Wednesday, July 18, 2012

தி தி தி
BY RAMKI


காலை எழுந்ததுமே துதி
நாம் வணங்கவேண்டுமே ஆதி
கடவுளை தொழவேண்டுமே ஓதி
படிக்கவேண்டுமே இதி
அடையவேண்டுமே கதி

எப்போதும் சேர்க்கவேண்டுமே நிதி
செய்யவேண்டுமே திதி
எதற்கும் வேண்டாமே பீதி
வைக்க வேண்டாமே மீதி
கிடைக்க வேண்டுமே நீதி
நீண்டு போகவேண்டுமே வீதி

அழகுக்கு அழகாமே ரதி
தீட்டவேண்டமாமே சதி
கூட்டவேண்டுமே சுதி
மதிக்க வேண்டுமே பதி
பாவம் நீக்குமே நதி

மயங்கவைக்குமே மதி
குளத்தைபார்த்ததுமே குதி
யாரையும் விடாதாமே விதி
ஆடவேண்டாமே சூதி
போடவேண்டுமே ஜதி

திருந்தவேண்டுமே கைதி
ஆணும்பெண்ணுமேசரி பாதி
கெடுக்கக்கூடாது மனமே ஊதி
பார்க்கவேண்டாமே ஜாதி

நீதிக்கு வேண்டுமே வாதி
படிக்கவேண்டுமே வேதி
பிடிக்குமே ஒண்ணாம் தேதி
வரவேண்டாமே பேதி
கிடைக்கவேண்டுமே சேதி

தலை வாரிவிடுவோமே கோதி
பார்க்கவேண்டாமே மோதி
நமக்கு கிடைக்குமே போதி
ஏற்ற வேண்டுமே ஜோதி!!!

-RAMKI

Saturday, July 14, 2012

என்னவள் ஒரு மழை

என்னவள் ஒரு மழை!! RAMKI அவள் தலைதுவட்ட கருமேகம் முட்டிக்கொள்கிறது
அவள் விழிதிறக்க மின்னல்மின்னுகிறது
அவள் இடைகுலுங்க இடிஇடிக்கிறது
இதோ மழையென பொழிகிறாள் என்னவள்……..!!

அவள் கண்திறந்தால் பாசமழை
அவள் குளித்தால் தீர்த்தமழை!!
அவள் குலுங்கினால் ஆலங்கட்டிமழை
அவள் குழைந்தால் சாரல்மழை!!

அவள் மேலாடைசரிந்தால் கிளாமர்மழை
அவள் கோபித்தால் பேய்மழை!!
அவள் நடந்தால் அடைமழை
அவள் நிமிர்ந்தால் வான்மழை!!

அவள் இடைதெரிந்தால் சோமழை
அவள் இதழ்குவித்தால் முத்தமழை!!
அவள் சிரித்தால் தூறல்மழை
அவள் மனம்திறந்தால் கனமழை!!

அவள் தொழுதால் பக்திமழை
அவள் கொடுத்தால் பணமழை!!
அவள் தொடுத்தால் பூமழை
அவள் தொட்டால் அன்புமழை!!

அவள் படுத்தால் பருவமழை
அவள் பாடினால் இன்னிசைமழை!!
அவள் கண்சிமிட்டினால் பரிசுமழை
அவள் கிடைத்தால் அதிர்ஷ்டமழை!!

அவள் அழுதால் ஆழிமழை
அவள் ஆடினால் ஆலிமழை!!
அவள் நடுங்கினால் பனிமழை
அவள் முயன்றால் மும்மாரிமழை!!

அவள் சொக்கினால் சோனைமழை
அவள் சோதித்தால் மாமழை!!
அவள் இதழ்விரித்தால் சிரிப்புமழை
அவள் சுட்டால் கோடைமழை!!

அவள் பணிந்தால் பதமழை
அவள் பாய்ந்தால் புயல்மழை!!
அவள் மயங்கினால் தொடர்மழை
அவள் வாங்கினால் வசுல்மழை!!

அவள் அடித்தால் பயங்கரமழை
அவள் அணைத்தால் இன்பமழை!!
அவள் அழைத்தால் அந்திமழை
அவள் அழகுஇதுவரை பெய்திராத மழை!!

அவள் வருடினால் வருணமழை
அவள் சினுங்கினால் செயற்கைமழை!!
அவள் தட்டினால் பலத்தமழை
அவள் நீர்துளியோ நிறமற்றமழை!!

அவள் சொன்னால் பெய்மழை
அவர் பார்த்தால் காந்தமழை!!
அவள் ஓய்ந்தால் பெய்ந்தோந்த மழை
அவள் இந்தாண்டின் நந்தனமழை!!

நினைந்தது போதுமோ மனமே
கிடைத்தது போதுமே மனமே!!
ரசித்தது போதுமே மனமே
மழையால் மயங்குதோ மனமே!!!

-RAMKI