Saturday, March 24, 2012

அப்போ....அப்போ, இப்போ...............இப்போ

அப்போ....அப்போ
இப்போ...............இப்போ
ராம்கி




அப்போ கையில் நோட்புக்

இப்போ (கம்யூட்டர்) நோட் புக்



அப்போ வகுப்பில் முதலாக வர ஆசை

இப்போ சிறந்த பணியாளராக வர ஆசை



அப்போ டீச்சரைப் பார்த்தாலும், தேர்வு என்றாலும் பயம்

இப்போ அதிகாரியை பார்த்தாலும், டார்கெட்டுக்கும் பயம்



அப்போ கையில் நோ போன்

இப்போ நோக்கியா போன்



அப்போ கையில் பாக்கெட் மணி

இப்போ சம்பளமே பாக்கெட் மணி



அப்போ பட்டாசுக்காக காத்திருப்பு

இப்போ தீபாவளி போனசுக்கு காத்திருப்பு



அப்போ ஸ்கர்ட்

இப்போ மினி கைக்ரோ ஸ்கர்ட்



அப்போ பாடிப்பாவாடை

இப்போ பாடியே ஆடை



அப்போ இரண்டை பின்னல்

இப்போ வாழ்க்கையே பின்னல்



அப்போ வாசலில் மெயிலுக்காக காத்திருப்பு

இப்போ கையில் இமெயிலுக்காக காத்திருப்பு



அப்போ நிறைய நோட்டீசு கல்யாணத்துக்கு

இப்போ நிறைய நோட்டீசு விவாகரத்துக்கு



அப்போ வாசலில் அம்மா காத்திருப்பு

இப்போ வாசலில் நம் குழந்தைக்கா காத்திருப்பு



அப்போ வீட்டிலேயே இனிப்பு

இப்போ இனிப்பு கடையை நம்பியே நம்இருப்பு



அப்போ எப்போதும் சிரிப்பு

இப்போ எப்போதும் கடுகடுப்பு



அப்போ கூட்டுக்குடும்பமே விசேஷம்

இப்போ விசேஷத்தில் தான் ஒன்றுகூடுது குடும்பம்



அப்போ கொஞ்சம் சம்பளம், நிறைய மகிழ்ச்சி

இப்போ கொஞ்சம் மகிழ்ச்சி, நிறைய சம்பளம்



அப்போ கொஞ்சமாய் வியாதிகள்

இப்போ எக்கச்சக்கமாய் மருத்துவமனைகள்



அப்போ காபிகொட்டைக்கு கியூ

இப்போ டாஸ்மார்க்கு கியூ



அப்போ கட்டையில் நம் எரிப்பு

இப்போ கட்டையானபின் எலக்ட்ரிக்கில் நம் எரிப்பு



ஆக எதுவும் மாறவில்லை…………

ஆக எதுவும் மாறவில்லை………………

ராம்கி

Thursday, March 22, 2012

POSITIVE THINKING ARTICLES IN TAMIL

இன்றே செய்
RAMKI

காலம் பொன்போன்றது. நாளை என்பது மிகவும் தாமதமாகும் எனவே, இன்றைய தினம் என்பது உங்கள் பொன்னான நேரத்தை பயனுள்ளதாக செலவு செய்ய அருமையா தருணம். இன்றே முடிக்கக்கூடிய வேலைகளை, நாளைக்கு என்று தள்ளிப்போடதீர்கள். முடிவு எடுக்க. முன்னேற்றமடைய, வேலை செய்ய ஏற்றது இன்றைய பொன்னாள் தான். நாளை நடப்பது யாருக்கும் தெரியும்?. ஆனால், இன்று என்பது உங்கள் உள்ளங்கையில் தயாராக, இப்போதே இருக்கிறது. ஒவ்வொரு வினாடியும், உங்களுக்குக் கிடைத்த பொக்கிஷமாக நினைத்து செயல்படுங்கள். அதற்கு ஈடுஇணை எதுவுமில்லை. தயக்கம் எதுவுமின்றி, இப்பொழுதுதே செயல்பட துவங்கவும். நீங்கள் துவங்கியதை வெற்றிகரமாக செய்துமுடிக்க அனைத்துச் சாத்திய கூறுகளும் தயாராக இன்றே இருக்கும் போது, ஏன் நாளைக்கு என தள்ளிப்போடுகிறீர்கள்? இன்று செய்ய துவங்குவது, இன்றே நல்லபடியாக முடியும். எதையும் நாளைக்கு செய்யலாம் என்று இருந்தவிட்டால், அது மறந்து போகலாம் அல்லது செய்ய முடியாமலும் போகலாம் அல்லவா? சாக்குபோக்குச் சொல்பவர்கள் தான், எல்லாவற்றையும் நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம், நாளை செய்யலாம் என வந்த நல்ல வாய்ப்பை தவறவிடுவார்கள். எனவே, நன்றே செய்வீர், அதை இன்றே, இப்பொழுதே, செய்து எடுத்துகாரியத்தில் வெற்றிபெற இப்பொழுது என் நல்வாழ்த்துக்கள்

*
திருப்பு முனை
RAMKI

உங்களது பிரச்சனைகளோ, பாதிப்புகளோ சில நேரங்களில் உங்களிடம் ஒரு பெரிய மாறுதலை ஏற்படுத்தலாம். பிரச்சனைகள் உங்களைப் பின்தொடர்ந்துவரும் பொழுது, அதனை சமாளிக்கவும், அதிலிருந்து தப்பிக்கவும் நீங்கள் முழு மூச்சில் முயற்சி செய்ய துவங்கிவிடுவீர்கள். உங்களின் பிரச்சனைகள், உங்களது பலவீனம் என்ன என்பதை உணர்த்திவிடும். அப்பொழுது பலவீனங்களை பின்தள்ளி முன்னேற தானாக செயல்பட ஆரம்பித்துவிடுவீர்கள். ‘புது பிரச்சனை வந்துவிட்டதே’ என நொந்து போவதை தவிர்த்து, அதனை சமாளிக்க பழகிக்கொள்ளவேண்டும். வாழ்வில் ஒவ்வொரு சவால்களும் உங்களது நிலையை உயர்த்திக்கொண்டே போகும்.
உங்கள் பிரச்சனைக்கு நீங்களும் ஒரு காரணமாக இருக்கும்பொழுது, அதிலிருந்து தப்பிக்க பாஸிட்டிவ்வாக எடுத்துக்கொண்டு, அதையே உங்கள் வாழ்வில் ஒரு ‘திருப்பு முனையாக’ நினைத்து சவால்களை முறியடிக்க முயலவேண்டும். சரித்திரத்தை எடுத்துக்கொண்டால், பல்லாயிரக்கணக்கான பிரச்சனைகளிலிருந்து தான் சமுதாயம் நன்கு முன்னேறியுள்ளதை தெரிந்துகொள்கிறோம். அதுபோன்று, உங்கள் வாழ்வில் நீங்கள் எதிர்கொண்ட சவால்களால் உங்களின் நிலையை உயர்ந்தியிருப்பதை உணர்வீர்கள். ‘எல்லம் நன்மைக்கே..’, ‘ஆல் இஸ் வெல்’ என்று எல்லாவற்றையும் பாஸிட்டிவ்வாக வாழ கற்றுக்கொண்டால், பிரச்சனைகள் என்றும் உங்களை நிழல்போல் தொடர்ந்து வராது என்று சொல்லவும் வேண்டுமோ?
*
மனிதன் மனிதன், அவனும் மனிதன்
RAMKI

உங்களுடன் ஒருவர் தொடாபில் இருக்கும் பொழுது அவரை முதலில் ஒரு மனிதனாக மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். அவர் உங்களது இமெயிலை பெறுபவராக இருக்கட்டும், அல்லது போனில் பேசுபவராக இருக்கட்டும், அல்லது ஒரு தனி தபர் உங்களை சந்திக்க வரிசையில் காத்திருப்பவராக இருக்கட்டும். இப்படி யாராக இருந்தாலும் அவரும் ஒரு மனிதன் என்பதை கவனித்தில் கொள்ளவேண்டும்.
ஒவ்வொருவருக்கும் பல நம்பிக்கைகள், கனவுகள். மகிழ்ச்சிகள், வலிகள், பிரச்சனைகள், சாமர்த்தியங்கள். விருப்பங்கள், செய்யவேண்டிய வேலைகள், தனிப்பட்ட கருத்துக்கள் என பல்லாயிரம் உள்ளன என்பதை மறந்துவிடாதீர்கள். அவரையோ அல்லது அவளையோ உங்களுக்கு பிடித்தும், பிடிக்காமலும் இருக்கலாம். அவரது கருத்து உங்களோடு ஒத்துப்போகலாம், போமாகலிருக்கலாம். இருப்பினும், அவர்களை மரியாதையோடு, புரிந்து கொண்டு உதவ முன்வரவேண்டும்.

இவவுலகில் உங்களோடு இருப்பவர்கள், உங்கள் வாழ்வு மேலும் பிரகாசிக்க வைப்பவர்களாக பாவியுங்கள். மற்றவர்களோடு உதவ, கவனித்துக்கொள்ள உங்கள் நேரத்தை ஒதுக்குங்கள். மற்றவர்களோடு செலவிடும் பொழுதை பொன்னான தருணமாக நினைத்து, அவர்கள் மீது தனிகவனம் செலுத்தி, அவர்களது கருத்துக்களுக்கு செவிசாய்க்கவும். உங்களது உறவுக்கு மதிப்பளித்து, தொடர்ந்து என்றும் அன்போடு பழகுங்கள். அவர்களை மதிப்பது, கவனிப்பது, பதிலளிப்பது, பாராட்டுவது, இடமிளிப்பது போன்றவந்றை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மட்டுமின்றி, உங்கள் வாழ்க்கைப் பாதையில் சந்திப்பவர்களுக்கெல்லாம் நீங்களாகவே முன்வந்து உதவ தயங்காதீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களுக்கு மதிப்பளித்து வாழ்வது, உங்கள் வாழ்க்கையில் ஒரு தனிஅர்த்தத்தை ஏற்படுத்தும் என சொல்லவும் வேண்டுமோ?

*

Wednesday, March 21, 2012

CHANDAMAMA BUILDING - Where you gone?

CHANDAMAMA BUILDING - Where you gone?
சந்தமாமா பில்டிங்ஸ் / நீ எங்கே சென்றாய்?

Once ‘Chandamama Building’ at Arcot Road (just opp. to Vadapalani Police Station and the signal) was a land mark in Kodambakkam area and to every one. It was a world famous building in Vadapalnai, without any doubt.

The said building was belonged to Vijaya Vauhini Stuido Owner & Producer late Sri. B. Nagi Reddi. When the dawn of every day there was a big queue at the entrance to get the handmade medicine for jaundice from the first lady of the building none other han the very simple Mrs. B. Nagi Reddi - Smt. Seshamma!! The patients started believing once they get the medicine from her golden hand, they will recover very soon and it was done really a magic.

The Prasad Process Pvt Ltd and the BNK Press Private Ltd, was also inside this big compound. The Prasad Process was one of the Asia's Biggest offset printing press and popular for priting huge size wall posters from Air India to Hindustan levers. Orders will pour in from various states including Mumbai!!

More than 20 magazines will roll out from the press every month - Chandamama in 14 languages (!!); Mangai (women’s magazine), Bommai (film magazine), Vijaya Chitra, Vanitha, (Telugu & Kannada) The Heritage, Junior Quest, Walt Disney Comics etc., All these magazine editorial & art departments were functioned in this compound.


Soviet Union magazines were printed here and popular in those days. Not only the wall posters and book and magazines, even the Calenders will roll out from the Prasad Process press regularly. The entire printing floor was always busy and the staff moving in ‘kakki’ uniforms here and there. Even the chief of the Prasad Process, Sri B. Venugopal.Reddi was also in Kaaki pant andshirt to show the closeness of the staff and management!! And the letter press, BNK Press Private Ltd was always buzy in printing invitations, cards, bulletins, handbills etc.


The binding and the transport sections were always work in full swing.

Postal department stationed their wing in the chandamama compound itself to dispatch the 20 magazines immediately after printing in hot to all over India!! Magazine distributors and Agents will stand in queue from early morning to collect the hot selling books – Chandamama, Mangai, Bommai etc etc from this compound.

This building staff were always get respect if they say, “I am from Chandamama Building” wherever they go.


Regi Simon, who worked for 15 years as Production coordinator remembers : “those days who worked in PRASAD PROCESS have taken abroad for placements like Dubai and Saudi Arabia very easily as the name was well know by other countires. BNK press is very famous for gold foil printing which used on bottles as labels (Whiskey, Brandy bottles). And also famous for dye cutting to make cartoon boxes of drinks those days” .

In the Chandamama building various latest model cars will stand in rows (with unique 4 digit nos but all mixed with 3 of 6 or 9 only) and drivers in queue!!

The big greenery lawn and a place to play for children was also liked by everyone. The two white bullocks statue was a lovely piece to see. Chandamama building’s hot coffee was very famous and delicious – they get good fresh & thick milk straight from their own Vijaya Gardens.

Nagi Reddi's sons and their family members were stayed there for long very happily. But most of the days, Sri Nagi Reddi stayed in a cool greenery place “Vijaya Gardens”. BNR families join together often and regular family celebrations and various parties is a routine affair.

Chandamama building was also famous for film shooting even though their Vijaya Vauhini studio and the Vijaya Gardens are there nearby!!. Lot of film personalites visit this compound often from MGR, Sivaji to Rajini and Kamal for their film shooting or to attend Nagi Reddi’s family parties or get-together or just as a friend.

After Nagi Reddi and Mrs. Nagi Reddi passes away, slowly the time changed. Now the entire compound was soled, printing units were closed, and the families were moved out. Now in that compound, we can see only new hi-tech buildings standing up and the local people are missing the world famous “CHANDMAMA BUILDING” very much.

When I shared my feelings of missing the Chandamama building with my well-wisher Sri B. Viswanatha Reddi, Nagi Reddi’s 3rd son recently he mentioned that, “I too miss those wonderful days we spent in our ‘Chandamama Buildings’ and they are so green in my memory ”. He further said, “I believe in Bhagavat Gita which says “that nothing is permanent and the position / the standing we hold in life is just an illusion”. It is true, true, true….

-Ramki (wadalaramki@yahoo.co.in Mobile : 9790684708)
The writer was worked in Chandamama & Dolton group for more than 13 years. He is currently Executive Coordinator, Scientific Committee of All India Ophthalmological Society. He is also a freelance writer and cartoonist.

Wednesday, March 14, 2012

இந்திய பேனா நண்பர் பேரவை நண்பர்கள் தினம்

இந்திய பேனா நண்பர் பேரவை நண்பர்கள் தினம்



கோவை திம்மம்பாளையம் ஆனந்தவனம் என்னும் ஆதரவற்ற குழந்தைகள் குருகுலத்தில், இந்திய பேனா நண்பர் பேரவை (மும்பை பதிவு) கோவை கிளை சார்பாக நண்பர்கள் தினம் மார்ச் 11, 2012 அன்று கொண்டாடியபோது, குருகுலத்திற்க்கு தேவையான வாட்டர்பில்டர் மற்றும் பாத்திரம் கோவை மாவட்ட அமைப்பாளர் வெ. ராஜா, வீரராகவன், ராம்கி, மற்றும் பல உறுப்பினர்கள் வழங்கிய போது எடுத்த படம்.

அந்த குருகுலம் மிகவும் அமைதியாக சிறிய மலைஅடிவாரத்தில் உயர்ந்து நிற்கிறது. நாங்கள் நுழைந்ததும் குருகுலத்தின் அம்மா எங்களை அன்போடு வரவேற்று, இளைப்பார நீர் மற்றும் பழச்சாறு அளித்தார்கள். அங்கே ஒரு குழல் ஊதும் கிருஷ்ணனின் சிலை மிகவும் அழகாக இருந்தது. அக்குழந்தைகள் பற்றியும் அவர்களது குடும்ப சுழல் பற்றியும் கேட்டு தெரிந்துகொண்டோம்.

குருகுல குழந்தைகளுக்காக நாங்கள் அனைவரும் சேர்ந்து வாங்கிய வாட்டர் பில்டர் மற்றும் 25கி அளவு பெரிய எவர்சில்வர் டப்பாவை (அரிசி போன்ற பொருட்களை போட்டுவைக்க பயன்படும் பாத்திரம்)கோவை ஐபிஎல் சார்பாக நாங்கள் அளித்தோம். பின் போட்டோ எடுத்துக்கொண்டோம்.

சிறிது நேரம் 5 குழந்தைகளோடு விளையாடி மகிழ்ந்தோம். மொபைல் போனில் பாட்டு போட்டு குழந்தைகளை டான்ஸ் ஆடச்சொன்னோம். அவர்களும் குஷியாக விளையாடினர். குருகுலத்திலிருந்து பார்த்தால் எதிரே இயற்கை எழில் நம்மை மெய்மறக்கச்செய்தது. பிறகு நாங்கள் கிளம்ப தயாரானபோது, அம்மா எங்களை சாப்பிட அழைத்தார்கள். அவர்களுக்கு சிரமம் அளிக்ககூடாது என நாங்கள் இருந்தோம். இருப்பினும் எங்களை இதை சாமி பிரசாதமாக நினைத்து சாப்பிடுங்கள் என்று அம்மா சொன்னதை தட்டமுடியாமல் நாங்கள் இருங்க, சுடச்சுட தக்காளி சாதம், அப்பளம், தயிர்சாதம் வாழையிலை போட்டு பரிமாறப்பட்டது. பிறகு அம்மாவிடமும், குழந்தைகளிடமும் நாங்கள் விடைபெற்றோம். எங்களுக்கு அம்மா உடனே கார் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். வெளியைவந்ததும் நான் குழந்தைகளுக்கு கையசைத்து டாட்டா காட்ட யாருமே டாட்டா காட்டவில்லை, அதற்கு பதிலாக இருகரம்கூப்பி ஹரி ஓம்... ஹரி ஓம்....என்று குழந்தைகள் சொன்னார்கள், பதிலுக்கு நாங்களும் ஹரி ஓம் என்று சொல்லி கிளம்பினோம். சில மணி நேரங்கள் அக்குழந்தைகளோடு குருகுலத்தில் இருந்தது மனதிற்கு சாந்தி தந்தது.

ஐபிஎல் கோவை மாவட்ட அமைப்பாளர் வெ. ராஜா அனைத்து ஏற்பாடுகளையும் அருமையாக செய்திருந்தார். 30ம் மேற்பட்ட உறுப்பினர்களை குறைந்த நாட்களில் ஐபிஎல்லில் சேர்த்த பெருமையும், சாதனையும் ராஜாவுக்கு உண்டு. தொடரட்டும் அவரது சேவை. தொடரட்டும் மனித நேயமும், நட்பும். விரைவில் கோவை உறுப்பினர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் ஒரு நாள் சந்திக்க வேண்டும் என்று ராஜாவிடம் கூறினேன்.

ஐபிஎல் தலைவர் கருண் அவர்களுக்கு இத்தருணத்தில் நண்பர்கள் தினம் மற்றும் பிறந்த நாள் நல் வாழ்த்துக்களை போனில் தெரிவித்து வாழ்த்தினேன்.கருண் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் இன்னும் நிறைய சமூகசேவை செய்ய கடவுள் எங்களுக்கு அருளவேண்டும்.

ராம்கி

Thursday, March 1, 2012

RAMKI FELICITATED AT AIOC2012 COCHIN - RAMKI HONOURED

RAMKI'S UNFORGETTABLE MOMENTS AT COCHIN


Dr.N.S.D.Raju, President of All India Ophthalmological Society handing over a Memento to Ramki, Executive Coordinator at the 70th Annual Conference of All India Ophthalmological Society held on 2.2.2012 at Le Meridien, Cochin.




Dr.D. RAMAMURTHY, Chairman, Scientific Committee-AIOS & Chairman, The Eye Foundation with Ramki and Dr.Dr. Lalit Verma, General Secretary, AIOS.



RAMKI with Dr. Lalit Verma, General Secretary of All India Ophthalmological Society


DR. R.V.AZAD, RAMKI & DR. ASHOK GROVER.



Dr.D. RAMAMURTHY, Chairman, Scientific Committee-AIOS & Chairman, The Eye Foundation with Ramki and Dr.Dr. Lalit Verma, General Secretary, AIOS.

photos courtesy: Dr. MANGAT DOGRA, Chandigarh

கமலா அம்மா பற்றிய நினைவலைகள் RAMKI

அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை
அவள் அடி தொழ மறப்பவர் மனிதனில்லை

கமலா அம்மா பற்றிய நினைவலைகள்
A TRIBUTE TO KAMALA AMMA BY RAMKI



மூத்த கண் மருத்துவர் என்.எஸ். சுந்தரம் அவர்களின் துணைவியார், மும்பை கண் மருத்துவர் எஸ். நடராஜன், ஸ்ரீராம் மற்றும் சௌர்ணாவின் அன்னை இவர்.

நான் மும்பையில் மருத்துவர் எஸ். நடராஜன் அவர்களிடம் 6 வருட காலங்கள் பணிசெய்த போது, எனக்கு அறிமுகமானவர். இவரது சென்னை தி நகர் வீட்டிற்கு ஓரிரு முறை சென்றதுண்டு. அப்போது திரு. சுந்தரம் மற்றும் திருமதி கமலா சுந்தரம் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது இவர்களது மகள் சௌர்ணா மற்றும் அவரது மகள் விக்னேஸ்வரியும் அன்போடு வரவேற்பார்கள்.
எப்போது வீட்டிற்கு சென்றாலும், சாப்பிடாமல் எங்களை அனுப்ப மாட்டார் கமலா அம்மா அவர்கள். ஒரு முறை நான், மலேஷியா வாழ் திருமதி ரத்னேஸ்வரி மற்றும் அவரது கணவர் திரு ரவி அவர்களுடன் ஒரு மாலைப்பொழுதில் இவரை திநகர் வீட்டில் சந்தித்தோம், அப்போது கமலா அம்மா சுடச்சுட இட்லி தயாரித்து கொடுத்ததை மறக்கமுடியாது.
பின் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்த போதும் ஓரிரு முறை நானும், என் மனைவி சீதாவும் சென்று பார்த்துவந்தோம், அப்போதும், இன்னும் சொஞ்ச நேரம் இருங்க… நேரம் கிடைக்கும் போது எங்க வீட்டுக்கு வாங்க என்றும் ஏதாவது சாப்பிட்டுவிட்டுத்தான் போகவேண்டும் கமலா அம்மா அன்போடு சொல்லுவார்
.
டாக்டர் நடராஜன் அவர்களுக்கு தன் பெற்றோரை தன்னுடன் மும்பையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நீண்ட அவா இருந்தது. அதன்படி கமலா அம்மா நடக்கமுடியாத நிலையிலும், இவரை பத்திரமாக விமானம் மூலம் மும்பைக்கு வரவழைத்து தன் பெற்றோரை கண்ணும் கருத்தமாக கவனித்துக்கொண்டார் திரு, நடராஜன் அவர்கள்.



இந்த மூத்த தம்பதிகள் மும்பையில் தங்கியிருக்கும் போது நிறைய முறை சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது.

சென்னையில் இருக்கும் போது கமலா அம்மாவால் வெளியுலகை காணமுடியாத சுழ்நிலை இருந்தது. ஆனால் மும்பைக்கு வந்ததும், திரு, நடராஜன் அவர்கள், தன் அம்மாவை வெளியுலக்கு கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் செய்தார். தினமும் சில ஊழியர்களை மாலை நேரத்தில் (சுமார் 4 அல்லது 5 மணிக்கு) வரவழைத்து, கமலா அம்மாவை வீல் சேரில் அமர வைத்து, வடாலாவில் உள்ள பார்க்கில் சில மணிநேரம் இருந்து பத்திரமாக வீட்டிற்கு வர ஏற்பாடு செய்தார். அம்மாவிற்கு இப்படி வெளியே வருவது மிக மகிழ்ச்சி தந்தது. ஆனால் இவர் மாடியில் இருப்பதால், கமலா அம்மாவை படுக்கையில் இருந்து பத்திரமாக தூக்கி, சக்கர நாற்காலியில் அமரவைத்து, பின்முதல் மாடியிலிருந்து கீழ் இறக்குவது, பின் மேலே கொண்டுவருவது என்பது ஊழியர்களுக்கு சற்றுசிரமாமாக இருக்கும். அனைத்து ஊழியர்களும் அம்மா அப்பா என்று அன்போடு அழைத்து பாசமழை பொழிந்தனர்.

திரு. நடராஜன் அவர்கள், தன் அன்னையை குணப்படுத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். மும்பையில் உள்ள மிகப்பெரிய மருத்துவர்கள், ஸ்பெஷலிஸ்ட்கள், பிஸியோதெரிபிஸ்ட்கள் போன்றவர்களை உடனுக்குடன் ஏற்பாடு செய்து, மிகச்சிறப்பாக தம் அம்மாவையும், அப்பாவையும் எந்த வித குறையும் இன்றி பார்த்துக்கொண்டார்.

அம்மாவை பார்த்துக்கொள்ள ஆள் கிடைப்பது முதலில் சற்று கஷ்டமாக இருந்தது, பிறகு ஓரிருவர் வந்த பின் அந்த பிரச்சனையும் எளிதில் முடிவுக்கு வந்தது. கமலா அம்மா படுத்திருந்த படியே, எவ்வாறு தன் மகனுக்கு பிடித்த உணவு வகைகளை செய்வது என்று சமையல் செய்யும் பெண்மணிக்கு சொல்லித்தருவார்.



இந்த மூத்த தம்பதிகளின் திருமண நாள், மற்றும் பிறந்த நாள் என்றால் திரு நடராஜன் அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அம்மாவுக்கு பட்டுபுடவை எடுப்பது, புதிய நகை வாங்கி பரிசளிப்பது என்று அசத்துவார். அப்பாவுக்கும் புதிய கோட்சுட் வாங்கி, இளமையாக்கிவிடுவார். அவர்களுக்கு எதுவேண்டுமோ அதையே வாங்கி கொடுத்து மகிழ்வார். ஒரு பிறந்தநாளுக்கோ திருமண நாளுக்கோ அவருக்கு ஒரு வெள்ளிகாசை பரிசளித்தேன். பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டார், அம்மாவுக்கு நிறைய ஊக்கஅளித்து நடக்க முயற்சி செய்யும்படி அடிக்கடி சொல்லுவார் டாக்டர் நடராஜன் அவர்கள்.

இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சாப்பிடுவது மகிழ்ச்சியாக இருக்கும். நான் இவர்களுடன் இருக்கும் நேரத்தில், என்னையும் அவர்களோடு அமரவைத்து சாப்பிட சொல்லுவார்கள். சில நாட்கள் அம்மாவுக்கு பணிப்பெண் தான் சாப்பாடு ஊட்ட வேண்டியிருந்தது. இருப்பினும் திரு நடராஜனின் ஊக்கத்தால் அம்மா தனது இடது கையால் தானாக சாப்பிட ஆரம்பித்தார். அமர்ந்தபடியே சிலசமயம் பரிமாரவும் செய்தார். சாப்பிடும் போது, ‘ராம்கிக்கு இன்னும் ஒரு தோசை கொண்டுவாங்க….’ என்று சமையல் கட்டைப்பார்த்து கமலா அம்மா குரல் கொடுப்பார்கள். ‘என்ன போதுமா ராம்கி, இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்க..’ என்று அன்போடு திருப்தியாக சாப்பிடும்வரை கமலா அம்மா என்னை இடத்தைவிட்டு எழுந்துகொள்ள அனுமதிக்கமாட்டார்.

‘மதியம் சாப்பிட அப்பாவோட வந்திருங்க, இரவும் இங்கேயே சாப்பிடலாம் லேட்டானாலும் வந்துட்டு போங்க..’ என்று ஒவ்வொரு முறையும் என்னை அழைப்பார் கமலா அம்மா அவர்கள். ஒரு நாள் செல்லவில்லை என்றால், ‘என்ன நேற்று வேலை அதிகமா, நீங்க வீட்டுக்கு வரலயே?’ என்று கமலா அம்மா பாசத்தோடு கேட்பார்.

காலையில் குளித்தல், பிஸியோதெரபி பயிற்சி, மதியம் சாப்பாடு, மாலையில் வெளியே செல்லுதல், முக்கிய விழாக்களுக்கு செல்லுதல், ஆதித்ய ஜோத் மருத்துவமனைக்கு செல்லுதல் என்று சுருசுருப்பாக இருந்தார் கமலா அம்மா அவர்கள். திருநெல்வேலி சமையல் வகைகளை சமையல் செய்யும் அம்மாவுக்கு கத்துகொடுப்பார் கமலா அம்மா.

இவரது அறையில் பெரிய டிவி, வேலையாட்களை அழைக்க மணி, போன்றவற்றையும் பார்த்து பார்த்து, திரு நடராஜன் ஏற்பாடு செய்தார். பலமுறை நான், கமலா அம்மா, அப்பா சுந்தரம், திரு நடராஜன் என அனைவரும் சேர்ந்து டிவியில் சில நிமிடங்கள் ஏதாவது நிகழ்ச்சிகளை பார்த்து மகிழ்வோம்.


திரு நடராஜன் குளித்துவிட்டு தீபாராதனை செய்யும் போது கமலா அம்மாவையும் அருகே வைத்துக்கொள்வார்.
இத்தம்பதிகள் திருமணநாள் அன்றும் பிறந்த நாள் அன்றும் பல பூஜைகளை ஏற்பாடு செய்வார் டாக்டர் நடராஜன். ஒருமுறை தன் பெற்றோர்களுக்கு பூஜை செய்து, கால் கழுவி, இவர் ஆசிர்வாதம் பெற்றது கண் முன்னே நிற்கிறது,
எந்த பூஜை இருந்தாலும், நானும் இவர்களுடன் இருக்கும் வாய்ப்பை அனைவரும் அளித்தனர், அம்மாவின் பிறந்த நாளின் போது பெரிய வாழ்த்து அட்டை கொடுத்து, மலர் செண்டுகொடுத்து, அனைவரையும் அழைத்து மாலை கேக் வெட்டவைத்து, தன் பெற்றோரின் விழாக்களை சிறப்பாக நடத்தி இருவரையும் பலமுறை திரு. நடராஜன் அசத்தியுள்ளார். சில சமயம் அம்மாவுக்கு நிறைய அலங்காரம் நடக்கும். முக்கிய விழாவின் போது அம்மாவுக்கு புதிய பட்டுப்புடவை கட்டி, தலை நிறைய பூவைத்து, தங்க வளையல், செயின் என்று அலங்கிரித்து கண்டுமகிழ்வார் திரு. நடராஜன் அவர்கள். இரு பெண் உதவியாளர்கள் இவருடன் வெளியே வரும்போது நிச்சயம் இருப்பர்.

இவரது அன்பும் ஆதரவும், இந்த மூத்த தம்பதிகளை மிகவும் மகிழ்ச்சியடைய செய்தது. பெற்றோர்கள் மகனுக்கு ஆதரவாகவும், மகன் பெற்றோர்களுக்கு ஆதரவாக இருந்தது பலரை நெகிழ்ச்சியடைய செய்தது.

நான், கமலா அம்மா, அப்பா, நடராஜன் என்று இருக்கும் போது வீடே கலகலவென இருக்கும். நடராஜன் அவர்கள் ஏதாவது ஜோக் அடித்துக்கொண்டு அனைவரையும் சிரிக்க வைப்பார். மகன் ஸ்ரீராம் மற்றும் அவரது குடும்பத்தினர் அவரை பார்க்காததும், பேசாதாதும் ஒரு குறையாக கமலா அம்மாவுக்கு இருந்தது என உணர்ந்தேன். மகள் சௌர்ணா மற்றும் பேத்தி விக்னேஷ்வரியை பார்த்துவிட்டால் அம்மாவும் தனி தெம்பு வந்துவிடும். கமலா அம்மாவின் அம்மா, பெரிய ஆச்சியும் வீட்டில் இருந்தால் நடராஜன் அவர்களின் கலாட்டாவுக்கு பஞ்சமேது.

நான் மும்பையிலிருந்து கோவைக்கு வேலைநிமித்தம் வந்தபின் அவருடன் போனில் பேசத்தான் முடிந்தது. திரு நடராஜன் அவர்கள் என்னுடன் போனில் பேசினாலும், தன் அருகே கமலா அம்மா இருந்தால், ‘இந்தாங்கம்மா, ராம்கி லைனில் இருக்காரு..பேசுங்க..’ என்று போனை கொடுப்பார். ‘சீக்கிரம் மூம்பைக்கே வந்திடுங்க…ராசு கூடவே இருந்திடுங்க’ என்பார். ‘சீதா, ஸ்ரீராம் எப்படி இருக்காங்க’ என்று பெயர் குறிப்பிட்டு கேட்பார் கமலா அம்மா.

நான் கொச்சில் நடந்த அகில இந்திய கண் மருத்துவர்கள் மாநாட்டில் பணிசெய்ய சென்ற போது 1.2.2012 விடியற்காலை கமலா அம்மா இறந்த செய்தி, திரு. நடராஜன் அவர்கள் அனுப்பிய எஸ்எம்எஸ் மூலம் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் போனது எனக்கு மிகுந்த வருத்தத்தை தந்தது. வைத்தியநாதன் மற்றும் ராஜன் போன்ற என் நெருங்கிய நண்பர்கள் அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்று, திரு நடராஜன் அவர்களுக்கு துணையாக இருந்தது, நான் பங்கேற்ற மனநிறைவு தந்தது.

கமலா சுந்தரம் பிறந்த தேதி 2.12.1937, நம்மை விட்டு மறைந்த தேதி 1.2.2012.

அவரது இழப்பு அவர்கள் குடும்பத்தார் அனைவரும் ஒரு பேரிழப்பாகும். என் சார்பாகவும். சீதா, ஸ்ரீராம் சார்பாகவும் கமலா அம்மாவின் ஆத்மா சாந்தி பெற, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
RAMKI