Thursday, January 24, 2013

Wednesday, December 12, 2012

பெங்களூரில் குமாரும் சீதாவும்

நாங்கள் தங்கிய லெமன் ட்ரீ ஓட்டல் வாயிலில் சீதா

நானும் சீதாவும் 8ம் தேதி இரவு கோவையிலிருந்து பெங்களூருக்கு சென்றோம். நல்ல குளிர். காலை 7 மணிக்கு அல்சுர் ஏரி அருகே உள்ள லெமன் ட்ரீ என்ற ஓட்டலை அடைந்தோம். அருமையான ஓட்டல்.அறை எண் 906, ஒன்பதாவது மாடி. அங்கிருந்த பார்த்தபொழுது எதிரில் ஏரி அழகாக இருந்தது. காலை சிற்றுண்டி ஓட்டலில் தரப்பட்டது.

அன்று மாலை 4 மணிக்கு விச்சுவும், மீராவும் ஒட்டலுக்கு வந்து எங்களை சந்தித்தனர். நீண்ட வருடங்களுக்கு பிறகு நடந்த இந்த சந்திப்பு எங்கள் நால்வருக்கும் பெருமகிழ்ச்சியை தந்தது. பிறகு ஆறுமணிக்கு வேலூர் சாரதம்மாமியின் பேரனும், ஜெயந்தியின் மகனுமான கண்ணன் ராதா திருமண வரவேற்புக்கு ராஜாஜிநகர் சென்றோம். சாரதம் மாமி, ஜெயந்தி, சாந்தி, பேபி குடும்பத்தினர் எங்கள் வரவேற்றனர். புரசை ராதை மன்னியின்தங்கையும் அவரது கணவரையும் பார்த்து பேசினேன், அன்னத்தின் உறவினரையும் எதிர்பாராமல் சந்தித்தோம் அகமதாபாத் வேணு, மங்களம், பிலாய் அக்கா மற்றும் அவர்களதுகுடும்பத்தினவரும் (ராமன் மகள் மற்றும் அவளது குழந்தை உட்பட) வந்திருந்தனர்.

அடுத்த நாள் (10.12.2012) முகூர்த்தத்திற்கும் சென்று வந்தோம். மதிய உணவு சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம். எங்களுக்கு வேட்டி புடவை கொடுத்து கௌரவித்தனர். கண்ணணை அனைவரும் எதிர்பார்த்தனர் போலும்.

மதியம் எம்ஜி சாலையில் சுற்றிவிட்டு வந்தோம். இரவு 9 மணிக்கு ஓட்டலில் இருந்து கிளம்பி சிட்டி ஸ்டேஷக்கு வந்தோம். இருவரும் மீண்டும் வெவ்வேறு பாதைக்கு பயணம் செய்ய நேரம் குறிக்கப்பட்டது. எனக்கு 10.15க்கு கோவைக்கு ரயில். சீதாவுக்கு 10.40 சென்னைக்கு பிரயாணம் செய்தோம். இரண்டு நாள் பெங்களூர் விஜயம் ஜாலியாக இருந்தது என்றே சொல்லவேண்டும்.


லெமன் ட்ரீ ஓட்டலின் உள்ளே சீதா


ஓட்டலின் உளே எங்களை கவர்ந்த கார்ட்டூன் முகங்கள்


ரூம் எண் 906ல் சீதா



ஓட்டலின் அலங்காரம் அழகாக இருந்தது. விச்சுவும், மீராவும் ஓட்டலுக்கு வந்து எங்களை பார்த்து ஒரு மணி நேரம் எங்களுடன் ஜாலியாக பேசினர், மிகவும் சந்தோஷமாக இருந்தது.



வேலூர் ஜெயந்தியின் மகன் கண்ணன் ரமா புதுமண தம்பதிகள் / 10.12,2012



வேலூர் சாரதம்மாமி, ஜெயந்தி, சாந்தி, பேபி எங்களை வரவேற்றனர்

சாந்தியின் இரு மகள்களும், பேபியின் ஒரு மகளும் அவ்வப்போது எங்களுடன் பேசினர்



ராதைமன்னியின் தங்கையையும் அவரது ஆத்துக்காரரையும் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு இத்திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது கிடைத்து.
பெங்களூரூ காவேரி கைவினைபொருட்கள் கடையில் எங்களை கவர்ந்த கிருஷ்ணன் •

Monday, December 3, 2012

RAMKI HONOURED

Ramki was incharge of organizing a 2-day Conference on "Phaco Refractive Cutting Edge" by The Eye Foundation held on 1st & 2nd Dec. 2012.


RAMA, RAMA : Chairman Dr.D.RAMAMURTHY & RAMKI

Ramki was honoured at the Banquet Dinner by Dr.D.Ramamurthy, Chairman of The Eye Foundation at Hotel Taj Vivanta, Coimbatore on 1st Dec 2012 for his support & efficiently handling the Conference.


WELCOMING TEAM : RAMKI WITH AZHAGI SATHYAPRIYA, SOMESWARAN



DINNER & FELLOWSHIP TIME : RAMKI AND HIS TEAM



RELAX: KUMARASAMY & RAMKI &

Tuesday, November 27, 2012

PADMAJA WEDS BALAJI ON 30 11 2012 -CHENNAI

மணமகள் :சௌ. பத்மஜா
மணமகன் :பாலாஜி
கார்ட்டூன் ஏற்பாடு :பாலாஜி R. (பத்மஜாவின் சகோதரர்)
கார்ட்டூன் சித்திரங்கள், ஆக்கம், எழுத்து: ராம்கி, கோவை


கார்ட்டூன்களை பார்த்து, ரசித்து, நிறை குறைகளை எடுத்துச்சொல்லி, பாராட்டி 100க்கு 100 மார்க்கு அள்ளிக்கொடுத்த அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றி, ராம்கி,


நமஸ்காரம்....வாங்கோ மாப்ளே...வாங்கே...எல்லோரும் வாங்கோ....


பத்மஜாவுக்கும், பாலாஜிக்கும் டும் டும் நிச்சயம் செய்யப்படுகிறது


மாப்பிள்ளை ஊர்வலம்


வரவேற்பு


ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்....வரவேற்பு பார்ட்டினா இப்படித்தான்

காலையில் விரதம்


காசியாத்திரை போகவேண்டாம்...பத்மஜா உங்களே உங்களுக்குத்தான் மாப்ளே


மாலை மாற்றினாள் பத்மஜா...மாலைமாற்றினாள் பத்மஜா மாலை மாற்றினாள்.....



லாலி....ஊஞ்சல்


கெட்டி மேளம் கெட்டி மேளம்.. மாங்கள்யம் தந்துனா...


ஆசிர்வாதம் பண்ணுங்கோ.....


எங்கள் கல்யாணம்,கலாட்டா கல்யாணம்.......



மாப்பிள்ளைக்கு மோதிரம்....


போஜனம் பண்ண வாருங்கோ...மகாராஜா போஜனம் பண்ணவாருங்கோ....


கடலை போட்டது போதும் மாப்ளே, இந்தாங்கோ பொரி பொரி....


பூ மாலையில் ஒரு நலுங்கு விளையாட்டு. உருட்டி விளையாட்டு பாப்பா.....


அடுத்தது எனக்குத்தானே......


நன்றி


திருமணத்தை நடத்திகொடுத்து தம்பதிகளை ஆசிர்வதித்ததற்கு எங்கள் நன்றி


அவனா நீயு
............ கார்ட்டூன் சித்திரங்களை வரைந்த அந்த அவன் இவன், ராம்கி, கோவை

Wednesday, November 21, 2012

INSTITUTE FRIENDS MEET 11 11 2012

INSTITUTE FRIENDS MEET 11 11 2012
'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே...நண்பனே.....'

கே.கே.நகர் பிருந்தாவன் தட்டச்சு கூடத்தில் சுமார் 30 வருடங்களுக்கு முன் ஒன்றாக தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து கத்துக்கொண்டவர்களின் சந்திப்பு இது. அப்போது பயிலரங்கத்தின் மேனேஜராக இருந்தவர் திரு சுப்பாராவ் அவர்கள். அனைவரையும் மிகவும் மரியாதையுடன் நடத்துவார் இவர். இன்றும் எங்களின் குடும்ப நண்பராகவும், நலம் விரும்பியாகவும் திகழ்கிறார். எங்களுடன் சுவாமி மற்றும் சைமன் அவர்களும் விருந்தினர்களாக கலந்து கொண்டு அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்தனர்.


சுவாமி அவர்கள் எனது இந்த சந்திப்பு ஐடியா சொன்னதும் 'ஓகே' சொன்னார். நல்ல ஆலோசனைகளை சுவாமியும்,விவேக்கும் அள்ளிவிட்டுக்கொண்டே இருந்தனர்..மேலும் இவர்கள் யார் யார், யார் காரில் வரவேண்டும் என்று திட்டம் போட்டுக்கொடுத்தார்கள்.

ராம்கியும் சேகரும், கிண்டியில் காத்திருந்த விவேக் காரில் பயணித்தனர். வடபழனியில் சைமன் அவர்கள் ரகு மற்றும் ரமேஷை ஏற்றிக்கொண்டார். சங்கர் தன் காரில் சுவாமி 'ஊர்வலமாக' அழைத்துவந்தார்.

செம்மொழி பூங்காவுக்கு செல்லலாம் என ஐடியா கொடுத்தவர் சைமன். ஓட்டலை முடிவு செய்ததும் இவர்தான்...பீச்சுக்கு போகலாமே என கடைசி நேரத்தில் ஐடியா கொடுத்து அனைவரையும் அசத்தினார். ஐடியாவா கொடுத்துகொண்டே இருந்தார்.

மேலும், தன் புதிய காரில் வந்து சைமன் அனைவருக்கும் ஒரு 'சர்பிரைஸ்' கொடுத்தார். சந்தித்த முதல் வேலையில் ரமேஷக்கும், ரகுவிற்கும் சிறந்த நண்பராகிவிட்டார் சைமன். 10.30க்கு அனைவரும் அந்தந்த சந்திப்பு முனைகளில் சந்திக்கவேண்டும், மேலும் 11 மணிக்கு செம்மொழி பூங்காவில் (முன்பு டிரைவின் ஓட்டல்) கூட முடிவுசெய்தது அப்படியே நடந்தது. முதலில் விவேக்கின் கார் வந்து சேர, பின் சைமன் கார் வர அடுத்து சங்கர் கார் செம்மொழி பூங்காவில் நுழைந்தது. 'ஹாய் ஹாய் ஹாய்' என்ற வரவேற்புடன் சந்திப்பு ஆரம்பமானது. அனைவரும் வரிசையாக நிற்க வேறுஒரு காரின் டிரைவரை கொண்டு ஒரு குரூப் போட்டு எடுக்கச் சொன்னோம்.

சுவாமி மறவாமல் இந்த மாத மங்கையர் மலர் புத்தகத்தை கொண்டுவந்து ராம்கி வரைந்த கார்ட்டூன்களையும், கட்டுரையையும் அனைவருக்கும் காட்டி மகிழ்ந்தார். இச்செயல் ராம்கியை நெகிழவைத்தது. *
11.11.2012 எங்கள் அனைவருக்கும் ஒரு மறக்க முடியாத நாளாக இருந்தது. செம்மொழி பூங்காவில் அனைவரும் நுழைந்தோம். ஆங்காங்கே ஜோடிகள், இருப்பினும் பசுமைக்கு அளவே இல்லை. கலாட்டா பேச்சுடன் காலார பூங்காவை ஒரு வலம் வந்தோம். பாலு அலுவலக வேலை காரணமாக எங்களுடன் கலந்துகொள்ள இயலவில்லை. இது அனைவருக்கும் ஏமாற்றமாக இருந்தது.
*
போதி மரத்த்தின் அடியே அமர்ந்து அரட்டை. அப்படி என்ன தான் பேசினாங்களோ?
* *
பார்க்கை விட்டு செல்லும் முன், பரிசுகளை ஒருவருக்கு ஒருவர் கொடுத்து மகிழ்ந்தோம்...விலையில்லா நட்பு திரும்ப கிடைத்ததே என அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் சிறிது நேரம் மிதந்தனர்.
பாலு தன் பங்கிற்கு பரிசு கொடுக்க தன் நண்பர் மூலம் பெரும் முயற்சி எடுத்திருந்தார். விவேக் தன் பங்கிற்கு அனைவரும் இருக்கும்போட்டோவை நான் லேமினேட் செய்து தருகிறேன் என்றார். 60ம் பிறந்தநாள் வாழ்த்தக்களை விவேக்கு நாங்கள் தெரிவித்தோம்... *
'ஒட்டு மொத்த பெருந்தலைகள் இவா தான்' - "KODAMBAKKAM" Simon,
; "PULI" Sekar; "RANBAXY" Ramesh; "BANK" Sankar; "PORUR" Ramki; "JINGJING" Swamy; "PERIYAPPA" Raghu & "AAVIN" Vivek!!!! *

கடலை போடும் நண்பர்கள். *

ரொம்ப ஜில்லுனு இருக்குல்லே..அருமையான பூங்காவில் ஜாலியான அரட்டை ஒரு பொடி நடையுடன். அனைவருக்கும் சற்று வயதாகிவிட்டதால், 'எக்கேயாவது உட்காரலாம்பா..'என குரல் கொடுத்தனர். வழக்கமாக அனைவரையும், 'நாயே, பேயே..' என தெனாவட்டாக ரமேஷ் கலாட்டா செய்தவண்ணம் இருந்தார்.
*

மனதிலோ மகிழ்ச்சியின் தாக்கம். போட்டோவுக்கு அனைவரும் மகிழ்ச்சியாக போஸ் கொடுத்தனர், ராம்கி அவ்வப்போது போட்டோ எடுத்தவண்ண இருக்க,'ஆரம்பிச்சுட்டாய்யா' என நல்ல போஸ் கொடுத்தபடியே மற்றவர்கள் கலாட்ட செய்தனர்.
கிளம்பும் முன் செம்மொழி பூங்காவின் கல்வெட்டின்கீழ் வரிசையாக அமர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டோம். மூன்று கார்களும் சர் சர் என ஓட்டல் மாரிஸ்க்குள் நுழைந்தது.
ரமேஷ் மாரிஸ் ஒட்டலில் 'வடை நல்லா இருக்கும் டா' என்று சொன்னதும், உடனே ஆர்டர் செய்து ருசிச்தோம். பழரசம் மற்றும் சுவையான வடை உபயம் ரகு. மதியம் ஓட்டல் மாரிஸில் மதிய உணவு உண்டோம். சாப்பாடு உபயம் சங்கர்.
ஓட்டலின் வரவேற்பு அறையில் உண்ட மயக்கம் தீர சிறிது நேரம் உட்கார்ந்து அரட்டை. பின் கார்கள் வரிசையாக பீச்சுக்கு கிளம்பின. சங்கர் மட்டும் வேறுவேலை இருப்பதால் விடைபெற்றார். ரகு ஐஸ்கிரீம் சாப்பிட பெரும்முயற்சி எடுத்தும், அது முடியாமல் போனது.
*
என்னமா லுக்கு....
'ராம்கி இமெயிலா போட்டுதாக்கராய்யா...அவனுக்கு வேற வேலையே இல்லாயா என நையாண்டி வேறு.... இன்பாக்ஸை திறக்கவே பயமா இருக்கு, இவன் இமெயிலே ஒரு 50 இருந்தது' என்று சேகர் நொந்து கொண்டார், பார்க்க பாவமாக இருந்தது.
எங்களது சந்திப்பு 'வாடா போடா' என ஆரம்பித்து, 'நாயே பேயே' என்ற தொடர்ந்து, அடுத்த முறை ஊட்டியில் சந்திப்போமா என கேட்டும், வழக்கம் போல 'நாளையிலிருந்து ராம்கியின் இமெயில் வந்துகிட்டே இருக்குமே' என்று கடைசியில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ராம்கியின் தலையை நீண்டநேரமாக அனைவரும் கலாய்த்தனர். அடிக்கடி இதுபோன்ற எல்லோரும் சந்திக்க வேண்டும் என விரும்பினர்.

பீச்சில் தரை தட்டிய கப்பலையும் கண்டு ரசித்தோம்..(மேலே உள்ளது அக்கப்பலை இழுக்க வந்த பெரிய கப்பலாகும்) பீச்சிலிருந்து குரூப் குரூப்பாக 2 கார்களில் விடைபெற்றோம்..
ராம்கி, சுவாமி, ரமேஷ் விவேக் இந்த நால்வரும் அசோக் நகரில் உள்ள சரவன பவனில் அருமையான ஒரு காபி குடித்துவிட்டு, ரமேஷினை அவனது வீட்டு வாசலில் விட்டுவிட்டு, பரணி காலனியில் உள்ள சுவாமியின் அம்மாவை பார்த்துவிட்டு கிளம்பினோம்.
ராம்கியை போரூரில் இறக்கிவிட்டு விவேக்கும் சுவாமியும் காரில் 'பறந்தனர்'. பறந்தது அந்த கார் மட்டுமல்ல, அந்த இனிய நாளும் தான்.. இந்த நாள் எங்களால் ஒரு மறக்கமுடியாத நாள்.
நண்பேன்டா.... நண்பேன்டா... நண்பேன்டா.....
(வீட்டிற்கு சென்றதும், பரிசுப்பொருளை திறந்து பார்த்து, கொடுத்தவர்களுக்கு நன்றி சொல்ல ஒருவருக்கு ஒருவர் போன் செய்தது பாராட்டத்தக்கது).

Tuesday, August 7, 2012

'அடடே' மனோகரின் அதிரடி பேட்டி

பேட்டி ராம்கி, கோவை


'அடடே மனோகர்' அவர்கள் நம்மை நாடகத்திலும், திரையிலும் சிரிக்க வைத்தவர். அவரிடம் நாம் கேட்ட 'சுருக்' கேள்விகளுக்கு 'நறுக்' என்று பதில் வந்தது. அதை நீங்களும் படித்து மகிழலாமே?


'அடடே' என்று அடைமொழி கிடைத்து எப்படி? யாரால்?(ஒரு சின்ன பிளாஷ்பேக்)
1986 வெளியான 'அடடே மனோகர்' தொலைக்காட்சி தொடரில் நான் அடிக்கடி பலவிதமாய் 'அடடே' என்ற வார்த்தையை பிரயோகிப்பேன்; அதனால்...அதன் தயாரிப்பாளர் திரு. கிருஷ்ணன் அவர்களே வைத்த பெயர்தான் 'அடடே மனோகர்' என்று அந்த தொடருக்கு!!

*
அடடே மனோகருக்கும், ஆர்எஸ் மனோகருக்கும் என்ன வித்யாசம்?
ஆர்.எஸ்.மனோகர் இறந்துவிட்டார்;
அடடே மனோகர் இன்னும் இருந்து கொண்டிருக்கிறார்!!

*
ஒரு படத்தில் விவேக்கை ஒரு பெண்ணா மாற்றிய உங்களுக்கு நிஜமாகவே ஒரு ஆண்மகனை பெண்ணாகமாற்ற சந்தர்ப்பம் கிடைத்தால் யாரை தேர்வு செய்வீர்கள்- (அது ஒரு நடிகராகவோ அல்லது அரசியல் வாதியோகவோ, யா வேண்டுமானாலும் குறிப்பிடலாம்)
மன்மோகன்சிங்!!

*
அதுபோன்று ஒரு பெண்ணை ஆணாக மாற்றும் சக்தி உங்களுக்கு கிடையாதல் எந்த பெண்ணை ஆணாக மாற்றுவீர்கள்?

சோனியா காந்தி!!

*
உங்களை நாடக அல்லது திரை உலகில் நெகிழவைத்த நிகழ்ச்சி அல்லது நபர்
நிறைய காட்சிகளில் நான் நெகிழ்ந்துவிடுவேன்; சிரிப்பதிலும் அப்படியே; நான் மிகவும் 'எமோஷனல்'.
* திரையுலக நண்பர் யார்- நாடக உலக நண்பர் யார்?

திரை - டெலலி கணேஷ்; நாடகம் - காத்தாடி

* ரசிகர்களுடன் நடந்த மறக்கமுடியாத நிகழ்ச்சி அல்லது சம்பவம்


நான் மேடையில் பாடி நடிப்பேன்....பங்களூருவில் ஒரு தடவை ஒரு பாட்டை (எம்.கே.டியின் ஒரு பாட்டு) ஒரு வரி பாட வேண்டும்; அவ்வளவே; ஆனால் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க முழு பாட்டையும் பாடி, ரயிலை கடைசி நிமிடத்தில் பிடித்தோம்.

*
ரஜினி அல்லது கமலுக்கு அப்பாவா நடிக்க ஒரே சமயத்தில் வாய்ப்பு வந்தால் யாருடைய படத்தில் நடக்க விருப்புவீர்கள்?

எனக்கு இருவரும் ஒன்றே; ஆனால் இருவரும் என்னை சத்தியமாக கூப்பிடமாட்டார்கள்; ஏனென்றால் நான் யாரென்றே அவர்களுக்கு தெரியாது.

* பிடித்த நாடக அல்லது சினிமை இயக்குநர் யார்
பாலு மகேந்திரா; அனால் அவருக்கு என்னவோ என்னை கண்டாலே பிடிக்காது.

* பிடித்த தமாசு நடிகர் அல்லது நடிகை யார்
ஆச்சி மனோரமா & மறைந்த நாகேஷ்.

*
மிகவும் ரசித்த ஜோக் எது
மனைவி: என் கணவர் என்னுடன் சண்டை போட்டுக் கொண்டு வீட்டை விட்டே ஓடிவிட்டார். இன்ஸ்பெக்டர்: (மிகுந்த யோசனைகுப்பின் தனக்குள்) ஓ! அப்படி ஒரு வழி இருக்கா?

*
சந்திரபாபு முதல் சந்தானம் வரை நினைத்த உடனே வரும் தமாஷ் பஞ்ச் டயலாக் எது?
வரும் ....ஆனா வராது - என்னத்தெ கன்னையா!!!

* நீங்கள் நடித்த கதாபாத்திரத்தில் தங்கள் மனனைவி மிகவும் பாராட்டிய கதாபாத்திரம் எது?
'அடடே மனோகர்' என்று நினைவு; அவளே மறைந்துவிட்டாளே!

* நீங்கள் ஒரு மகா கவி என்பது எனக்குத்தெரியும்....ஒரு நாலுவரி கவிதை ஒன்று சுடட்சுடத் தாருங்களேன்.......

காரிகையின் அணைப்பிற்கு ஏங்கியதோர் காலம்
காலனின் அணைப்பிற்கு ஏங்குகிறேன்
காரிகையும் அந்நாளில் வந்தாளில்லை
காலனும் இந்நாளில் வருவதாயில்லை
எப்பொருளும் ஏங்கும் போது கிட்டுவதில்லை
அப்பொருள் கிட்டும்போது நமக்கதில் நோக்கமில்லை
இப்பொருளை சிந்திக்குங்கால் விளங்கியதோர் உண்மை
மெய்ப்பொருளுக்குட்பட விதி யீதென்பது!


கேள்வி ராம்கி, கோவையிலிருந்து
பதில் அடடே மனோகர், சென்னையிலிருந்து