Monday, December 6, 2010

சிறந்த முறையில் பிரசன்டேஷன் (Presentation) செய்ய 5 வழிகள்

சிறந்த முறையில் பிரசன்டேஷன் (Presentation) செய்ய 5 வழிகள்
Courtesy: "PreSense ezine"

Tamil Translation : ராம்கி


முறை 1
•உங்கள் முன் உள்ள பார்வையாளர்கள் (ஆடியன்ஸ்) யார் என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்.
•எதைப்பற்றி பேசப்போகிறோமோ அது சம்பந்தமான தகவல்களை முன்கூட்டி தயாரித்துக் கொள்ளவேண்டும்.
•உங்களது பேச்சு நேரத்தின் அளவு எவ்வளவு என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

முறை 2
•எதற்காக, யார், எதற்கு, எப்பொழுது, ஏன் மற்றும் எப்படி என்று வரிசைப்படி பிரசன்டேஷனை வடிவமைத்துக் கொள்ளவேண்டும்.
•பவர்பாயிண்ட் அல்லது கையடக்க பேப்பரில் தகவல்களை பதிவுசெய்துவிடவும்
• உங்கள் முன் அமர்ந்து இருக்கும், பார்வையாளர்களுக்கு ஏற்ப தகவல்களை முறைப்படுத்திக்கொள்ளவும்
•உங்களது பேச்சினை சார்ந்த படங்கள் மற்றும் வீடியோ கிளிப்பிங்குகளை சரியான இடத்தில் சேர்த்துக்கொள்ளவும்.
• விற்பனை (மார்க்கெட்டிங்) சம்பந்தமான பேச்சாக இருந்தால் ஏஐடிஎ [A.I.D.A.] முறையை பின்பற்றவும். அதாவது கவனம் (அடேன்ஷன்), ஆர்வம் (இன்டரஸ்ட்), விருப்பம் (டிசையர்) மற்றும் பலன் (ஆ க் ஷன் ),
•ஸ்லைடுகளை உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில், நான்கில் மூன்று பாகத்துக்குள் முடியும்படி தயாரிக்கவும்
•மனதளவில் தைரியமாக இருந்து, ஒரு முறை ஒத்திகை பார்த்துக்கொள்வது மிக அவசியம்.
•ஒரு குறிப்பிட்ட தலைப்பில், நிறைய பகுதிகள் இருந்தால், அனைத்தும் சிறிதாவது விளக்கவேண்டியது அவசியம். அல்லது சமய சந்தர்ப்பத்திற்கு ஏற்ப, முக்கியமான தகவல்களை தவறாமல் பேசவும்.

முறை 3
*நேர்த்தியாக உடை அணிந்து செல்லவும். உங்களை முதலில் பார்த்த மாத்திரத்தில் மனதில் பதியும்படியான வகையில் உங்கள் ஆடைகளை தேர்வுசெய்யவும்.
*மேடை ஏறும்போடு நடுக்கம் ஏற்படும் பழக்கமுள்ளவராக இருந்தால், ஒரு நிமிடம் அமைதியாக இருந்து, பெரு மூச்சு விட்டுவிட்டு பின் மேடை ஏறவும்.
*பயம், நடுக்கம் இன்றி, தன்னம்பிக்கையுடன் மேடை ஏறவும்
* உங்களை பற்றியும் உங்கள் நிறுவனம் பற்றியும் ஒரு சிறு குறிப்பும் தேவைக்கு ஏற்ப சொல்லலாம்
*உங்கள் முன் உள்ள லேப்டாப்பில் காட்டும் தகவல்கள் உள்ளவாறே அப்படியே சும்மா படிக்காதீர்கள். முக்கிய தலைப்புகளை காட்டிவிட்டு, அதுசம்பந்தமாக சுயமாக, விளக்கி பேசவும்.
*நடுநடுவே, குட்டிகதைகள், ஜோக்ஸ் மற்றும் மற்றவர்கள் சொன்ன முத்துக்களையும், அடைமொழிகளையும் சேர்த்து பேசவும்
*சிரித்த முகத்துடன், கைகால்களை மெல்ல ஆட்டி பேசவும்.

முறை 4
•பேசும்போது ஒரே இடத்தை மட்டும் பார்க்காமல், கண்களை அங்கும் இங்கும் ஓடவிடவும். பார்வையாளர்களை கவனித்து, அதற்கு ஏற்றார்போல் பேசவும்.
• பார்வையாளர்களின் கண்களுக்கு நேருக்கு நேர் பார்த்துப் பேசவும்.
•நடுநடுவே பார்வையாளர்களை பேசவைக்கவும். சிறிய கேள்விகள் கேட்டு அவர்களிடம் இருந்து பதில்களை பெறவும்.
•நீங்கள் நல்ல அறிவுடையராக, அனுபவசாலியாக இருக்கலாம். ஆனாலும், பார்வையாளர்களுக்கு ஏற்ப அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும்படி பேசவும்.

முறை 5
•உங்களது பேச்சை கடைசியாக முடிக்கும் முன், இதுவரை பேசியவற்றின் தொகுப்பை குறிப்பிட்டு, தாங்கள் சொல்லவந்த முக்கிய விஷயத்தை கடைசியாக தெரிவிக்கவும்.
•உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் பேசவும். ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு மிக அதிகமாக பேசுவது அழகன்று.
* மிக கடைசியில் ''உங்களுக்கு இன்னும் ஏதாவது விளக்கம் வேண்டுமா?” என்றும் வினவுங்கள்
•கடைசி ஸ்லைடு நன்றி என்று இருக்கவேண்டும்.
•கேள்வி, பதில் நேரம் வரும்போது தெளிவாக பதில் கூறவும். தெரியாத பதிலாக இருந்தால், தனிப்பட்டு பதிலை சொல்வதாகச் சொல்லி சமாளிக்கவும்.
•உங்களது பேச்சு பற்றிய கருத்துக்களை, உங்களது பேச்சை கேட்ட நண்பர்களிடம் இருந்து பெற்று, அடுத்த முறை பேசும்போது குறைகளை நீக்கி பேசவும்.

உங்களது பேச்சு இனிதாய் வெற்றிபெற நல்வாழ்த்துக்கள்

Saturday, November 20, 2010

கல்பாத்தி தேர் திருவிழா 14.11.2010


கல்பாத்தியை சேர்ந்த எனது மாமா மகன் திரு ரவி மற்றும் ஷோபா ரவி என்னை கல்பாத்தி தேர் திருவிழாவை காண என்னை அன்போடு அழைத்தார்கள், அவர்களின் பக்கத்துவீட்டு குழந்தை மலையாள தமிழில் மிக அழகாக பேசியது. அவளது பல ஆஷைகளை என்னுடன் அடுக்கிக்கொண்டே இருந்தாள். நானும் ரவியும் அவளது சின்னச்சின்ன ஆசைகளை ரசித்தோம்.
**

மோகினி தேரில் உலா வந்த காட்சி
**

அழகு மோகினி
**

ஓரம்போ ஒரம்போ குதிரை வாகனத்தில் கணபதி வருகிறார்
**

குதிரை வாகனத்தில் கணபதி
**

குதிரை வாகனத்தில் கணபதி

**

கருடன் / தேரில் ஒரு பகுதியில்
**

கல்பாத்தி தேர்
**

காசியில் பாதி கல்பாத்தி. கல்பாத்தி ரத்ம்
**

தேரைத் தள்ள யாணை தயார்
*

புதுமாதிரியான கோணிப்பட்டமோ இந்த யாணைக்கு?
*

***

**

*


கொட்டு...கொட்டு...கொட்டு...வாத்தியக்கோஷ்டி
*

**

*
கல்பர்த்தி ரதங்களை ரசித்தவர் ராம்கி

Monday, November 1, 2010

தீபாவளி தீபாவளி தீபாவளி

தீபாவளி தீபாவளி தீபாவளி
-கே . ஆர். விஜயராகவன், ஹைதராபாத்


தீபங்களின் வரிசை,
வந்து விட்டது தீபாவளி
முதல் நாள் நள்ளிரவு முதல்
யார் வெடிப்பது முதல்
என்ற ஆர்வமே முதல்.
தூங்கும் கதிரவனை
வெடி ஒலி யால் எழுப்பி
அவனுக்கு மத்தாப்பு வெளிச்சம் காட்டி
அவனை கடலில் முங்கி குளித்துவிட்டு வர,
வரவேற்போம்.
காய்ச்சிய எண்ணை அடுக்களையில் தயார்
அடம்பிடிக்கும் எனக்கு தேய்த்துவிடும் தாயார்



விரைவில் வந்து விட்டேன் குளித்து
புத்தாடையில் தான் நான் ஜொலித்து
எல்லோருடனும் மிக குதூகலித்து
மீண்டும் ஓடினேன் பட்டாசு வெடிக்க

வெடி ஓசை கேட்க வேண்டும் ஆனாலும்
மிக கேட்ககூடாது, அதிர்வு ஆகும்
ஒற்றை காதினை ஒரு கையால் மூடிக்கொண்டு
கண்களைக்குறுக்கி வெடி தீ பற்றிக்கொண்டு
விட்டதா என சந்தேகம் கொண்டு
காண்பதற்கு பக்கத்தில் சென்று
படார் என்று வெடிக்கும் அப்போது
அடிபடாமல் நான்தான் ""கொன்று
விட்டேன் நரகாசுரனை ""என்று
மகிழ்ச்சிக்கு இணை ஏது

ஏக்கத்துடன் பார்க்கும் ஏழை குழந்தை கையில்
கொடுத்தேன் பட்டாசுகள் ஒரு சிறு பையில்
அது கொண்டாடும் பெரு உவகையில்
கண்டாடும் பெரிதும் என் மனமெனும் மயில்

புத்தாடையில் நான் ஸ்டைல் ரஜினி ஆனேன்
தங்கை தான் ஆனாளே அசின் போல
தந்தையோ வியட்நாம் வீடு சிவாஜி போல
அன்புத் தா யோ ஜொலித்தாள் பத்மினியாக

வித விதமான தின்பண்டங்கள்
பிறருக்கும் அன்புடன் அளித்தோம்
நாங்களும் சுவைத்து உண்டோம்
புது தின்பண்டங்களை உருவாக்கி
பெற்றாள் அம்மாவும் பெரும் புகழ்ச்சி

தொலைபேசியில், ஈ மெயிலில்
வண்ண அஞ்சல் அட்டையில்
நேரே கை குலுக்கலில், நெஞ்சமார
பரிமாறிக்கொண்டோம் வாழ்த்துக்களை


தினமும் தீபாவளி இருக்க எங்களுக்கு பேராசை
கடன் எப்போ முடியும் என்று தந்தைக்கு சிறு ஆசை
கடனோ உடனோ , ஆனந்தத்துக்கு ஏது தடை
வாருங்கள் மகிழ்ச்சியோடு போடுவோம் ஒரு நடை

துன்பம் அகன்று எங்கும் மகிழ்ச்சியுடன்
செல்வம் பொங்க, கொண்டாடுவோம் சேர்ந்து வாருங்கள்
வரிசை தீபமேற்றி , ஒளி வெள்ளம் கொண்டுதான்
வரவேற்போம் தீபாவளியை, வாழ்த்துக்கள்.

Friday, October 22, 2010

RAMKI @ PALGHAT ON SEPT 26 2010

HYDER BHAI & HIS PARTNER MAKKAH AUTO





RAMKI, WELL-WISHER SMT & SRI B. VEERABADRAN, CHENNAI

Thursday, August 12, 2010

RAMKI & DGP MR.D.SIVANANDHAN IPS @ MUMBAI

DGP MAHARASHTRA MR.D.SIVANANDHAN IPS,RAMKI & MR. RAJAN, K. ENTERPRISES MUMBAI

*

DGP MAHARASHTRA MR.D.SIVANANDHAN IPS, SMT. USHA & RAMKI AT MUMBAI ON AUG 1, 2010

RAMKI @ MUMBAI AUG 1, 2010

DGP MAHARASHTRA MR D.SIVANANDHAN IPS AND RAMKI AT MUMBIA ON AUG 1.

பருப்பு இல்லாம கல்யாணமா? ராம்கி இல்லாம, ஆதித்ய ஜோத் மருத்துவமனையில் பெரிய விழவா? என்று பாராட்டி கை கொடுத்து எப்படி இருக்கீங்க...எப்போ மும்பை வந்தீங்க கேட்ட திரு சிவானந்தன் ஐபிஎஸ் உடன் ராம்கி.


*

RAMKI AND DR S NATARAJAN, CHAIRMAN, ADITYA JYOT EYE HOSPITAL

தம்பி உடையான், படைக்கு அஞ்சான் என்பது பழமொழி
சகோதர பாசத்தோடு ராம்கியும் டாக்டர் நடராஜன் அவர்களும்.