
ராம்கியும், பாலாவும்
எனது முன்னாள் சுருக்கெழுத்து பயிற்சிக்கூடத்தின் சகநண்பர் பாலா எனும் பாலசுப்ரமணியம். நானும் இவரும் சேர்ந்தால் எப்போதும் கலாட்டா, தமாஷ் பேச்சுத்தான். நீண்ட இடைவெளிக்குப்பிறகு ரமேஷ் மூலம் இவரது நட்பு மலர்ந்தது. கோவை வரும்போதெல்லாம் பாலா என்னிடம் பேசுவார், நாங்கள் சந்திப்போம். அண்மையில் அவரது வீட்டிற்கு நானும், சீதாவும் சென்று இருந்தோம்.

KRISHNA KUMAR, RAMKI & PM BALASUBRAMANIAM & GIRIJAN, NEW CEO
PHOTO COURTESY: DR.D.CHANDRASEKAR, COVAI
இன்று இந்துஸ்தான் யூனிவர்சல் நிறுவத்தில் பாதுகாப்பு (சேப்டி) அதிகாரியாக பணியாற்றும் பாலா அண்மையில் எங்கள் மருத்துவமனையில் நடந்த தீபாவளி கொண்டாட்டதின் முடிவில் கலந்து கொண்டார். எனது தலைவர் மற்றும் சகஊழியர்களை அறிமுகப்படுத்தினேன். பார்ட்டியில் கலந்து கொண்டபோது, 'என்னடா ஒரே மலையாள அழகிகளா இருக்கு' என்று ஜொல்லுவிட்டான் வழக்கம்போல். அன்று இரவு எனது இல்லத்தில் தங்கி அடுத்தநாள் காலை 6 மணிக்கு கிளம்பிச்சென்றார். என்னை 'வாடா போடா' என்று அழைக்கும் ஒருசில நபர்களில் பாலாவும் ஒருவன்...
பாலா ஒரு சிறந்த பாடகன், நாங்கள் சேர்ந்தால் பழைய பாடல்களை சேர்ந்து பாடி மகிழ்வோம். தற்போது பாடுவதை இவரது மகன் தொடர்கிறார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு பாலாவின் அம்மாவை சந்தித்து, நானும் சீதாவும் ஆசிபெற்றோம், இதை மறக்கமுடியாது!!!
வாழ்க பாலா பல்லாண்டு.......
ராம்கி
by email
ReplyDeleteIt is simply great. You continue to enjoy the journalism which is evident from your articles although you have entered medical profession. I hope to join you in Coimbatore shortly. Regards
Raghu, Chennai