Saturday, April 14, 2012

RAMKI'S CARTOONS ON EGGS


ராம்கியின் கார்ட்டூன்கள் கோழிமுட்டையின் மீது
ராம்கி (கே ஆர். ராமகிருஷ்ணன்)

கார்ட்டூன்கள் கவலையைத்தீர்க்கும் ஒரு வலிநிவாரணி போன்றது என்று ஒரு முறை திரு ஏபிஜே கலாம் கார்ட்டூன்கள் பற்றி பேசியதை தமிழில் மொழிபெயர்த்து அதை அவருக்கே அனுப்பிவைத்தேன். அவர் பார்த்து ரசித்து ஆல் தி பெஸ்ட் என்று இஆட்டோகிராப் செய்து அனுப்பிவைத்தார்.




சமீப காலமாக என் ஓய்வு நேரத்தில் நான் கார்ட்டூன் வரைவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றேன்.


பள்ளி பருவத்தில் எனது சகோதரர் திரு. கே ஆர் விஜயராகவன் அவர்கள் பேனாவால் ஒருசிறு கோடுகளால் ஓவியங்கள் வரைவதை பார்த்து, எனக்கும் படங்கள் வரைய ஆர்வமானது. பின் ஒரு சில படங்களை வரைந்தது நினைவு உள்ளது. அதில் நான் வரைந்த ஆஞ்சநேயர் ஓவியம் நன்றாக இருந்ததாக என் உறவினர்கள் சொன்னார்கள். சென்னை சந்தமாமா, மங்கை பத்திரிக்கையில் இருந்த போது தினத்தந்தி பேப்பரில் அவ்வப்போது சிரிப்பு பகுதியில் எனது கார்ட்டூன்கள் ஒருசில வெளியாகியது. என் மதிய நேர சாப்பாட்டு வேலையில் நான் வரைந்த சில கார்ட்டூன்களை சந்தமாமாவில் புகழ்பெற்று விளங்கிய தலைமை ஓவியர் திரு. சங்கர் அவர்களிடம் அடிக்கடி காட்டி எவ்வாறு உள்ளது என கருத்து கேட்பேன். ரொம்ப நல்லா பண்ணுயிருக்கேங்க..இன்னும் நிறைய ஓவியங்கள் தொடர்ந்து வரையுங்க...என்று பாராட்டுவார்.



வனிதா எனும் தெலுங்குப் பத்திரிகையில் ஒரு நாள் ஓவியர் வராததால் கார்ட்டூன் வரைய எனக்கு திரு நரசு என்பவர் வாய்ப்பு கொடுத்தார். அதை சாப்பாட்டு இடைவேலையில் முடித்துக்கொடுத்தேன். மங்கையர் மலரில் ஒரு கட்டுரை எழுதி அனுப்பும்போது அதன் ஓரத்தில் ஒரு சில கார்ட்டூன்களை வரைந்து அனுப்பினேன். அட என்ன ஆச்சர்யம், அக்கட்டுரையோடு எனது கார்ட்டூன்களும் வெளியாகியிருந்தது என் ஊக்கத்தை அதிகமாக்கியது.



மும்பையில் 6 வருடங்கள் வேலைபார்த்தேன். அப்போது ஒரு நாள் தேனா வங்கியில் பணம் எடுக்கச் சென்றிருந்தேன். சற்று நேரமாகவே எனக்கு போர் அடித்தது. அதனால் கையில் செக்புக் போட்டு கொண்டுபோயிருந்த வெள்ளை கவரின் மீது ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தேன். அந்த கிறுக்கல் கார்ட்டூன்களாக இருந்ததை பார்த்து பக்கத்தில் இருந்த ஒரு இந்திக்காரர் அதை வாங்கி அப்படங்களை தன்னுடன் வந்தவர்களுக்கு காட்டி பகுத் அச்சாஹே என்று பாராட்டி கைகுலுக்கினார்.

மும்பையிலிருந்து வெளிவரும் பிரபல மும்மை தமிழ்டைம்ஸ் தினசரியில் எனது சிரிப்பு மற்றும் கார்ட்டூன்கள் வெளிவந்துள்து. இப்படி படிப்படியாக கார்ட்டூன்வரைவதில் ஆர்வம் அதிகமானது. தினமலர் வாரமலர் மற்றும் ஆனந்த விகடனில் எனது சிரிப்புகள் வெளிவந்துள்ளன.


எனது கார்ட்டூன்களை மிகப்பிரபல கார்ட்டூனிஸ்ட்களான திரு. திரயம்பக் ஷர்மா மற்றும் மும்பையை சேர்ந்த விவேக் போன்றவர்கள் பார்த்து பாராட்டி மேலும் வரைய ஊக்கமளித்தார்கள். அகில இந்திய கண் மருத்துவர்கள் சங்க மாநாட்டு அப்ஸ்ட்ராக்ட் புக்கில் எனது சேர்மென் டாக்டர் ராமமூர்த்தி அவர்கள் மாநாட்டின் போது போன் பேசுவது கூடாது போன்ற ஒரு கார்ட்டூன் தேவை என்றும், அப்புத்தகம் பிரிண்ட் செய்யும் அதிகாரியிடம் யாராவது கார்ட்டூனிஸிட் இருக்கிறார்களா என்று கேளுங்க என்று என்னிடம் கூறினார். சரி என்று அவரிடம் கேட்க, தற்போது கோவையில் எனக்கு தெரியந்தவர்கள் யாரும் இல்லை என கூறினார். இருப்பினும் எனது ஆர்வம் காரணமாக நானே ஒரு சில கார்ட்டூன்களை வரைந்து என் சேர்மெனிடம் காட்டினேன். அடி நீங்க கார்ட்டூனும் போடுவீங்களா... நல்லா வந்திருக்கே இதையே நம்ப புக்கில் போடலாம் என்று உற்சாகமளித்தார். புத்தகத்தில் வெளியானதும் பலர் என் படத்தை பார்த்து பாராட்டினர்.



அடுத்த ஒரு முறை என் சேர்மென் ஒரு மாநாட்டில் கண் மருத்துவத்தில் தமாஷ் (Humour in Ophthalmology) என்ற தலைப்பில் பேச அவருக்கு அழைப்பு வர, உடனே எனை அழைத்து எனக்கு கார்ட்டூன்கள் வரைய வாய்ப்பு அளித்தார். அப்போது, கார்ட்டூனில் சம்பந்தப்பட்டவர்களின் தலைப் பகுதியை மட்டும் போட்டோவாக வாங்கி, உடல் பாகத்தை கார்ட்டூனாக வரைந்தேன். அவர் த எனது கார்ட்டூன்களை பெரிய ஸ்கிரீனில் போட்டு பேசினார். பலரும் பார்த்து கைதட்டி சிரித்து மகிழ்ந்தனர். பலர் எனது கார்ட்டூன்களை பார்த்து என்னை வெகுவாக அம்மாநாட்டில் பாராட்டினர். முன்னால் தலைவர் டாக்டர் பாபு அவர்களும் எனது கார்ட்டூன் திறமையை பாராட்டி இமெயில் அனுப்பினார்.





ரயிலில் கோவைக்கும் சென்னைக்கும் அவ்வப்போது தனியே செல்லவேண்டியிருக்கும். அப்போது இரவு 9 முதல் 10.30 வரை மிகவும் போர் அடிக்கும். அதனால் எப்போதும் ஒரு நோட்டுபுத்தகமும், 3 கருப்பு ஸ்கெச் பேனாக்களையும் எடுத்துச்செல்வேன். போர் அடித்தால் உடனே ரயிலில் படம் வரைய ஆரம்பித்துவிடுவேன். சக பயணிகள் என் படத்தை பார்த்து பாராட்டுவார்கள். சார் நீங்க கார்ட்டுனிஸ்டா....நீங்க ஓவிய ஆசிரியரா என்று எல்லாம் கேட்பார்கள். அட இல்லைங்க போரடிக்காம இருக்க வரைஞ்சுகிட்டுவரேன் என்றதும், சார் ரொம்ப நல்லா வரையரீங்க...புத்தகங்களுக்கு அனுப்பலாமே என்பார்கள்.


ஒரு முறை வட மாநிலத்திலிருந்து ரயிலில் சென்னைக்கு வந்து கொண்டிருந்த போது ஒரு சமபயணி நான்வரையும் படத்தை பார்த்து, சார் என்னையும் வரைஞ்சுகொடுங்க என்றார். எப்படியோ ஒருவழியாக அவரைப்போலவே வரைந்து கொடுத்தேன். மிகவும் மகிழ்ந்தார். சார் ரயிலைவிட்டு இறங்குவதற்கு முன் நீங்க வரைஞ்ச அனைத்து படங்களையும் எனக்கு கொடுங்க சார். என் மகனிடம் கொடுத்து இதைப்பார்த்து அவனையும் வரையச் சொல்கிறேன் என்று வாங்கி சென்றார். வெளியே ஏதாவது போர்டையும் பேனாவையும் பார்த்தா என் கைகள் வரையத்துடிக்கும். எங்கள் மருத்துவமனையில் தினமும் ஒரு பாஸிடிவ் திங்கிங் தகவலுடன் அதற்கு ஏற்ற கார்ட்டூனையும் வரைந்து சிலசமயங்களில் தமிழாக்கமும் செய்து தகவல்பலகையில் போடுவேன். பலர் இதைப்பார்த்து, படித்து, இதன் நகல் எனக்கு வேண்டும் என்று கேட்டு வாங்கி எடுத்துச்சென்றுள்ளார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சி தரும் தகவல்.






கோவை தேனா வங்கிக்கு எனது கார்ட்டூன்களை போட்டுக்கொடுத்தேன். வங்கி மேனேஜர் வெகுவாக பாராட்டியதோடில்லாமல் பல இடங்களில் மாட்டியுள்ளார்.


கார்ட்டூன்கள் கோழிமுட்டையின் மீது எப்படி இருக்கு, இன்னும் நிறைய வரைய பயிற்சி எடுக்க வேண்டும் நான் என்பது தெரிகிறதல்லவா?
ராம்கி

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. EXCELLENT., WONDERFUL., VERY HAPPY THAT UR SPENDING UR LONELY TIME WITH HAPPY & USEFUL WAYS. GOD BLESS YOU., BEST OF LUCK,. KEEP DOING LOT OF WONDERFUL WORKS LIKE THIS. THANK YOU.ALL THE VERY BEST

    ReplyDelete