Saturday, February 27, 2010

உங்களால் முடியும்......MOTIVATINAL ARTICLES

ஒழுக்கம் தவறேல்

நல்லொழுக்கத்தை [Discipline] தவறினால் வேண்டாத பழிகளையெல்லாம் அடைந்து துன்புறத்தான் வேண்டியிருக்கும்.

முதலில் ஒழுக்கமாக இருக்க பழகிகொள்ளவேண்டும், மற்றவர்களின் ஒழுக்கம் நம்மீது தினிக்கப்படலாம். அது நல்லதற்காகத்தான் என எடுத்துக்கொண்டு ஒழுக்கத்தை கடைபிடியுங்கள். அனைவருக்கும் ஒழுக்கமாக வாழவேண்டும் என்று தான் எண்ணுவதுண்டு. அதையே ஒரு வழக்கமாக தொடருங்கள். ஒழுக்கமாக வாழ நாம் எதுவும் கையைவிட்டு செலவு செய்யவேண்டியது இல்லை அல்லவா? நாம் ஒழுக்கமாக வாழ்ந்தால், செல்வம் நம்மைத்தேடிவரும். நாம் வாழும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்த்த்தை ஏற்படுத்துவது நாம் கடைபிடிக்கும் ஒழுக்கம். ஒழுக்கத்தை கடைபிடித்தால் நம் நிலையும், மதிப்பும் கூடும். ஏன் ஒரு தனி முதல் மரியாதையே சென்ற இடத்தில் எல்லாம் கிட்டும்.

எல்லோரும் பயன்யடைக்கூடியவகையில் எந்த காரியத்தையும் செய்யுங்கள்.. எதையும் சுயநலத்திற்காக பார்க்காமல் பொதுநல நோக்கில் பார்க்கவும். சின்ன சின்ன விஷயத்திற்காக ஒழுக்கம் தவறாமல் வாழ்ந்தால். ஒழுக்கம் நிறைய பலன்களை தரும் என்பதில் ஐயமில்லை. ஆகவே, ஒழுக்கத்தை உங்கள் உயிரைவிடச் சிறந்த்தாகப் போற்றுஙகள்.

ஒழுக்கம் உடைமை என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் என்ன சொல்கிறார் தெரியுமா?
உடலை வருத்தியாவது ஒழுக்கத்தை கடைபிடியுங்கள். ஒழுக்கமுடையவன் உயர் குடியை சேர்ந்தவனாகிறான். ஒழுக்கமில்லாதவனிடத்தில் உயர்வு இருக்காது, நல்லொழுக்கத்துடன் வாழ்வதுதான் நல்வாழ்வுக்கு விதை போன்று அமையும். உலகிலுள்ள மக்களின் வாழ்க்கையோடு ஒட்டி இணைந்து வாழ்த் தெரிந்தவர், ஒழுகும் முறையைக் கற்காதவர் பல நூல்களைக் கற்றறிந்தாலும் அறிவில்லாதவராகவே கருதப்படுவர். அட்டா எத்தனை உண்மை?????

<strong>ராம்கி


உங்களால் முடியும்........................

நீங்கள் என்னால் முடியும் என்று நினைத்தால், எதுவும் முடியும். எல்லாம் சாத்தியமே......இதில் எந்த சந்தேகமும் இல்லை.

முயன்றது நடக்க வில்லை என்றால், அதில் ஏதோ ஒரு குறையுள்ளது என்று எண்ணி, அந்த குறையை நீக்க வேண்டும். எங்கோ, எதிலோ நாம் தடம் மாறியுள்ளோம் என்பதை உணரவேண்டும். ஆம் தடைகற்கல் இல்லாத வாழ்கை பயணம் ஏது? எதுவும் நாம் நினைத்த பட்சத்தில் சட்டென கிடைக்காது. வாழ்க்கை என்பது அவ்வளவு எளிதல்ல அனைவருக்கும். இருந்தாலும் தங்களுக்குத் தெரியும் முயன்றால் எதுவும் நடக்கும் என்பதும், நடக்காது என்று எதுவுமே இல்லை என்றும். (என்ன நிஜம் தானே?).

ஒரு காரணத்தை காட்டியோ, ஒரு வருத்தம் (எக்ஸ்கியூஸ்) தெரிவித்தோ எளிதில் நமது இலட்சியத்திலிருந்து, நம்மால் முடியாது என ஒதுங்கிவிடக்கூடாது. நமது இலட்சியம்... நமது இலக்கு... நமது குறி... அதில்தான் நாம் முழு கவனமும் செலுத்தவேண்டும். இது உங்களது விருப்பம்...இது உங்களது வாழ்க்கை....ஆகவே துவங்குங்கள் இப்போதே....உங்கள் லட்சியத்தை எட்டக்கூடிய பல வகையான வாழ்ப்புகளும், சந்தர்ப்பங்களும் உங்கள் வருகைக்காக, பல வழிகளில் காத்துக்கிடக்கிறது.. உங்கள் பாதங்களை அந்த வழிகளுக்காக முன்னுக்கு எடுத்துவையுங்கள்.....ஏன் இனி தயக்கம? நீங்கள் நினைத்தது நடக்கும். அதற்கு பின் நினைத்ததை முடிப்பவன் நான்.. நான்.. நான்.. என்று உங்கள் கைகளை உயர்த்தி பாடவேண்டியது தான் பாக்கி அல்லவா? ஆகவே, எதுவும் உங்களால் முடியம் என நம்புங்கள்
......எஸ் YOU WILL.

RAMKI

*
வெற்றி மீது வெற்றியே

எதிலும் வெற்றிபேற வேண்டுமானால் முதலில் உங்களைத்தானே வெற்றி பெற்றவர்ராக நினைத்துக்கொள்ளுங்கள். பிறகு உங்கள் பாஸிடிவ் எண்ணங்களின் வழி செல்லுங்கள்.. முயலாமல் இருப்பது, ஏதாவது சாக்குபோக்கு சொல்லி அதையே நம்புவது, மற்றவர்கள் சொல்வதை அப்படியே நம்புவது, உங்கள் திறமையின் மீது நீங்களே சந்தேகப்படுவது..... இவை எல்லாம் வேண்டாமே.... உங்களை முதலில் உயர்வாக நினையுங்கள். நீங்கள் செய்யும் காரியத்தில் முழுமையாக ஈடுபட்டு,
எடுத்த காரியத்திற்கும் மரியாதை கொடுங்கள். ஆயிரம் எண்ணங்கள் உங்கள் மனதில் உதயம் ஆகிக்கொண்டு தான் இருக்கும் அல்லவா? அந்த எண்ணங்களில்
சரியானதை வடிகட்டி தேர்வுசெய்யுங்கள். விரும்பியதை நம்பி, அதுபற்றி முழுமையாக தெரிந்துகொண்டு அதில் ஈடுபடுங்கள். எப்போதும் வெற்றியை நினையுங்கள். வெற்றியடைவோம் என நினையுங்கள். நல்லதாகவே முடியும்
என நினையுங்கள், சந்தோஷமாகவே இருப்பதாக நினையுங்கள். ஊக்கம் தறக்கூடிய எண்ணங்களோடு செயல்படுங்கள். வெற்றி பெற்றவர்களோடும, சாதனை படைத்தவர்களோடும் பழகும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.. மனத்தெளிவுடன் செய்யத்துணிந்த செயலைச் சோம்பலின்றிக் காலம் கடத்தலைத் தவிர்த்து விரைவில் செய்ய வேண்டும் என்று திருவள்ளுவர் சும்மாவா சொல்லியிருக்கிறார்?
உங்கள் இலட்சியத்தில் முழு கவனம் செலுத்தி ஈடுபடுங்கள். உங்களின் வெற்றியையே மீணடும் மீண்டும் நினையுங்கள். அதில் சிறிதளவும் சந்தேகமில்லாமல, எடுத்த காரியத்தில் உங்களை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு, எதிர்நீச்சல் போட்டால் வாழ்வில் வெற்றி மீது வெற்றி வந்து உங்களை சேரும் என்று நான் சொல்லவும் வேண்டுமா? ஆல் தி பெஸ்ட்.

ராம்கி

*

எதற்கும் தயார்

நாம் நினைத்தெல்லாம் தானகவே நம்மைத் தேடிவரும் என்று காத்திருந்து காத்திருந்து நொந்து போகாதீர்கள். தானாக வருவது, வரும்போது வரட்டும்.

வாய்ப்புகளைம் சந்தர்ப்பங்களையும் எதிர்நோக்கியிருப்பதை விட்டுவிட்டு அதற்கான முயற்சியோடு உழையுங்கள். முயற்சி திருவினையாக்கும் என்பது ஏவிஎம் நிறுவனத்திற்கு மட்டுமல்ல நமக்கும் தான். வாய்ப்புகளையே எதிர்நோக்கியிருக்க வேண்டாம். நம்மைத்தேடி தானாகவே எல்லா வாய்ப்புகளும் வரும் என பகல் கனவுடன் இருந்தால், உங்கள் கண்பார்வையில் உள்ள அருமையான சந்தர்ப்பங்களும், வாய்ப்புகளும் கூட உங்களுக்குத் தெரியாது. எந்த வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும் என்று எதிர்பார்க்கிறீர்களோ, அதறாக முழு ஊக்கத்துடன் உழையுங்கள். பாடுபடுங்கள். வாய்ப்புகளை நீங்கள் தேடி செல்லுங்கள். அப்படி உழைத்தால், வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். தயாராக இருங்கள். பிறகு தேடிவந்த வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் நன்றாக பயன்படுத்தி வாழ்வில் முன்னேறுங்கள். உங்கள் உழைக்கும் கரங்களை நம்புங்கள். உழைக்காமலும், சிரமப்படாமலும் வெற்றிக்கனி அவ்வளவு எளிதில் யாருக்கு கிடைத்துவிடும்?

உறுதிமிக்க ஊக்கத்தை உடையவனிடத்தில், பொருளானது தானே வழி கேட்டுக்கொண்டு வந்து சேரும் என்கிறார் வள்ளுவர். இக்கட்டுரையை படிக்க கிடைத்த வாய்ப்பு உங்களுக்கு எப்படி இருந்த்து?? அது சரி, இப்போ எதற்கும் தயாராக இருங்கள்.

நம் இடைவிடாத ஊக்கத்தினளவுதான், நம் வாழ்வில் உயர்ச்சி..............

ராம்கி

*

மன்னிப்பு = எனக்கு பிடித்த ஒரே வார்த்தை

பிறரின் பலவீனங்களை மட்டுமே பார்ப்பது ஒரு தொற்றுவியாதி போன்றது. ஆகவே இன்றிலிருந்து உங்கள் பார்வையை மாற்றிக்கொள்ளுங்கள் பிறர் குற்றம் செய்தாலோ அல்லது எதாவது சொல்லிவிட்டாலோ, தங்களின் தவற்றை உணர்நது உங்களிடம் மன்னிப்பு கேட்கவந்தால் அவர்களை மன்னிக்க பழகிக்கொள்ளுங்கள். உங்களின் மன்னிக்கும் குணம் உங்களை வலுவாக்குகிறது. மேலும், வாழ்வில் மேல் நோக்கி உயர உதவுகிறது. வார்த்தை தவறுதல், மற்றவர்கள் செய்த தவறுகளோ, சொன்ன வார்த்தைகளோ, அல்லது வாக்கு கொடுத்து முடியாத கார்ரியங்களோ போன்றவற்றை யாராலும் திருப்ப்பெறமுடியாது, சொன்ன வார்த்தை சொன்னதுதான். செய்த செயல் செய்த்து தான் அல்லவா? அதுபோன்ற செயல்களை செய்தவர்களையும், தவறவாக அறியாமல் பேசியர்வகளையும் மன்னித்து, அடுத்த காரியத்தில் கவனம் செயலுத்தவேண்டியது தான் ஒரே வழி. அப்படி மன்னிப்பதால் உங்கள் நிலையில் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. மன்னித்தல் என்பது மற்றவர்கள் செய்த காரியத்திற்கோ, பேசியதற்கோ துணைபோவது என்று அர்த்தம் அல்ல.. மன்னித்தல் என்பது அந்த செயலைவிட உங்கள் உயர்த்தி காட்டும் வல்லமை உடையது. மேலும் நமக்கு தன்னம்பிக்கை அளித்து, நம்மை அடுத்த காரியத்தில் மனதார ஈடுபடசெய்யும் தன்மை கொண்டது. மன்னிக்காமல் உங்கள் மனதிலே கேட்ட வார்த்தைகளையோ, நடந்து முடிந்த நிகழ்ச்சிகளையோ திரும்பத்திரும்ப நினைத்துக்கொண்டு, என் சோககீதத்தில் மூழ்கவேண்டும்.. மன்னிப்புக்கு பிறகு உங்களுக்கு கிடைக்கும் மரியாதையே தனி தான். மன்னிக்கத் தெரிந்தவன் மாமனிதன் ஆகிறான். இப்போ, உங்களுக்கு பிடித்த தமிழ் வார்த்தைகளில் மன்னிப்பு என்ற ஒன்றும் உள்ளது தானே?

ஆஹா மன்னிச்சுட்டாங்கையா....மன்னிச்சுட்டாங்கையா..............

ராம்கி

Friday, February 12, 2010

மாமனிதர் டாக்டர் பத்ரிநாத்

மாமனிதர் டாக்டர் பத்ரிநாத் அவர்களுடன்
3ம் தேதி, 3 மணிக்கு, 30 நிமிடங்கள்
(டாக்டர் பத்ரிநாத் - ராம்கி சந்திப்பு)


சங்கர நேத்ராலயா (சென்னை) என்ற பெயரை கேட்டதுமே நம் மனக்கண் திறக்கும். ஆசியாவிலேயே சிறந்த கண் மருத்துவனை இது. இங்கு பணிபுரிந்த அல்லது பயிற்சி பெற்ற, பல கண் மருத்துவர்கள் தாங்கள் சங்கர நேத்ராலயாவை சேர்ந்தவர்கள் என்று பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய ஒரு சிறந்த பல்கலைக்கழகம். நிறைய கண் மருத்துவர்களும், கண் சம்பந்தமாக தொழில நடத்துபவர்கள் கூட பகிரங்கமாக சங்கர நேத்ராலயாவில் பயிற்சி பெற்றவர் என்பதை “போர்டு” போட்டு மக்களை இழுப்பதையும் பார்த்திருக்கிறேன். இத்தனை சிறப்பு மிக்க கண் மருத்துவமனையின் தலைவர் தான் டாக்டர் எஸ். எஸ். பத்ரிநாத் அவர்கள்.

சென்னை செல்லும்போதெல்லாம் அவரை, அவரது மருத்துவமனையில் சந்திக்க வேண்டும் என்று பல ஆண்டுகாளாக நினைத்திருந்தேன். இம்முறை நான் சென்னை வருவதை முன் கூட்டியே அவருக்கு தெரிவித்து அவரை சந்திக்க நேரம் கேட்டு இமெயில் அனுப்பியிருந்தேன். ஓரிரு நாட்களில் அவரிடம் இருந்து பதில் இமெயில் வந்தது. 2010 பிப்ரவரி 3ம் தேதி, 3 மணிக்கு சந்திக்க வரமுடியுமா? என்று கேட்டு இருந்தார். மேலும் 2ம் தேதியே அவரது உதவியாளர் திரு, செந்தில் என்னிடம் போனில் தொடர்பு கொண்டு எனது வரவை உறுதிசெய்துகொண்டார்.

பிப்ரவரி 3ம தேதி மதியம், 2.30 மணிக்கே சங்கர நேத்ராலயாவில் முதன் முதலாக என் மனைவி சீதாவுடன் நுழைந்து, அங்கு நின்று கொண்டிருந்த பாதுகாவலிரிடம் “வரவேற்பு அறை எங்கே?” என்று கேட்க அவர் நேரே கையை நீட்டினார். அங்கு சென்று “டாக்டர் எஸ்.எஸ்.பி அவர்களின் அறை எங்கு உள்ளது? 3மணிக்கு என்னை சந்திக்க நேரம் கொடுத்துள்ளார்” என்று ரிசப்ஷன் பெண்மணியிடம் சொல்ல, என்னை சற்று ஆச்சர்யத்தோடு பார்த்து “உங்களுக்கு அவர் டைம் கொடுத்திருக்காரா” என்று கேட்க, “ஆமாம். நான் கண் நோயாளி அல்ல” என்று சொன்னபிறகு “புதிய கட்டிடத்தில் 2ம் மாடிக்கு செல்லுங்கள்” என்று மென்மையான குரலில் சொன்னார். புதிக கட்டிடத்தில் நுழைந்த்தும் அங்கு உள்ள வரவேற்பாளர் யாரை சந்திக்க வேண்டும் என்று கேட்டு, பிறகு செந்தில் அவர்களுடன் போனில் பேசி உறுதிசெய்து கொண்டபின், பதிவேட்டில் எங்களின் விவரங்களை கேட்டு பிறகு அணிந்து கொள்ள ஐடி கார்டுகளை கொடுத்து, இதை அணிந்து 2வது மாடிக்கு செல்லுங்கள் என்று கூறினார்,

லிப்ட் மூலம் 2வது மாடியில் நுழையும் போதே திரு. செந்தில் எங்களை அன்போடு வரவேற்று “ராம்கி சார் தானே? இங்கே உட்காருங்கள்..சார் ஒரு மீட்டிங்கில் உள்ளார். இப்போது வந்துவிடுவார்” என்றார். நாங்கள் அங்கிருந்த ஒரு சில புத்தகங்களை புரட்டிகொண்டிருந்தபோது மிக அமைதியாக டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் அவர்கள் உள்ளே வர நாங்கள் இருவரும் கைகூப்பி வணங்கினோம். எங்களுக்கு முன்பே காத்திருக்கும் ஒருவரை உள்ளே அழைத்துச்சென்றார். அதற்குள் செந்தில் எங்களுக்கு சுடச்சுட காபிக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஓரிரு நிமிடத்தில் எங்களை டாக்டர் எஸ்.எஸ்.பி. உள்ளே அழைக்க நான் மட்டும் முதலில் சென்றேன். என்னைக் கண்டதும் தன் இருக்கையை விட்டு எழுந்து, “வாங்க ராம்கி எப்படி இருக்கீங்க??..எப்போ சென்னைக்கு வந்தீங்க?” என்றார். பிறகு “நீங்க தயாரித்த அப்ஸ்ட்ராக்டர் புத்தகங்கடள எல்லாம் ரொம்ப ஜோர செஞ்சிருக்கீங்க..ரொம்ப சந்தோஷம்.. இந்த மாதிரி புத்தகம் வெளியிடுவது சாதாரண காரியம் இல்லே. யூ ஆர் டுயிங் எ வெரி குட் ஜாப்...” என்று மனம் திறந்து பாராட்டினார். “சார், எல்லாம் தங்களின் ஆசிர்வாதம்” என்று சொல்லி முடிப்பதற்குள், “ராம்கி காபி சாப்பிடுறீங்களா” என்று கேட்க, “நன்றி சார் இப்போது தான் காபி குடித்தேன்” என்று சொன்ன போது, “இங்கே காபி குடித்தீங்களா” என்று மீண்டும் ஒரு முறை உறுதிசெய்து கொண்டார். பின் என்குடும்பத்தினர் பற்றியும். என் மகனது படிப்பு பற்றியும் விவரம் கேட்டறிந்தார்.

“சார் என் மனைவி சீதாவும் வந்திருக்காங்க” என்றதும், “அட அவுங்களையும் உள்ளே கூப்பிடுங்க” என்றார். சீதா வணக்கம் தெரிவித்து அமாந்த்தும், “எப்படி இருக்கீங்கம்மா? பையன் நல்லா படிக்கிறானா?” என்று விசாரித்தார். பிறகு 10/15 நிமிடங்கள் எங்களது வாழ்க்கை முறையும் கேட்டறிந்தார். தானும் தன் 17வது வயதில் ஆஸ்டலில் படித்த்தை நினைவுகூர்ந்து, “பேசாம உங்க பையனையும ஆஸ்டலில் சேர்த்திருடுங்கோ...நீங்க கோவைக்கு சென்று ராம்கியோட செட்டில் ஆயிடுங்க” என்று சீதாவிடம் சொன்னார். மேலும், “ஆஸ்டல் நல்லா இருக்கா? ரேகிங் ஏதுவும் இல்லையே?....நல்ல ஆஸ்டல் தான்னா பேசாம ஆஸ்டலில் போட்டுங்க..ஆஸ்டல் வாழ்க்கையும் ஒரு விதமான வாழ்க்கைதான்...கொஞ்சம் பழகினா சரியாயிடும். எப்படியும் காலேஜ் படிப்பு முடிந்து மேல்படிப்புக்கு ஸ்ரீராம் தனியே இருக்க வேண்டியிருக்கும் இல்லயா?” என்று ஒரு தந்தைக்கு உள்ள பாசத்தோடு எங்களுக்கு அறிவரை கூறினார் டாக்டர் பத்ரிநாத் அவர்கள். “அம்மா நீங்க காபி சாப்டீங்களோ? இங்கே நம்ம ஆஸ்பத்திரியில் காபி குடித்தீங்களா” என்று மறவாமல் ஒன்றுக்கு இரண்டு முறை கேட்டார்.

“ராம்கி அபாரமா புத்தகங்களை தயாரிக்கிறார். ஆது சாதரண விஷயம் இல்லமா...நிறைய கடின உழைப்பு தேவை....ராம்கி மனிதருள் ஒரு மாணிக்கம்....நான் அவரை புகழுனும்னு இதை சொல்ல்லே...அவரது திறமை எனக்கு நல்லா தெரியும்..எதற்கும் கவலைப்படாதீங்க...நேரம் வரும்போது கட்டயாம் அவருக்கு உதவி செய்வேன்” என்று சீதாவிற்கு தைரியம் கொடுத்தர்ர் டாக்டர் அவர்கள். அதிக நேரம் அவருக்கு தொல்லை தரக்கூடாது என்ற நோக்கத்தில் எங்களுக்காக நேரம் ஒதுக்கியதற்கும், தங்களது அறிவுரைகளுக்கும் “ரொம்ப நன்றி” என்று நான் தெரிவிக்கும் முன், “எல்லாம் நல்லபடியா முடியும் ராம்கி, I am with you” என்று தன் மேசை டிராவில் இருந்து திருப்பதி தேவஸ்தாக டைரியை எழுந்து நின்று அன்புபோடு கொடுத்தார்.

“சார் வாங்க உங்களை நமஸ்கரிக்கிறோம்” என்று நாங்கள் இருவரும் எழுந்திருக்க, “இருங்க நாம மூணு பேருமா பெரியவாளை நமஸ்கரிப்போம்” என்று காஞ்சி மகாபெரியவரின் படத்தை காட்டி எங்களோடு அவரும் நமஸ்காரம் செய்தார். பிறகு நாங்கள் இருவரும் திரும்பி அவரது காலில் விழுந்து நமஸ்கரித்தோம். தெய்வத்தை வணங்கியபடியே ஒரு நிமடம் கண்மூடிநின்று எங்களை மனமார ஆசிரிவதித்தார். பிறகு சட் என என் இரு கைகளையும் பிடித்து அவரது தலையில் வைத்துக் சற்றே குனிந்து கொண்டார். “சார்….” என்று நான் படபடக்க, அமைதியான புன்முறுவலுடன், சீதாவின் கைகளையும் பற்றி அவரது தலையில் வைத்துக் கொள்ள நாங்கள் மிகவும் திகைத்து, இத்தனை பெரியவர் இவ்வளவு பணிவாக இருக்கிறாரே என்று ஆச்சரியப்பட்டோம்.

“என்னுடைய வாழ்த்துக்கள் என்றும் உங்களுக்கு உண்டு. எப்போது வேண்டுமானாலும் என்னோடு தொடர்பு கொள்ளலாம். பையனை நன்னா படிக்கச்சொல்லுங்கோ” என்று தன் அறை வாசல் வரை வந்து கதவை திறந்து எங்களை வழி அனுப்பினார் டாக்டர் பத்ரிநாத் அவர்கள்.

“சென்று வா மகனே சென்று வா...உலகை வென்றுவா மகனே வென்று வா” எனறு அவர் சொல்வது போல் இருந்தது எனக்கு ...மீண்டும் இருகரம் கூப்பி இருவரும் வணக்கம் தெரிவிக்க, அவரது அறைக்கதவு மெல்ல தானாக முடுகிறது. அப்போது சரியாக மணி 3.30.....

மறவாமல் திரு. செந்தில் அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு, எனது வி கார்டு ஒன்றை அவரிடம் கொடுத்து கிளம்பினேன்.

மனித நேயம் மிக்க, இமாலய சாதனை புரிந்து, பல்லாயிரம் கோடி மக்களுக்கு கண் ஒளி வழங்கிவரும் டாக்டர் பத்ரிநாத் அவர்கள். என்னைப்போன்ற எளியோருக்கு ஒரு தெய்வமாகவும், மாமனிதராகவும் திகழ்கிறார் என்றால் மிகையாகாது.

என்னே அவரது அன்பு...என்னே அவரது பணிவு....என்னே அவரது கனிவு,,,என்னே அவரது உபசரிப்பு, என்னே அவரது சேவை.... தொடரட்டும் அவரது சமூகப்பணி...

அந்த 3ம் தேதி, 3 ம்ணி, மற்றும் எங்களுடன் 30 நிமிடங்கள், வாழ்வில் ஒரு மறக்கமுடியாத திருநாள் என்று சொல்லவும் வேண்டுமோ?

Wednesday, February 10, 2010

உலகிலேயே உயரமான சனீஸ்வரன் சிலை



பாண்டிசேரி/திண்டிவனம் நெடுஞ்சாலையில் உள்ள சனீஸ்வர பகவானின் சிலை உலகிலேயே மிகப்பெரியது. 27 அடி உயர்த்தில் நின்று நம்க்கு அருள்கிறார். பஞ்சலோக பக்த அனுக்கிரக சனீஸ்வரன் என்று அழைக்கப்படுகிறார். இவரது பின்புற்ம் உள்ள நவக்கிரகங்களும் மிகப்பெரிய அளவில் உள்ளது. எந்த கோவிலுக்கு சென்றாலும் சிறியதாக இருக்கும் நவகிரகங்களைத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த கோவிலுக்கு நாம் நுழைந்ததும் நம்மை நவக்கிரகங்கள் பிரமிக்க வைக்கிறது. இங்கு தட்சனை போடும் போது, காசு அல்லது பணத்தை நம் தலையைச்சுற்றித்தான் போடவேண்டும், ஒரு முறை சென்று தரிசித்து வாருங்களேன். (படங்கள் போரூர் ராம்கி)

ஐம்பத்தி நாலு அடி பிள்ளையார்

ஐம்பத்தி நாலு அடி பிள்ளையார்
at Pondicherry-Dhindivanam High Road

பாண்டிசேரி/திண்டிவனம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நவக்கிரக ஆலயத்தில் பிள்ளையார் 54 அடி உயரத்திற்கு அமர்ந்து நம்மை ஆசிர்வதிக்கிறார். தங்க கலரில் ஜொலிக்கிறார்.




பிள்ளையாரின் முதுகுபுறத்தில் இன்றுபோய் நாளை வா என்று எழுதியுள்ளது,


Photo: RAMKI