Friday, August 9, 2013

இசை மழை


My small article in y'days (28 7 2013) Varamalar.

 இசை மழை என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம். இன்னொரு புதுவிதமான இசை மழையை பற்றி அறிந்து கொள்ள வேண்டுமா...
இதோ...
ஜெர்மனியில், ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் தண்ணீர் பைப்புகளை விதவிதமாக வளைத்து, இசைக்கருவிகள் போன்று பொருத்தியுள்ளனர்.
மழை கொட்டும் போது, மழையின் அளவுக்கு ஏற்றார் போல் தண்ணீர், அந்த பைப்புகள் வழியாக புகுந்து, வித்தியாசமான, விதவிதமான ஓசையை, எழுப்புகிறது. இக்குழாய்களிலிருந்து வெளிவரும் சத்தத்தை, அங்கே, "மழை இசை' என்கின்றனர். ஒவ்வொரு குழாயிலிருந்தும் மற்றொரு குழாயில் தண்ணீர் விழுவது போன்ற இடைவெளி விட்டு பல குழாய்கள் வைத்துள்ளதால், இதிலிருந்து வரும் சத்தம், இதுவரை யாரும் கேட்டிராத வகையில் ரசிக்க வைப்பதாக கூறுகின்றனர்.
கொட்டும் மழை பொழிய துவங்கியதும், இந்த இசையை கேட்க, இந்த அடுக்குமாடி வீட்டில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல், குடையை பிடித்துக் கொண்டு, இசையை ரசிக்க, எக்கச்சக்கமான கூட்டமும் கூடிவிடுகிறது.


முத்தம் கொடுக்க வாரீகளா!


My small article in VARAMALAR dt 4.8.2013

முத்தம் கொடுக்க வாரீகளா!

பெண்களின் உதடுகள் போன்று, மிக அழகாக, சிவப்பாக இருக்கும் இந்த இதழ்கள், "சைகோடிரியா எலாட்டா' எனும், ஒரு வகை தாவரத்துடையது. இவ்வகை செடிகள், மழை அதிகம் பொழியும் கொலம்பியா, கோஸ்டாரீகா, பனாமா போன்ற நாடுகளில், அதிகமாக காணப்படுகின்றன. இதனை, "ஊக்கர்ஸ் லிப்ஸ்' என்று அழைப்பர். இந்த இதழ்கள், சின்ன சின்ன பறவைகள் மற்றும் வண்ணத்துப் பூச்சிகளை தன் பக்கம் இழுத்து விடும் தன்மை கொண்டது.
பார்த்ததும், நம்மை முத்தம் கொடுக்கத் தூண்டும் இவ்விதழ்கள், நீண்ட நேரம் இப்படியே இருக்காது. காரணம், இரண்டு இதழ்களுக்கு இடையிலிருந்து குட்டி குட்டி பூக்கள் பூக்கும் என்பது தான், ஆச்சரியமான விஷயம்.

உடைக்கு ஏற்ற சிகை அலங்காரம்


Friday, July 12, 2013

SRIRAM RAMAKRISHNAN'S BRITHDAY MARCH 14, 1993



Periyappa Sri KRV & Sriram

Mrs. Kala with Sriram, Mrs. Manju, Mrs. Indira, Mrs. Chandra,


Vinod Shankar, Sriram Ramakrishnan, Vinod (Krish Moorthy)