Tuesday, April 6, 2010

என்றும் 16 போல், மகிழ்ச்சியாக இருப்பது எப்படி..எப்படி....??

(ஏ.ண்ணா, எப்படிண்ணா எப்பவும் இளமையா இருக்கிறது... சொஞசம் சொல்றேளா? என சீதா மாமி கேட்க, கிட்டு மாமா காபியை ஆத்திண்டு இப்படி எடுத்து விடறார்.......)

இ ப் ப டி..இ ப் ப டி - உங்களோட நிறம், எடை, இடை, வயது, உயரம் போன்றவற்றைப் பற்றி கவலைப்படாதீங்கோ. மனதை எப்போதும் இளமையாக, பாஸிடிவ்வாக வச்சுக்கோங்கோ....




ஷிப்ஸ்
- குதுகுல நண்பர்களை தேர்வு செய்து அவாளோட பழக கத்துகோங்கோ. நெகட்டிவ்வாக சிலர் எப்போதும் புலம்புவா இல்லயோ?. அவாளையெல்லாம் அப்படியே “போதும்டா சாமினு” ஓரம் கட்டிடுங்கோ


கத்துகுங்கோ - கற்றது நம் கை மண் அளவு தானே... எதையாவது எப்போதும் கத்துகிட்டேயிருங்கோ.....கம்யூட்டர் கிளாஸ், அனிமேஷன், யோகா, பாட்டு, நடனம், இசை, தையல், ஓவியம், தோட்டக்கலை, சான்றிதழ் படிப்பு, மேற்படிப்பு என்று எதையாவது வாழ்நாள் முழுவதும் கத்துகிட்டேயிருங்கோ. மூளைக்கு வேலை கொடுத்துகிட்டேயிருங்கோ... அதை சும்மா விட்டுட்டா அவ்வளவு தான், எதையாவது வேண்டாத்தை எல்லாம் கற்பனை செஞ்சுண்டு நம்மை நிம்மதி இல்லாம ஆக்கிடுமோல்யோ.. சின்ன சின்ன நிகழ்ச்சிகளையும், சம்பவங்களையும் என்ஜாய் பண்ணுங்கோ. எதையும் ரொம்ப சீரியஸாக எடுத்துக்காதீங்கோ... சமநிலையோட இருங்கோன்னேன்



செத்த (கொஞசம்) சிரிக்கப்படாதா - ம்..ம்...இன் இன்னும் கொஞ்சம் சத்தமா.....சிரிச்சுண்டே இருக்கப்படாதா?. (இதைத்தான் எதிர்பார்த்தேன்). உங்க கண்ணீர் வரும் வரை வாய்விட்டு சிரியுங்கோ.. காசா பணமா ஓய்.... ஜோக் அடிச்சு உங்களை சிரிக்க வைச்சுகிட்டேயிருக்கும் நண்பர்களோ, நண்பிகளோ (ஜொல்லு விடற பார்ட்டிகிட்டே மாட்டிகிடாதீஹ) நிறைய பேர் இருக்காள்யோ...அவாளோட நிறைய நேரத்தை ஜாலியா, நல்வழியில் செலவுசெய்யுங்கோ.....

உன் கண்ணில் ஜலம் வந்தால்.. - துக்கம், சோகம், தர்மசங்கடம் போன்ற நிலைகள் வரத்தான் ஓய் செய்யும். தடுக்க முடியாதோல்யோ? அழும்போது அழுது, அதை துடைச்சுடுங்கோ...நடந்த கசப்பான சம்பவத்தையே எப்பவும் நினைச்சுண்டு, கப்பல் கவிழ்தாப்லே ஓரமா உட்காராதீங்கோ...(துன்பம் வரும் வேலையிலும் சிரிங்கோன்னு வள்ளுவர் வாள் சொல்லியிருக்காள்ளயோ....அப்புறம் என்னவோய்..)
அடுத்த பக்கமும் இளமை திரும்புகிறது

உங்கள் விருப்பம் - உங்களுக்கு விருப்பமானவற்றோடு இருங்கோ.. அது உங்கள் குடும்பம், நண்பர்கள், செல்லப்பிரயாணி, பாட்டு, தாவரங்கள், மீன்கள், உடை, உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு என எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்... எப்போதும் FRESHஷாக இருங்கோ. பிடித்த உடைகளை போட்டுகோங்கோ. சென்டை ஸ்பிரே செஞ்சுண்டு கமகமனு இருங்கோ...இயற்கை அழகை ரசிக்க கத்துகோங்கோ. எல்லாத்தையும் மனதார ரசிக்கவேண்டியது அவசியம்ன்னா. (ஆஹா, என்னை என்னமா ரசிக்க ஆரம்பிச்சுட்டேள் பாத்தேளா)

நலம் தானா? (பி...பி....பீ,,, பி...பி....பீ........). –
உடல்நலம் நல்லா இருக்கா, இன்னும் பாதுகாப்பா வச்சுகோங்க
உடல்நலம் சரியில்லயா, சொஞ்சம் இம்புரூவ் பண்ணிக்கோங்கோ
இம்புரூவ் பண்ணமுடியாதா, மத்தவங்களோட உதவியை நாடுங்கோ

உலகம் பிறந்தது - உலகம் பிறந்தது நோக்கே நோக்குதான்டீமா.....கோவில், குளம், பூங்கா, சர்க்கஸ், மார்க்கெட், மால் னு போங்கோ...தினமும் 30 நிமிடமாவது நன்னா வேகமா நடந்துட்டுவாங்கோ.... முடிந்த விளையாட்டை விளையாடுங்கோ..... பக்கத்தில் உள்ள ஊருகளுக்கு குடும்பத்தோடு வார விடுமுறைநாட்களில் போய் தங்கிவிட்டு வாங்கோ....வம்பு வரும் இடத்திற்கோ, பிரச்சனை அல்லது அவமானம் ஏற்பட வாய்ப்புள்ள இடத்திற்கு தயவு செய்து போகாதீங்கோ

அன்பு நான் அடிமை - அன்புக்கு நான் அடிமைனு பாடுங்கோ...எல்லோரிடத்திலும் புன்முறுவலோட, செல்லம் செல்லம்னு கொஞ்சி அன்பு செலுத்துங்கோ.........உங்களோட அன்பை மத்தவாகிட்டே அடிக்கடி நன்னா வெளிப்படுத்துங்கோ......”

இப்படி இருந்தேள்னா, “அப்படியிருந்த நான்”, “இப்படி ஆயிட்டேன்னு” ரிவர்ஸ்லே பிட் ஓட்டலாமில்லயோ சீது??

அட இத்தனை சீக்கிரத்திலே நாம் பேசினதை படிச்சிட்டூ அவ்வாள் எல்லாம் எப்படி இளமையா ஆயிட்டா பாத்தேளா?....மொகத்திலே சந்தோஷத்தை பாருங்கோண்ணா?? என்றவாறு சீதாமாமி டிவி சீரியல் பார்க்க துவங்கினாள். எ........ எஸ்.......... கே........... ப்...............

ராம்கி

No comments:

Post a Comment