Friday, August 9, 2013

இசை மழை


My small article in y'days (28 7 2013) Varamalar.

 இசை மழை என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம். இன்னொரு புதுவிதமான இசை மழையை பற்றி அறிந்து கொள்ள வேண்டுமா...
இதோ...
ஜெர்மனியில், ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் தண்ணீர் பைப்புகளை விதவிதமாக வளைத்து, இசைக்கருவிகள் போன்று பொருத்தியுள்ளனர்.
மழை கொட்டும் போது, மழையின் அளவுக்கு ஏற்றார் போல் தண்ணீர், அந்த பைப்புகள் வழியாக புகுந்து, வித்தியாசமான, விதவிதமான ஓசையை, எழுப்புகிறது. இக்குழாய்களிலிருந்து வெளிவரும் சத்தத்தை, அங்கே, "மழை இசை' என்கின்றனர். ஒவ்வொரு குழாயிலிருந்தும் மற்றொரு குழாயில் தண்ணீர் விழுவது போன்ற இடைவெளி விட்டு பல குழாய்கள் வைத்துள்ளதால், இதிலிருந்து வரும் சத்தம், இதுவரை யாரும் கேட்டிராத வகையில் ரசிக்க வைப்பதாக கூறுகின்றனர்.
கொட்டும் மழை பொழிய துவங்கியதும், இந்த இசையை கேட்க, இந்த அடுக்குமாடி வீட்டில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல், குடையை பிடித்துக் கொண்டு, இசையை ரசிக்க, எக்கச்சக்கமான கூட்டமும் கூடிவிடுகிறது.


No comments:

Post a Comment