Thursday, June 23, 2011

ஊட்டி வரை உறவு . 20.6.2011=22.6.2011



கோவையிலிருந்து 20ம் தேதி காலை இன்னோவா காரில் ஊட்டிக்கு பயணம்....மூன்று நாட்கள் உதகையில் உல்லாசம்.. ஊட்டியில் இருந்த நாட்கள் மறக்க முடியாதது. மிகவும் குளிராக இருந்தது. நாங்கள் தங்கிய நாகர் ஓட்டல் அருமை. குட் ஷெப்பர்ட் இன்டர்னேஷனல் பள்ளிக்குச்சென்று பார்த்தோம், அசந்துவிட்டோம் அசந்து...
இதோ மறக்க முடியாத சில வண்ணக் காட்சிகள சில... பாருங்க..பாருங்க..பார்த்துகிட்டேயிருங்க....


குட் ஷெப்பர்ட்டு இன்டர்நேஷன்ல் பள்ளிக்கு சென்றோம். வருடத்திற்கு 800 மாணவ மாணவிகள் தங்கி படிக்கிறார்கள். ஆண்டுக்கு லட்சக்கணக்கில் பணம் கட்டவேண்டுமாம்.
20 குதிரைகள், 1200 பேர் அமரக்கூடிய ஸ்டேடியம், சுடுதண்ணீர் நீச்சல் குளம் போன்றவை ஸ்பெஷல். ஒரு வகுப்பில் 20 பேர் தானாம். 100 பசுமாடுகள், காய்கறி தோட்டம் என 150 ஏக்கர் பரப்பளவில் இந்த பள்ளி உள்ளது எங்களை பிரமிக்க வைத்தது.


வெற்றிப்படிகட்டு.. முன்னேறு மேலே மேலே


இவ்வளவு பெரிய பூந்தோட்டமா? எவ்வளவு திரைப்படத்தில் பார்த்த இடம் இது.


நாம போவோம் ஜாலியாக அம்மா


நான் இன்னும் சின்ன குழந்தையா என்ன?


எவ்வளவு அழகா இருக்கு இந்த காட்சி?


முதுமலைக்கு ஆசையா போனப்போ சிக்கியது புள்ளிமானும், மயிலும், யாணையும் தான் (ஸ்ரீராமுக்கு பெரிய ஏமாற்றம்) புலி போச்சே.....



கண்களுக்கும் மனதுக்கும் எவ்வளவு சந்தோஷம்


நானே ராஜா...


எம்மாம்பெரிய பந்துப்பூ அடேங்கப்பா.....அசத்திடுச்சுயில்லே



நெஞ்சத்தை அள்ளிக்கொஞ்சம் தா தா தா.....காதலிக்க நேரமில்லை படப்பாடல் இடம் பெற்ற இடம்தான்டா இது. போய் அப்பாவை அனுப்பு....


சீதா எடுத்த அழகான போட்டோ. அம்மாவுக்கு photo எடுக்கத்தெரியதுன்னு ஸ்ரீராம் சொன்னது தப்பா போச்சே....அவ்வ்வ்


வெய்யில்லே இப்படியே உட்கார்ந்துகிட்டுயிருந்தா, குளிருக்கு எவ்வளவு இதமா இருக்கு


திருமண நாள் (22.6.2011) கொண்டாடிய தம்பதிகள்


இந்த மலர்களுக்குப் போட்டியா என் அன்னையுடன் நான்


மெழுகு உலகம் இல்லத்தின் வாசலில் நானும் என் மாதாவும்


மெழுகில் செய்த நேரு மாமா...அப்படியே இருக்கு இல்லே....


காந்தித் தாத்தா நம் தாத்தா, அழகான மெழகுத் தாத்தா....


என்னப்பா தண்ணி ரொம்ப கம்மியாயிருக்கு...பைகாரா நீர்வீழ்ச்சி வீழ்ந்திடுச்சே...


மாதா, பிதாவுடன் நானும் ஓடத்தின் மேலே


நல்லயிருக்கா படகு சவாரி..என்னங்க ரொம்ப குளிருது



அப்பா எடுத்தா வித்யாசமா இருக்கும். எனக்கு இந்த மிருகங்களுக்கு பக்கத்திலே நிற்க பயமேயில்லே. சிங்கம் தனியாத தான் நிக்கும்..


ஏன் அம்மா இப்படிமாறிட்டாங்க...



நான் என்னைக்கும் அம்மாபுள்ளே தான்....



திருமண நாள் அன்னைக்கு சந்தோஷமா இருக்காங்க இவுங்க...

Wednesday, June 15, 2011

ஏற்காட்டில் குமார், சீதா. ஸ்ரீராம் 5.6.2011



ஏற்காடு. சேலத்திற்கு மிக அருகில் சுமார் 20 அல்லது 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. காரில் செல்ல ரூ 1300 ஆனது (ஒட்டுனரின் பேட்டா உட்பட). சுமார் 20 வருடங்களக்கு முன்பு (வெங்கடேஷின் திருமணத்தின் போத)ு சென்றது.


*
சுமார் 20க்கும் மேற்பட்ட கொண்டைஊசி வளைவுகள் நம் தலையை சுற்றவைக்கிறது

*
மலை உச்சியிலிருந்து பார்க்க மிகவும் அருமையாக இருந்தது. பேரிக்காயின் சுவை நன்றாக இருந்தது. தொட்டுக்கொள்ள மிளகாய்பொடி.

*
படகு சவாரி பார்க்க அழகாக இருந்தது. நீண்ட வரிசை வேறு. ரோஜா தோட்டத்திற்கும் சென்றோம். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் இவை.

*
குளிரும், வெய்யிலும் மாறிமாறி வந்தது. அவ்வேலையில் ஐஸ்கிரீம் சாப்பிட்டு மகிழ்ந்தோம்.

*
குடும்பத்தோடு அரை நாள் குதுகலமாக இருக்கு ஏற்ற இடம் ஏற்காடு.


ஸ்ரீராமுக்கு வித்யாசமான அனுபவமாக ஜாலியாக இருந்தது. சீதாவுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. அடுத்து எப்போது ஊட்டிக்க செல்லப்போகிறோம் என்ற எண்ணம் ஏற்பட்டது.
இயற்கை அழகை ரசிப்பது மனதிற்கு ஒரு இனிய தாலாட்டுதான் என்பதை யவரேனும் மறுப்பறோ?