த்தா மாதிரி இருக்கே.. சிகரெட் எடுத்துக்கோங்க என்ற நீட்டினார். நான் புகைப்பதில்லை என்றது ஓ நல்ல ஹேபிட், என்றார்.

நடிகர் சிவக்குமார் அவர்களை எனது நண்பரின் திருமண வரவேற்பில் சந்தித்தேன், பிறகு பல வருடங்கள் கழித்து ஒரு முறை குமுதம் நிருபர் மேஜர் தாசனுடன் வாகினிக்கு நடிகர் சிவக்குமார் அவர்களை பார்க்க சென்றேன், படபிடிப்பு முடிந்ததும் காரில் ஏறச்சென்ற சிவக்குமார் அவர்களிடம் அண்ணே குமுதம் வீ்க்லியிலிருந்து மேஜர் வந்திருக்கார் என்று சொல்ல மேஜர் அவர்களிடம் சிவக்குமார் கைகொடுத்த அடுத்த நிமிடத்தி்ல் மிகவும் டென்ஷன் ஆகி ஓரே கூப்பாடு போட்டார். என்னய்யா குமுதம் நடத்தராங்க...அவ வயசுக்கு வந்தட்டா இவ வயசுக்கு வந்துட்டான்னு என சம்பந்தம் இல்லாமல் கத்த ஆரம்பித்தார். இத்தனை நேரம் அனைவரோடும் சிரித்து பேசிக்கொண்டிருந்த சிவக்குமாரா இவர், என்று ஆச்சயர்யமாக பார்த்தார்கள், சரிண்ணே நீ்ங்க வீட்டுக்கு இப்ப கிளம்புங்க என்று ஒருவர் சமாதனப்படுத்தி காரின் கதவை திறக்க கோபத்தோடு காரில் ஏறி சிவக்குமார் பயணம் ஆனார், என்னுடன் வந்த மேஜர் உட்பட அனைவரும் சிவக்குமாரின் புரியாத கோபத்தை கண்டு வியந்து என்ன ஆக்சோ இவருக்கு தெரியலயே என்று நகர்ந்தனர். எனக்கும் மேஜர் அவர்களுக்கும் ஒன்றும் ஓடவில்லை,


நிறைய நட்சத்திரங்கள் எங்கள் பொம்மை அலுவலகத்திற்கு வருவார்கள், அப்படி சந்தித்தவர்கள் பலர் குறிப்பாக தேங்காய் சீனிவாசன், ஜீவிதா, வாணிஸ்ரீ, ஜெய்சங்கர் போன்ற ஏராளமானோர்.

ரஜினி அவர்களை பலமுறை படபிடிப்புகளில் சந்தித்துள்ளேன்., திரு. வீரபத்திரன் அவர்கள் எப்போதும் அனைத்து நட்சத்திரங்களின் தொடர்பில் இருப்பார். பொம்மை பத்திரிகையின் ஆசிரியர் ஆயிற்றே....வெளியே கிளம்பும்போது அண்ணே ரஜினியை பார்க்க ஏவிஎம் போறேன் வாரேங்களா என்பார்....அடுத்த நாள் மாலை இன்னைக்கு சில்க் சுமிதாகிட்டே பேட்டி, வரீங்களா உடனே கிளம்புங்க என்பார், சிலசமயம் ஆசையாக இருந்தாலும் அலுவலக வேலை காரணமாக என்னால் அடிக்கடி செல்லமுடியாது,

ஒரு முறை ரஜினி அவர்கள் திரு நாகிரெட்டி அவர்களை விஜயா கார்டனில் சந்தித்து பேசியது பரபரப்பாகப் பேசப்பட்டது, அவ்வப்போது முன்பெல்லாம் ரஜினி விஜயா ஹெல்த் சென்டரில் ஓய்வு எடுக்க வந்துவிடுவார். இருப்பினும் எங்கள் பொம்மை அலுவலகத்தில் உழைப்பாளி படபிடிப்புக்கு முன் திரு விஸ்வநாத ரெட்டி அவர்களை சந்திக்க ரஜினி வந்தார், என் இருக்கையை தாண்டி ஒரு புன் முறுவலுடன் உள்ளே சென்றார். வெளியே வந்ததும் கையசைத்தபடி சென்றார், உழைப்பாளி படபிடிப்பு ஆரம்பமானதும் அடிக்கடி தொடர்ந்து ரஜினி அவர்கள் எங்கள் அலுவலகத்திற்கு வந்தார், திரு வீரபத்திரன் அவரிடம் என்னை அறிமுகப்படுத்தினார். உடனே இவரை பார்த்திருக்கேனே என்று கையை கொடுத்தார். என் சக ஊழியர்கள் அவருடன் நின்று கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.

வாகினி படதளத்தில் ஒரு நாள் ரஜனி, சௌந்தர்யா பாடல் காட்சி படமாக்கப்பட்டுக்கொண்டு இருந்தது. அதைபார்த்துக் கொண்டிருந்தேன்,. பிறகு ரஜினி கிளம்பும் போது தன் அருகே இருந்த சௌந்தர்யாவின் கண்ணத்தில் ஒரு இச் கொடுத்துவிட்டு நகர்ந்தார். பொதுமக்களும் நடனகுழுவினர்கள் பலர் ரஜினி இப்படி பொது இடத்தில் சௌந்தர்யாவிற்கு முத்தம் கொடுத்ததை பார்த்து அதிர்ந்தனர். நான் கூடத் தான்.

மலையாள நடிகர் மம்மூட்டியையும் அறிமுகப்படுத்தினார் திரு வீரபத்திரன் அவர்கள். என்ன சிம்பிளான மனிதர் மம்மூட்டி, எங்களை அமர வைத்து பிளாக் டீ கொடுக்கச்சொன்னார், படபிடிப்புக்கு நடுவே எங்களிடம் நீண்ட நேரம் பேசினார். நான் இவ்வளவு படம்தமிழல் நடித்தும் ரசிகர்கள் என்னை ஒரு கதாநாயகனாக ஏத்துக்கொள்ளவி்ல்லயே என ஏங்கினார். எங்களை அடுத்த நாள் அவரது இல்லத்திற்கு அழைத்தார்.

நடிகை குட்டி பத்மினியையும் பேட்டி கண்டேன். நன்றாக சகஜமாக பேசினார். நான் சென்ற சமயம், அவரது டிவி படபிடிப்பு நடந்து கொண்டிருந்ததால் அவர் வர சற்று நேரமானது, அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு ஜாலியாக பதில் அளித்தார். நடவே தனது உதவியாளரிடம் ஏதோ இந்தியில் பேசினார். நான் கிளம்பும் போது, ஒரு சின்ன கவரை கொடுத்து என்னோட ஸ்மால் கிப்ட் என்றார்.

நடிகை லைலாவை மும்பையில் டாக்டர் நடராஜன் அவர்கள் அறிமுகப்படுத்தினார். நான் வெல்கம் டு மும்பை என்று சொன்ன போது ஐயோ நான் மும்பைகாரி தாங்க என்று குலுங்கி குலுங்கி சிரித்தார், அவரை எனது இஷ்டத்திற்கு புகைப்படம் எடுத்து தள்ளினேன். அவரது சந்திப்பை குங்குமம் இதழில் எழுதினேன் அதையும் அவருக்கு அனுப்பிவைத்தேன். பிறகு சந்தித்தபோது ரொம் தேங்ஸ் நல்லா ஆர்ட்டிகள் வந்திருந்தது என்று கைகுலுக்கினார்.

நீண்ட ஆண்டுகளுக்கு பின் ஸ்ரீதேவியை பார்த்தேன். டாக்டர் நடராஜன் அவர்களிடம் தன் கண் பிரச்சனைக்காக வந்திருந்தார், தமிழில் பேசினாலும் வயதாகிவிட்டதால் அவரது கிளாமர் குறைந்து காணப்பட்டார்.

அனுபம் கிர், ஷபினா அஸ்மி மற்றும் ஐஸ்வர்யா ராய் போன்றவர்களை டாக்டர் நடராஜன் அவர்கள் எனக்கு மும்பையில் அறிமுகப்படுத்தினார். ஐஸ்வர்யா ராயை இரண்டு மூன்று முறை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது, ஹாய் என்றதோடு சரி....அவரின் அப்பா கிருஷ்ணா ராய் நல்ல நண்பராகிவிட்டார், எங்கு பார்த்தாலும் ஹாய் ராம்கி என்று பெயர் சொல்லி அழைப்பார். அடிக்கடி டாக்டர் நடராஜன் அவர்களை பார்க்க வரும்போது நீண்ட நேரம் என்னுடன் பேசிக்கொண்டு இருப்பார். ஐஸ்வர்யாராய் பற்றி குங்குமம் அல்லது குமுதம் இதழில் தொடர் எழுத விரும்பமாக இருக்கிறேன் என்றபோது கட்டாயம் ஒரு நாள் அதுக்காக உட்காரலாம் என்றார். ஆனால் நான் மும்பையை விட்டு வரும் வரை முடியாமல் போனது.

மும்பைக்கு வந்திருந்த சரோஜா தேவியின் பேட்டியை குங்குமம் வார இதழில் எழுதினேன்.

மும்பைக்கு வந்த நடிகர் விஜயகாந்த் அவர்களை திரு எம் கருண் அவர்கள் எனக்கு அறிமுகப்படுத்தினார். வணக்கம் என்று சொல்லி கைகொடுத்தார்.

டாக்டர் நடராஜன் அவர்களுக்கு நடிகை ரேவதி கையால் ஒரு டிவி நிகழ்ச்சிக்காக சாதனையாளர் விருது மும்பையில் வழங்கப்பட இருந்த போது, அன்று டாக்டரால் வர இயலவில்லை,. ஆகவே என்னை அனுப்பி அந்த விருதினை அவரது சார்பாக வாங்கச்சொன்னார். அப்போது மேடையில் ரேவதியை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது,

நடிகர் விசு அவர்களை உழைப்பாளி படபிடிப்பில் சந்தித்தேன். இப்போதும் நாங்கள் இமெயில் மூலம் தொடர்து தொடர்பில் இருக்கிறோம்.

கவுண்ட மணியை ஒரு படபிடிப்பில் பார்த்தேன். தன் முகத்தை கர்ச்சீப்பால் மூடிக்கொண்டு யாருக்கும் அடையாளம் தெரியமல் இருக்கும்படியாக அமர்ந்து இருந்தார், நான் அவரை அடையாளம் கண்டுகொண்டதை அறிந்த அவரே ஹவ் ஆர்யு பிரதர் என்று கைகொடுத்து மீண்டும் முகத்தை மூடிக்கொண்டார். எனக்கு அவரது செய்கை சிரிப்பாக இருந்தது.

எம்எஸ்விஸ்வநாதன் ராமமூர்த்தி, மற்றும் பாடகர் பாலசுப்ரமணியம், மனோ, பாடகர் ஹரிஷ், (எனது வீட்டிறகு வந்துள்ளார்) எல். ஆர். ஈஸ்வரி, கங்கை அமரன், சுனியர் பாலைய்யா, ரேவதி, சரத்குமார், உதய் குமார், சம்பத் செல்வன், ராமா நாயுடு, போன்றவர்கைளயும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது, பல இசையப்பாளர்களையும் கவிஞர்களையும் பேட்டி கண்டு பல இதழ்களில் எழுதியுள்ளேன். பட தயாரிப்பாளர் திரு ஏவிஎம் சரவணன் அவர்களை பற்றி ஒரு சின்ன கட்டுரை கு்ங்குமம் இதழில் எழுதினேன். அதை நேரே அவரிடம் ஏவிஎம்ஸ்டூடியோவில் சந்தித்து கொடுத்தேன். மிகவும் மகிழ்ந்தார். பாடகர் டிஎம்எஸ் அவர்களுடன் போனில் பேசியுள்ளேன்.

மறைந்த படதயாரிப்பாளர் நாகிரெட்டி அவர்களையும் பலமுறை சந்தித்துள்ளேன். ஒரு முறை சென்ற போது எனது தோள்களில் கைபோட்டு ஸ்டைலாக பேசிக்கொண்டு இருந்தார். ஒரிரு முறை போன் செய்து விஜயா கார்டனுக்கு வரச்சொன்னார். அவரது மகன் படதயாரிப்பாள் திரு பாப்ஜி மற்றும் பாரதி ரெட்டியும் நல்ல பழக்கும் உண்டு.

இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகரன் (விஜய் அவர்களின் அப்பா) அவர்களை அவரது வீட்டில் சந்தித்தேன், அப்போது விஜய் இல்லை.

மும்பை படவினியோகஸ்தர் திரு. நம்பி ராஜன் நல்ல நண்பர். மும்பையில் அரோரா தியேட்டர் நடத்தி வரும், இவருக்கு தமிழ் மற்றும் இந்தி திரைப்பட உலகில் அனைவரையும் பழக்கம், இவர் மிகவும் பிரபலமானவர் கூட, ராஜஸ்தான் படத்தை தயாரித்தது மட்டுமல்லாமல் அதில் சிறப்பாக நடித்தும் இருக்கிறார் திரு, நம்பி ராஜன்.

டாக்டர் நடராஜன் மூலமாக சீர்காழி சிவசிதம்பரம் மற்றும் தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகர் ஜீவிதா போன்றவர்களோடு போனில் பேசும் வாய்ப்பு ஏற்பட்டது. இவர்கள் டாக்டர் நடராஜனுடன் மருத்துவம் ஒன்றாக படித்தவர்கள்,

மறக்க முடியாத அனுபவம், பொம்மை, சந்தமாமா அலுவலகத்தில் வேலை செய்து கொண்டு இருக்கும் போது ஒரு ஞாயிறு அன்று வேலைக்கு செல்ல என் அறையில் தெலுங்கு படபிடிப்பு நடந்து கொண்டிருந்தது. ஆஹா எனது இருக்கையில் நடிகை ஸ்ரீதேவி அம்ர்ந்து டைப் அடிப்பது போன்ற காட்சி படமாக்கினார்கள்....படமாக்கும் போது தப்பும்தவறுமாக எதைஎதையோ அடித்து நடித்தார். ஒரு சில நிமிடங்கள் கழித்து அப்படத்தில் சேர்மனாக நடிக்கும் நடிகர் சோபன் பாபு தன் அறைக்கு உள்ளே செல்வது போலவும் அவர் செல்லும் போது ஊழியர்கள் எழுந்து நின்று குட் மார்னிங் சார் சொல்வது போன்ற காட்சிக்கு என்னையே நடிக்கவைத்தார்கள்... ஒரே குஷியாக இருந்தது, ஒரு மணிநேரத்தி்ற்கு ஒரு முறை காபி, பழச்சாறு மற்றும் நொறுக்குதீனி கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். அன்று வெகு அருகே ஸ்ரீதேவியின் அழகை கண்குளிர கண்டு ரசித்தேன். நான் வேகமாக டைப் செய்வதை ஸ்ரீதேவி அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்கள் பத்திரி்கையில் பெண்விடுதலை பற்றி எழுதியிருந்தேன். பாரதி ராஜா அவர்கள் தனது புதுமைப்பெண் படத்தில் அது சம்பந்தமாக கட்டுரைகளை ஒவ்வொன்றாக வருவதுபோல காட்சி எடுத்திருந்தார். அதில் எனது பெண்விடுதலை கட்டுரையும் படம்பிடித்து காட்டினார்.


அண்மையில் சென்னையிலிருந்து கோவைக்கு விமானத்தில் பயணம் செய்யும் போது நடிகரும் இயக்குநருமான திரு. சேரன் அவர்கள் அதே விமானத்தில் பயணித்தார். பறக்கும் விமானத்தில் அவரோடு எனது விசிட்டிங் கார்டில் சிறு செய்தி எழுதி அவரிடம் கொடுத்தேன். மிக்க நன்றி என்று வாங்கிக்கொண்டார். ஒன்றாக விமானத்தில் இருந்து இறங்கி நடந்துவந்தபோது அவரிடம் உங்கள் நடிப்பு மிக இயல்பாக இருக்கிறது என்று பாராட்டினேன்,. சந்தோசம் என்று கைகொடுத்து பிறகு பார்க்கலாம் என்றார்.

ரோட்டரி விருது ஸ்ரீராமுக்கு



ROTARY CLUB OF MADRAS SOUTHWEST AWARDED SCHOLARSHIP TO SRIRAM FOR HIS SCHOOL TOPPER AWARD (SWAMY'S MATRICULATION SCHOOL, PORUR)

தினமலரில் ஸ்ரீராம்



SRIRAM IN DINAMALAR DAILY, CHENNAI EDITION

ராம்கி மும்பை பார்ட்டியில்



RAMKI & LAXMI AT A MUMBIA PARTY

MR. D. SIVANANDHAN IPS


MR. D. SIVANANDHAN IPS
MUMBAI POLICE COMMISSIONER

Photo by PORUR RAMKI

டாக்டர் நடராஜன் பிறந்தநாள் ராமகி உடன்

திரு, த. சிவானந்தன் ஐபிஎஸ் மற்றும் போரூர் ராம்கி



திரு, த. சிவானந்தன் ஐபிஎஸ்
முமமை போலீஸ் கமிஷ்னர், மும்பை

அன்பும் பாசமும் உடையவருக்கு,

வா ஜி வா ஜி வா ஜி... வா ஜி....’சிவா’ ஜி!
என தாங்கள் மும்மை போலீஸ் கமிஷ்னர் ஜி
ஆக ஆசைப்பட்டவர்களில் நான் ஆயிரத்தில் ஒருவன் ஜி!!!

‘சிவா’ இவர் வரவேண்டும், புகழ் பெற வேண்டுமென
சதா வேண்டியவர்களில். நான் லட்சத்தில் ஒருவன்!!!

பள்ளி, மருத்துவச்சாலை அமைத்து சமூக சேவை செய்தீர்
தினம்பல மதப்பிரச்சனைகள் வந்தபோதும் அமைதி காத்தீர்
தீயசக்திகளை தேடித்தேடி கூண்டோடு சுட்டுச் சாய்த்தீர்
மும்பை மக்கள் நிம்மதியாக வாழபெருமூச்சு விடச் செய்தீர்!!

எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் என எண்ணுவீர்
ஒரு குழந்தையை வைத்தே கொலையாளியை கண்டுபிடித்தீர்
‘ஜகஜால கில்லாடி’ அல்லவா எங்களருமை திரு, சிவானந்தன்!!

பச்சைத்தமிழனல்லவா, எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பீர்
தமிழனை கண்டால் பந்தாயின்றி தமிழில் பேசிமகிழ்வீர்
மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்வீர்
எங்கள் மனதில் ஒரு தனி, பெரிய இடம்பிடித்தீர்!!

நெஞ்சம் உண்டு நேரம் உண்டு ஓடு ராஜா
இங்கு உன்னைவிட்டால் வேறு யாரு ராஜா
இந்த பாடல் உங்களுக்காக எழுதப்பட்டதோ ராஜா!!

உலகமே திரும்பிப்பார்க்கும் நிலத்திலே, மாநிலத்திலே,
நல்லவர் குரலுக்கு மதிப்பிருக்கும் இந்த நாட்டிலே
அந்த நல்லவர், வல்லவர் திரு. சிவானந்தன் லே!!

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
கருணையுள்ள நெஞ்சினேலே கோவில் கொள்கிறான்
பாசமும், கருணையுள்ளமும் கொண்ட தமிழன் திரு. சிவானந்தன்!!

மூன்றெழுத்தில் என்மூச்சிருக்கும் அது
முடிந்தபின்னாலும் பேச்சிருக்கும் அது, கடமை.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என மூன்றாம்,
அந்த மூன்றும் தன்னுயிர்மூச்சாக வாழ்பவரே திரு. சிவானந்தன்!!





தங்கப்பதக்கத்தி்ற்கு ஒரு சிவாஜி
எங்கள் நெஞ்சப்பதக்கத்திற்கு ஒரே ’சிவா’ ஜி
என்றும், என்றும் என்றென்றும் வீரத்திந்ழு மராட்டிய சிவாஜி
பிறந்த மண்ணிலே உங்கள் வெற்றிக்கொடி பறக்கட்டும் ’சிவா’ ஜி!!

எனக்கு வழிகாட்டியாக, எங்களுக்கு மகா ஆசானாக
எங்கள் மனதில் ஒளிவிளக்காக, எப்போதும் பாஸிடிவ்வாக
என்போன்றோரை தட்டி, பாராட்டி ஊக்கிவிக்கும் வெற்றித்திருமனே!!
வெற்றி மீது வெற்றி உங்களை சேரட்டும் காவல்தலைவனே...
நீவீர் வாழிய வாழிய வாழியவே..............!!

வாழ்த்த வயதில்லை, குடும்பத்தோடு அடிபணி்ந்து வணங்குகிறோம!!
என்றும் உங்கள் அன்பில்,

ராம்கி, டாக்டர் நடராஜன் மற்றும் நண்பர்கள்

ராம்கி குடும்பத்தர் மற்றும் சுவாமி சுகபோதானந்தா

ராமகி, சுவாமி சுகபோதனந்தா, டாக்டர் natarajan

ஸ்ரீராம் கோல்ட் medal

மலரும் நினைவுகள் டாக்டர் நடராஜன் அவர்களுடன்

அந்த நாளும் வந்திடாதோ டாக்டர் நடராஜன் அவர்களுடன்
PORUR RAMKI

மும்மையைவிட்டு வந்து ஒரு வருடம் நிறைய போகிறது என்பதை நினைக்கும் போது நாட்கள் எத்தனை வேகமாக ஓடுகிறது என நினைக்க துண்டுகிறது.

மாலையில் வீட்டுக்கு சென்றதும், தாங்கள் எனக்கு அளித்து வாழ்த்து மடல்களையும், கையில் இருக்கும் சில போட்டோக்களையும் எடுத்துவைத்துக்கொண்டு பார்த்து பார்த்து, அந்த நிகழ்ச்சிகளை நினைத்து நினைத்து மகிழ்கிறேன்.

என்னை வீட்டிற்கு அழைத்துச்சென்று நல்ல அமுது அளித்து, அதன்பிறகு
சின்ன கிண்ணத்திலே மிளகாய் முருக்குப்பொடி கொடுத்து சாப்பிடுங்க சார் சாப்பிடுங்க சார் என்று சொல்லும் போதே என் கண்களில் நீர் வரும், மிளகாயின் காரத்தை நினைத்து.......அதை மறக்க முடியுமா?

ஒருசமயம் தங்களக்கு கடுமையான வயி்ற்றுவலி, கொட்டும் மழை வெளியே. அலுவலகமோ விடுமுறை...டிவியில் ஒரு படத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் போது தாங்கள் ரெஸ்ட் ரூமுக்கு அடிக்கடி சென்று வந்து கொண்டிருந்தீர்கள்....அந்த மழையில் காரை எடுத்துக்கொண்டு குயின் நெக்லஸ் பகுதிக்கு சென்று சில மணி நேரங்கள் மகிழ்ந்தோம், அதை மறக்கமுடியுமா?

தாங்கள் மதியம் சாப்பிட்டுக்கொண்டு இருந்தாலும் என்னை அழைத்து ஒரு தட்டை கொண்டு வரச்சொல்லி சாப்பிடச்சொல்வீர்கள்..சாப்பிட்டபின் ஓய் லட்டு கிதர் என்று கேட்டு அதையும் கொடுப்பீர்கள்....அந்த உபசாரத்தை மறக்க முடியுமா?

தாங்கள் அன்புடன் பிரிவு நினைவுச்சின்னமாகவும் என்பிறந்த நாள் நினைவு பரிசாகவும் அளித்த கைகடிகாரங்கள் நாம் இருவரும் பழகிய நிமிடங்களை ஒவ்வொரு வினாடியும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது,

சென்னை செல்லும் போதெல்லாம் நான் சீதாவிடம் கேட்கும் ஒரே கேள்வி, நான் பேசாமல் மும்பைக்கே போய் டாக்டருடன் சேர்ந்துவிட்டால் அவருக்கு பெரு உதவியாக இருக்கும், என்பது தான்.

டாக்டர் பாபு அவர்கள் என்னை அனுப்பும் போது, சொன்ன 3 வார்தைகள் எவரிதிங் பார் குட்.......நீங்கள் என்னை சொல்லி அழைத்த 3 வார்த்தைகள்,.....நம்பி வாங்க சார்........

என்னே தங்களின் அன்பு.......என்னே தங்களின் பாசம்..........என்னே தங்களின் கருணை.........என்னே தங்களது பண்பு,,,,,,,,,, என்னே தங்களது உயர்ந்த உள்ளம்,

தலைவணங்குகிறேன் சகோதரரே
என்றும் உங்கள் அன்பில்
ரா ரா ராம்கி

மலரும் நினைவுகள் 2

ஆலயமாகும் உங்கள் மனது

முதன் முதலில் நமது அப்ஸ்ட்ராக்ட் புக் வநததும் நாம் மூவரும் சித்தி விநாயாக் மற்றும் மகாலஷ்மி ஆலயங்களுக்கு சென்று பூஜைகள் சென்று வந்தது மறக்கமுடியாதது,,

தாங்கள் அவ்வப்போது நடத்திய பெரிய பெரிய பூஜைகளில் கலந்து கொண்டது நினைவுக்கு வருகிறது, எத்தனை லஷ்மிநாரயண பூஜைகள்,,சரஸ்வதி பூஜைகள், குறிப்பாக மகாலஷ்மி ஆலயத்திலும் சித்திவிநாயக் ஆலயத்தில் செய்த பெரிய யாகங்களில் கலந்து கொண்டபோது நல்ல மன நிறைவு ஏற்பட்டது, அதில் விசேஷம் என்னவென்றால் ஒவ்வொருமுறையும் ஒரு புது பூசாரி இருப்பர்,.,ஒருமுறை மகாராஷ்ட்ரா பூசாரி,,,,அடுத்து முறை பார்த்தால் மலையாள நம்பூதிரி...அடுத்த முறை பார்த்தால் நம்ம ஊரு ஐயரு........மறுமுறை தெலுங்கு வாத்தியார்.....அதிலும் ஒரு வித்தியாசத்தை படைப்பதி்ல் வல்லவர் நீங்கள்....

இன்று தாங்கள் அறிமுகப்படுத்திய சித்திவிநாயகரும் மகாலஷ்மியும் எங்களின் இஷ்ட தெய்வங்களாகி நிதத்ம் பூஜை செய்து பலன் பெற்றுவருகிறோம். இந்த இரண்டு தெய்வங்களையும் நாங்கள் மறக்ககாத விநாடிகள் இல்லை எனலாம். இவர்களின் புகைப்படங்கள் இரு இடங்களிலும் வைத்து பூஜை செய்து வருகிறோம், அதுமட்டுமல்ல எனது நெருங்கிய உறவினர்களும் இப்படங்களை வாங்கிக்கொடுத்துள்ளோம்.
அடுத்து முறை நாங்கள் அவர்கள் வீட்டுக்கு செல்லும் போது, இந்த மகாலஷ்மி படம் வைத்து பூஜை செய்ய ஆரம்பித்தபின் எங்களுக்கு பணக்கஷ்டம் எதுவும் இல்லை என்று சந்தோஷமாக சொல்வதை கேட்டு நிறைய மகாலஷ்மி படங்களை வாங்கி எனது நண்பர்களுக்கும் கொடுத்து மகிழ்கிறேன். அவர்கள் எங்களுக்கு நன்றி சொல்லும் போது, மனம் தஙகளைத் தான் நினைக்க வைக்கிறது,

தங்களின் வீட்டில் நடந்த பல பூஜைகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பினையும் தந்தீர்கள் ஐயா. ஒவ்வொன்றும் ஒரு விதமாக சிறப்பாக நடைபெற்றது. இது போன்ற பூஜைகளில் ஆதித்யா அடிக்கும் லுட்டிககளையும் கண்டு ரசித்ததுண்டு. இது போன்ற பூஜைகளுக்கு தங்களது நண்பர்கள் பலரை அழைக்கும் பொறுப்பினையும் எனக்கு பல முறை தந்துள்ளீர்கள். அவர்கள் அனைவரும் தங்களின் கடவுள் பக்தியினை கண்டு அதிசயப்படுவார்கள். சிலர் இவருக்கு இதுக்கெல்லாம் எப்படி நேரம் கிடைக்குது என என்னிடம் கேட்டவரும் உண்டு...

இன்னாறை அழைக்கவேண்டும் என ஒரு லிஸ்ட் போட்டுவிடுவீர்கள்.. “ஓய் தாத்தாவை கூப்பிட்டாச்சா...” “டாக்டர் ராதிகாவை கூப்பிட்டாச்சா” என மறவாமல் பூஜை நடக்கும் நேரத்திலும் நினனவு படுத்துவீர்கள்.
“நம்ம சிவா சாருக்கு தனியா பிரசாதங்களை கட்டவேண்டும் சார்” என்றும் சொல்வீர்கள். “சாப்பிடுங்க சார்.....எனக்கு கொஞ்சம் பொங்கல் மட்டும் இன்னும் போடுங்க சார்” என்ற அன்போடு ரசித்து சாப்பிடுவீர்கள்.. பனஸ்வாடி புளியோதரை என்றால் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்... நல்ல காரசாரமாகவும் அது இருக்கும், இச்சமயத்தில் தாகங்கள் என்னை பனஸ்வாடி ஆலயத்திற்கு பலமுறை அழைத்துச்சொன்றது நினைவுக்கு வருகிறது, . அவரை எப்படி மறக்க முடியும்....அவரும் எங்களது பிரார்த்தனையில் உள்ளார். இந்த மூன்று கோவில்களுக்கும் நான் பலமுறை தனியாகவும், குடும்பத்தினர் வரும் போது அவர்களோடும் சென்று சாமி தரிசனம் செய்ததுண்டு. நான் உங்கள் ஆள் என்பதால் சிறப்பாக கோவில்களில் எங்களை கவனிப்பர்.......நல்ல தரிசனமும் கிடைக்கும்..

தினமும் பலமணிநேரம் கடவுளுக்கு அர்ச்சனைசெய்வது, மாலையிடுவது. ஊதுவத்தி ஏற்றுவது, கற்பூரம் காட்டுவது. பிரசாதம் படைப்பது என நித்திய பூஜைகளில் தங்களது ஈடுபாடு என்னை மிகவும கவர்ந்தது. எத்தனை கூட்டம் மருத்துவ மனையில் இருந்தாலும் தாங்கள் இந்த நித்ய கர்மாக்களை செய்ய தவறியது கிடையாது, முன்பு காரைவிட்டு இறங்கும் முன் மனமார பிரார்த்தனை மற்றும் மந்திரங்கள் பல ஓதிவிட்டுததான் காரைவிட்டு இறங்குவீர்கள்.

ஒரு முறை நான், தாங்கள் மற்றும் லஷ்மி இங்கு பூஜை முடிந்து மாட்டுங்கா ராமர் கோவிலுக்கு சென்றோம். பிறகு அதிரடியாக ஒரு ஓட்டலுக்கு சென்றீர்கள்.. அப்போதுதான் பூஜை முடித்திருந்ததால் தாங்கள் மேல் சட்டை கூட போடவில்லை...அப்படியே திறந்த மார்போடு ஒட்டலுக்கு நுழைந்ததும் ஏதோ ஒரு பெரிய சாமிஜி வந்துவிட்டதாக ஒரு பரபரப்பை ஏற்படுத்தினீர்கள்....இதுபோன்ற தைரியம் த்ங்களுக்குமட்டும் தான் வரும்,

அவ்வப்போது பட்டை போட்டுக்கொண்டு நோயாளிகளை பார்ப்பீர்கள்...
திருநீ்ற்றை அப்படியே கையில் எடுத்து உடல் முழுவதும் சிவனை நினைத்து போட்டுக்கொள்வீர்கள்.........எத்தனை பிரசாதங்கள் எத்தனை பிரசாதங்கள் தங்களுக்கு வரும்........

மனதை ஆலயமாக வைத்திருப்பதில் வல்லவர் நீ்ங்கள்,
அப்பா இதை படித்தால் ராம்கி ஏன் இவ்வளவு BIT ராஜக்கு போடுகிறான்...இங்கே வரலாம் என நினைக்கிறானோ என்று சிந்திக்க துவங்கிவிடுவார்.
நமது நட்பினையும். நமது அன்பையும், நமது சகோதர பாசத்தையும், யாராலும் புரிந்துகொள்ள முடியாது. நம் இருவரை தவிர,., என்ன சரிதானா??? (அப்பாவும், அம்மாவும் இக்கடிதங்களை கட்டாயம் படிக்க வேணடும் என்பது தான் என் வேண்டுகோள்), ஆகவே ஆலயமாகும் உங்கள் மனது,


மலரும் நினைவுகள் 3

பார்ட்டிகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்

வேர் இஸ் தி பார்ட்டி டு னைட்

நான் மும்பை வந்த சமத்தில் ஒரு நாள் தாங்கள் தங்கி இருக்கும் லாயட்ஸ் கார்டனில் ஒரு பார்ட்டி இருப்பதாகவும் “சவுத் இந்தியன் முத்துசாமி சமையல் சார் வாங்க..” என்று என்னையும் அழைத்துச்சென்றீர்கள்.
அது டாக்டர் ஸ்ரீனிவாசன் அவர்கள் இல்லத்துப் பார்ட்டி என நினைக்கிறேன்.. என்னை அங்கு உள்ளவர்களுக்கு எல்லாம் அறிமுகப்படுத்தினீர்கள். அந்த பார்ட்டி ஏற்பாது செய்த திரு,முத்துசாமி அவர்களையும் எனக்கு தனியாக அறிமுகப்படுத்தினீர்கள். (பின்பு இவர் எனது நல்ல நண்பர் ஆகிவிட்டார்),
இந்த முதல் பார்ட்டியை மறக்க முடியாது. இதற்கு முன் சக ஊழியர் சஞ்ஜய்யின் திருமண வரவேற்பில் குடும்பததோடு கலந்து கொண்டேன், அன்று இரவு நான் குடும்பத்தோடு முதன் முதலில் தங்களது இல்லத்துக்கு வந்தோம், அன்று இரவு 11 மணிக்கு ஸ்ரீராமை குஷிபடுத்த வேண்டும் என்று ஸ்நோபால் விளையாட அழைத்துச்சென்றீர்கள், பிறகு இரவு 1 மணிக்கு ஐஸ்கிரீம் வாங்கிக்கொடுத்து எங்களை தாங்களே காரை ஓட்டி எங்கள் இருப்பிடத்திற்கு இறக்கிவிட்டீர்கள். அப்போது ஆதித்யாவும் ஸ்ரீராமுக்கு கம்பெனி கொடுக்க வந்திருந்தார். அதை மறக்கமுடியுமா?

அடுத்து தாங்கள் முதன் முறையாக அகில இந்திய கண் மருத்துவர்கள் சொசைடிக்கு விஞ்ஞானக்குழு தலைவராக தேர்ந்த எடுத்து சமயத்தில் ஒரு பெரிய பார்ட்டியினை ஏற்பாடு செய்திருந்தீர்கள். இதற்காக நான் முதன் முதலில் ரூ3000 கொடுத்து பார்ட்டி சுட் வாங்கி அணிந்தேன். பார்த்தவர் அனைவரும் பாராட்டினர் (எனது டிரஸ்ஸை). இதுபோன்று விலை உயர்ந்த ஆடையினை என் திருமணத்திற்கும் எடுத்ததில்லை. இந்த பார்ட்டியில் நிறைய விஐபிக்கள் கலந்துகொண்டார்கள். அவர்களை எல்லாம் எனக்கு அறிமுகப்படுத்தினீர்கள், இந்த பார்டியினையும் மறக்கமுடியாது.

தாங்கள் இரண்டாவது முறையாக அகில இந்திய விஞ்ஞயானக்குழு தலைவராக வெற்றிபெற்றதற்கு ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தீர்கள். அது தான் நான் கலந்து கொண்ட முதல் டான்ஸ் பார்ட்டி.....ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். அந்த ஆட்டத்தின் நடுவே “இந்த வெற்றிக்கு ராம்கியும் முக்கிய காரணம் அவரை மேலே தூக்குங்கடா….” என்று ஒருவர் இந்தியில் குரல் கொடுக்க என்னை அப்படியே தங்கள் தோள்கள் மீது உட்கார வைத்து ஒரு கூட்டமாக ரவுட் அடித்தீர்கள்....ஓ என்ற சப்தம் வேறு....இதை மறக்கவே முடியாது.. ஆண் பெண் வித்யாசமின்றி பலபேருடன் இதில் கூத்தடித்தது மறக்கமுடியாது. அடுத்த பார்ட்டி எப்போது என்று ஏங்க வைத்த பார்ட்டி இதுதான்.

ஒரு முறை நான், திரு கருண் அவர்களோடு இணைந்து தங்களுக்கு குஷி விருது கிடைத்ததும் அப்போதய கவர்னர் திரு எஸ். எம். கிருஷ்ணா அவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்து தங்களை கௌரவப்படுத்தினோம். அவ்விழாவும் சிறப்பாக நடந்தது. பலரும் தங்களைப்பற்றி வாழ்த்தி பேசினார்கள். கவர்னர் கிளம்பும் போது என்னை அவர் அருகில் அழைத்து, “இந்த விழாவினை இவ்வளவு சிறப்பாக செய்தவர் இவர் தான் ராம்கி..” என்று அவருக்கு அறிமுகப்படுத்தினீர்கள். “எக்ஸ்லண்டு... வாழ்த்துக்கள்” என்று கவர்னரும் என்னுடன் கை குலுக்கினார். அன்று இரவு பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தோம். இந்த விழாவினையும மறக்க முடியாது,


வாட்டர் பார்க் பிக்னிக் பார்ட்டி,... சுமார் ஒரு மணி நேரம் பஸ்ஸில் மும்பையிலிருந்து பயணித்தோம். பஸ்ஸில் ஒரே ஆர்ப்பாட்டம்....”தமிழில் ஏதாவது பாடுங்க சார்...”என்ற அழைப்பு விடுத்தீர்கள்....பார்க்கில் ஒரு நாள் முழுவதும் தண்ணீரில் விளையாட்டு... ஆண்களும் பெண்களும் சேர்ந்து அந்த தண்ணீரில் சொட்ட சொட்ட விளையாடியதை வாழ்நாளில் மறக்க முடியுமா?

வாழ்வில் என்ஜாய் பண்ண வேண்டும் என்றால் அது மும்பையில் தான் முடியும். என்பதற்கு எடுத்துக்காட்டாக அடுக்கடுக்காக பார்ட்டிகள்...பல பார்ட்டிகள் ஆதித்ய ஜோத் மருத்துவமனையின் மொட்டை மாடியில் நடந்தபோது அனைத்திற்கும் முதல் ஆளாக என்னை அன்போடு அழைப்பீர்கள். “வந்திடுங்க சார் முத்துசாமி தான் சாப்பாடு” என்பீர்கள். இது போன்ற பல பார்ட்டிகளுக்கு என்னையே ஒருங்கினைப்பாளராக இருக்கச்சொல்லி அனைத்து ஏற்பாடுகளையும் செய்யச்சொன்னீர்கள்... இது போன்ற பார்ட்டியின் போது பலரை தொலைபேசியில் பலமுறை அழைத்திருந்தால், பார்ட்டிக்கு வந்த பலர், “யாரு இந்த ராம்கி...வந்திருக்காரா...பாக்கமுடியுமா” என உங்களிடம் கேட்கும் போது, “அட, என்னங்க நீங்க இன்னும் ராம்கியை சந்திக்கவில்லையா....உங்க பக்கத்திலேயே அமைதியா நின்றுகொண்டு இருக்கிறாரே அவர் தான் ராம்கி..” என்று தாங்கள் சொல்லும் போது ஓ என்றுபலர் ஆச்சரியப்பட்டு என்னை நலம் விசாரிப்பார்கள், பலர் நன்றி சொல்வார்கள்.. அவர்களது வீட்டுக்கும் அழைப்பார்கள்.....அவற்றை மறக்க முடியுமா?


பல முறை பல தியேட்டர்களிலேயே பார்ட்டி ஏற்பாடு செய்யும் முழு பொறுப்பினையும் என் மீது நம்பிக்கை வைத்து செய்யச்சொன்னீர்கள். பொங்கல், தீபாவளி போன்ற நாட்களில் திரைப்படம். பின்பு மதிய சாப்பாடு அல்லது டின்னர் என எல்லோரும் அதிசயப்படும்படி அசத்தினோம்.

பலர் தங்களை சிறப்பாக ஏற்பாடு செய்தமைக்கு பாராட்டும்போதும், நன்றி சொல்லும் போதும், “நான் எதுவுமே செய்யலே.... இதோ இந்த ராம்கி தான் முழு ஏற்பாடையும் எனக்காக செய்தவர்..அவருக்குத் தான் நீங்கள் நன்றி சொல்லவேண்டும்” என்று முழுமனதுடன் சொல்லி உங்களுக்கு வந்தப் பாராட்டை என்பக்கம் திருப்புவீர்கள். என்னே உயர்ந்த உள்ளம் தங்களுக்கு

ஒரு பார்ட்டியில் ஒரு பெரியர் கிளம்பும் போது, “சார் இந்த ராம்கியையும் அவரது எற்பாடுகளையும் உங்களிடம் சொல்லாமல் போக எனக்கு மனசு வரலே... இவரை எப்பவும் விடாதேங்க சார்....இவர் என்னை நன்றாக கவனித்துக்கொண்டதாலே இதை சொல்லலே..,, அவரை புகழ்ந்து பேசி எனக்கு என்ன ஆகப்போவுது? நான் பல பார்ட்டிகளில் கலந்து கொள்பவன்,. ராம்கியின் ஏற்பாட்டில் அவர் சின்ன சின்ன விஷயத்தி்லும் கவனம் செலுத்தி சிறப்பா ஏற்பாடு செய்துவருகிறார்” என்று மனநிறைவோடு பாராட்டும் போது, தங்களுக்கு அருகில் இருக்கும் நான் நெளிந்ததுண்டு....”யார் இவரை விடப்போறாங்க.....வாழ்த்துக்கள் சார்..கீப் இட் சார்” என்று கைகுலுக்குவீர்கள். இந்த பெருந்தன்மை சிலருக்குத்தான் வரும்.


தங்களது அப்பா அம்மாவின் 51 ஆண்டு திருமண நாள் விருந்தும் சிறப்பாக நடந்தது. மிக குறிப்பிட்ட நபர்கள் தான் கலந்துகொண்டனர். இதற்கு அம்மாவை வீல்சேர்ரில் தூக்கிவந்து கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்திற்கும் அதன் மாடியில் உள்ள மண்டபத்திலும் அமர வைத்து சிறப்பாக விருந்தளித்தோம். இதையும் மறக்கமுடியாது?

எந்த பொறுப்பினை ஓப்படைத்தாலும் அதை இவர் “சரியாக” செய்வார் என்பதை விட “சிறப்பாக” செய்வார் என்ற நம்பிக்கையில் பல வாய்ப்பினை எனக்கு அளித்து கௌரவப்படுத்தினீர்கள். இதனால் பல உயர்தவர்களின் நட்பும், அன்பும் கிடைத்தது. அவர்களும் தங்களை மறுமுறை சந்திக்கும் போது “ராம்கி எப்படி இருக்கிறார்” என்று உங்கள் குடும்ப உறவினர் ஒருவரை விசாரிப்பது போல் விசாரிப்பார்கள். அதையும் என்னிடம் பகிர்ந்து கொள்வீர்கள். போனில் பேசும் போதும் கூட யாராவது என்னைப்பற்றி தங்களிடம் விசாரித்தால் உடனே, “இதோ பக்கத்தில் தான் ராம்கி இருக்கிறார்,. அவரோடு பேசுங்கள்” என்று சட்டென தங்கள் போனை என்னிடம் கொடுத்து பேசச்சொல்வீர்கள்...

தங்களது பிறந்த நாள் பார்ட்டிகளிளும், திருமண நாள் பார்ட்டிகளிலும், ஆதித்ய ஜோத் மருத்துவ மனையின் ஆண்டு விழா, மற்றும் திறப்பு விழா பார்டிகளிலும் கலந்து கொண்டு மகிழ்ந்த நாட்களை
அவ்வளவு சீக்கிரத்தில் மறக்கமுடியாமா என்ன?

மற்ற பார்ட்டிகளுக்கு தாங்கள் செல்லும் போது நான் சொல்லும் ஐடியாக்களை பாராட்டி அதை உடனே செய்யும் படியும் சொல்வீர்கள். வாழ்த்து அட்டையில் புகைப்படங்களை ஒட்டுவது, தமிழில் சின்ன கவிதை அல்லது டயலாக் எழுதுவது போன்றவற்றையும் ரசிப்பீர்கள். தாங்கள் மகிழ்தது மட்டுமின்றி அதனை பெற்றவர் சொன்ன வார்த்தைகளையும் அவர்களது சந்தோஷத்தையும் என்னிடம் மறவாமல் அடுத்த நாள் சொல்லி மகிழ்வீர்கள். “சார் இன்னாருக்கு பிறந்த நாள்....இன்னாருக்கு திருமணநாள்....என்ன பரிசு கொடுக்கலாம்...நீ்ங்களே செலக்ட் செய்து வாங்கிகொண்டு வந்துவிடுங்கள்” என்பீர்கள். பல முறை பட்டுபடவைகள் கூட நான் தேர்வுசெய்து கொண்டு வந்தபோதும் ‘ரொம்ப நல்லா இருக்கு சார்..” என்பீர்கள்.

தங்களது பாராட்டும் மகிழ்ச்சியும் சும்மா ஒரு வாய்பேச்சாக இல்லாமல், உங்கள் உள்ளத்திலிருந்து வெளிவரும் உணர்வுகளாக இருப்பதை நான் அறிவேன். தங்கள் எனக்கு அளித்த ஊக்கமும், பாராட்டுக்களும் தான் என்னை உங்களோடு மீண்டும் சேர்ந்து கைகோர்த்து இரண்டு கைகள் நான்கானால் இருவருக்குமே நல்ல எதிர்காலம் என்று மனதில் பாடவைத்தது.

ஒரு நாள் காலை நாம் அனைவரும் ஒரு சின்ன அருவிக்கு சென்றோம். நம்முடன் திரு சிவா ஐபிஎஸ் மற்றும் திரு நம்பிராஜன் போன்றவர்களும் நம்முடன் வந்தனர். மலைமேலே சில மணி நேரங்கள் நடந்து சென்று வந்தோம். அப்போது அந்த மலை உச்சியில் சுடச்சுட காபி, டீ, காலை சிற்றுண்டி என ஏற்பாடு செய்து அசத்தினீர்கள். அப்போது அந்த அருவியில் குளித்தும்.. சிறிய ஆற்றைக் கயிறு கட்டி கடந்தும் பசுமையையும் இயற்கை காட்சிகளையும் மனம் குளிர கண்டு ரசித்தோமே அதை மறக்க முடியுமா?

மகாராஷ்ட்ரா முதலமைச்சர், துணை முதலமைச்சர், மத்திய அமைச்சர் ஷிந்தே, நடிகை ஷபினா ஆஸ்மி, ஐஸ்வர்யா ராய், ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள், எல் அண்டு டி சேர்மன் அனில் நாயக் போன்ற பல மிகப்பெரிய விஐபிக்கள் தங்களை சந்திக்க வரும் போது எல்லாம் என்னை அழைத்து அவர்களுக்கு அறிமுகப்படுத்தினீர்கள்.,

ஒரு நாள் இரவு நாங்கள் வீட்டிற்கு புறப்படும் நேரம் தாங்கள் குடும்பத்தோடு திருப்பதி சென்றிருந்தீர்கள், அப்போது திடீரென டெல்லியிலிருந்து பிரதமர் அப்துல் கலாம் அடுத்த நாள் மாலை வரப்போகிறார் என்று தங்களுக்கு போன் வர தாங்கள் எனக்கு போன் செய்து அதற்கான ஏற்பாடுகளை நான் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டீர்கள்...நீங்கள் போனை வைப்பதற்குள் பல போலீஸ் உயர் அதிகாரிகள் படைதிரண்டு அதிரடியாக மருத்துவமனைக்கு நுழைந்து அந்த தெருவையே தங்கள் கட்டுப்பாட்டிற்கு எடுத்துக் கொண்டார்கள்...ஆ..அந்த நிகழ்ச்சியை மறக்க முடியுமா..அவ்வளவு ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்தாலும் நான் சோகமாகவே இருந்தேன். காரணம் அன்று இரவே நாங்கள் அகில இந்திய மாநாட்டிற்கு செல்ல வேண்டியிருந்தாலும் ஒரு முறை உள்ளே வந்துவிட்டால் பின் திரு. கலாம் அவர்கள் வெளியே செல்லும் வரை நாங்கள் வெளியே வரமுடியாது, அப்படியானல் நாங்கள் செல்லவேண்டிய ரயிலை பிடிக்க முடியாது என்ற காரணத்தால் திரு, கலாம் அவர்களை சந்திக்க முடியாமேலே போய்விட்டது. இந்த வருத்தத்தை தாங்கள் தான் போக்க வேண்டும் என்பது என் ஆசை.

அந்த நாள் ஞாபகம் செஞ்சிலே வந்ததே அண்ணே...அண்ணே.............

ராம்கி.

கோதுமை தோசை செய்வது எப்படி??

கோதுமை தோசை செய்வது எப்படி??
PORUR ராம்கி

ஒருவருக்கு (சுமார் 5 தோசை)

தேவையான பொருட்கள்
நல்ல கோதுமை மாவு 2 டவரா
சீரகம் 3 டீ ஸ்பூன்
பச்சைமிளகாய் 2 (பொடிப்பொடியாக நறுக்கியது)
உப்பு தேவையான அளவு
கருவேப்பிலை சிறிது
தண்ணீர் தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு

ஒரு பாத்திரத்தில் 2 டவரா கோதுமை மாவை போடவும். அதில் உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு நன்றாக கையால் பிசைய வேண்டும். அத்துடன் சீரகம் 3 டீ ஸ்பூன், பொடிப்பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், கருவேப்பிலை போன்றவற்றையும் சேர்த்து பத்து நிமிடங்கள் கழித்து தோசை சுடலாம்.

தோசைக்கல் சற்று அதிகசுட்டில் இருக்க வேண்டும். முதலில் தோசைக்கல்லில் இரண்டு சொட்டு எண்ணெய் விட்டு தடவவும். இதனால் முதல் தோசை கிண்டாமல் வரும். எண்ணெய் அதிகம் விட வேண்டும் என்ற அவசியமே இல்லை. சில சொட்டுக்கள் எண்ணெய் பயன்படுத்தினாலும் போதும். அமெரிக்காவில் எண்ணெய் அதிகம் சேர்க்க விரும்பாதவர்கள் தற்போது இங்க் பில்லர் மூலமாக எண்ணெய்யை சொட்டு சொட்டாக விட்டு தோசை செய்கிறார்கள்.

மேற்சொன்ன பொருட்களுடன் வெங்காயத்தையும் (மிகப்பொடி பொடியாக நறுக்கியது) சேர்த்து தோசை சுடலாம்.

சிலர் பொடிப்பொடியாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்து தோசை சுடுகிறார்கள்..

மனித நேயத்திற்கு மறுபெயர் திரு கருண்


மனித நேயத்திற்கு மறுபெயர் திரு கருண்

PORUR ராம்கி


எனக்கு மும்பையில் கடந்த ஆறு வருடங்களாக டாக்டர் நடராஜன் (தலைவர், ஆதித்ய ஜோத் கண் மருத்துவ மனை) அவர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஓரிரு மாதங்களில் ஒரு நாள் டாக்டர் நடராஜன் என்னை அவரது அறைக்கு அழைத்தார். அப்போது அவருக்கு எதிரே அமைதியாக உட்கார்ந்திருந்த ஒரு நபரை அறிமுகப்படுத்தினார். “சார், இவர் தான் திரு கருண். எனது நல்ல நண்பர். இவர் தான் அவ்வப்போது நமக்கு இந்தியன பேனாநண்பர் பேரவை அழைப்பிதழ்கள் மற்றும் சுற்றரிக்கைகள் அனுப்புபவர், இவரை பிடிச்சுக்கோங்க” என்று அறிமுகப்பத்தினார். நான் திரு. கருண் அவர்களுக்கு வணக்கம் செலுத்தி கை கொடுத்தேன். உடனே தன் பேக்கட்டிலிருந்து தனது விசிட்டிங்கார்டை எனக்கு கொடுத்து உரிமையுடன் “எப்ப வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளுங்க ராம்கி...இனி நான் டாக்டரை தொந்தரவு செய்யவேண்டியிருக்காது,. நான் உங்களுடன் தொடர்பு கொள்கிறேன்” என்று கூறியவர் எனது குடும்பத்தைப்பற்றியும், தங்கி இருக்கம் இடம் பற்றியும் நலம் விசாரித்தார். இது தான் எங்கள் முதல் சந்திப்பு. பிறகு நெருங்கிய நண்பர்கள் ஆவோம் என்று எங்களுக்கு அப்போது தெரியாது.

முன்பு இவரிடம் இருந்து அழைப்பிதழ்கள் வரும் போது, டாக்டர் என்னிடம் கொடுத்து பாருங்க சார்..இந்த அழைப்பிதழ்லே எவ்வளவு தமிழ்காரங்க பேர் போட்டு இருக்கு....எப்படித்தான் கருண்ரவரு பெரிய பெரிய நிகழ்ச்சிகளை அடிக்கடி செய்கிறோரே என்று சொல்லி, “முடிந்தா இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு நீங்க என் சார்பா போயிட்டு வாங்கசார்” என்றது நினைவுக்கு வந்தது .”ஓ... அந்த கருண் இவர்தானா?” என்ற ஆச்சரியப்பட்டேன்.

பிறகு திரு கருண் அவர்கள் அடிக்கடி மருத்துவமனைக்கு வரும்போதெல்லாம் என்னை சந்திக்காமல் செல்ல மாட்டார். ஒவ்வொருமுறை வரும் போது ஒரு சிலர் அவரோடு இருப்பர். அவர்களையும் நமக்கு அறிமுகம் செய்துவைப்பார். ஒருமுறை மும்பை பத்திரிக்கை நண்பர்களோடு வருவார். அடுத்து முறை ஏதாவது தமிழ் மன்ற தலைவருடன் வருவார். இப்படி யாராவது ஒரு விஐபி அவருடன் இருப்பர்.

இலவச கண் சிகிச்சை முகாம் அடிக்கடி ஏற்பாடு செய்வதில் வல்லவர் திரு கருண் அவர்கள். அது சம்பந்தமான மருந்துகளை இலவசமாக பெறவும். அதன் ஏற்பாடு விஷயமாகவும் என்னிடம் கலந்து ஆலோசனை செய்வார், அதுமட்டுமின்றி இந்த முகாமுக்கு “ராம்கி நீ்ங்க கட்டயாம் வரவேண்டும்.. மதிய உணவு எங்களுடன் சாப்பிட வேண்டும்” என்று அன்போடு அழைப்பார். தொடர்ந்து இது போன்று இலவச முகாம்களை மும்பையில் ஏற்பாடு செய்து, எம்ஜிஆர் போன்று பலதரப்பட்ட மக்களின் உள்ளத்தில் குடிகொண்டிருப்பவர் திரு கருண் அவர்கள்,

ஒரு முறை என்னை சந்திக்க வந்தவுடன் இங்கு பக்கத்தில் சில பள்ளிகுழந்தைகள் தங்க ஏதுவாக இடம் கிடைக்குமா...வெளியூரிலிருந்து மும்பைக்கு வராங்க... என்றார்,. பேசிக்கொண்டு இருக்கும் போதே பத்து பதினைந்து பேருக்கு போன் செய்து குழந்தைகள் தங்க ஏற்பாது செய்வது, அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்வது போன்றவற்றில் முழுகவனம் செலுத்துவதை கண்டு நான் ஆச்சரியப்பட்டதுண்டு. “நாளைக்கு பாக்கலாம் ராம்கி, நான் இப்போ கிளம்பினாதான் அங்கே போய் அந்நாரை சந்தித்து குழந்தைகளுக்கு ஏற்பாடு செய்யமுடியும்” என்று சொல்லிவிட்டு தன் இருசக்கர வாகனத்தில் பறந்துவிடுவார் திரு, கருண் அவர்கள்,

எதிலும் முழுமூச்சுடன் செயல்படுவார். ஒரு முறை டாக்டர் நடராஜன் அவர்களுக்கு மிக உயர்ந்த விருதான குஷி விருது கிடைத்ததும், நாங்கள் இருவரும் டாக்டருக்கு ஒரு பாராட்டு விழா இந்திய பேனாநண்பர் பேரவை மூலம் ஏற்பாடு செய்யலாம் என்று முடிவு செய்தோம். அதற்கு அப்போதைய மகாராஷ்ட்ரா கவர்னர் திரு எஸ் எம் கிருஷ்ணா அவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தோம். மேலும் திரு த. சிவானந்தன் ஐபிஎஸ் மற்றும் பல விஐபிக்கள் கலந்து கொண்டனர். விழா மிகவும் சிறப்பாக நடந்தது. இவ்விழா ஏற்பாடுகளை நாங்கள் இருவரும்முன் நின்று, மண்டபம் ஏற்பாடு செய்வது முதல், இரவு விருந்து வரை நேரே பலரை சந்தித்து ஒரு குறையும் இல்லாமல் நிகழ்ச்சி சிறப்பாக வரவேண்டும் என்று கவனமாக செயல்பட்டோம். பேரவை நண்பர்கள் அடிக்கடி மேடையில் “திரு கருண்-திரு ராம்கி” பெயர் வருவதை கண்டு, “யார் இந்த ராம்கி?” என்று கேட்க ஆராம்பித்துவிட்டார்கள். டாக்டர் முதல் அவனவரும் எங்கள் இருவரின் ஏற்பாடுகளை கண்டு வியந்து பாராட்டி வாழ்த்தினார்கள். இச்சம்பவத்திற்கு பின் “கருண்-ராம்கி” என்ற காம்பினேஷன் மும்பை எங்கும் பரவ ஆராம்பித்தது, இதற்கு பிறகு நாங்கள் இருவரும் நண்பர்களாக இருந்த நிலைமாறி சகோதரர்கள் ஆகி் மும்பையில் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தோம். பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்ந்தோம். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது போனில் பேச வேண்டும் என்று நிலைக்கு இருவரும் சகோதர பாசத்தில் திளைத்தோம்.

ஒருநாள் தன் வீட்டிற்கு அழைத்து எனக்காக தடபுடலான விருந்தினை கொடுத்தார் திரு கருண் அவர்கள், அவர்களது குடும்பத்தாருக்கு என்னை அறிமுகப்படுத்தி தன் கைகளாலேயே உணவு பரிமாறினார். எந்த விழாவானாலும் “ராம்கி நீங்க கட்டாயம் வந்திடனும். அந்த மீட்டிங்க இருக்கு. இங்க மீட்டிங் இருக்குனு வராம இருக்கக்கூடாது” என்பார். மும்பையில் இவர் சன் டிவிக்கு பட்டிமன்றம் ஏற்பாது செய்தபோது எனக்கு மறவாமல் அழைப்பிதழ் அனுப்பினார்,. நேரே சந்தித்தபோது அனைவருக்கும் என்னை அறிமுகப்படுத்தினார்.

திடீரென அலுவலகம் வருவார், “ராம்கி நாளை மருத்துவமுகாம் இருக்கு.... இந்த மருந்து இருந்தா நல்லா இருக்கும் உங்களுக்கு யார்யார் கிட்டே பழக்கம் இருக்கு அவர்களுக்கு போன் போட்டு உடனே கேளுங்க” என்று உரிமையோடு கேட்பார். அடுத்த முறை பார்க்கும் போது “ராம்கி இன்னும் நமது ஆண்டு மலரில் கடைசி பக்கம் விளம்பரம் புக் ஆகவில்லையே...கொஞ்சம் டாக்டர் கிட்ட பேசி முடிச்சு கொடுத்திடேங்கன்னா நல்லா இருக்கும்” என்பார். அவர் நினைப்பது நல்லபடியாக நடக்கும்.

பொது வாழ்வில் இவர் சமூக சேவைக்குத் தான் முதல் இடம் கொடுப்பார், மனைவி மக்கள் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். வீட்டில் சாப்பிட இரவு 11 மணி்க்கு அழைப்பு வந்தாலும், “நீங்க எல்லோரும் சாப்பிடுங்க நான் மாராத்திய முரசு பத்திரிக்கை ஆபீ்ஸ்க்கு இப்போ போயிட்டு 1 மணி வந்துவிடுகிறேன்” என்பார்.

தன் உடல் நலம் பற்றி கவலைப்பட மாட்டார். சமூக சேவைதான் இவரது உயிர். ஒருமுறை வந்து போது முகம் சற்று வீங்கி இருந்தது. “என்ன சார் விஷயம்?” என்ற போது “ஒன்னும் இல்லே…சுகர் ரொம்ப தாஸ்தி ஆயிடுச்சு. டாக்டர் என்னை உடனே அட்மிட் ஆகவேண்டும்னு சொல்லி்ட்டாரு. நாளைக்கு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்திருக்கேன்,. அதை எல்லாம் முடிச்சட்டுதான் அட்மிட் ஆகனும்” என்றார். இதை கேட்டு நானும் டாக்டர் நடராஜனும் அதிர்ச்சி அடைந்து “ஐயா மொதல்ல உங்க உடம்பை பார்த்துக்கோங்க சார்” என்று அன்பு கட்டடளையிட்ட பின்னும் சமூக சேவையில் தான் இவரது மனம் செல்வதை கண்டு வியந்ததுண்டு, அந்த அளவுக்கு பொது வாழ்வில் ஈடுபாடு இவருக்கு. ஒரு முறை நடிகர் விஜயகாந்த் மும்பை வந்தபோது விமானநிலையத்திலிருந்து அழைத்துவருவது முதல் அவர் செல்லும் வரை அவருடன் இருந்தார். என்னை கண்டதும் என்னை நடிகர் விஜயகாந்த்க்கு அறிமுகம் செய்து வைத்தார்.

மனித நேய மாமணி பட்டம் இவருக்கு மிகப் பொருத்தமான பட்டம், அதற்கு எற்ற சரியான நபர் என்பது என்னை போனறு அவருடன் நெருங்கி பழகினால் தான் தெரியும். ஒரு முறை நான் சென்னைக்கு கிளம்பு விமான நிலையத்திற்கு சென்று கொண்டு இருந்தேன், அப்போது அவர் போன் வர “இப்ப நீங்க எங்கே இருக்கீங்க என்று கேட்டு ஒரு இடத்தை குறிப்பிட்டு அங்கே நில்லுங்க. நான் இன்னும் 10 நிமிஷத்தில் அங்கே இருப்பேன்” என்றார். சொன்னது போல் கையில் என் மகனுக்கு பிடித்த இனிப்பு மற்றும் கார வகைகள் வாங்கி கொடுத்து மகிழ்ச்சியாக வழி அனுப்பினார். எப்போதும் கலகலப்பாக இருப்பார், ஜோக் அடித்துக்கொண்டு தன்னுடன் இருப்பரை சிரிக்கவைப்பவர், அதனால் இவர் இருந்தால் நேரம் போவதே தெரியாது எனக்கு. பழைய பாடல்கள் என்றால் எங்கள் இருவருக்கும் உயிர்.

மும்பையிலிருந்து கடைசியாக நான் கிளம்பும் நாள் அன்று என் இல்லத்திற்கு வந்து எனக்கு பிடித்த கலரில் சட்டைகள் மற்றும் நிறைய இனிப்பு காரவகைகள் கொடுத்து விமான நிலயம் வரை வந்து வழி அனுப்பிவைத்தார். இன்றும் போனில் பேசும் போது எனது மனைவி மகன் பற்றி அன்புடன் விசாரிப்பார். அந்த மனித நேய மாமணியுடன் பழகிய நாட்கள் என்றும் நெஞ்சில் பசுமையாக காட்சியளிக்கிறது மேலும், ஒரு சகோதரரை விட்டு பிறிந்து வந்துபோல் உள்ளது, அவரை சந்திக்கும் நாட்கள் என்றும் எனக்கு திருநாளே,....வாழ்க அவரது தன்னலமற்ற சேவை குணம்..வாழ்க அவரது மனித நேயம்........வாழ்க பல்லாண்டு.
விரைவில் பத்மஸ்ரீ பட்டம் பெற வாழ்த்தோம், அனைவரும் வாருங்கள் என்னுடன்.......

ராம்கி

"நம்பி”னோர் கைவிடப்படார்


நம்பி”னோர் கைவிடப்படார்
PORUR RAMKI

மும்பை ஆதித்ய ஜோத் கண் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் எஸ். நடராஜன் என்னை மும்பைக்கு வருமாறு அழைத்த முதல் சந்திப்பில் என்னிடம் விடைபெறும் போது சொன்ன வார்த்தை
“நம்பி” வாங்க சார்.......”

பின் ஆறுவருட காலம் டாக்டர் நடராஜன் அவர்களுடன் பணி செய்தபோது அவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவரான “நம்பி” என்று செல்லாமாக அழைக்கப்படும் திரு. நம்பி ராஜன் என்பவரை ஒருமுறை அறிமுகப்படுத்தி வைத்தார். மும்பை மாதுங்கா கிங் சர்க்கிளில் இவரது அரோரா தியேட்டர் உள்ளது. ஒரு முறை நான் சயான் செல்லும் வழியில் அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. “என்ன சார் தியேட்டர் பக்கமே வரமாட்டேங்கரீங்க..” என்று அன்போடு கேட்டார். பிறகு ஒரு சமயம் அவரது தியேட்டருக்கு சென்றபோது என்னைப்பற்றியும் என் குடும்பத்தை பற்றியும் கேட்டறி்ந்தார். இப்படியாக எங்களது நட்பு துளிர்விட்டது.

டாக்டர் நடராஜன் தன் தமிழ் நண்பர்களுக்காக அவ்வப்போது தீபாவளி மற்றும் பொங்கல் சமயங்களில் தமிழ் திரைப்படத்திற்கு 150/200 டிக்கெட் பதிவு செய்து அழைத்துச் செல்வார், அப்படி ஒரு முறை ஒரு படத்திற்கு சென்ற போது அவரது தமிழ் நண்பர்கள் அனைவரையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதில் பல ஐபிஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகளும், பெரிய பெரிய நிர்வாகத்தில் இருப்பவர்களும் அடங்கும். படம் முடிந்ததும் இரவு விருந்து அளித்து அனைவரையும் கௌரவிப்பதில் மன்னன் டாக்டர் அவர்கள் என்றால் மிகையாகாது.

அடுத்த முறை ஒரு படத்திற்கு ஏற்பாடு செய்த போது அனைவரையும் போனில் அழைத்து, அவர்களை தியேட்டரில் வரவேற்கும் பொறுப்பினையும் என்னிடம் தந்தார் டாக்டர் நடராஜன் அவர்கள். ஒரு முறை திரு. நம்பி ராஜன் அவர்களின் திரையங்கில் ஏற்பாடு செய்ய டாக்டர் விரும்பினார். அப்போது டிக்கெட் புக் செய்வது முதல், இரவு விருந்து வரை ஏற்பாடு செய்ய திரு.நம்பி ராஜன் அவர்களுடன் தொடர்ந்து பலமுறை தொடர்பு கொண்டு சிறப்பாக ஏற்பாடு செய்தேன். அப்போது எங்களது நட்பு நன்கு வளர்ந்து, ஒரு சகோதரர் போல் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டோம். திரு. நம்பி ராஜன் அவர்களுக்கு கண் செக்கப் செய்ய வேண்டிய சமயத்தில் நான் மருத்துவ மனனையில் இருக்கிறேனா என்று கேட்டு அறிந்தபிறகு தான் வருவார். அப்போது அவருடன் கம்பெனி கொடுத்து அவர் செல்லும் வரை அவருடன் இருக்கும் நல்ல வாய்ப்பு கிடைத்தது. பிறகு நான் எப்போது அரோரா தியேட்டருக்கு சென்றாலும் கிரீன் கார்டு தான்..

நானும் டாக்டரும் பல படங்களை அரோரா திரையரங்கில் பார்த்து மகிழ்ந்துள்ளோம். அப்போது டாக்டருக்காக பிளாக் காபி சுடச்சுட ஏற்பாடு செய்வார் திரு நம்பியும், அவரது சகோதரர் ராசுவும்.

நாள்பட நாள்பட எங்களது நட்பு ஒரு சகோதர நட்பாக மாறியது. அவரது 25வது திருமணநாள் பார்ட்டிக்கு என்னை அழைத்தார். வெறும் விருந்தாளியாக செல்லாமல் விருந்தினர்களை வரவேற்பது, வந்த பெரிய விருந்தாளிகளை கவனித்துக்கொள்வது என ஆர்வமாக ஈடுபட்டேன். நிகழ்ச்சியின் கடைசி வரை அவருடன் இருந்து சின்ன சின்ன உதவிகளை செய்தேன். பிறகு அனைவரும் கிளம்பிய பிறகு நான் கடைசியில் தனியே இரவு 12 மணிக்கு நடப்பதை பார்த்த திரு நம்பிராஜன் தன் காரை நிறுத்தினார், நான் நடந்து செல்கிறேன் என்று பலமுறை சொல்லியும் விடாமல், என்னையும் அவர்காரில் வரச்சொல்லி வீட்டில் இறக்கி விட்டு நான் செய்த சிறிய உதவிகளுக்கு நன்றி சொல்லி விடைபெற்றார். காரில் இருந்த அவரது திருமதியிடம் என்னைப்பற்றிய விவரங்களை சொல்லி மீண்டும் அறிமுகப்படுத்தி மகிழ்ந்தார். அந்த பார்ட்டியின் போது அவரது மகன் கணேஷ் மற்றும் இதர குடும்பத்தாரோடு பழகும் அறிய வாய்ப்பு கிடைத்து. அந்த விருந்தை என்னால் மறக்கமுடியாது.

பிறகு அவரது மகளுக்கு திருமணம் ஏற்பாடு ஆனதும் எனக்கும் முதலில் தெரிவித்தார். கட்டாயம் திருமண வரவேற்புக்கு வந்துவிடவேண்டும் என்றார். நான் இதுவரை அவ்வளவு பெரிய திருமண விருந்தினை மும்பையில் கண்டதில்லை.. அவ்வளவு உணவு வகைகள்...சுமார் 400ம் மேற்பட்ட சாப்பாட்டு வகைகள். ஒரு பெரிய மைதானம் முழுவதும் சாப்பாடு ஐடங்கள்தான். அவை அனைத்தும் சவுத் இந்தியன். நார்த் இந்தியன் என பலவகைப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த விருந்திலும் அவரது விருந்தினர்களை அவரது சகோரதருடன் இருந்து கொண்ட வரவேற்றேன். பாதி பாம்பே மக்கள் வந்தது போன்று கூட்டம். நடிகர் விஜயகாந்தும் கலந்து கொண்டதால் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம். நான் கடைசியல் விடைபெறும் போது நன்றி சொல்லி அனுப்பிவைத்தார்.

.“நான் ஊருக்கு செல்லலாம் என இருக்கேன்” என்று எப்போதாவது அவரிடம் சொல்லும் போது, எப்போதும் அவர் சொல்லும் வார்த்தை, “ராம்கி, டாக்டர் உங்களை நிச்சயம் விடவே மாட்டார். உங்களை ரொம்ப அவருக்கு பிடிச்சுப்போச்சு, உங்க ரெண்டு பேரோட காம்பினேஷன் ஒர்க் அவுட் ஆயிடுச்சு” என்று தோல்களை குலுக்கியவாரு கிண்டல் அடிப்பார், “இங்கேயே இருந்திடங்க சார்” என்பார். கம்யூட்டரில் ஏதாவது சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேட்பார். தாமிரபரணி தயாரிப்பாளர் எனக்கு தெரிந்தவர்தான் என்றதும். அப்படத்தை மும்பையில் திரையிட என் பெயரில் படத்தை எடுத்ததாகச் சொன்னார். நன்றாக ஓடிய போது செக்கும் கொடுப்பதாகச் சொன்னார். ஆனால் கொடுக்கவில்லை.....(இப்போதாவது அனுப்புங்க சார்....) சினிமா வியாபாரத்தில் நம்பியை மிஞ்சமுடியாது என்பார்கள். அந்த அளவுக்கு ஒரு படத்தை எடைபோடுவதில் வல்லவர் திரு நம்பி அவர்கள். வியாபாரம் பேசி படத்தை எடுப்பவதி்ல் இவர் வல்லவர் என்றால் அவரது சகோதரர்கள் பட விநியோகம் மற்றும் தியேட்டரை நிர்வாகம் செய்வதில் வல்லவர்கள். நம்பி அவர்கள் எப்போதும் காட்டன் வெள்ளை சட்டையைத்தான் அணிவார். ஒரு நாளைக்கு நான்கு ஐந்து சட்டைகளை மாற்றுவாராம். அவரது மனம் போல் அவர் அணியும் சட்டைகளும் துய்மையாக இருக்கும். இவரது ஒரே கவலை இவருக்கு தலைக்கு மேலேதான்......சார் உங்க தலை இப்படி இருந்தாதான் அழுகு என்பேன் நான். இவ்வாறு மாறிமாறி கிண்டல் செய்து கொண்டாலும் இருவருமே கோபித்துக்கொள்ளமாட்டோம்.

மும்பை அருகே சிவாஜி படபிடிப்பு நடந்த போது என்னையும் ரஜினியை சந்திக்க அழைத்தார். பிறகு அவர் ரஜினியை சந்தித்த விவரத்தை சொல்லச் சொல்ல அதை அப்படியே மனதில் பதிவு செய்து குங்குமம் இதழுக்கு அனுப்பினேன். அந்த கட்டுரை அப்போது மிகவும் பிரபலம் அடைந்தது.

மும்பையில் சிவாஜி வெளியாவதற்கு முதல் நாள் திரு. நம்பிராஜன் அவர்கள் எனக்கும் போன் செய்து “இன்று இரவு சிவாஜி ஸ்பெஷல் ஷோ இருக்கு சார்..கட்டாயம் வந்திடுங்க” என்றார். அங்கே சென்றால் மொத்தமே அவரது குடும்பத்தார் மட்டும் தான் இருந்தனர், அந்த அளவுக்கு நெருக்கமாக எங்களது நட்பு வளர்ந்தது.

பிறகு இவர் ரஜினி, அமிதாப் சந்திப்பினையும் மும்பையில் எற்பாடு செய்திருந்தார், அந்த செய்தியினை நான் தினமலர் முதல் பல பத்திரிகைகளுக்கு அனுப்பினேன். எனது எழுதும் திறனை பாராட்டினார். இவர் கிண்டல் செய்வதில் வல்லவர்... கிண்டலி்லும் உண்மையை சொல்லுவார் நான் எப்போது சென்றாலும் ஏதாவது ஜோக் அடித்து மற்றவர்களை சிரிக்கவைப்பார். பழைய பாடல்கள் என்றால் திரு நம்பிக்கும், எனக்கும் உயிர். அவரவது கம்யூட்டரில் அடிக்கடி பழைய பாடல்களை போட்டு இருவருமே மெய்மறந்து ரசிப்போம். திரு். நம்பிராஜனுக்கு அரசியலில் நுழையும் விருப்பமும் இருந்தது.

டாக்டர் நடராஜன் ஒரு மலை அறுவியில் காலை பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். நான், டாக்டர், திரு. நம்பி ராஜன், திரு. சிவானந்தன் ஐபிஎஸ் மற்றும் பலர் ஒரே காரில் பயணம் செய்து பல மைல்கள் மலைமீது நடந்து சென்றோம். ஒரே ஜாலியாக இருந்தது. இச்சம்பவத்தில் எங்கள் நட்பும் மலையென உயர துவங்கியது எனலாம்.


இவரது இளய சகோதரர் ராசு. இவர் என்னை எப்போதுபார்த்தாலும் கேட்டும் ஒரு கேள்வி.... “என்ன சார் ஆளையே காணோம்” என்பது தான். காலையில் பார்த்திருப்போம். இரவு சந்தித்தால் அப்போதும் அதையே தான் கேட்பார். இவருடனும் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. இவர் சற்று யூத் டைப்... எனக்கு டிக்கெட் வேண்டும் என்றால் நான் இவரிடம் தான் போன் செய்து சொல்வேன். “கேக்காதீங்க சார்….. வாங்க கிளம்பி மொதல்ல” என்பார். இருவருமே உபசரிப்பதில் வல்லவர்கள். பல முறை இவருடன் இரவு சாப்பிட்டு இருக்கிறேன், பிறகு பார்க்கில் நேரம்தெரியாமல் இவரது நண்பர்களுடன் அரட்டை. நான் அவருடன் பலமுறை சித்திவிநாயகர் ஆலயத்திற்கு இரவு 9மணிக்கு மேல் சயானிலிருந்து நடந்துசென்று தரிசனம் செய்து வருவோம். பிறகு ஓட்டலில் சாப்பிடுவோம். இரவு வீட்டிற்கு வர 12 ஆகிவிடும். மாலை நேரங்களில் சாப்பிட்டுவிட்டு இருவரும் வாக்கிங் செல்வோம். சில சமயம் ராசு அவர்களுடன் அரோரா தியேட்டரில் இரவுக் காட்சியின் இடைவேளையின் போது நான் ஐஸ்கிரீம், சமோசா விற்றதும் உண்டு,

திரு நம்பிராஜனின் குடும்பத்தினர் அனைவரும் என்னிடம் அன்போடு பழகினார்கள். இவரது மகளும் மகனும் அன்போடும் கனிவாகவும் பேசுவார்கள். என் குடும்பத்தைப் பற்றி அவ்வப்போது விசாரிப்பார்கள். “என்ன உதவி வேண்டுமானாலும் தயங்காம கேளுங்க சார்….” என்பார் திரு. நம்பி. பல இந்தி மற்றும் தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் இவர்களது குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள். இவரது இல்லத்திற்கு சிவாஜி குடும்பத்தினர் பலமுறை வந்து செல்வதை கண்டேன்.

இந்த மாலை நேர நம்பி மற்றும் ராசு சகோதர நண்பர்களை நான் வாழ்நாளில் மறக்கமுடியாது. அத்தனை அன்பு, அத்தனை பாசம். ஒரு பந்தா இல்லாத திரைக்குடும்பத்தினர்கள். இவர்களை அறிமுகப்படுத்திய டாக்டர் நடராஜன் அவர்களுக்கு இத்தருணத்தில் நன்றி சொல்ல மறப்பதா? நோ நெவர்............
ராம்கி

பாசமும், புகழும் - சின்ன கதை

பாசமும், புகழும்

ஆர். சீதா

இரவு மணி பத்து. நிலவு ஒளியில் ஊரே அமைதியாக இருந்தது,. ஆட்டோவை விட்டு போரூர் ராம்கி மெல்ல நடந்து சந்திரன் எப்எம் வானொலி நிலையத்தின் உள்ளே நுழைகிறார். சார், உங்களைப் பார்ககத்தான் இந்த நடிகர் உட்கார்ந்திருக்கார். உங்களது பரம விசிறியாம். உங்களது நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் தினமும் கேட்பாராம். பேட்டி கொடுக்க வந்ததும் முதலில் இவர் உங்களைப்பற்றி விசாரித்தார், நீ்ங்கள் இரவு பத்து மணிக்குத் தான் வருவீர்கள் என்று சொன்னபிறகும் இரண்டு மணிநேரம் உங்களுக்காக காத்திருந்தார், என்று ஒரு சமஊழியர் அந்த நடிகரை ராம்கிக்கு அறிமுகம் செய்து வைத்தார், ராம்கி இருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்து, அந்த நடிகரின் கைகளை குலுக்கி, ரொம்ப சந்தோஷம் என்று மெல்ல புன்முறுவல் செய்தார். எனக்காக காத்திருந்தமைக்கு ரொம்ப நன்றி என்று சொல்லிவிட்டு மெல்ல அடிஎடுத்துவைக்க, சார் தினமும் இரவு உங்க நிகழ்ச்சியை ரேடியோவில் கேட்காம உறங்க மாட்டேன். உங்களது கவிதையும் அதற்கு ஏற்ப நீங்கள் போடும் பழைய சசினிமா பாட்டுக்களும் என் மனதிற்கு ரொம்ப நிம்மதி தருகிறது என்று அந்த நடிகர் அடிக்கிக்கொண்டே போக, ரொம்ப சந்தோஷம், ரொம்ப சந்தோஷம் என்ற மட்டுமே ராம்கி சொல்லி தன் அறையை நோக்கி நடந்தார். அங்கிருந்த ஊழியர்கள் என்ன இந்த ராம்கி எதுவுமே நடக்காத மாதிரி போறாறு, இந்த நடிகரை பார்போமான்னு ரசிகர்கள்கூட்டம் அலைஞசுகிட்டு இருக்கு என்னடா இந்த மனுஷன் என்று தங்களுக்குள் பேசிக்கொண்டு தன் வேலையில் ஈடுபட்டார்கள். சரியாக இரவு பதினோரு மணிக்கு போரூர் ராம்கியின் அந்த நாள் என்ற நிகழ்ச்சி தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியில் எப்போது பழைய பாடல்கள் ஒளிபரப்பப்படுவதால் ராம்கியின் கவிதையும் குரலும் தேனாக இனித்து ரசிகர்களின் மனதில் தனி இடத்தைபிடித்துவிட்டது.

போரூர் ராம்கி பல ஆண்டுகளாக சந்திரன் வானெலியில் அறிவிப்பாளராக பணியாற்றுகிறார். இரவு நேர டூட்டியை கேட்டு வாங்கிக்கொண்டு தொடர்ந்து இரவில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார்.

மற்றொரு நாள் இசையமைப்பாளர் தேவா, சந்திரன் எப்எம் வானெலி நிலயத்திற்கு நுழைந்தும் அங்கு ஊழியகர்கள் அவரை சுற்றி நின்று கொண்டு மகிழ்ச்சியாக கைகுலுக்கினர். எல்லோரிடமும் சிரித்த முகத்துடன் தேவா ஒரு ஹாய் சொல்லிவிட்டு, இதுல போரூர் ராம்கி யாரு....அவரை பார்க்கலாம்னுதான் இந்த நிகழ்ச்சிக்கு பேட்டி கொடுக்க வந்தேன்...யார் அந்த ராம்கி என்று சுற்றும் முற்றும் பார்க்கிறார். ஊழியர்கள் எல்லோரும் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்க்க, நிலய நிர்வாகி சார் போரூர் ராம்கி தினமும் இரவு தான் வருவார், இப்போ அவரை நீங்க பார்க்க முடியாது சார் என்று மெல்ல சொல்ல, தேவாவின் முகம் மெல்ல வாடுகிறது. அவர் வந்தா நான் அவரை பார்க்க ரொம்ப ஆவலா வந்தேன்னு மறக்காம ராம்கிகிட்டே சொல்லுங்க, என்று பலரிடம் தேவா வேண்டுகோள் விடுத்து விடைபெற்றார்..


அன்று இரவு போருர் ராம்கி பத்து மணிக்கு வந்ததும் நிலைய அதிகாரி முதல் பலஊழியர்கள் ராம்கி சார் இன்னைக்கு தேவா நம்ப அலுவலகத்திற்கு வந்திந்தார் போரூர் ராம்கி யாரு,,,எங்கே அவரு, அவரை பார்த்தே ஆகனும்னு ரொம்ப ஆசைப்பட்டார். நீங்க அவரை மிஸ் பண்ணி்ட்டீங்க சார். அப்படியா, ரொம்ப சந்தோஷம் என்ற படி தன் அறைக்குள் நுழைந்து அன்றைய நிகழ்ச்சியில், என்னென்ன பாடல்கள் ஒலிபரப்பவேண்டும் என்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார். நாம இவ்வளவு குஷியா சொல்றோம், ராம்கி எந்த உணர்ச்சியும் காட்டாம இவ்வளவு அடக்கமா இருக்காரே என்று தலைகால் புரியாமல் சகஊழியர்கள் குழம்பியது ராம்கிக்கு புரிந்தது.

அந்த வானெலி நிலயத்திற்கு எப்போதும் ராம்கியின் நிகழ்ச்சியையும், அவரது கவிதை திறனை பாராட்டியும் எகப்பட கடிதம் வரும். நிலைய இயக்குநர் அவற்றை படித்துவிட்டு ராம்கியின் பார்வைக்கு அனுப்புவார். ராம்கியும் எல்லாவற்றையும் விடாமல் படித்து புன்முறுவல் செய்துவிட்டு தன் காரியத்தில் ஈடுபட்டுவிடுவார். எல்லோரும் ஜாலியாக இருக்கும் போது ஏன் இந்த ராம்கி மட்டும் பட்டும் படாமல் சக ஊழியர்களுடன் பழகுகிறார் என்பது ஒரு புரியாத புதிராகவே இருந்தது.

மெல்ல அந்த நாள் நிகழ்ச்சியின் அறிவிப்பாளர் இவர்தான் என்று அவர் வாழும் போரூர் ஏரியாவில் தெரியவர பால்காரர் முதல் ஆட்டோ டிரைவர் வரை சார் நேத்து ராத்திரி போட்ட எல்லா பாட்டும் சுபபர் சார்... முந்தாநாள் போட்டயே அப்படியே அழுதுட்டேன் சார்... என்று பாராட்டும் போதெல்லாம் புழுபோல் மெல்ல நெளிவார். ரொம்ப சந்தோஷம் என்று தான் ராம்கியின் பதில் இருக்கும்.

காலையில் எப்போது போன் செயதாலும் ராம்கியின் செல்போன் ஆப் செய்யப்பட்டிருக்கும். அது எப்போது ஆன் ஆகும் என்பது யாருக்கும் தெரியாது. நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால் தான் ராம்கியுடன் போனில் பேசமுடியும்.

ஒரு மாதப் பத்திரிக்கையி்ல் ஆசிரியராக இருந்து ராம்கிக்கு பல ஆண்டுகளாக ரேடியோ அறிவிப்பாளராக வேண்டும் என்ற ஆசைமனதி்ல் இருந்தது. அவரது நண்பர் சங்கர் அவரது அடக்கத்தையும் கூச்சசுபாவத்தையும் பார்த்து பல தனியார் வானெலி நிலயத்திற்கு போன் செய்து ராம்கியை பற்றி எடுத்துக்கூறி வாய்ப்பு கேட்க, சந்திரன் வானொலி இயக்குநர் உடனே அவரை வரச்சொன்னார். அவரது குரலை கேட்டதுமே அந்த இயக்குநருக்கு பிடித்து போக இன்னைக்கு வந்திருக்கீங்க...ஒரு ஒருமணி நேர நிகழ்ச்சியை தொகுத்து கொடுக்க முடியுமா என்று கேட்க ரொம்ப சந்தோஷம் இப்பவே நான் தயார் என்று சொல்ல ஸ்கிரிப்ட் எழுதிக்கொள்ள வேண்டோமா என்ற கேட்க, தேவையில்லை சார் நேரடியாக பதிவு கூடத்திற்கு செல்லலாம் என்று தயாராகிவிட்டபோது இயக்குநருக்கு சற்று தயக்கமாக இருந்தது, ஒரு மணிநேரத்தில் இருபது கவிதைகளுடன் ஒரு நிகழ்ச்சியை தொகுத்துகொடுத்துவிட்டு ஒலிபதிவுக்கூடத்திலிருந்து வெளியே வந்தது, சார் ரொம்ப நல்ல நிகழ்ச்சி வந்திருக்கு, எந்தவிதமான முன் ஏற்பாடு செய்யாமல் நீங்கள் தங்கு தடையின்றி உங்கள் கவிதையை பாடலுக்கு ஏற்ப உடனுக்குடன் சொல்லியதைக் கண்டு நான் மிகவும் திகைத்துவிட்டேன். நாளையே நீங்கள் அறிவிப்பாளராக சேரலாம் என்று இயக்குநர் ராம்கியின் கையை பிடித்து குலுக்கியதும். ரொம்ப சந்தோஷம். அன்றிலிருந்து இவரது நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட வரவேற்பு. இரவே வேலையில் பழையபாடல்களை கேட்பது பலருக்கு சுகம் தரும் தாலாட்டாகும்.

ராம்கிக்கு சங்கரை தவிர நெருங்கிய நண்பர் அதிகம் இல்லை. சங்கரும் வேலைநிமித்தம் சென்னையைவிட்டு மும்பைக்கு சென்றுவிட்டதால் ராம்கி சங்கர் தொடர்பும் வெகு தொலைவில் இருந்தது. சங்கர் பல முறை சங்கரை தொடர்பு கொள்ள முயற்சித்தான். சங்கர் சென்னை வரும்போதெல்லாம் அருகில் மனைவி படுத்திருந்தாலும் காதருகே ராம்கியின் அந்த நாள் நிகழ்ச்சியை கேட்காமல் இருக்கமாட்டான், ஏய்,,சும்மா இரு நம்ப ராம்கி ரேடியோவில் புரோகிராம் கொடுத்துகிட்டு இருக்காரு பத்தநிமிடத்தில் முடிந்துவி்டும் என்று மனைவியின் கையை தட்டுவான் சங்கர். அந்த அளவுக்கு ராம்கியின் பரம விசிறி சங்கர்.

பல ஆண்டுகள் ஓடின. சங்கர் கம்யூட்டரில் வேலைசெய்து கொண்டிருக்கும் போது கூகுல் சர்ச்சில் போரூர் ராம்கி என்று நம்பிக்கையின்றி தட்டிவிட்டான், என்ன ஆச்சர்யம் அதில் போரூர் ராம்கியின் ப்ளாக் இருந்தது. அதில் ராம்கயின் பலவித கவிதைகள் இருந்தன. கட்டுரைகள் இருந்தன, எல்லாவற்றிற்கும் மேலாக ராம்கியின் செல்போன் எண்ணும் இமெயில் முகவரியும் இருந்தது. உடனே ராம்கியின் செல்போனுக்கு அழைத்தான். .எதிர்முனையில் ஓரிரு ரிங்க்கு பிறகு அலோ வணக்கம், நான் ராம்கி பேசுகிறேன் என்று குரல் ஒலிக்க சங்கரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை....சார் நான் சங்கர் மும்பையிலிருந்து பேசகிறேன். எப்படி இருக்கீங்க என்று சந்தோஷத்தில் சங்கர் சொல்ல, ரொம்ப சந்தோஷம் சங்கர். நீங்க எப்படி இருக்கீங்க என்றார் ராம்கி. சார் என்னசார் என்னை மறந்துட்டீங்களா..நான் சென்னைக்கு எப்போ வந்தாலும் உங்க நிகழ்ச்சியை தவறாமல் கேட்பேன். பலமுறை உங்களிடம் பேசமுயற்சிசெய்தேன் பிடிக்க முடியலே, அலுவலுகத்தில் ஒருமுறை போன் செய்த போது நீங்க அன்றைக்கு விடுமுறைன்னு சொல்லி போனை வச்சிட்டாங்க...வீட்டுலே எப்படி இருக்காங்க மனைவி மற்றும் அம்மா எல்லலாம் என் மடைதிறந்து வெள்ளம் போல் சங்கர் கேள்விமேல் கேள்வியாக கேட்டுக்கொண்டிருந்த ராம்கி, மௌனம் கலைத்து என்ன ராம்கி நான் சொல்றது. நீங்க அறிமுகம் செய்து வைத்ததாலே, இன்னைக்கு நான் பெரிய அறிவிப்பாளாரக இருக்கேன். என் முகத்தை கூட பார்க்காமல் எனக்கு பல்லாயிரம் ரசிகர்கள் இருக்காங்க. கிராமத்திலே இருக்கிறவங்க வீட்டிலே கூட என் பெயர் அடிபடாம இருக்காது. அந்த அளவுக்கு நல்ல பெயரும் புகழும் கிடைச்சுறுக்கு. பணத்திற்கு தட்டுபாடு இல்லாம ஏதோ வண்டி ஓடிக்கிட்டு இருக்கு. ஆனா என்று ராம்கி நிறுத்த, என்ன ஆனா,,சொல்ங்க ராம்கி சார்... என்ன ஆனா என்று சங்கர் பதட்டப்பட என் அம்மா தனியாத்தான் இருக்காங்க,. மேலும் வயதாகிவிட்டது.. கண்பார்வையும் இழந்துவிட்டார்கள். எழுந்து எந்த வேலையும் நம்மைப்போல செய்ய முடியாது. வேலைக்காரி வைச்சாலும் ஒத்து வரதில்லே. ஒரு நாள் கால்மீது கத்தியை போட்டீகிட்டு ரத்தம் கொட்டரது கூட அவுங்களுக்கு தெரியலே....அதனால நான் பகல் முழுவதும் அப்பப்ப வந்து அவுங்களுக்கு வேண்டியதை செய்து கொடுக்கிறேன்...என்று சொல்லும் போது ராம்கியின் குரல் மெல்ல திக்குகிறது. அடப்பாவமே. உங்க மனைவியை பார்த்துக்கொள்ள சொல்லலாமே என்று சங்கர் இழுக்க, அவளாளையும் முடியாது ஏன்னா எங்களுக்கு ரொம்ப நாட்களுக்கு பிறகு ஒரு குழந்தை பிறந்து பத்தே நாளில் இறந்துவிட்டது, அந்த அதிர்ச்சிலே என்று நிற்க. என்ன ஆச்சுசார் அவங்களுக்கு என்று சங்கர் பதற, அந்த அதிர்ச்சியிலிருந்து அவளும் புத்திசுவாதினம் ஆகிட்டா. அவளே இப்போ ஒரு குழந்தை மாதிரி ஆகிட்டா. எப்போ நல்லா இருப்பா எப்போ அவளுக்கு குழப்பம் வரும என்பது யாருக்குமே தெரியாது. பல டாக்டர்களை பார்த்தாச்சு. எந்த பயனும் இல்லே. அதனால தான் எப்போதும் இரவுநேரத்திலேயே வேலைக்கு போகிறேன்,. அதனால் பகல் நேரத்தில் ஒரு பக்கம் அம்மாவையும், ஒரு பக்கம் மனைவியையும் பார்த்துக்க முடியுது. நான் நன்றாக தூங்கி பல வருடங்கள் ஆகிறது என்று ராம்கி முடித்தார். முன்பெல்லாம் எங்கள் வீட்டுக்கு அப்பப்போ வந்துகிட்டு இருந்தீங்க...இப்ப வரதேயில்லை என்று சங்கர் சொல்ல ஆமாம் ராம்கி என் வீட்டுப்பிரச்சனையாலே எந்த தொடர்பு இல்லாம இருக்கேன் அதனால் தான் உங்களைகூட தொடர்பு கொள்ள முடியாம மனதளவில் ரொம்ப நொன்துபோயிட்டேன். உடல்ல முன்பு தெம்பு இருந்தது. இப்போ அப்படியில்லே. முன்புபோல் என் மனனைவியை வெளியே கூட்டிகிட்டுகூட போறதேயில்லை. வாசல்ல இருக்கிற பெட்டிக்கடைக்காரன் முதல் ஆட்டோஸ்டேன்ட் வரை இப்போ நான் யார் என்பதுதெரிந்துவிட்டது. என் மனைவியின் நிலமை வெளி உலகுக்கு தெரிஞசா எல்லாரும் என்னைப்பற்றி பின்னால நிறையபேசுவாங்க... என் புகழ் இப்போ குறுக்கு நிக்குது. முன்பு நான் எல்லோரையும் போல சாதாரண மனிதனாக இருந்தேன், சுதந்திரமா வெளியை நடமாடினேன், இப்போ எப்போவாவது வெளியை என் மனைவியை அழைஞ்ச்சுகிட்டு போனா ஒரு முகமூடியை போட்டுகிட்டு போறேன், இல்லைனா என்னை எல்லோரும் அடையாளம் கண்டுபிடிச்சு என் மேலே பரிதாபப் படஆரம்பிச்சிடுவாங்க...ஒரு சில சொந்தங்களும் ஏன் நீங்க இரண்டாம் கல்யாணம் செய்து கொள்ளக்கூடாதுன்னு என்னிடமே கேட்கிறாங்க.. என் நிலமையை எப்படி யார்கிட்ட சொல்றது. இன்னும் ஒருவிஷயம் என் மனைவி தன் அண்ணனுக்கு இரண்டு கிட்னியும் செயல் இழந்துவிட்டதாலே ஒரு கிட்னியை தானம் செஞ்ச்சுட்டாங்க என்று சொல்ல, சங்கர் பதில் எதுவும் சொல்லமுடியாமல் அமைதியாக ராம்கியின் நிலையை நினைத்து அழுதுகொண்டு இருந்தான், அடுத்த முறை சென்னைவரும் போது நாம கட்டாயம் சந்திப்போம், ரொம்ப சந்தோஷம் என்று சொல்லி போனை வைத்தார் போரூர் ராம்கி. அப்போது உனக்கு கீழே உள்ளவர் கோடி நினைத்துப்பார்த்து நிம்மதி நாடு..மயக்கமா கலக்கமா என்ற பாடல் மெல்ல ஒலித்துக்கொண்டிருந்து.

Friday, December 11, 2009

இளம்திருமணமான பெண்களே, கேள் ஒருசேதி

இளம்திருமணமான பெண்களே, கேள் ஒருசேதி

போரூர் ஆர். சீதா

திருமணமான இளம் பெண்கள் மனதளவில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக திருமணமான ஓரிரு மாதங்களில் என்ன ஏதாவது விசேஷம் உண்டா என்றும் என்ன உன் மருமக இன்னும் குளிச்சுகிட்டுத்தான் இருக்காளா? என்றும் நெருங்கிய உறவினர்களும் தோழிகளும் கேள்விகனைகளை அம்பாக எழுப்பி இளம் தம்பதியர்களுக்கு டென்ஷன் கொடுக்கின்றனர்.

திருமணமான அடுத்தமாதமே இதுபோன்று தொல்லைக்கு மணமான இளம் பெண் ஆளாகிறாள். இதனால் தம்பதிகளுக்கு நடுவே மனவேற்றுமை, கருத்துவேறுபாடுகள் உண்டாகிறது,
அவளுக்கு ஏதாவது குறைஇருக்கமோ என்று கணவனும், இவனுக்கு ஏதாவது குறைஇருக்கமோ என்று மனைவியும் செய்வது அறியாமல் தத்தளிக்கிறாரர்கள்.

ஒருசிலருக்கு திருமணமான அடுத்த மாதமே கருத்தரிக்கும் பாக்கியம் ஏற்படுகிறது. ஒரு சில பெண்கள் சில மாதங்கள் கழிதது கருவுருவார்கள், சிலருக்கு சில வருடங்கள் ஆகிறது.
சில திருமணமான பெண்கள் திருமணமான அடுத்த மாதத்திலேயே தான் கருவுறவேண்டும் என்று நினைக்கிறார்கள். அதுபோல சிலருக்குத்தான் நடக்கிறது,

பலர் இப்போ எதுக்கு குழைந்தை குட்டினு...கொஞ்ச நாள் ஜாலியாக இருக்கலாம் என்று தைரியமாக இருக்கிறார்கள். சில தம்பதிகளில் கணவன்மார்கள் தற்போது குழந்தை வேண்டாமே என்று நினைப்பதுண்டு மனைவிமார்களோ குழந்தை சீக்கிரம் பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுவது்ண்டு. இக்காரணத்தில் சில இளம் தம்பதியர்களுக்குள் சின்னசின்ன மனக்கசப்பு எற்படுகிறது. சில தம்பதிகள் இக்காரணங்களால் பிரிந்து வாழ்வதுண்டு. இக்காரணத்தை வெளியே சொல்லமாட்டார்கள். அதனால் இவர்களை பெற்றவர்கள் என்ன காரணத்தில் இருவரும் பிரிந்துள்ளார்கள் என்று தலையை பிய்த்துகொள்வதையும் நாம் காண்கிறோம்.

சில பெண்களும் மாதவிடாய் வந்ததும் டென்ஷன் ஆகிவிடுவார்கள். இம்மாதமும் தான் கருவுறவி்ல்லையே என்று புழுங்குவார்கள். மாதவிடாய் வந்துவிட்டதால் கணவனிடம் சண்டை போடும் பெண்களும் உண்டு. சில தம்பதிகளுக்கும் பேச்சு வார்த்தை முற்றி அடிதடியில் போய் முடியவதுண்டு.


இளம் தம்பதிகள் ஒரிரு மாதங்கள் காத்திருப்பதுதான் சிறந்தது. அப்படி குறிப்பாக ஏதாவது குறை இருக்குமோ என நினைப்பவர்கள் தகுந்த மருத்துவரிடம் தம்பதிகள் சென்று ஆலோசனை செய்யவேண்டும். மருத்துவரின் அறிவுரைப்படி சில மருந்துகள் உட்கொண்டால் கருத்தரிப்பு ஏற்படும்,


இளம் தம்பதிகளுக்கு தனிமை மகிவும் முக்கியம். இருவருமே மனதளிவில் சகஜமாக இருக்கவேண்டும். எந்த பிரச்சனையானானும் அதை பேசி சமாளித்துக்கொள்ளவேண்டும். சில பெண்கள் தாங்கள் விரைவில் கருவுறவில்லை என்றதும் தன் கணவன்மார்களை ஆண்மை அற்றவர்கள் என்று குறைகூறிவிடுவார்கள், இந்த பிரச்சனை அவர்களை விவாகரத்துவரை கொண்டுசென்றுவிடும். மாதாமாதம் அந்தநாட்கள் வந்துவிட்டால் பலரது வீடுகளில் பேச்சு வார்த்தை இருக்காது. தம்பதிகள் பேசிக்கொள்ளமாட்டார்கள், ஒரே டென்ஷன் தான் வீட்டில்.

தம்பதிகளுக்கு நடுவே பிரச்சனை ஏற்படுவது மட்டும் இன்றி மாமியார் மருமகள் பிரச்சனையும் கூடும். இந்த மாதமும் இவ உக்காந்துட்டாளா என்று மருமகளை ஏளனம் செய்யும் மாமியார்களும் உண்டு. சீக்கிரம் ஒரு பேரனையோ பேத்தியையோ பெத்துகுடுத்துடுவே என நான் நினைச்சேன் என்று அடிக்கடி மாமியார்கள் குத்திகாட்டுவதால் மருமகள்கள் பல மனஉலைச்சளுக்கு ஆளாகிறாள். மாமியார் மருமகள் சண்டை இக்காரணங்களால் நிறைய வீடுகளில் பூதாகாரமாக வெடித்துவருகிறது, சில பெண்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவார்கள் அதிக மன உளைச்சல் காரணமாக.....

திருமணமான தம்பதிகள் அவ்வப்போது விடுமுறை நாட்களி்ல் மாற்று இடங்களுக்கு சென்று ஜாலியாக இருந்துவிட்டு வரலாம். அல்லது நீணட் நாள் ஹனிமூன் செல்லலாம். சில இல்லங்களில் இடம் நெருக்கடி காரணமாக ஜாலியாக இருக்க முடியாது. அல்லது ஒரே அறையில் பலர் தங்க வேண்டி இருக்கலாம். அல்லது அவசர அவசரமாக சந்தோஷமாக இருக்கவேண்டியுள்ளது. இரவு படுக்கும் இருவரும் பல் துலக்கி, குளித்து டென்ஷன் இன்றி இருக்கவேண்டும்,. படுக்கை அறையில் தான் அன்றைய பிரச்சனைகளை பேசுவதால் வேண்டாத டென்ஷனும் மனக்கசப்பும் தம்பதிகளுக்கு நடுவே ஏற்படுகிறது.

இளம் தம்பதிகளுக்கு தனிமை மகிவும் முக்கியம். இருவருமே மனதளிவில் சகஜமாக இருக்கவேண்டும். எந்த பிரச்சனையானானும் அதை பேசி சமாளித்துக்கொள்ளவேண்டும். சில பெண்கள் தாங்கள் விரைவில் கருவுறவில்லை என்றதும் தன் கணவன்மார்களை ஆண்மை அற்றவர்கள் என்று குறைகூறிவிடுவார்கள், இந்த பிரச்சனை அவர்களை விவாகரத்துவரை கொண்டுசென்றுவிடும். இதுபோன்ற வேளைகளில் தம்பதிகள் ஒருத்தருக்கு ஒருவர் ஆதரவாக இருந்து அன்பு செலுத்தவேண்டும்.

வீட்டில் இருப்பவர்கள் ஏளமாக பேசுவார்கள் என்றோ, எதிர்வீட்டு மாமி இந்த மாதமும் உட்கார்ந்துவிட்டாயா என்று கேட்பார்களோ என்ற ஐயத்தில் சில பெண்கள் வீட்டிலேயே அடைந்துவிடுவார்கள், வெளியே எங்கு அழைத்தாலும் வரமாட்டார்கள். காரணம் பார்ப்பவர்கள் தங்களிடம் இதுபோன்று பலர் முன்னிலையில் கேள்விகேட்டு தாங்கள் அவமானப்படவேண்டியிருக்கும் என்று ஒரு வட்டதிற்குள்ளே சிக்கி மனதளவில் பாதிக்கப்பட்டுவிடுவார்கள்.

சிலர் குறிப்பிட்ட கோவிலுக்கோ அல்லது ஏதாவது பரிகாரமோ செய்துவிட்டால் தங்களுக்கு குழந்தை பாக்கியம் உடன் ஏற்படடுவிடும் என்று நம்புகிறார்கள். சிலர் இதற்காக ஆயிரக்கணக்கில் பணம் செலவுசெய்வார்கள்.

குறைந்தது மூன்று அல்லது ஆறுமாதங்கள் கழித்து மகப்பேரு மருத்துவரிடம் இளம் தம்பதிகள் சென்று அவரிடன் அறிவுரைப்படி நடந்தால் உங்கள் இல்லங்களில் மழலைபட்டாளம் தான். நல்ல சத்துள்ள உணவுவகைகளை தம்பதிகள் உட்கொள்ளவேண்டும். சிலர் முருங்கைக்காயை சமையல்களில் நிறைய சேர்த்துகொள்வார்கள்.

ஆகவே இளம் பெண்கள் மனதில் தைரியமாக இருந்து, கடவுள் நிச்சயம் நமக்கு மழலைசெல்வத்தை தருவார் என்று நம்பிக்கையோடு இருக்கவேண்டும். இனிமேல் இதைபடித்தவர்கள் தாங்கள் சந்திக்கும் தம்பதிகளிடம் அன்புதொல்லை கொடுக்காமல் இருந்தால் சரிதானே? என்ன நான் சொல்றதுதுதுதுதுதுதுது.......

செல்வமும் மாயையும்


செல்வமும் மாயையும்
PORUR RAMKI
‘பணம்’ என்ற மூன்றெழுத்து நம்மை என்னமாய் படுத்துகிறது. செல்வம் நமக்கு சுதந்திரத்தையும், எதுவும் நமக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடச்செய்கிறது. ‘செல்வம் மட்டும் கையில் இருந்தால், நம்மால் எல்லாவற்றையும் சாதித்துவிடமுடியும்’ என்ற தைரியத்தை தருகிறது என்று நாம் நினைக்கிறோம்.

ஒன்றின் மீது நாம் சொந்தம் கொண்டாடும் போது ஆதி முதல் அந்தம் வரை அதன் மீது நமக்கு உரிமையுள்ளதாக நினைக்கிறோம். ஒரு நிலத்தை சொந்தமாக வாங்குகிறோம், ஆனால் அந்த நிலமானது அதன் சொந்தக்காரர் சென்றபிறகும் அங்கே தான் உள்ளது. அப்படி இருக்க எப்படி அந்த நிலம் நமக்கே எப்போதும் சொந்தம் என்று நினைக்கமுடியும்?

நிறைய செல்வம் இருந்துவிட்டால் நாம் தான் எல்லாம் என்றும்...பணத்தால் எனக்கு முழுசுதந்திரமும் உள்ளது என்று எண்ணி தலைகால் புரியாமல் பலர் ஆடுவதை காண்கிறோம். அவர் ஏதோ சுசந்ததிரஉலகத்தில் வாழ்வது போல துள்ளிகுதிப்பதை பார்க்கிறோம். ஆனால் அவர்களும் நம்மைப்போல் விவசாயி, சமையல்காரன்,. கார் ஓட்டுனர், மற்ற வேலைகளை செய்ய எடுபிடி ஆள் என பலபேரை சார்ந்துதான் இருக்கவேண்டியுள்ளது என்பதை மறக்கக்கூடாது, பெரிய இருதய அறுவைசிகிச்சை செய்பவர்கள் கூட மற்ற மருத்துவர்களையும சக ஊழியர்ககளின் உதவியும் சார்ந்து தான் தன் பணியினை சரியாக வெற்றிகரமாக முடிக்கமுடிகிறது.

பெரும் செல்வந்தர்கள் ஏன அரகககுணமாக நடந்து கொள்கிறார்கள்? ‘செல்வத்தால் சுதந்திரமாக இருக்கிறோம்’ என்ற இருமாப்பால் தான். மற்றவர்களை சார்ந்துதான் நம்மால் எதையும் செய்யமுடியம் என்று நினைக்கும் பணக்காரர்கள், மற்றவர்களிடம் மிக பணிவாக அன்புடன் நடந்துகொள்வர், ஆகவே, அதிசெல்வத்தில் மிதப்பவர்கள் மனிதாப குணம இன்றி வாழகிறார்கள் என்பதை மறுக்கமுடியவில்லை.

இப்போதெல்லாம நாம் மனிதர்களை அவர்கள் வைத்திருக்கும் செல்வத்தை வைத்து எடைபோடுகிறோம்.. ‘அவர் இவ்வளவு மில்லியனுக்கு சொந்தக்காரர்’....’அவனின் மதிப்பு இப்போ இவ்வளவு டாலர்’ என்று பேசுவதை காண்கிறோம். பணத்தை கொண்டு மனிதனை, மனித வாழ்க்கையை எடைபோடலாமா? ‘பில்லினர்’ என்றும் ‘மில்லினர்’ என்று அழைப்பது ஒரு பெரிய பாராட்டாகாது, . ..........(தொடர்கிறது)

தன்னம்பிக்கையின்றி கடவுள் மீது நம்பிக்கையில்லாதவன் தான் ‘பாதுகாப்பு அற்றவன்’. அப்படி இருப்பனுக்கு செல்வம் ஒரு பாதுகாப்பு கவசமாகிறது, பெரும் பணக்காரர்கள் தன்னுடன் படைசுழ இருக்கும் நண்பர்கள் கூட்டத்தின் மீதே சந்தேகம் வருகிறது,. அவர்களது நட்பு உண்மையான நட்பா என்று குழப்பம் உண்டாகிறது. சொந்தங்களையும் அவ்வாறே சநதேகிக்க வைக்கிறது. ஒரு காலகட்டத்தில் இந்த பணம தங்களுக்கு ஒரு ‘மாய பாதுகாப்புதான்’ என்ற முடிவுக்கு வரவைத்துவிடுவதாக செல்வந்தர்கள் எண்ணுகிறார்கள.

‘செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்’ என்கிறார் வள்ளுவர். அளவோடு செல்வம் இருந்தால் தான் வாழ்க்கை சுகமானதாக இருக்கம். ‘ஆசையே அழிவி்ற்கு காரணம்’ என்றார் புத்தர். ‘வாழ்வே மாயம்’ என்றார் சான்றோர், ஆகவே செல்வமும் ஒருவித மாயை தான். அனபு. பாசம், உண்மை, நேர்மை போன்றவிற்கு விலைமதிப்பே இல்லை என்பது நாம் அறிந்ததுதானே. பணத்தை விமர்சனம் செய்து உலகை பழிப்பவர்களும் உண்டு. சிலர் பணத்தை பேயாக பாவிப்பதுண்டு (அதனால் தான் அவன் ஒரு ‘பணப்பேய்’ என்கிறார்களோ?) சிலர் ‘காசேதான் கடவுள்’ என்பார்கள். முனிவர்கள் பணத்தையும், மாயைகளையும் மதிக்கமாட்டர்கள். காரணம் பணத்தை கடவுளாக போற்றினர். செல்வத்தை மகாலட்சுமியாக பாவித்தனர். பூஜித்தனர். யோகாவால் பிறந்தவள் அல்லவா அந்த ‘மகாலட்சுமி’. யோகாதான் நமது கெட்ட கர்மாக்களை அழித்து, நமக்கு வல்லமையும் திறமையையும் அளிக்கிறது. அதுவே நமக்கு அஷ்டசித்திகளையும், நவ நிதிகளையும் அளிக்கிறது.

அரக்ககுணத்திலிருந்து நம்மை விடுவித்து, தன்னம்பிக்கை தரும் குணம் அந்த யோகாவிற்கு உள்ளது. ‘நமக்கு மட்டும் சொந்தம்’ என்ற நினைப்பை மாற்றி, ‘அனைவருக்கம் சொந்தம்’ என்ற பரந்த மனப்பாண்பை வளர்க்கும் சக்தியும் யோகாவிற்கு உள்ளது என்கிறார் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் அவர்கள்.