Monday, April 30, 2012

மணிப்பா, ராஜம் மன்னியின் 50வது திருமண நாள்

மணிப்பா, ராஜம் மன்னியின் 50வது திருமண நாள்
SRI K.VISWANATHAN & SMT. RAJAM'S 50TH WEDDING DAY CELEBRATIONS AT CHENNAI
      எல்லோரும் வந்தாச்சா, நாங்க ரெடி - அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது...

என் பெரியப்பா மகன் மணியண்ணா எனும் மணிப்பா மற்றும் ராஜம் மன்னியின் 50வது திருமண நாள் விருந்து சென்னை நியு உட்லேன்ட்ஸ் ஓட்டலில் 29ம் ஏப்ரல் 2012 அன்று மிகச்சிறப்பாக நடந்தது.


 ஒரிரு நாட்களுக்கு முன்பு மணிப்பா எங்களை இவ்விருந்துக்கு போனில் அழைத்தார். 29ம் தேதி காலை 6 மணிக்கு கோவையிலிருந்து சென்னைக்கு வந்தேன். சுமார் 9 மணிக்கு நானும் சீதாவும் ஒரு வாடகை கார் எடுத்துக்கொண்டு முதலில் பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றோம். பின் அங்கிருந்து கபாலீஸ்வரர் கோவிலுக்கும் சென்றோம். கோவிலில் 50வது மணநாள்காணும் தம்பதிகளுக்காக சிறப்பு பிரார்த்தனை செய்தோம். பின் சுமார் 12 மணிக்கு நியு உட்லேன்ட்ஸ் ஓட்டலுக்குள் நுழைந்தோம்.


Seetha, Rajam Manni, Manippa & Kumar
(Photo: Sridhar)

மணிப்பாவின் இரண்டாவது மகன் ஸ்ரீதர் மற்றும் மனைவியைப் பார்த்தபின், மணிப்பா மற்றும் ராஜம் மன்னியை சந்தித்து வாழ்த்து கூறினோம்.  அப்போது சுடச்சுட 'சுப்' கொடுக்கப்பட்டது. முரளியின் மனைவி நித்யா எங்களை வரவேற்றாள்.



HOUSE FULL!!

அந்த அறை முழுவதும் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. எங்கும் உறவினர்களின் கூட்டம். பாலன் அண்ணா,  ராதை மன்னி, அவர்களது மகள் விஜி,  மாப்பிள்ளை மற்றும் பேரனை பார்த்தோம். சந்திரன் அண்ணா தன் துணைவி ரஞ்ஜனியுடன் வந்திருந்தார். இளம் தாத்தா பாட்டிகளான ரவி, கீதா ரவி, ராஜா ரவி,  மகள் ரேகா மற்றும் அவளது மகளையும் பார்த்தோம். விஜி, சீதா, ரேகா, கீதா போன்றவர்கள் தமாஷாக பேசிக்கொண்டிருந்தார்கள். கீதாவை சீதா வலுகட்டாயமாக பக்கத்து இருக்கைக்கு மாற்றி இளம் அழகிகளோடு போட்டோவுக்கு போஸ் கொடுக்க, கீதா செல்லமாக கோபித்தாள்.

LADIES SPL  - கீதா ரவி, விஜி (பாலப்பா மகள்), சீதா, ரேகா (ரவியின் மகள்)


 மேடையில் மணிப்பாவும், ராஜம் மன்னியும் தங்கள் அருக்கையில் அமர ஒருவர் பின் ஒருவராக அவர்களுக்கு நினைவுப்பரிசு கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தோம். அப்போது ஜெயமணி மன்னி 'என்ட்ரி' கொடுக்க வரிசையாக அனைவரும் எழுந்து நின்று வரவேற்றோம். இவரை தொடர்ந்து இவரது மகள் உஷா (தன் கணவருடன்), குமாரின் மகன் என வந்தனர்.  உஷா சீதாவுடன் சிறிது நேரம் பேசிய பிறகு கடைசியாக, 'நீங்க மைதிலிதானே?' என்று கேட்க, சீதா (கடுப்பாகி)  'மரியாதையா அந்தப்பக்கம் போயிடு' என்று செல்லமாக கோபித்துக்கொண்டாள். சீதா சந்தோஷமா அனைவருடன் பேசி மகிழ்ந்தாள். 'இளம் அம்மா' ரேகா,'என்றும் அழகி' கீதா, நடிகை சுஹாசினி சாயலில் விஜி, 'உயிர் உள்ளவரை உஷா'வுடன் சிறிது நேரம் தமாஷாக நானும் சீதாவும் பேசி மகிழ்ந்தோம்


                   MADE FOR EACH OTHER !!
பிறகு திருமணநாள் காணும் தம்பதிகள் மாற்றிக்கொள்ள  மாலை கொடுக்கப்பட்டது. அப்போது மணிப்பா, தானாக மாலையை தன் கழுத்தில் போட்டுக்கொள்ள, 'அண்ணாவுக்கு என்ன அவசரம்?' என்று தமாஷ் செய்தார்கள். பிறகு, ராஜம் மன்னி, அண்ணாவுக்கு மாலையிட, அண்ணா மன்னிக்கு மாலையிட கைத்தட்டல் பலமானது.


மாலை போடவா? வாங்கோண்ணா...வாங்கோண்ணா

                                     நன்னா பிடிச்சுக்கோ..கட்..கட்

பிறகு, இத்தம்பதிகள் கேக் வெட்டி தங்கள் 50வது திருமண நாளை கொண்டாடினர். சுமார் 20 கேமிராக்கள் அப்போது மின்னியது. மணிப்பா, மன்னிக்கு கேக் ஊட்டி விட்டார். பிறகு மன்னி, மணிப்பாவுக்கு கேக் ஊட்ட, அண்ணா பெரிதாக வாய் திறந்தார். பலத்த கைதட்டலோடு கேக் வெட்டப்பட்டது.


                                    கேக் ஊட்டியாச்சு அதுக்குள்ள...

 வந்தவர்கள் அனவைருக்கும் இத்தம்பதியர் தங்கள் 4 போட்டோக்கள் பதித்த கப்புகளை அழகான சுறுக்குப்பையில் போட்டு நினைவுப் பரிசாக கொடுத்தனர். அதில் நிறைய சாக்லேட்கள் இருந்தன.  அறைமுழுவதும் உறவினர்களின் கூட்டம் வழிந்தது.  முரளி அமெரிக்காவில். அன்னம்,   செல்லா, திருமதி சுவாமி மற்றும் கணேசன் குடும்பத்தினர்கள் மிஸ்ஸிங். பங்கஜம் அக்காவின் கணவரையும் நினைவுகூர்ந்து பார்த்து பேசினேன். திரு கல்யாணம் அவர்களையும் சந்தித்தேன். நீண்ட வருடங்களுக்குப்பிறகு திருமதி மற்றும் திரு அனந்தகிருஷ்ணனை சந்தித்தேன். எனக்கு திருமணம் ஆனபோது இவர்கள் நெல்லையில் இருந்தார்கள், ராதை மன்னியின் அழைப்பை ஏற்று, என் திருமணத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.



                                  LINED UP -  அனந்த கிருஷ்ணன்,  இரண்டாவதாக பாலப்பா,                பங்கஜத்தின்   ஆத்துக்கார், சந்திரன்,  திருமதி ரஞ்ஜனி சந்திரன்,   கீதா ரவி

அதற்குள் சாப்பாடு தாயாராகிவிட்டது.  பந்திக்கு முந்துங்கோ என குரல் கொடுக்க, சுடச்சுட சாப்பாடு சாப்பிட்டுவிட்டு விடைபெற்றோம். நாங்கள் சென்றமைக்கு அண்ணாவும் மன்னியும் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். ராதைமன்னி 'குமார் அடிக்கடி போன் செய்து எங்களோடு பேசுவான்' என்று கூறி மகிழ, 'இவா எங்க ஆத்துப்பக்கம் போனா எங்களை பாக்காம போகமாட்டாடி' என்று ராஜம் மன்னி சொல்லி மகிழ்ந்தார்கள். ஸ்ரீராமை ஏன் அழைத்துவரவில்லை என பலர் கேட்டனர்.
பாலண்ணா மற்றும் சந்திரன் அண்ணா அவர்கள் எனது வேலையைப்பற்றி விசாரித்தார். திருமதி நித்யா முரளியுடன் சிறிது நேரம் பேசியபின் அனைவரிடமும் பிரியாவிடைபெற்று அவசரமாக கிளம்ப ஆரம்பித்தோம். நிறைய உறவினர்கள் பலர் இருந்ததும் அறிமுகம் கிடைக்கவில்லை. ராஜம் மன்னியின் சகோதரி அவரைப்போலவே இருந்ததால் விஜியிடம் கேட்டு தெரிந்து கொண்டேன்.


பிறகு மாலை மணிப்பாவுக்கு மீண்டும் போனில் நான்  நன்றி தெரிவிக்க, 'நீங்க வந்ததுக்கு  நாங்க தானே உங்களுக்கு நன்றி சொல்லனும்' என்று அண்ணா சொன்னார். 'நீயும் சீதாவும்  வந்ததுது ரொம்ப சந்தோஷம் குமார்' என்று  மன்னி சொல்லிய பிறகு மறவாமல், ' நீ கொடுத்த அஷ்டலட்சுமியும் நல்லாயிருக்குப்பா' என்றார். அப்போது ஸ்ரீராம் மன்னிக்கு போனில் வாழ்த்து தெரிவித்தான். ஏப்ரல் 29ம் தேதி ஒரு மறக்க முடியாத நாளாக மணிப்பா, ராஜம்மன்னிக்கு மட்டுமின்றி எங்களுக்கும், புரசைவாக்கம் குடும்பத்தார் பலரை ஒரே இடத்தில்   சந்தித்து மகிழ்ந்தது ஒரு 'திருநாளாக' இருந்தது.

மீண்டும் மணிப்பாவுக்கும் ராஜம் மன்னிக்கும் எங்கள் கே ஆர் குடும்பத்தார் சார்பாக வாழ்த்துக்களும் நன்றிகளும்
Spl thanks to Murali, Nitya Murali (Organizer of the event), Sridhar & Mrs. Sridhar for everything.
என்றும் அன்புடன் குமார்.

1 comment:

  1. From coimbatore came to chennai went to Triplicane partha sarathy temple., mylapore temple with beloved wife Seetha & attend the function, enjoying with releatives then went to ur house, again night to CBI.!.!.!.!.!.! wow, wonderful............ - enakku moochu vangaradu. ALL THE BEST.

    ReplyDelete