Tuesday, February 28, 2012

டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.
DR. S.S. BADRINATH RECEIVES LIFE TIME ACHIEVEMENT AWARD BY AIOS

நேரடி வர்ணணை ராம்கி (கொச்சியிலிருந்து)

70வது அகில இந்திய கண் மருத்துவ கழகத்தின் (ALL INDIA OPHTHALMOLOGICAL SOCIETY) தேசிய மாநாடு இவ்வருடம் கொச்சியில் உள்ள லீ மெரிடியன் கன்வென்ஷன் சென்டரில் பிப்ரவரி 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை மிகச்சிறப்பாக நடந்தது. சுமார் 6000 கண் மருத்துவர்களும், மேலும் 2000ம் மேற்பட்டவர்களும் (மொத்தம் 8000 பேர்) இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.



2.2.2012 அன்று மாலை நடந்த மாநாடு தொடக்க விழாவில், சென்னை சங்கர நேத்ராலயாவின் நிறுவனர் டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது (LIFE TIME ACHIEVEMENT AWARD) வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. அவர் இவ்விருதை பெறும் பொழுது அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர். இவர் இன்றைய கண் மருத்துவர்களின் தந்தை என்று போற்றப்படுபவர். இந்நிகழ்ச்சிக்கு இவரது துணையாருடன் வந்திருந்தார். இவர் மேடை ஏறும் முன், இவரைப் பற்றி கண் மருத்துவரும், விஞ்ஞானக்குழு தலைவருமான டாக்டர் டி. ராமமூர்த்தி அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார். அறிமுக உரை ஒரு சில நிமிடங்கள் நீண்டபோதும், டாக்டர் பத்ரிநாத் அவர்கள், கீழேயே அமைதியாக நின்றிருந்தார். பின் டாக்டர் லலித் வர்மா அவரை மேடைக்கு அழைத்துச்சென்றார்.



சிறப்பு விருந்தனராக கலந்து கொண்ட திரு. சஷி தரூர், டாக்டர் பத்ரிநாத் அவர்களுக்கு வணக்கம் தெரிவித்து கைகுலுக்கினார். பின்னர் திரு. தரூர், டாக்டர் பத்ரிநாத் அவர்களுக்கு அகில இந்திய கண் மருத்துவ கழகத்தின் கௌரவ விருதான வாழ் நாள் சாதனையாளர் விருதினை வழங்கினார்.

மிகவும் எளிமையாக பழகும் பண்பு கொண்ட இவரை அம்மாநாட்டில் கண்டதும், பெரிய மற்றும் குட்டி கண் மருத்துவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். இவரிடம் மாணவர்களாக கற்று, இன்று பெரிய மருத்துவமனையில் இருக்கும் அல்லது சிறப்பாக மருத்துவனை நடத்தும் பல கண் மருத்துவர்கள் இவரிடம் பேசி, போட்டோவும் எடுத்துக்கொண்டனர். பலர் இவர் கால் தொட்டு ஆசிர்வாதம் பெற்றனர். அவரை அம்மாநாட்டின் அமைப்பாளர் டாக்டர் கிரிதர் வரவேற்றார்.

விழா நிறைவு பெற்ற பின்பு, மற்றவர்கள் போல் பத்ரிநாத் வேகமாக வெளியே சென்றுவிட வில்லை. தன்னை சந்திக்க வருகின்ற அனைவரிடமும் ஒரு சில நிமிடங்கள் பேசிவிட்டு, அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க போட்டோ எடுத்தக்கொள்ளவும் சம்மதித்தார். பல வெளிநாட்டு கண் மருத்துவர்கள் இவரை சந்தித்து மகிழ்ந்தனர்.

இவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்த பின்பும், இவர் அனைவருடனும் சகஜமாக பேசுவது,
எளிமையாக நடந்து கொள்வது போன்ற நற்குணங்கள் இவரை மேன்மேலும் உயர்ந்த மனிதாக ஆக்கிக்கொண்டே போகிறது. இந்தியர்களுக்கு, டாக்டர் பத்ரிநாத் ஒரு வரப்பிரசாதமாகும்.

என்னைக்கண்டதும், ஒரு மகனை பார்த்த தந்தை போல், அன்போடு கட்டிக்கொண்டார். என் மனைவி மற்றும் மகன் பற்றி மறவாமல் அந்த இடத்திலேயே கையை பிடித்துக்கொண்டு விசாரித்தார். எனக்கு கொடுக்கப்பட்ட விருதை படித்துப்பார்த்து பாராட்டினார். நீங்க விருது வாங்கும் போது நான் நன்றாக கைதட்டினேன் என்று சொல்லி என்னை நெகிழவைத்தார். அவரது துணைவியார் அவர்களும் என்னை பாராட்டி வாழ்த்தினார்.


மேலும் இவர் கண் மருத்துவ உலகின் வருங்காலம் என்ற தலைப்பில் 15 நிமிடங்கள் அபாரமாக பேசினார்.

பலருக்கு இவரை வாழ்த்த வயதில்லை, இருப்பினும் கண்ணொளி வழங்குவதில் முதல்வராக திகழும் நம் கண் தந்தை டாக்டர் பத்ரிநாத் அவர்களை என்னுடன் சேர்ந்து வணங்க வாங்கோ...வாங்வோ.. வாருங்கோ...


மும்பையில் சந்தித்தபோது எடுத்த போட்டோவில் டாக்டர் பத்ரிநாத் அவர்களின் அரவணைப்பில் ராம்கி.

ராம்கி

Saturday, February 25, 2012

RAMKI FELICITATED AT NATIONAL CONFERENCE

Dr.NSD. Raju, President of All India Ophthalmological Society, presented a memento with a reward to Ramki, Executive Coordinator at the inaugural function of 70th Annual Conference of All India Ophthalmological Society at Le Meridian Convention Centre, Cochin on 2.2.2012


டாக்டர் பாபு ராஜேந்திரன் மற்றும் டாக்டர் எஸ் நடராஜன் அவர்கள் இல்லாதது மேடையில் ஒரு பெரிய குறையாக இருந்தது. டாக்டர் த. ராமமூர்த்தி மற்றும் டாக்டர் லலித் வர்மா போன்றவர்களும் கைகொடுத்து வாழ்த்தினர்.


Dr.N.S.D.Raju, President of All India Ophthalmological Society congratulates Ramki at the Inaugural function of the National Conference at Le Meridian Convention Centre, Cochin.


ராம்கியின் 13 வருட சேவையை மனதார பாராட்டி கைகுலுக்கிய டாக்டர் என் எஸ் டி ராசு, தலைவர், அகில இந்திய கண் மருத்துவர்கள் சங்கம்

Dr.A.Giridhar, Organizing Secretary of AIOC2012,Cochin and Ramki

ராம்கி கூட ஒரு போட்டோ எடுத்துக்வேண்டும் என்று டாக்டர் கிரிதர் சொன்னது என்னை அசரவைத்தது.

விருது பெற்றபின் நான் விழா மேடையைவிட்டு கீழே இறங்கியதும், முன் வரிசையில் அமர்ந்து இருந்த பல மூத்த கண் மருத்துவர்கள் தங்கள் இருக்கையில் இருந்து எழுந்து நின்று எனக்கு வரிசையாக கை கொடுத்து வாழ்த்தினர்.

சங்கர நேத்ராலயாவின் நிறுவனர் டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அவரைக்கண்டதும், அவரிடம் ஆசி பெறச் சென்றேன்.
பாராட்டுங்கள் ராம்கி, வாழ்த்துக்கள்..என்று வாழ்த்தியதோடு இல்லாமல், உங்களுக்கு விருது வழங்கும்போது நான் நன்றாக கைதட்டினேன் என்று மனம் திறந்து சொன்னது என்னை நெகிழ வைத்தது.
அருகில் படம் எடுத்துக்கொண்டிருந்த ஒரு பெண்மணியை டாக்டர் பத்ரிநாத் அவர்கள் அழைத்து 'என்னையும் ராம்கியையும் சேர்த்து ஒரு போட்டோ எடுமா', என்று சொன்னார் எத்தனையோ பேர் அவருடன் நின்று போட்டோ எடுத்துக்கொள்ள காத்திருக்க, பலர் இந்த நிகழ்ச்சியை கண்டு அசந்து போயினர்.

திருமதி பத்ரிநாத் அவர்களும் என்னை ஆசிர்வதித்தார். எனக்கு கொடுத்த மெமென்டோவை வாங்கிப் பார்த்து, படித்து இந்த இளம் தம்பதிகள் மகிழ்ந்து ஆசிர்வதித்தது மறக்க முடியாத நிகழ்ச்சியாக அமைந்தது என்று நான் சொல்லவும் வேண்டுமோ??

மக்கள் அரங்கம் நாயகன் திரு விசு அவர்கள் எனக்கு அனுப்பிய இமெயில் இரட்டிப்பு மகிழ்ச்சி தந்தது. இதோ உங்களுக்குகாக
MY PRAYERS ARE ALWAYS THERE FOR YOU AND YOU ARE NOT AWAY FROM ME
TO BLESS YOU EVERY TIME. VISU

ராமகிருஷ்ணன் (எ) ராம்கி

Monday, December 26, 2011

நண்பன் பாடல் சிடி வெளியீட்டுவிழா

நண்பன் பாடல் சிடி வெளியீட்டுவிழா
நேரடி வர்ணணை ராம்கி, கோவை
(Photo Courtesy: PRO Nikhil Murugan)



கோவையில் நண்பன் திரைப்பட பாடல் சிடி வெளியீட்டுவிழா இந்துஸ்தான் கல்லூரி மைதானத்தில் டிசம்பர் 23ம் தேதி மாலை 5.30 நடந்தது. சென்னையில் உள்ள எனது பத்திரிகை நண்பர் நரசு அவர்கள், என் பெயரை நண்பன் பட பிஆர்ஓ நிகில் முருகனிடம் சொல்லி, அழைப்பிதழை அனுப்பிவைத்தார். நுழைவாயிலில் 3டி கண்ணாடி அனைவருக்கும் கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியை நடிகர் சிவா தமாஷாக பேசி தொகுத்து வழங்கினார். டர்கி அழகிகளின் இடுப்புகுலுக்கல் ஆட்டத்துடன் (பெல்லி டான்ஸ்) விழா இனிதே துவங்கியது. பின் சிவா அவர்கள் நடிகர் பிரபுவை மேடைக்கு அழைத்தார். பிரபு பேசும்போது ‘ஒருவருக்கு குடும்பம் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவு நண்பர்களும் முக்கியம்’ என தன் தந்தை சிவாஜி அவர்கள் எப்போதும் சொல்லுவார் என்றார். ‘எனக்கு கோவையில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். எல்லோரிடமிருந்தும் சாப்பாட்டு என்னை தேடி வரும். வந்தா விட மாட்டேன். என் அப்பா மாதிரி தமிழ் உச்சரிப்பை சரியா பேசரவரு நம்ப சத்யராஜ், நான் விஜய் ரசிகன்’ என்றபோது பெரிய கைதட்டல்.



அடுத்து நடிகர் சத்தியராஜ் மேடை ஏறினார். ‘என்னம்மா கண்ணுகளா சௌக்கியமா?’ என்ற நக்கலுடன் பேச ஆரம்பிக்க கைதட்டலுக்கு கேட்க வேண்டுமா? பின் நடிகர்கள் ஜீவா, ஸ்ரீகாந்த், விஜய், சத்யன் என ஒவ்வொருவராக மேடை ஏறி, இயக்குநர் சங்கரையும், அவர்களின் கதாபாத்திரம் பற்றியும் பேசினர். சத்யன் பேசும்போது ‘இப்படம் எனக்கு ஒருபெரிய திருப்புமுனையாக இருக்கும்’ என்றார்.

மீண்டும் ஒரு இடைகுலுக்கள் நடனம். இயக்குநர் மற்றும் நடிகரான எஸ்.ஜே,சுர்யா பேசினார். அப்போது ‘முதல்நாள் படபிடிப்பு அன்றே சங்கர் காலை 7.30 மணிக்கு ஆரம்பித்து 63 ஷாட்களை எடுத்தார். சங்கர் தொடர்ந்து வெற்றிப்படங்களையே தந்து சாதனை படைத்துவருகிறார். இப்படத்தில் 2 ஷாட்டில் மட்டும் நான் வந்தாலும் எனக்கு பெருமையாக இருக்கிறது. விஜய் படபிடிப்பு 7மணி என்றால் 6.55க்கே வந்துவிடுகிறார், பாராட்டத்தக்கது’ என்றார்.

மீண்டும் ஒரு இடைகுலுக்கள் நடனம். தொடர்ந்து ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் பேசினார்கள். இப்படபிடிப்பில் தானும் விஜயும் நண்பர்கள் ஆகிவிட்டோம் என்றார். மேடை ஏறிய அனைவரும் விஜய்க்கு ஐஸ்வைத்தே பேசினர். பாடலாசியர்கள் முத்துகுமார் மற்றும் விவேகாவும் பேசினார்கள். முத்துக்குமார் தான் எழுதிய ‘ஆல் இஸ் வெல்’ என்ற பாட்டைப்பற்றி பேசினார். பிறகு படத்தின் ஒரு பகுதி திரையில் போடப்பட்டது.
அடுத்த படக்கதாநாயகர் விஜய் பேசினார். ‘என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களே…..’ என ஆரம்பிக்க பலத்த கைதட்டல். பின் ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் நடிப்பு பற்றி பேசினார். என் வீக் பாய்ட்டே யாராவது தமாஷா பேசினா, என்னலே சிரிப்பை அடக்கமுடியாது, படபிடிப்பின்போது நான் சீரியஸா நடிக்கும்போது, ஜீவா ஏதாவது ஜோக் அடிக்க, என்னால் சிரிப்பை உடனே அடக்கமுடியாது, ஆனால் ஜீவா டக்கென்று தன் டைலாக்கை பேசிவிடுகிறார். இயக்குநர் சங்கர் சார் படத்தில்) இதற்கு முன் (முதல்வன் உட்பட) இரண்டு முறை நடக்க முடியாததை குறிப்பிட்டார். அதனால் சங்கர் சார் படத்தில் இந்த வாய்ப்பு கிடைத்தது பெருமையாக இருக்கிறது. நன்றி சங்கர் சார் என்று முடித்தார் பின் ஜெமினி நிறுவனத்திற்கு தன் நன்றியை தெரிவித்துக்கொண்டார். ஆள் உயர மாலை, மற்றும் மலர் கிரீடம் விஜய்க்கு அணிவிக்கப்பட்டது.



ஆவலுடன் எதிர்பார்த்த இயக்குநர் சங்கர் பேசினார், ‘சிவாஜி படபிடிப்பின்போது பூனேயில் ஒரு நாள் படபிடிப்பு ரத்தானது. அன்று 3 இடியட்ஸ் படத்தை தியேட்டரில் பார்த்தேன். படபிடிப்பு ரத்தான டென்ஷனில் இருந்த எனக்கு அப்படம் என்னை மிகவும் கவர்ந்தது. சிரிப்பு அழுகை என எல்லா அம்சமும் அப்படத்தில் இருந்தது. அப்படம் என் மனதிற்கு அமைதி தந்தது. மனம் ரிலேக்ஸ் ஆச்சு. நான் ரசித்ததை நம் தமிழ் ரசிகர்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காக இப்படத்தை இயக்கினேன். முதலில் நானே ரைட்ஸ் வாங்கி தயாரிப்பதாக இருந்தது. பின் ஜெமினி நிறுவனம் ரைட்ஸ் வாங்கியதை அறிந்தேன். இருப்பினும் இப்படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்து. சிவாஜி, எந்திரன் போன்ற படத்தை மனதில் வைத்துக்கொண்டு இந்த படத்திற்கு வராம, ஒரு நல்லபடம் பார்க்கவேண்டும் என்ற எதிர்பார்போடு வாருங்கள். அந்த 2 படங்கள் போல் இப்படத்தில் டெக்னிகலாக அதிகம் இல்லை. ஆனா, சற்று வித்யாசமா இப்படத்தை பண்ணியிருக்கேன். அனைவரும் நல்லா நடிச்சு இருக்காங்க.

ரஜினி சாரைப்போல் விஜய் படபடிப்புக்கு சரியான நேரத்திற்கு வந்துவிடுகிறார். ரொம்ப டிஸிப்லின். நல்ல கோஆப்ரேஷன். ரொம்ப பணிவாக நடந்து கொள்கிறார். நாளைக்கு படபிடிப்பு என்ன என்று என்னிடம் கேட்டு வீட்டில் நிறைய முறை பழகிபார்த்து படபிடிப்புக்கு வருவதால் சட் என இவரது காட்சிகளை படமாக்க முடிந்தது. முன்னாடி என் 2 படத்தில் நடக்க சத்யராஜ் அவர்களை அழைத்தேன். அவர் வரவில்லை. இப்படக்கதைக்கான தன் கதாபாத்திரத்தின் முக்கியத்துக்காக சத்யராஜ் சாரும் வித்யாசமான வில்லன் வேடத்தில் நன்றாக நடிச்சிருக்காரு. நிறைய நட்சத்திரங்கள் இப்படித்தில் நடிச்சிருக்காங்க. தயாரிப்பாளருக்கு என் நன்றி" என பேசினார் சங்கர். இப்படத்திற்கு உதவிய அனைத்து பெயரையும் மறவாமல் பேப்பரில்எழுதி வைத்துக்கொண்டு அனைவருக்கு நன்றி தெரிவித்தார் சங்கர்.

இயக்குநர் சந்திரசேகர் (விஜய் அவர்களின் தந்தை) தன் மகன் உயர உயர சென்றாலும், ரொம்ப பணிவா நடந்து கொள்வது எனக்கு பெருமையாக உள்ளது. இயக்குநர் சங்கர் ஒரு சிறந்த இயக்குநர். தன் மூலம் தான் இயக்குநர் சங்கருக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததாக நினைவு கூர்ந்தார்.
படத்தின் ஒரு காட்சி மீண்டும் திரையிடப்பட்டது. இசையமைப்பாளர் ஜெயராஜ் பேசினார், பின் நண்பன் படப்பாடல் சிடி வெளியிடப்பட்டது. முதல் சிடியை இயக்குநர் சந்திரசேகரும், நடிகர் பிரபும் பெற்றுக்கொண்டார்கள். இயக்குநர் சங்கருக்கு அணிவித்த மாலையையும் சால்வையும் தன் குருநாதர் சந்திரசேகருக்கே மீண்டும் சங்கர் அணிவித்து மகிழ்ந்தார்.

நுழைவுச்சீட்டு முதல் மேடையும் 3டி முறையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. பின் ஜெயராஜ் அவர்களின் இசை நிகழ்ச்சி நடந்தது. அப்போது அவர் ஒரு கிரேன் மூலம் தொங்கு மேடையில் இருந்தபடியே நிகழ்ச்சியை ஆரம்பித்தது வித்யாசமாக இருந்தது.

ரசிகர்கள் திரளாக வந்திருந்தனர். ஆனால் மைதானத்தில் போதிய டாய்லெட் வசதி இல்லாததால், கருவுற்ற பெண்களும், மற்ற பெண்களும் சற்றே திண்டாடியதை பார்க்க முடிந்தது. திறந்தவெளி அரங்கில் பனிபொழிய பார்த்து ரசித்தது மறக்க முடியாத ஒரு மாலைப்பொழுதாக இருந்தது.

RAMKI
Wadalaramki@yahoo.co.in
M 9790684708

Monday, November 28, 2011

DR. N.S. SUNDARAM அவர்களுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’

DR. N.S. SUNDARAM அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது’



தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ சென்னையை சேர்ந்த பேராசிரியர் டாக்டர் என்.எஸ், சுந்தரம் MBBS, DO, MS., அவர்களுக்கு அண்மையில் ஆளுநர் ரோசய்யா அவர்களால் வழங்கப்பட்டது அவருக்கு வாழ்த்துச் சொல்லும் சமயத்தில், அவருடன் சில ஆண்டுகள் நெருங்கிப் பழகிய ராம்கி அவர்கள், தன்னுடைய அனுபவங்களை நம்மிடைய மனம் திறக்கிறார்:

டாக்டர் சுந்தரம் அவர்கள் ஜனவரி 26, 1929ல் பிறந்தவர். சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவ மனையில் superintendentஆக பதவி வகித்தவர். டாக்டர் பத்ரிநாத் போன்று, இன்றைய கண் மருத்துவர்களுக்கு இவரும் ஒரு முன்னோடி எனலாம். இவரை முதன் முதலில் எங்கு சந்தித்தேன் என்று யோசித்துப்பார்க்கிறேன். சுமார் 10 வருடங்களாக என் மரியாதைக்குரியவர் இவர். இவரது தந்தை நடராஜப்பிள்ளையும் கண் மருத்துவர். இவரது மகன் டாக்டர் நடராஜன் அவர்களும் உலகம் போற்றும் ரெட்டினா கண் மருத்தவர். டாக்டர் சுந்தரம் அவர்கள் நூற்றுக்கணக்கான கண் முகாம்களை பல தொண்டுநிறுவனங்களான அரிமா சங்கம், சாய் டிரஸ்ட், காஞ்சி டிரஸ்ட். VHERDS, NIVH மூலம் நடத்தி மக்களுக்கு சேவை செய்தவர். முகாம்களின் போது, கண் பாதுகாப்பு பற்றிய அருங்காட்சியம் ஏற்பாடு செய்வது இவரது தனிசிறப்பு. பணியில் இருக்கும்போது இவருக்கு பிடிக்காத ஒரு வார்த்தை ‘சிபாரிசு…..’ யாரிடமும் சிபாரிசுக்கு செல்லமாட்டார். ‘சொந்த முயற்சியால் ஒருவன் முன்னுக்கு வரவேண்டும்’ என்பார்.

இவருடன் பழகிய சிலமாதங்களின் ‘அப்பா’ என்று அன்போடு அழைக்க ஆரம்பித்தேன். சென்னையில் இவரது திநகர் இல்லத்தில் பல முறை சந்தித்துள்ளேன். அப்போதெல்லாம் இவரும் இவரது துணைவி திருமதி கமலா சுந்தரம் அவர்களும் ‘இரவு சாப்பிட்டுவிட்டுத்தான் செல்லவேண்டும்’ என்று அன்புகாட்டுவார்கள்.

என்னுடன் ஒரிரு கண் மருத்துவர்கள் மாநாட்டிற்கு சுந்தரம் அவர்கள் வந்துள்ளார். இவர் நினைத்தால் இவரது மகன் டாக்டர் நடராஜன் தங்கும் ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கலாம். அவ்வாறு செய்யாமல் ‘நான் ராம்கியுடன்,சாதாரண அறையில் தங்கிக்கொள்கிறேன்’ என சொல்லும் எளிமையானவர். ஒரு ரயில் நிலையத்தில் நான் அரைகால் டிராயருடன் இருந்ததைப்பார்த்து ‘இது என்ன வேஷம்?’ என்று கிண்டல் செய்தார்.

எனக்கு இவர் வழங்கிய அறிவுரைகள், தன்னுடன் பகிர்ந்த கொண்ட சொந்த மற்றும் பொது விஷயங்கள் ஏராளம் ஏராளம். எப்படி குடும்பத்தை வழிநடத்தவேண்டும், எப்படி எளிமையாக வாழவேண்டும் என்றெல்லாம் எனக்கு அடிக்கடி உதாரணத்துடன் எடுத்துரைப்பார். என்னுடன் அதிகம் பேசும் இவரைப்பார்த்து ‘ராம்கி சரியா இவர்கிட்டே நல்லா மாட்டிகிட்டாரு’ என்று சொல்பவர்களுக்கு, நான் எத்தனை நல்ல புத்திமதிகள் இவரிடம் இருந்து பெற்றேன் என்பது பலருக்கும் தெரியாது.

மும்மையில் நான் தங்கியிருந்து வீட்டிற்கு ஒருமுறை என்னுடன் பல தூரம் நடந்தே வந்துவிட்டார். நாங்கள் இருவரும் தனியாக இருக்கும் போது, மும்பையில் சாப்பிடச் செல்வோம். ராம்நாயக் இட்லி ஷாப்புக்கு சென்று சுடச்சுட இட்லி சாப்பிடுவோம். அடுத்து முறை மும்பைக்கு வந்தபோதும், அங்கேயே என்னை அழைத்துச்சென்றார்.

இவரது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத போது, அன்போடு கவனித்துக்கொண்டு வருகிறார். ஏதாவது ஜோக் அடித்துக்கொண்டு எந்த விஷயத்தையும் ரொம்ப சீரியசாக எடுத்துகொள்ளமாட்டார். ‘கவலைப்பட்டு என்ன லாபம் ராம்கி, எல்லாத்தையும் வாழ்க்கையிலே நாம் சந்தித்தே ஆகவேண்டும். யாரும் தப்பிக்கமுடியாது’ என்றவர். இந்த வயதிலும் தன் மனைவிக்கு அனைத்து உதவிகளையும் முகம் சுளிக்காமல் செய்வார். ஒரு முறை என்னிடம், ‘கமலாவிற்கு உடம்பு நன்றாக இருந்தபோது எங்களை எல்லாம் ரொம்ப நல்லா கவனிச்சுப்பா… இப்போ அவளாலே முடியாத போது, நான் அவளை கவனிச்சுக்கறேன். அப்படி செய்யறது எனக்கு ஒரு பிரதிபலன் செய்வதுபோல இருக்கு’ என்று தன் மனைவி மீது கொண்ட பாசத்தை என்னிடத்தில் வெளிப்படுத்தினார்.

தான் எழுதிய புத்தகம், தான் தயாரித்து நாடகம் போன்றவற்றை படிக்க மற்றும் கேட்கச்சொல்வார். ஒரு பையில் ஏராளமான பேப்பர்கள் இருக்கும். ஏதாவது தேவையென்றால் அந்த பையில் தேடி எடுத்துவிடுவார். தான் படித்த புத்தகத்தில் ஏதாவது நல்ல விஷயங்கள் இருந்தால், அதை மறவாமல் எனக்கு கோடிட்டுக்காட்டி படிக்கச்சொல்வார். பின் அதுபற்றி தன் வாழ்வில் நடந்த சம்பவத்தையும் சேர்த்துச் சொல்லிவிளக்குவார். ‘என்ன படிச்சது புரிஞ்சுதா, அல்லது நான் விளக்கட்டுமா’ என்று பலமுறை கேட்டு நமக்கு நன்கு மனதில் படும்வரை எளிதில் விடமாட்டார்.

பல இடங்களுக்கு நானும் இவரும் காரில் செல்வோம். அப்போதும் தன் மனம் திறந்து என்னுடன் பேசுவார். பழகிய ஓரிரு நாட்களிலேயே ஒருவரை சரியாக எடைபோடுவார். சரியான நேரத்தில் சர்க்கரை நோய்க்காக இன்சுலின் ஊசியை தானே ஏற்றிக்கொள்வார். மதிய நேரம் வீட்டிற்கு சாப்பிடச் செல்லும்போது ‘ராம்கி, வாங்க வீட்டிலே போய் சாப்பிடலாம்’ என்று அழைத்துசெல்வார். நான், இவர், இவரது துணைவியார், டாக்டர் நடராஜன் எல்லாம் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவோம். இவரது குடும்பத்தார் அனவைரும் என்னையும் ஒரு குடும்பநபராக பாவித்து அன்பு செலுத்துவாரகள். ஒருமுறை என் மனைவி கமலா அம்மாவிற்கு உணவு ஊட்டிய சம்பவம் என் கண் முன்னால் நிற்கிறது. நான் சாப்பிட்டுவிட்டு கிளம்பும்போது, ‘ராம்கி நாளைக்கும் வாங்க..சாப்பிட்டுவிட்டு போகலாம்’ என்று அம்மா என்னை பலமுறை அழைத்ததுண்டு. மும்பையில் இந்த தம்பதிகளை சந்திக்கும்போதெல்லாம் என் பெற்றோருடன் இருந்தது போன்ற உணர்வு ஏற்படும். இதை எழுதும்போது என் கண்கள் குளமாகிறது.

இந்த தம்பதிகளின் மும்பையில் நடந்த திருமணநாள், பிறந்த நாட்களில் நான் முன்வரிசையில் இருப்பேன். அச்சமயங்களில் டாக்டர் நடராஜன் இவர்களுக்கு பலவித பரிசுகளை அளித்து மகிழ்வார். இருவருமே தற்போது என்னுடன் போனில் பேசும்போது ‘எப்ப வரீங்க பாம்பேக்கு..வந்திடுங்க சீக்கிரம்’ என்பார்கள். ‘என் குடும்பநிலை காரணமாக நான் கோவையில் தங்கவேண்டியிருக்கிறது’ என்று என் நிலையை விளக்கியதும், ‘உங்க மகன் படிப்பை முடிந்ததும் இங்கே வந்து எங்களுடன் வேலைபண்ணுங்க’ என்று பாசத்தோடு அழைப்பார்கள். நீங்க வந்திடுங்க நாம எல்லோரும் சேர்ந்து நிறைய வேலை செய்யலாம் என்று ஊக்கம் அளிப்பார்.
மும்பையில் இருக்கும்போது நான் சென்னைக்கு செல்கிறேன் என்றால், ‘எங்க வீட்டுக்குப்போய் ஸ்வர்ணாவை பார்த்துவிட்டு வாங்க’ என்று சொல்வார்கள். செல்லவில்லை என்றால், ‘ஏன் பார்க்காம வந்திட்டீங்க, ராம்கி’ என்றும் மறவாமல் கேட்பார்கள்.
டாக்டர் சுந்தரம் அவர்கள் என்வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு வந்திருந்து வாழ்த்தினார்கள். ‘நான் சர்வீஸிலே இருந்தபோது என்னால ஒரு வீட்டை சொந்தமா வாங்க முடியலே. ஆனா நீங்க சர்வீஸிலே இருக்கும்போது ஒரு சின்ன வீட்டை வாங்கீட்டீங்க…வாழ்த்துக்கள்’ என்றார்.

டாக்டர் நடராஜன் தன் வீட்டிலிருந்து போனில் பேசினால், உடனே தன் பெற்றோர்களிடம் போனைக்கொடுத்து ‘ராம்கி லைனில் இருக்கார், பேசுங்க’ என்று பேசவைத்து மகிழ்வார்கள்.
நான் 4 வருடங்களுக்கு முன் மும்பையிலிருந்து சென்னைக்கு கிளம்பியபோது, டாக்டர் சந்தரம் அவர்கள் நானும் அவரும் எடுத்துக்கொண்ட போட்டோவை ஒரு காபி கப்பில் பதிவு செய்து ‘என் சார்பாகவும் உனக்கு நினைவுபரிசு அளிக்கிறேன்’ என்று சொல்லி பரிசளித்தார்.

இவர் அரசாங்க வேலையில் இருந்தபோது, தன் சக ஊழியர்களிடம் எப்படி கடுமையாக, அதேசமயம் நேர்மையாக நடந்துகொண்டார் போன்றவற்றை என்னுடன் விவரமாக பகிர்ந்து கொண்டார். கலைஞர் கருணாநிதி மற்றும் எம்ஜிஆர் அவர்களை நேரில் சந்தித்து பேசியுள்ளார். ஒரு முறை எம்ஜிஆர் அவர்களை சந்தித்தபோது, ‘எல்லா படங்களிளும் நல்லவர் போலவே நடிக்கிறீர்கள், அவ்வாறு நீங்கள் படம் எடுக்கச்சொல்கிறீர்களா, அல்லது அவ்வாறே கதைகள் அமைகிறதா?’ என்று நேரிடையாக கேட்ட தைரியசாலி டாக்டர் சுந்தரம் அவர்கள். அதற்கு எம்ஜிஆர் சொன்ன பதில் பெறும் ‘புன்சிரிப்பு…’ அதுபோன்று அரசுப்பணியில் இருந்தபோது அப்போதைய அமைச்சர்களிடம் தைரியமாக பேசுவாராம் இவர்.

இவர் பாண்டிச்சேரி அன்னையுடன் தன் இளம்வயதில் சந்தித்த நிகழ்ச்சிகளை என்னிடம் சொன்னதைக்கேட்டு, ‘ஞான ஆலயம்’ என்ற புத்தகத்தில் ஒரு கட்டுரை எழுதினேன், அதைப்படித்துவிட்டு ‘நன்றாக இருக்கிறது ராம்கி’ என்றார். இளம் வயதில் ரமண மகரிஷியையும், காஞ்சி முனைவரையும் பலமுறை சந்தித்தவர். இந்த மகான்களின் சந்திப்பால் ‘எளிமையாக வாழவேண்டும்’’ என்று முடிவுசெய்து அதன்படியே வாழ்கிறார்.

இவரிடம் பயிற்சி பெற்ற கண் மருத்துவர்கள் ஏராளம். நாங்கள் பல மாநாடுகளில் ஒன்றாக இருக்கும்போது, ஓரிருவர் இவரை அடையாளம் கண்டு கொண்டு, இவரை சந்தித்து பேசுவார்கள். சில அந்நாள் மாணவர்கள் இவரை பார்த்தும், பார்க்காதது போல் சென்றுவிடுவதையும் கண்டுபிடித்து என்னுடன் அவரைப் பற்றி விளக்குவார்.

இவரது அடுத்த நண்பர் ‘கேமரா…’ எந்த இடத்திற்கு செல்வதாக இருந்தாலும் ஒரு கேமரா இருக்கும். ‘டக் டக்’ என படம் எடுத்துக்கொண்டேயிருப்பார். இவருக்கு ஒரு ‘லேப் டாப்’ வைத்துக்கொள்ளவேண்டும் என்று விரும்பியபோது, டாக்டர் நடராஜன் உடனே அதை வாங்கி கொடுத்து மகிழ்வித்தார். பல நாடுகளுக்கு அந்த நாட்களிலே சென்று வந்தவர். இவரது சென்னையில்லத்தில் ஏராளமான புத்தகங்களை வைத்துள்ளார். ‘இந்த புத்தகங்களின் அருமை என் குடுமபத்தாருக்கு தெரியாது ராம்கி, இதை எல்லாம் எடுத்துபோட்டுங்க’ என்கிறார்கள் என்று ஒரு முறை வருத்தப்பட்டார். அது போன்று பழைய புகைகப்படங்களையும் பாதுகாத்துவைத்துள்ளார்.

வயது 85+ஆனாலும் என்னுடனோ அல்லது மற்ற இளம்வயதுகாரர்களுடன் பேசும்போது சமவயதுக்கு ஏற்றார் போல் ஜோக் அடித்துக்கொண்டு சட்டென இளைஞனாகிவிடுவார். கிண்டல் அடித்தது, சிரிக்க சிந்திக்க வைப்பவர்.


இவரது பொழுதுபோக்கு, நல்ல புத்தகங்கள் படிப்பது, மாணவர்களுக்கு கண்சம்பந்தமாக சொல்லித்தருவது, அதுபற்றி பேசுவது, மற்றும் போட்டோ எடுப்பது போன்றவை. மாணவர்களுக்கு சொல்லித்தரும்போது, பல கேள்விகளை கேட்டு மாணவ மாணவிகள் எளிதில் புரிந்துகொள்ளும்படி விளக்கமளிப்பார் டாக்டர் சுந்தரம் அவர்கள்.

படிகள் முடியும் இடத்தில் இரண்டு ஓரத்திலும் மஞ்சள் ஸ்டிக்கரை ஒட்டிவிட்டால் பெரியவர்கள் படிஏறி இறங்க சௌகரியமாக இருக்கும் என்ற டிப்ஸ் தந்தவர்.

எனது படைப்புகளை மனம் திறந்து பாராட்டுவார். ஒவ்வொரு வருடமும் நான் தயாரிக்கும் கண் மருத்துவர்களுக்கான அப்ஸ்ட்ராக்ட் புத்தகத்தை முழுவதும் படித்து பின் போனில் அழைந்து பாராட்டிவருகிறார். இப்புத்தகத்தில் கடைசியில் வரும் இன்ட்எக்ஸ் பகுதியை நான் சற்று பெரிய எழுத்ததுக்களில் பிரின்ட் செய்திருந்ததை கூர்மையாக கவனித்து, பாராட்டினார். கண்பற்றி அருங்காட்சியம் அடிக்கடி நடத்துவார். அதுசம்பந்தமாக நிறைய மாடல்கள், சார்ட்களை தயாரித்து பத்திரப்படுத்தி வருகிறார்.

கோவிலுக்கு அதிகம் செல்வது மற்றும் பூஜைகளுக்கு நிறைய செலவுசெய்வது போன்றவற்றை விரும்பமாட்டார்.

தன் கடைசி மூச்சு உள்ளவரை, மக்களிடம் கண் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும், மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்பது தான் இந்த எளிய இளைஞரின் லட்சியமாம்.
RAMKI

Tuesday, November 1, 2011

ராம்கியும் பாலாவும்


ராம்கியும், பாலாவும்

எனது முன்னாள் சுருக்கெழுத்து பயிற்சிக்கூடத்தின் சகநண்பர் பாலா எனும் பாலசுப்ரமணியம். நானும் இவரும் சேர்ந்தால் எப்போதும் கலாட்டா, தமாஷ் பேச்சுத்தான். நீண்ட இடைவெளிக்குப்பிறகு ரமேஷ் மூலம் இவரது நட்பு மலர்ந்தது. கோவை வரும்போதெல்லாம் பாலா என்னிடம் பேசுவார், நாங்கள் சந்திப்போம். அண்மையில் அவரது வீட்டிற்கு நானும், சீதாவும் சென்று இருந்தோம்.



KRISHNA KUMAR, RAMKI & PM BALASUBRAMANIAM & GIRIJAN, NEW CEO
PHOTO COURTESY: DR.D.CHANDRASEKAR, COVAI

இன்று இந்துஸ்தான் யூனிவர்சல் நிறுவத்தில் பாதுகாப்பு (சேப்டி) அதிகாரியாக பணியாற்றும் பாலா அண்மையில் எங்கள் மருத்துவமனையில் நடந்த தீபாவளி கொண்டாட்டதின் முடிவில் கலந்து கொண்டார். எனது தலைவர் மற்றும் சகஊழியர்களை அறிமுகப்படுத்தினேன். பார்ட்டியில் கலந்து கொண்டபோது, 'என்னடா ஒரே மலையாள அழகிகளா இருக்கு' என்று ஜொல்லுவிட்டான் வழக்கம்போல். அன்று இரவு எனது இல்லத்தில் தங்கி அடுத்தநாள் காலை 6 மணிக்கு கிளம்பிச்சென்றார். என்னை 'வாடா போடா' என்று அழைக்கும் ஒருசில நபர்களில் பாலாவும் ஒருவன்...

பாலா ஒரு சிறந்த பாடகன், நாங்கள் சேர்ந்தால் பழைய பாடல்களை சேர்ந்து பாடி மகிழ்வோம். தற்போது பாடுவதை இவரது மகன் தொடர்கிறார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு பாலாவின் அம்மாவை சந்தித்து, நானும் சீதாவும் ஆசிபெற்றோம், இதை மறக்கமுடியாது!!!
வாழ்க பாலா பல்லாண்டு.......


ராம்கி

Friday, October 28, 2011

விவேகானந்தன், குமார், சுவாமி சந்திப்பு

குமாரின் வீட்டிற்கு நீண்ட ஆண்டுகளுக்குப்பின் விவேகானந்தன் வந்தபோது


விவேக் காரைவிட்டு இறங்கியதும் என்னால் உடனே அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை (நிஜமா...) யாரோ ஒரு மாமா யார் வீட்டுக்கோ வருகிறார் என்றுதான் நினைத்தேன். சீதா விவேக் இவர் தாங்க என்று சொன்ன பிறகு தான், அட இவரு நம்ம ஆளு விவேக் என்று அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. எத்தனை மாற்றங்கள்....


குமாரும் விவேகானந்தன்


இத்தனை நாள் எங்கேயா காணாமல் போயிருந்தே..அவ் கிடைச்சுட்டாருய்யா இப்ப கிடைச்சுட்டாரு


விவேகானந்தன், சுவாமி, அழகி ஸ்நேகா சுவாமி
ஸ்நேகாவை கிண்டல் செய்து ஜாலியாக நேரத்தை கழித்தோம்




விவேகானந்தன், சுவாமி, குமார் (சுவாமியின் வீட்டில்)

‘அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே..




விவேகானந்தன் சங்கர் அம்மாவுடன்

மாமி விவேகானந்தன் தன் மகள் திருமணத்திற்கு செய்த உதவிகளை எல்லாம் மறக்காமல் நினைவு கூர்ந்து பலமுறை சொல்லி மகிழ்ந்தார்கள்... ஆனால் அன்று நடந்தது விவேகானந்தருக்கு நினைவுக்கு வரவில்லையாம்... எங்களை எல்லாம் பார்த்தபோது மாமி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். முன்புபோன்றே கடகடவென பேசினார்கள். 74 வயதாச்சு என்க்கு நோ சுகர், நோ பீபி. கொஞ்சம் முட்டுதான் வலிக்கிறது, அதிக நேரம் நடக்க முடியாது, இருந்தாலும் சபரிமலைக்கு ஒரு முறை போய்ட்டு வந்துட்டேன் என்று குழந்தைபோல் சந்தோஷமாக சொல்லி மகிழ்ந்தார்கள்.

Wednesday, September 14, 2011

நண்பர் கிருஷ்ணகுமாரின் பிறந்தநாள்


படத்தில் ராம்கி, கிருஷண குமார், லட்சுமணன், குமாரசாமி, சங்கர் மற்றும் யோகேஷ்குமார்


கோவை தி ஐ பவுண்டேஷனில் பணிபுரியும் நண்பர் கிருஷ்ணகுமார் அவர்களின் பிறந்த நாள் செப்டம்பர் 3ம் தேதி என் அறையில் நடந்தது. கேக் வெட்டி கொண்டாடினார். இப்புகைப்படத்தை சிஎப்ஒ திரு சிவராமகிருஷ்ணன் கிளிக் செய்தார். உடனே புகைப்படங்களை டவுன்லோடு செய்து எங்கள் அனைவருக்கும் அனுப்பினார்.




.