Tuesday, March 16, 2010

SRIRAM's BIRTHDAY GET-TOGETHER 14TH MARCH 2010



Family get-together on the occasion of Sriram's birthday on 14th March 2010 at
Hotel Saravana Bhavan, Mount Road.
Sister Smt. Kamala, Manikandan, Bhuvana, Bhagavathi, Uma, Prem, Sanjana attended. Seetha came but not joined Lunch because of Nombu on that day!! Kamala & Bhuvana came to that hotel for the first time and enjoyed the Buffet lunch and told "Excellent". All enjoyed the occasion even though it was very short!! Thank god.
Missed Bros KRS & KRV and their Family members very much ....






Friday, March 12, 2010

சிரிப்பு வருது சிரிப்பு வருது,


சிரிப்பு வருது சிரிப்பு வருது, சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது

ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் போல் இந்த சிரிப்பும் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு தொற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது. நீங்க சிரிச்சா. பக்கத்திலே உள்ள அனைவரும் சிரிப்பாங்க. சிரிப்பதால் மனதில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. மற்றவர்களோடு நெருக்கமாக உதவுகிறது, கவலையிலிருந்து நம்மை மெய்மறக்கச்செய்கிறது.. சிரிக்க பணச்செலவு இல்லை. எளிதும் கூட.


சிரிப்பதால் பலன்கள்
முதலில் மனதிற்கு மகிழ்ச்சி கிட்டுகிறது. நமக்கு தெம்பூட்டுகிறது; ஹார்மோன்களுக்கு ஊக்கம் அளிக்கிறது; உடல்வலியை மறக்கவைக்கிறது. சதைபகுதிகள் லேகுவாகிறது, இருதயம் சம்பந்தமான நோயிலிருந்து பாதுகாப்பு; இரத்த அழுத்தம் குறைதல். வாழ்வில் பற்று மற்றும் சந்தோஷம்; பயமின்மை; மனகவலை குறைவது; நல்ல மூடு வரும்; மனம் இறுக்க நிலையிலிருந்து சகஜநிலைக்கு மாற்றும்; நம் நட்பும் உறவும் பலப்படும்; மற்றவர்களை நம்பக்கம் திசைதிருப்பும்; கூட்டாக (டீம் ஒர்க்) வேலை செய்ய உதவும்

சிரிக்க வாய்ப்பு இல்லையா?
நிறைய இருக்கே,
காமெடி படங்கள் பாருங்க
கார்ட்டூன் டிவி பாருங்க
காமெடி நாடகத்துக்கு போங்க
ஜோக்ஸ்களை ரசித்து படியுங்க
ஜாலி பேர்வபழிகளுடன் நட்புகொள்ளுங்க
ஜோக்ஸ் அடிச்சுகிட்டு இருங்க
ஜோக் புத்தகங்களை வாங்கிகுங்க
நண்பர்களோட விளையாடுங்க
செல்லபிராணிகளோடு விளாயாடுங்க
லாப்டர் யோகா கிளாசுக்கு போங்க (இது என்னதாயி புதுசா இருக்கு)
குட்டீஸ்களோடு விளையாடுங்க, கொஞ்சுங்க
காமெடி கீமெடி, ரவுஸ்னு பண்ணுங்க. பண்ணுங்க பண்ணிகிட்டேயிருங்க

முதலில் தினமும் புன்முறுவலுடன் உங்கள் தினத்தை துவங்குங்கள்..எதிலும் வெற்றி காண்பீர்கள். நல்ல நட்பும், உறவும் மலரும். வாழ்வில் மனிதநேயம் வீசும். எல்லாவற்றிற்கும் மேலாக வாய்விட்டு சிரிச்சா, நோய் விட்டு போகும்னு பெரியவா சொல்லியிருக்கா ஓய்....”LAUGHTER IS A BIG GIFT THAT KEEPS ON GOING…….” என்னே உங்க ஆனந்த சிரிப்பு.....................

RAMKI

Monday, March 8, 2010

TEAM WORK -Article by RAMKI

TEAM WORK



MR. NAGARAJ, RAMKI & SANJAY at AIOC2010 KOLKATA

டீம் ஒர்க்

ஒரு குறிக்கோளையோ அல்லது இலக்கையோ அடைய கூட்டு முயற்சி (டீம் ஒர்க்) மிக அவசியம். டீம் ஒர்க் என்பது தற்போது பெரிய நிறுவனங்களில் மட்டும் கடைபிடிப்பதில்லை,
சுதநதிரம் கூட ஒரு கூட்டுமுயற்சியால் கிடைத்த்துதான். வேட்டுயாடப்போகும் போது, ஒரு கூட்டமாகவே செல்வார்கள். பல காய்கறிகளைப்போட்டு, கூட்டு செய்தால்கூட எவ்வளவு சுவையாக உள்ளது. ஆக டீம் ஒர்க் என்பது, இன்று நாம் வேலைசெய்யும் இடங்களில் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது.

டீம் அல்லது குழு வேலைத்திறனை இவ்வாறு எடுத்துக்கெர்ள்வோம்.

T – Together
E – Everyone
A - Achieves
M – More

ஒரு அலுவலகத்தில் கூட்டாக வேலைசெய்வதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பறவைநோக்கில் பார்ப்போமா? வாருங்கள் என்னுடன்......

கற்க

ஆண் பெண் பாகுபாடு இன்றி, கூட்டாக வேலைசெய்யும் போது, நம்மால் எதையும் வேகமாக செய்யமுடியும். பலருடைய அனுபவமும், அறிவாற்றலும் கூட்டுசேரும் போது மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்வது மிக எளிதாகிறது, அதுமட்டுமின்றி செய்யும் வேலையில் தவறுகள் நடக்காமல் இருக்க உதவுகிறது.


என் பங்கு
டீம் ஒர்க்கில் பல வேலைகளை பங்கிட்டுக்கொண்டு அதில் திறம்பட கவனம் செலுத்தமுடிகிறது, அப்படி இல்லாவிட்டால் பலவேலைகளை ஒருவரே தலையில் போட்டுக்கொண்டு திண்டாடுவதை பார்க்கிறோம், அந்த நிலை டீம் ஒர்க்கில் இருக்காது. அவர்அவர்களுக்கு ஒதுக்கப்பட்டவேலையை கவனமாக, சிறப்பாக செய்தாலே போதுமானது,.


நட்புப் பாலம்
ஒரு குழுவாக சேர்ந்து மாதக்கணக்கில் வேலைசெய்வது, ஒன்றாக உண்பது, வெளியே ஒன்றாக செல்வது, சுக துக்கங்களை பகிர்ந்து கொள்வது போன்றவற்றால் நட்புறவு பலப்படும். பலர் வாழ்நாள் முழுவதும் நல்ல நண்பர்களாக இருப்பதை நாம் காண்கிறோம். தற்போது ஜாதி, மத பாகுபாடின்றி பல காதல்திருமணங்கள் இந்த டீம் ஓர்க் வேலைசெய்யும் இடங்களில் சர்வசாதரணமாக நடக்கிறத என்பதை நம்மால் மறுக்க முடியுமோ?


சபாஷ்......சரியான போட்டி
ஒருவருக்கொருவர் போடிபோட்டுக்கொண்டு வேலைசெய்யும் வாய்ப்பு ஒரு குழுவாக வேலைசெய்யும்போது கிடைக்கும். அதனால் நம் தனித்திறனை வெளிகாட்டி, விரைவில் உயர்நிலை/உயர்பதவிக்கு செல்லமுடியும். மேலும் நம் கீழ்உள்ளவர்களுக்கு கற்றுத்தரவும், கைகொடுத்து ஊக்கமும் அளிக்கமுடியும். சம்பளமும் விரைவில் உயரும். வாழ்வில் வளம் பெருகும.


புதிய பாதை
தனிமையாக இருக்கிறோம் என்ற உணர்வும், சோர்வும் டீம் ஒர்க்கில் இருக்காது, ஒருவர் விட்டால், மற்றவர் நமக்கு நல்ல யோசனைகளை சொல்வார்கள். மற்றவர்களின் நல்ல அறிவுரைகளும், ஆலோசனைகளும் நாம் புதிய வழிமுறைகளை கடைபிடிக்கவும், புதிய முயற்சிகளில் ஈடுபடவும் வழிவகுக்கும்.


மனநிறைவு

ஒரு குழுவாக வேலைசெய்வதால், நம் வேலையில் மனநிறைவு கிடைக்கிறது. நம் குழுவின் ஒட்டுமொத்த கூட்டுத்திறமையை காட்டமுடியும். நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எளிதாக அடையமுடியம், மேலும் வேலையில் சந்தோஷமாக ஈடுபடமுடியும். நமக்கு ஓதுக்கப்பட்ட வேலையில், சுறுசுறுப்பாக ஈடுபட ஒரு ஊக்கமாக அமையும்


ஜெட் வேகம்
நிர்ணயிக்கப்பட்ட வேலையை, சரியாக அனைவரும் புரிந்து, பகிர்ந்து கொள்வதால் வேலையை ஜெட்வேகத்தில் செய்யமுடியும். நமக்கு ஒதுக்கப்பட்ட காலகெடுவுக்கு முன்பே எந்த வேலையையும் முடிக்கமுடியும்.


பல செயல்கள் (குறிப்பாக புராஜேக்ட்ஸ்) அல்லது பல சேவைகள் (சர்வீஸ்) வேகமாகவும் தவறு அல்லது காலதாமதம் ஏற்படாமல் முடிப்பதற்கு டீம் ஒர்க் மிக அவசியம் என தெரிந்துகொண்டோம் அல்லவா? ஒருசிலருக்கு இப்படி கூட்டாக வேலைசெய்வதில் முதலில் அச்சமும், சில சிரமங்களும் இருக்கும். ஆனால், மற்றவர்களோடு பழகப்பழக சகஜநிலைக்கு வந்து, டீம் ஒர்க்கை என்ஜாய் பண்ணுவார்கள்.TEAM WORK & SUCCESS GO HAND IN HAND! என்று நான் சொல்லவும் வேண்டுமோ?

- ரா ம் கி

Saturday, March 6, 2010

கார்ட்டூன்கள் பற்றி திரு. அப்துல் கலாம் அவர்கள்

கார்ட்டூன்கள் பற்றி திரு. அப்துல் கலாம் அவர்கள்


APPEARED IN AIOC2010 ABSTRACT BOOK


கார்ட்டூன்கள் பற்றி திரு. அப்துல் கலாம் அவர்கள்


தமிழாக்கம் ராம்கி

“மிக கடின முயற்சிக்குப்பின் 1979ல் எஸ்எல்வி3 ஏவுகணை தோல்விகண்ட சமயத்தில், நானும் எனது மற்ற விஞ்ஞானிகளும் மிகவும் சோகமாக இருந்தோம். எங்களது இலட்சியத்தை எட்டமுடியவில்லையே எனற கவலையில் அனைவரும் மூழ்கியிருந்தோம்.

அச்சமயம், ஒரு நாள் எனது நண்பர் ஒருவர் பல பத்திரிகைகளில் எஸ்எல்வி3 ஏவுகணை தோல்வி கண்டது சம்பந்தமாக வெளியான கார்ட்டூன் (ஜோக்)களை தொகுப்பாக்கி என்னிடம் கொடுத்தார். நான் என் சகவிஞ்ஞானிகளுடன் ஒவ்வொன்றாக பார்த்து, படித்து மிகவும் ரசித்தேன். எங்களின் சோகத்துக்கான காரணம் கிடைத்தது. கார்ட்டூன்களையும், ஜோக்குகளையும் படித்து படித்து ஒரு மாதத்திற்கு பிறகு, எங்களையும் மறந்து அனைவரும் விழுந்துவிழுந்து சிரித்தோம். கார்ட்டூன்கள் கவலையைத்தீர்க்கும் ஒரு வலிநிவாராணி போன்றது என அப்போது என் மனதில் பட்டது. எங்கள் மனசு லேசானது. எங்கள் எல்லோருக்கும் ஒரு உற்சாகமும், புதிய தெம்பும், மனதைரியமும் உண்டானது. வெற்றியும் தோல்வியும் நம் வாழ்வின் ஒரு அங்கம் என உணர்ந்தோம். தோல்விகளை வெற்றிக்கு படிக்கற்கள் என மீண்டும் கடுமையாக அனைவரும் உழைத்தோம். எங்களுக்கு மீண்டும் நல்ல மனதைரியம் கிடைத்தற்கு கார்ட்டூன்களும் ஒரு முக்கிய காரணமாக இருந்ததை கண்டுகொண்டு, நாங்கள் இரவுபகலாக உழைக்க, எங்களது லட்சியம் 1980ம் ஆண்டு வெற்றிகரமாக நிறைவேறியது. அன்றிலிருந்து, எப்போதும் செய்தித்தாள்களை நான் கையில் எடுத்தால், முதலில் பார்ப்பது கார்ட்டூன்களைத்தான். கார்ட்டூனை பார்த்து, படித்து முழுவதும் ரசித்த பின்பே, நான் மற்ற முக்கிய செய்திகளைப்படிப்பேன். அதனால், எனது பத்திரிகை நண்பர்களை சந்திக்கும்போது, எப்போதும் கார்ட்டூன்களை முதல் பக்கத்திலேயே பிரசுரிக்க சொல்லிவருகிறேன்.

அடடே, என்னே கார்ட்டூன்களின் மகிழ்மை?? இனிமேல் நீங்கள் மறக்காம பாருங்க, ரசியுங்க....

தமிழாக்கம் / ராம்கி

RAMKI

Thursday, March 4, 2010

2 CARTOONS BY RAMKI

RAMKI'S CARTOON MADE FOR DENA BANK, COVAI BR.


CARTOON BY RAMKI


CARTOON BY RAMKI

Ramki ji..
You r really a good cartoonist..i saw your book..its very nice line work..
you are already doing good job..
my best wishes to you..
I hope we will meet in Chennai..please do come..
regards
TRIAMBAK SHARMA
Editor - Cartoon Watch
(The only Monthly cartoon Magazine of India)

Monday, March 1, 2010

PERINKULAM KRISHNAN KOIL CAR FESTIVAL

PERINKULAM KRISHNAN KOIL CAR FESTIVAL 27.28 Feb. 2010


























photo: RAMKI