Sunday, June 6, 2010

ஸ்ரீராமுக்கு பாராட்டு இந்திய பேனா நண்பர் பேரவை



ஸ்ரீராமுக்கு பாராட்டு

இந்திய பேனா நண்பர் பேரவையின் 15வது நட்புச் சங்கமம் சென்னையில் 15ம் தேதி மே மாதம் மிகச்சிறப்பாக நடந்தது.
பேரவையின் தலைவர் திரு கருண் தலைமை ஏற்று உறுப்பினர்கள் அறிமுக விழாவில் ராம்கியினை மேடை ஏற்றி, அவரே அறிமுகப்படுத்தினார். அப்போது அவரும் ராம்கியும் மும்பையில் இணைந்து நடத்திய பல்வேறு நிகழ்ச்சிகளை நினைவுகூர்ந்தார். ராம்கியின் நிர்வாகத்திறமை, பொது ஜன தொடர்பு, மற்றும் கார்ட்டூன் வரைவதில் வல்லவர் என்று புகழாரம் சுட்டினார்,

அன்று மாலை நடந்த சிறப்பு மலர் வெளியீட்டுவிழாவில் உறுப்பினர் குடும்பங்களில் +2 தேர்வில் அதிக மார்க் வாங்கிய போரூரை சேர்ந்த ஆர். ஸ்ரீராமுக்கு பாராட்டு பத்திரமும், பரிசும், மும்பை கண் மருத்துவர் டாக்டர் நடராஜன் அவாகள் கைகளால் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அப்போது ஸ்ரீராமின் பெற்றோர்களையும் மேடைக்கு அழைத்து பாராட்டினார்கள்.




எதிர்பாராமல் விழாவிற்கு வந்த டாக்டர் நடராஜன் அவர்களுக்கு சால்வையும் மாலையும் அணிவித்து திரு கருண் கௌரவித்தார். டாக்டர் நடராஜன் அவர்கள் முன்கூட்டி வருவது
யாருக்கும் தெரிவிக்காமல் ஒரு சர்பிரைஸ் கொடுத்தார். இதனால் மும்பை உறுப்பினர்களும் மற்ற நிர்வாகிகளும் மிக மகிழ்ந்தனர். திரு கருண் அவர்கள் டாக்டர் விடைபெறும் பொது அவரை கட்டித்தழுவி நன்றி தெரிவித்தார்.

டாக்டர் அவர்கள் மேடையில் பேசும்போது, நானும் கருப்பு, என் நண்பர் கருணும் கருப்பு என்று பேச ஆரம்பித்ததும் பெரிய சிரிப்பொலி. நடராஜன் அவர்களுடன் அவரது சகோதரர் திரு ஷெண்பகராம்ன் அவர்களும் வந்திருந்து விழாவை சிறப்பித்தார்கள்

No comments:

Post a Comment