Friday, June 1, 2012

கார்த்திக் யாமினி திருமணம் KARTHICK WEDS YAMINI

KARTHICK WEDS YAMINI
யாமினி நீயும், கார்த்திக் நானும் கைபிடிச்சா திருவோணம்......

30ம் தேதி மாலை 3 மணிக்கு ஒரு வேனில் நானும் சீதாவும் போரூரிலிருந்து கிளம்பி ஆதம்பாக்கத்தில் உள்ள மீனா அக்காவீட்டிற்குச் சென்றோம். ராஜி குடும்பத்தார், உமா மற்றும் சுதா, சௌர்ணா மற்றும் ஹரியின் குடும்பத்தாருடன் அங்கிருந்து வித்யாவின் வீட்டிற்கு சென்று அவளையும் அழைத்துக்கொண்டு ஓட்டல் மாரிஸில் கார்த்திக் யாமினியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு 4.30மணிக்கு போய் சேர்ந்தோம். வித்யாவின் 2வது மகனுக்கு பிறந்தநாள் என்பதால் நாங்கள் இருவரும் ஓடும் காரில் வாழ்த்து தெரிவித்தோம். ஒரு மினி பிக்னிக் போவது போல் இருந்தது. Van Courtesy: Mutuhuanna - Special Thanks to you!

மும்பை 'QUEEN' யாமினி

ஓட்டல் மாரிஸில் முத்து அண்ணா, லலிதா மன்னி மற்றும் கார்த்திக்கை சந்தித்த பிறகு மாலை சிற்றுண்டிக்கு அழைத்துச்செல்லப்பட்டோம். பாதாம் அல்வா, போண்டா மற்றும் 2 வகை சேவையும், சுடச்சுட காபியும் உண்டு மகிழ்தோம். பிறகு கார்த்திக் மற்றும் முத்து அண்ணா அவர்கள் நான் வரைந்து எடுத்துச்சென்ற கார்ட்டூன்களை பார்த்தனர். அவர்களுக்கு பிடித்துவிடவே, அவைகளை ஒட்ட ஒரு போர்டு ஏற்பாடு செய்துதந்தனர். பிறகு அதை திருமண நிகழ்ச்சி வரிசைப்படி நான் மகேஷின் உதவியோடு சுமார் 17 கார்ட்டூன்களை ஒட்டினேன்.

தங்க மகனுக்கு, தங்கச் சங்கலி அலங்காரம்
பிறகு வரவேற்பு நேரம் நெருங்க நெருங்க, முதலில் ஸ்ரீராம் அவர்கள் மாப்பிள்ளை கார்த்திக்கு தங்க மாலை அணிவித்து நிகழ்ச்சிகளை துவங்கிவைத்தார். மயில்கழுத்து கலரில் கார்த்திக்கின் உடை பார்ப்பவரை கவர்ந்தது. மணப்பெண் யாமினியும் அழகாக அலங்கரிக்கப்பட்டு மேடைஏறினார்.

கீழ் கண்ட எனது கார்ட்டூன் சித்திரங்களை படம் பிடித்து எனக்கு அனுப்பியவர் Chinaவை சேர்ந்த Lingfei SUN (Thanks a million Lingfei SUN)

சுமார் 4 நாட்கள், தினமும் இரவு 10 முதல் 12 மணி நேரம் வரை அமர்ந்து வரைந்த கார்ட்டூன்கள் இவை. இவற்றுடன் மேலும் 4 படங்கள் இருந்தன. இடம் பற்றார்குறையால் அவற்றை பார்வைக்கு வைக்கமுடியவில்லை.
நாதஸ்வரம் குரூப் கார்ட்டூன் பக்கத்தை, அங்கு வந்திருந்த நாதஸ்வர வித்வானிடம் கொடுத்தேன். மிக்க மகிழ்ச்சி அடைந்து பத்திரமாக எடுத்துச்சென்றார். சார் நல்லா இருக்கு சார் என்று கைகொடுத்தார். எங்களுக்கும் மரியாதைகொடுத்து ஒரு சீன் வரைஞ்சு இருக்கீங்க என்று சொல்லி மகிழ்ந்தார்.






மெல்ல மெல்ல அந்தப்பக்கம் வருவோரும் செல்வோரும் அறையின் முன் வாசலில் வைக்கப்பட்ட எனது கார்ட்டூன்களை பார்த்து மகிழ்ந்தனர், ரசித்தனர். நான் தான் வரைந்தது என்று தெரிந்ததும் பலர் 'ரொம்ப நன்னா வரைஞ்சு இருக்கேள்' என்று தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். 'யார் அந்த ராம்கி, அவரை நாங்க பாக்கனுமே' என்று முத்து அண்ணா மற்றும் லலிதா மன்னியிடம் பலர் கேட்க, அவர்களிடம் என்னை அழைத்துச்சென்று 'இவா தான் அவா' என்று அறிமுகப்படுத்தினர். பிரபல கார்ட்டூனிஸ்ட் மதன் அவர்களின் உதவியாளர் என ஒருவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு என் கார்ட்டூன்களை பார்த்து மிகவும் பாராட்டினார். வெளிநாட்டுப் பெண்மணிகளும் (Including Lingfei SUN) எனது கார்ட்டூன்களை பார்த்து ரசித்தனர். பிறகு தொடர்ந்து நடக்க இருக்க நிகழ்வுகளை கார்ட்டூன் வரிசைப்படி கேட்டு அறிந்தனர். என்னையும் கார்ட்டூன் பக்கத்தில் நிற்க வைத்துப்புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். 'வாட் இஸ் நலுங்கு?' என்று கேட்டு நான் சொன்ன விளக்கத்தை கேட்டு சிரித்தனர். 'வெரி னைஸ் பிக்சர்ஸ்'.. 'ஒன்டர்புல் கார்ட்டூன்ஸ்' என்று கைகொடுத்து சென்றனர்.
முத்து (வெங்கட்), யாமினி, கார்த்திக், பகவதி, பாலு (நெல்லை)
கார்த்திக் என்னைவிட கொஞ்சம் உயரா இருக்கானோ?? -ரவி!!....

கார்த்திக், யாமினி அழகாக அலங்காரம் செய்து மேடை ஏற, ஒன்றின்பின் ஒருவராக அவர்களுக்கு கைகுலுங்கி வாழ்த்துதெரிவித்தவண்ணம் இருக்க, திடீரென சலசலப்பு ஏற்பட அனைவரும் வாசல் பக்கம் திரும்ப, ஆறு வெளிநாட்டவர்கள் உள்ளே வந்து கொண்டிருந்தார்கள். அதில் ஒரு பெண்மணி சற்று செக்ஸியாக இருக்க அனைவரும் அவரை பார்த்தனர். தன் கணவன்மார்கள் அப்பெண்மணியை பார்த்து ஜொல்விடுகிறார்களா என்று பல பெண்மணிகள் தங்கள் கணவரது பார்வையை நோட்டமிட்டனர். (என் மனைவியும் இதில் அடக்கம்). அப்பெண்மணிகள் கார்த்திக்கை ஒருவர்பின் ஒருவராக கட்டியணைத்து வாழ்த்து தெரிவக்க, பலருக்கு மேல்மூச்சு வாங்கியது. மச்சம் உள்ள ஆளு கார்த்திக் என்று பெருமூச்சுவிட்ட இளைஞர்களும் உண்டு. பிறகு அவர்கள் போட்டிகோட்டுக்கொண்டு போட்டோ எடுத்து தள்ளினர்.

வித்யா, மீனா அக்கா, பகவதி, சீதா, பாலு, உமா

முத்து அண்ணாவின் முதல் சம்பந்தி எங்களுடன் எப்போதும் ஜாலியாக பழகுவார். நீங்க முத்து அண்ணாவின் சம்பந்தின்னு எங்களுக்கு தெரியும் ஆனா அதுக்காக சேர் மேலே சேர் போட்டு உட்கார்ந்திருப்பது டூ மச் என நான் ஜோக் அடிக்க அப்போது தான், தான் இருண்டு சேர்களுக்கு மேல் உட்கார்ந்திருப்பது தெரிந்து அவர் சிரிக்க, முத்து அண்ணா முதல் அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர். சம்பந்தியின் மனைவியும் என்னுடன் சேர்ந்து கணவரை கிண்டல் செய்தார். இவரும் எனது கார்ட்டூன்களை வெகுவாக ரசித்தார். ரவி குடும்பத்தினர், ஸ்ரீராம், திருமதி ஸ்ரீராம், லாவண்யா மற்றும் குழந்தைகளை பார்த்து மகிழ்ந்தேன்.
பகவதி, ராஜி, உமா
கணேஷ், ராஜியை கலாட்டா செய்து கிண்டல் செய்ய சுற்றியிருந்த உமா, சீதா என அனவைரும் ஜாலியாக ஜோக் அடித்து கணேஷை கலாய்த்தோம். பாஸ்கர் மனைவியையும் குழந்தைகளையும் பார்த்து பேசினோம். மாப்பிள்ளை ராஜகுமார், நாராயணி, தீப்ஷிகா,தர்னேஷ் ராஜ் போன்றவர்களை கண்டு மகிழ்ந்தோம். நாராயணி திருமணத்தில் முன்னின்று, தன் பெற்றோர்களுக்கு அனைத்து உதவிகள் செய்தவண்ணம், தன் குழந்தைகள் மீது வைத்தகண் வாங்காமல் கவனித்துக்கொண்டு, படு பிஸியாக இருந்தை காணமுடிந்தது (என்னே அடக்கம்). ராஜ்குமார் உறவினர்களை நீண்ட வருடங்களுக்குப்பிறகு சந்தித்து பேசினேன். வரவேற்பின் நிறைவாக, யாமினி மற்றும் கார்த்திக்குடன் இளசுகளும், பெரியவர்களும் இசைக்கு ஏற்ப சிறிது நேரம் நடனமாடி மகிழ்ந்தனர். கார்த்திக், யாமினி மற்றும் அவளது சகோதரியும் மிக அழகாக இசைக்கு ஏற்ப ஸ்டெப்ஸ் போட்டு நடனமாடி அனைவரையும் மகிழ்வித்தனர். பாட்டில் சுவை இருந்தால் ஆட்டம் தானேவரும் அல்லவா?
இரவு விருந்தும் மிகவும் நன்றாக இருந்தது. முத்து அண்ணா நாங்கள் அனைவரும் வீட்டிற்குச் செல்ல ஸ்ரீராம் அவர்கள் மூலம் ஒரு வேன் ஏற்பாடு செய்து கொடுத்தார். (நன்றி முத்து அண்ணா) மீனா அக்கா குடும்பத்தாரை அவர்கள் வீட்டில் இறக்கிவிட்டு, சுமார் 10.30க்கு போரூர் போய் நானும் சீதாவும் சேர்ந்தோம்.
காலை முகூர்த்ததிற்கு நானும் சீதாவும் காலை 6.30க்கு கிளம்பினோம். போரூர் வரை இருசக்கர வாகனத்தில். பின் கிண்டி வரை ஷேர் ஆட்டோவில், பின் நந்தனம் வரை பஸ் பின் அங்கிருந்த ஆட்டோவில் ஓட்டல் மாரிஸ் வந்து சேர்ந்தோம். பின் காலை சிற்றுண்டி பொங்கல், இட்லி வடை சாப்பிட்டோம்….விரதங்கள் முடிந்து காசியாத்திரை சிறப்பாக நடந்தது. 'காசிக்கு போக வேண்டாம். என் மகள் யாமினியை உனக்கு திருமணம் செய்துவைக்கிறேன்' என்று திரு வி. ராமச்சந்திரன், கார்த்திக்கிடம் சொல்லி, இரண்டு தேங்காய்க்களை கொடுத்து, காசியாத்திரைக்கு தயாரான கார்த்திக்கை போகவிடாமல் திசைதிருப்பினார். 'மன்மத லீலையை வென்றார் உண்டோ'.......

இரண்டுமே, எனக்கே எனக்கா மாமா?
இது எத்தனை நாள் கனவு தெரியுமா யாமினி?...

தூக்கிட்டாங்கையா....மாமாக்கள் அலேக்கா தூக்கிட்டாங்கையா
முன்னேறு மேலே மேலே
மாலை மாற்ற வா.. பார்த்து பேச வா...
சிறிது நேரத்தில் திருமணச் சம்பிரதாயங்கள் தொடங்கின. யாமினி கார்த்திக் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்கவனே நல்ல உயரத்தில் கார்த்திக்… மணப்பெண் யாமினியின் மாமாக்கள் அவளை தூக்க, அதற்கும் மேலாக கார்த்திக்கை கணேஷ், பாச்சா எனும் இரண்டு மாமாக்கள் மேலும் அலேக்காக தூக்க, யாமினியும் விடாமல் உயர்ந்து மாலையை மாற்றியது ரொம்ப தமாஷாக இருந்தது. பின் இவர்களை ஊஞ்சலில் உட்காரவைத்து மெல்ல ஊஞ்சல் ஆட, ஒவ்வொரு பெண்மணியாக, தம்பதிகளின் கால் துடைத்து, பாலு பழம் கொடுத்துனர்.
இனி விடமாட்டேன் யாமி
யாமி இப்பவேவா...
இப்போ கையைபிடி கையைபிடிடா, அப்புறமா கட்டிபுடி கட்டிபுடிடா.....
ஆதம்பாக்கம் சித்தியுடன் நம் உறவினர்கள்
பின் ஒவ்வொரு பெண்மணிகளாக வண்ண அன்ன உருண்டைகளை இவர்களின் தலையைச்சுற்றி நால்புறம் கிரிக்கெட்டில் பந்து வீசும் ஸ்டைலில் வீசினர். 'கார்த்திக் வாயை முடிக்கோ இல்லேனா ஒரு உருண்டை உன் வாயில் விழும்' என்று நான் தமாஷ் செய்ய, காயத்ரி போட்ட உருண்டை அவரது மச்சினர் மீது சரியாக விழ, 'நேரம் பாத்தது அடிச்சிட்டாங்கையா' என நான் சொல்ல அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர். ஆரத்தி எடுக்க தம்பதிகள் மெல்ல மெல்ல அடிஎடுத்து திருமண ஹாலுக்குள் நுழைந்தனர். வாராயோ தோழி வாராயோ....
யார் அங்கே? நான் பவுல் போட ரெடி = ஆதம்பாக்கம் சித்தி
எல்லாம் தயார் டீலா...
முகூர்த்தத நேரம் நெருங்கியாச்சு..சீக்கிரம்
கரெக்டா இருக்கா?
அப்போது கோவில்பட்டி சித்தி, சித்தப்பா, நெல்லை மாமா, மாமியையும் தென்காசிமாமாவையும் பார்த்து பேசினோம். ஆதம்பாக்கம் சித்தப்பா, கோவில்பட்டி சித்தப்பா, நெல்லை மாமா, தென்காசி மாமா போன்றோர் ஒன்றாக அமர்ந்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.
பிரிவோம் சந்திப்போம்....கோவில்பட்டி சித்தியுடன் ராம்கி

நானும் கோவில்பட்டி சித்தியும் எப்போதும் சின்ன மாமியார்=மாப்பிள்ளை என்று பழகாமல் தாமாஷ் செய்து கொண்டு இருப்போம். இன்றும்அப்படியே எங்களது தமாஷ் துவங்கியது. பள்ளிக் குழந்தைகள்தான் அப்பப்போ சண்டை போட்டுகிட்டு கொஞ்சநேரம் பேசாம இருப்பா, கொஞ்சநேரத்திலே பேச ஆரம்பிச்சுடுவா. அதுபோல் தான் நம்ம சண்டையும்… போன்லயாவது பேசுங்கோ என்று சித்த சொன்னார்கள். (என்னாலே உங்க நிம்மதி கெடக்கூடாது அல்லவா என்று நான் (ராம்கி) சொல்ல நினைத்தேன். ஆனால் சொல்லவில்லை). என்றும் பிரிவோம் சந்திப்போம் ஸ்டைலில் நாங்கள் பேசும் சமயம் பார்த்து எங்களை போட்டோ எடுக்கச்சொன்னேன்.
நான் ரெடி..ரெடி...ரெடி
மூன்று முடிச்சு
தாலி கட்டப்போறேன்....கட்டபோறேன்.. கட்டிட்டேன்..
என் தங்க சங்கலி உனக்கே உனக்கு
திருமாங்கல்யத்திற்கு மரியாதை...
முகூர்த்தம் சரியான நேரத்தில் துவங்கியது. மும்பை திரு. ராமச்சந்திரன் மடியில் மணமகள் யாமினி உட்கார, மேளம் கொட்ட, கார்த்திக் யாமினிக்கு தாலி கட்டி 31.5.2012 அன்று வியாழக்கிழமை, வளர்பிறை ஏகாதசி திதி, ஹஸ்த நட்சத்திரம், சித்தயோகத்தில் 9.35க்கு கடக லக்னத்தில் முறைப்படி தன் துணைவியாக ஏற்றுக்கொண்டார். அட்சதைகளும், மலர்களும் அவர்கள் மீது நாங்கள் தூவ, தேவர்கள் மேலிருந்து ஆசிர்வதித்தனர். யாமினிக்கு ஒருதங்க சங்கலியும் போட்டு, மாங்கல்யத்தில் மஞ்சள் குங்குமம் இட்டு, யாமினியின் நெற்றியில் குங்குமம் இட்டு கார்த்திக் யாமினியின் கைபிடித்தார்.
பொட்டுவைத்த முகமோ...
தந்துவிட்டேன் என்னை...
பொரி சின்ன விஷயமில்லே யாமி
அதிக புகையில்லா ஹோமம். எப்படி நம்ம ஐடியா..
இந்த அம்மிக்கல் மாதிரி நாம என்றும் உறுதியா இருக்கனும்
மற்ற திருமண சடங்குகள் மீண்டும் துவங்க, அக்னியை இருவரும் வலம்வந்த பிறகு, ஸ்ரீராம் யாமினியின் கையில் பொரி போட, கார்த்திக் யாமினியின் கையுடன் இணைந்து அக்னியில் இட்டனர். பின் மெட்டியிடுவது, அருந்ததி பார்ப்பது போன்றவை நடைபெற்று, பெரியவர்களை ஒன்றாக நிற்கவைத்துப் புதுமணத் தம்பதிகள் நமஸ்கரித்தனர். இருசம்பந்திகளும் ஆரத்தி எடுக்க திருமணம் நல்லவிதமாக நிறைவுக்கு வந்தது.
திருமண நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்திருந்தது பாராட்டத்தக்கது. இந்நிகழ்ச்கிகளை அமெரிக்காவிலிருந்து கணினியில் நேரடியாக கண்டு ரசித்த ஸ்ரீவித்யா ரவி என்னுடன் போனில் பேசினார். 'அத்திம்பேர் எல்லோரும் உங்க கார்ட்டூன் பற்றிதான் என்கிட்ட சொல்றாங்க…கேமராவில் உங்க கார்ட்டூனையும் கொஞ்சம் போக்கஸ் செய்யச் சொல்லுங்க பிளீஸ்' என்றார். நேரடியாக திருமண நிகழ்ச்சிகளை அமெரிக்காவில் இருக்கும் ரவிகுடும்பத்தார் பார்த்து மகிழ்ந்தனர். (இந்த ஆன்லைன் ஐடியாவும் நான் முத்துஅண்ணாவிடம் முன்பே சொல்லியிருந்தேன்)
என் இணை சீதா ராம்கி, மாமி, ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் மாமா (நெல்லை)
இரண்டு உமாக்களுக்கு நடுவே சிக்கிய புள்ளிமான் (?) சீதா
தங்கை உமாவுக்கு நினைவுப்பரிசு தரும் அண்ணா முத்து
இப்போ தங்கை சீதாவுக்கு
சீதா,ராஜ்குமார் (முத்து அண்ணாவின் மாப்பிள்ளை)
சம்மந்திகள் பதில் மரியாதை, வந்தவர்களுக்கு மரியாதை செய்தல் போன்றவை சிறப்பாக நடந்தேரியது. நானும் சீதாவும், ராஜ்குமாரிடம் எப்போதும் சிரித்து பேசுவோம். அப்படியே அவரை கலாட்டா செய்ய சீதை ராஜகுமாருக்கு மகிழ்ச்சியில் கைகொடுக்க டக் என கிளிக் செய்தேன்.

முத்து அண்ணா, லலிதா மன்னி மற்றும் திரு வி. ராமச்சந்திரன், மீனா தம்பதிகள் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்றனர். கார்த்திக் யாமினி திருமணம் மிகவும் சிறப்பாக நடைபெற்ற மகிழ்ச்சியில் அனைவரும் ஒவ்வொருவராக தாம்பூலப்பையுடன் விடைபெற்றோம்.
கடைசியா சென்ற எனக்கு?? இத்திருமணத்தில் பல புதுமைகளை புகுத்திய கார்த்திக்கை என்னால் பாராட்டாமல் இருக்க முடியாது. இவரது பண்பை இன்றைய இளைஞர்கள் சிலராவது கடைபிடிக்க வேண்டும் என்பது என் அவா. யு ஆர் கிரேட் கார்த்திக்..கீப் இட் அப்.
வாழ்த்துக்கள் யாமினி, கார்த்திக்… நன்றி எஸ்வி மற்றும் விஆர் தம்பதிகளுக்கு.
We all missed Ravi & Family. Also Muthuanna's parents & Lalitha Manni's parents and other close relatives including Yamini's Mani Mama (USA) very much at the wedding.

நேர்முக வர்ணணை மற்றும் புகைப்படங்கள் RAMKI

Monday, April 30, 2012

மணிப்பா, ராஜம் மன்னியின் 50வது திருமண நாள்

மணிப்பா, ராஜம் மன்னியின் 50வது திருமண நாள்
SRI K.VISWANATHAN & SMT. RAJAM'S 50TH WEDDING DAY CELEBRATIONS AT CHENNAI
      எல்லோரும் வந்தாச்சா, நாங்க ரெடி - அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது...

என் பெரியப்பா மகன் மணியண்ணா எனும் மணிப்பா மற்றும் ராஜம் மன்னியின் 50வது திருமண நாள் விருந்து சென்னை நியு உட்லேன்ட்ஸ் ஓட்டலில் 29ம் ஏப்ரல் 2012 அன்று மிகச்சிறப்பாக நடந்தது.


 ஒரிரு நாட்களுக்கு முன்பு மணிப்பா எங்களை இவ்விருந்துக்கு போனில் அழைத்தார். 29ம் தேதி காலை 6 மணிக்கு கோவையிலிருந்து சென்னைக்கு வந்தேன். சுமார் 9 மணிக்கு நானும் சீதாவும் ஒரு வாடகை கார் எடுத்துக்கொண்டு முதலில் பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றோம். பின் அங்கிருந்து கபாலீஸ்வரர் கோவிலுக்கும் சென்றோம். கோவிலில் 50வது மணநாள்காணும் தம்பதிகளுக்காக சிறப்பு பிரார்த்தனை செய்தோம். பின் சுமார் 12 மணிக்கு நியு உட்லேன்ட்ஸ் ஓட்டலுக்குள் நுழைந்தோம்.


Seetha, Rajam Manni, Manippa & Kumar
(Photo: Sridhar)

மணிப்பாவின் இரண்டாவது மகன் ஸ்ரீதர் மற்றும் மனைவியைப் பார்த்தபின், மணிப்பா மற்றும் ராஜம் மன்னியை சந்தித்து வாழ்த்து கூறினோம்.  அப்போது சுடச்சுட 'சுப்' கொடுக்கப்பட்டது. முரளியின் மனைவி நித்யா எங்களை வரவேற்றாள்.



HOUSE FULL!!

அந்த அறை முழுவதும் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. எங்கும் உறவினர்களின் கூட்டம். பாலன் அண்ணா,  ராதை மன்னி, அவர்களது மகள் விஜி,  மாப்பிள்ளை மற்றும் பேரனை பார்த்தோம். சந்திரன் அண்ணா தன் துணைவி ரஞ்ஜனியுடன் வந்திருந்தார். இளம் தாத்தா பாட்டிகளான ரவி, கீதா ரவி, ராஜா ரவி,  மகள் ரேகா மற்றும் அவளது மகளையும் பார்த்தோம். விஜி, சீதா, ரேகா, கீதா போன்றவர்கள் தமாஷாக பேசிக்கொண்டிருந்தார்கள். கீதாவை சீதா வலுகட்டாயமாக பக்கத்து இருக்கைக்கு மாற்றி இளம் அழகிகளோடு போட்டோவுக்கு போஸ் கொடுக்க, கீதா செல்லமாக கோபித்தாள்.

LADIES SPL  - கீதா ரவி, விஜி (பாலப்பா மகள்), சீதா, ரேகா (ரவியின் மகள்)


 மேடையில் மணிப்பாவும், ராஜம் மன்னியும் தங்கள் அருக்கையில் அமர ஒருவர் பின் ஒருவராக அவர்களுக்கு நினைவுப்பரிசு கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தோம். அப்போது ஜெயமணி மன்னி 'என்ட்ரி' கொடுக்க வரிசையாக அனைவரும் எழுந்து நின்று வரவேற்றோம். இவரை தொடர்ந்து இவரது மகள் உஷா (தன் கணவருடன்), குமாரின் மகன் என வந்தனர்.  உஷா சீதாவுடன் சிறிது நேரம் பேசிய பிறகு கடைசியாக, 'நீங்க மைதிலிதானே?' என்று கேட்க, சீதா (கடுப்பாகி)  'மரியாதையா அந்தப்பக்கம் போயிடு' என்று செல்லமாக கோபித்துக்கொண்டாள். சீதா சந்தோஷமா அனைவருடன் பேசி மகிழ்ந்தாள். 'இளம் அம்மா' ரேகா,'என்றும் அழகி' கீதா, நடிகை சுஹாசினி சாயலில் விஜி, 'உயிர் உள்ளவரை உஷா'வுடன் சிறிது நேரம் தமாஷாக நானும் சீதாவும் பேசி மகிழ்ந்தோம்


                   MADE FOR EACH OTHER !!
பிறகு திருமணநாள் காணும் தம்பதிகள் மாற்றிக்கொள்ள  மாலை கொடுக்கப்பட்டது. அப்போது மணிப்பா, தானாக மாலையை தன் கழுத்தில் போட்டுக்கொள்ள, 'அண்ணாவுக்கு என்ன அவசரம்?' என்று தமாஷ் செய்தார்கள். பிறகு, ராஜம் மன்னி, அண்ணாவுக்கு மாலையிட, அண்ணா மன்னிக்கு மாலையிட கைத்தட்டல் பலமானது.


மாலை போடவா? வாங்கோண்ணா...வாங்கோண்ணா

                                     நன்னா பிடிச்சுக்கோ..கட்..கட்

பிறகு, இத்தம்பதிகள் கேக் வெட்டி தங்கள் 50வது திருமண நாளை கொண்டாடினர். சுமார் 20 கேமிராக்கள் அப்போது மின்னியது. மணிப்பா, மன்னிக்கு கேக் ஊட்டி விட்டார். பிறகு மன்னி, மணிப்பாவுக்கு கேக் ஊட்ட, அண்ணா பெரிதாக வாய் திறந்தார். பலத்த கைதட்டலோடு கேக் வெட்டப்பட்டது.


                                    கேக் ஊட்டியாச்சு அதுக்குள்ள...

 வந்தவர்கள் அனவைருக்கும் இத்தம்பதியர் தங்கள் 4 போட்டோக்கள் பதித்த கப்புகளை அழகான சுறுக்குப்பையில் போட்டு நினைவுப் பரிசாக கொடுத்தனர். அதில் நிறைய சாக்லேட்கள் இருந்தன.  அறைமுழுவதும் உறவினர்களின் கூட்டம் வழிந்தது.  முரளி அமெரிக்காவில். அன்னம்,   செல்லா, திருமதி சுவாமி மற்றும் கணேசன் குடும்பத்தினர்கள் மிஸ்ஸிங். பங்கஜம் அக்காவின் கணவரையும் நினைவுகூர்ந்து பார்த்து பேசினேன். திரு கல்யாணம் அவர்களையும் சந்தித்தேன். நீண்ட வருடங்களுக்குப்பிறகு திருமதி மற்றும் திரு அனந்தகிருஷ்ணனை சந்தித்தேன். எனக்கு திருமணம் ஆனபோது இவர்கள் நெல்லையில் இருந்தார்கள், ராதை மன்னியின் அழைப்பை ஏற்று, என் திருமணத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.



                                  LINED UP -  அனந்த கிருஷ்ணன்,  இரண்டாவதாக பாலப்பா,                பங்கஜத்தின்   ஆத்துக்கார், சந்திரன்,  திருமதி ரஞ்ஜனி சந்திரன்,   கீதா ரவி

அதற்குள் சாப்பாடு தாயாராகிவிட்டது.  பந்திக்கு முந்துங்கோ என குரல் கொடுக்க, சுடச்சுட சாப்பாடு சாப்பிட்டுவிட்டு விடைபெற்றோம். நாங்கள் சென்றமைக்கு அண்ணாவும் மன்னியும் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். ராதைமன்னி 'குமார் அடிக்கடி போன் செய்து எங்களோடு பேசுவான்' என்று கூறி மகிழ, 'இவா எங்க ஆத்துப்பக்கம் போனா எங்களை பாக்காம போகமாட்டாடி' என்று ராஜம் மன்னி சொல்லி மகிழ்ந்தார்கள். ஸ்ரீராமை ஏன் அழைத்துவரவில்லை என பலர் கேட்டனர்.
பாலண்ணா மற்றும் சந்திரன் அண்ணா அவர்கள் எனது வேலையைப்பற்றி விசாரித்தார். திருமதி நித்யா முரளியுடன் சிறிது நேரம் பேசியபின் அனைவரிடமும் பிரியாவிடைபெற்று அவசரமாக கிளம்ப ஆரம்பித்தோம். நிறைய உறவினர்கள் பலர் இருந்ததும் அறிமுகம் கிடைக்கவில்லை. ராஜம் மன்னியின் சகோதரி அவரைப்போலவே இருந்ததால் விஜியிடம் கேட்டு தெரிந்து கொண்டேன்.


பிறகு மாலை மணிப்பாவுக்கு மீண்டும் போனில் நான்  நன்றி தெரிவிக்க, 'நீங்க வந்ததுக்கு  நாங்க தானே உங்களுக்கு நன்றி சொல்லனும்' என்று அண்ணா சொன்னார். 'நீயும் சீதாவும்  வந்ததுது ரொம்ப சந்தோஷம் குமார்' என்று  மன்னி சொல்லிய பிறகு மறவாமல், ' நீ கொடுத்த அஷ்டலட்சுமியும் நல்லாயிருக்குப்பா' என்றார். அப்போது ஸ்ரீராம் மன்னிக்கு போனில் வாழ்த்து தெரிவித்தான். ஏப்ரல் 29ம் தேதி ஒரு மறக்க முடியாத நாளாக மணிப்பா, ராஜம்மன்னிக்கு மட்டுமின்றி எங்களுக்கும், புரசைவாக்கம் குடும்பத்தார் பலரை ஒரே இடத்தில்   சந்தித்து மகிழ்ந்தது ஒரு 'திருநாளாக' இருந்தது.

மீண்டும் மணிப்பாவுக்கும் ராஜம் மன்னிக்கும் எங்கள் கே ஆர் குடும்பத்தார் சார்பாக வாழ்த்துக்களும் நன்றிகளும்
Spl thanks to Murali, Nitya Murali (Organizer of the event), Sridhar & Mrs. Sridhar for everything.
என்றும் அன்புடன் குமார்.

Saturday, April 14, 2012

RAMKI'S CARTOONS ON EGGS


ராம்கியின் கார்ட்டூன்கள் கோழிமுட்டையின் மீது
ராம்கி (கே ஆர். ராமகிருஷ்ணன்)

கார்ட்டூன்கள் கவலையைத்தீர்க்கும் ஒரு வலிநிவாரணி போன்றது என்று ஒரு முறை திரு ஏபிஜே கலாம் கார்ட்டூன்கள் பற்றி பேசியதை தமிழில் மொழிபெயர்த்து அதை அவருக்கே அனுப்பிவைத்தேன். அவர் பார்த்து ரசித்து ஆல் தி பெஸ்ட் என்று இஆட்டோகிராப் செய்து அனுப்பிவைத்தார்.




சமீப காலமாக என் ஓய்வு நேரத்தில் நான் கார்ட்டூன் வரைவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றேன்.


பள்ளி பருவத்தில் எனது சகோதரர் திரு. கே ஆர் விஜயராகவன் அவர்கள் பேனாவால் ஒருசிறு கோடுகளால் ஓவியங்கள் வரைவதை பார்த்து, எனக்கும் படங்கள் வரைய ஆர்வமானது. பின் ஒரு சில படங்களை வரைந்தது நினைவு உள்ளது. அதில் நான் வரைந்த ஆஞ்சநேயர் ஓவியம் நன்றாக இருந்ததாக என் உறவினர்கள் சொன்னார்கள். சென்னை சந்தமாமா, மங்கை பத்திரிக்கையில் இருந்த போது தினத்தந்தி பேப்பரில் அவ்வப்போது சிரிப்பு பகுதியில் எனது கார்ட்டூன்கள் ஒருசில வெளியாகியது. என் மதிய நேர சாப்பாட்டு வேலையில் நான் வரைந்த சில கார்ட்டூன்களை சந்தமாமாவில் புகழ்பெற்று விளங்கிய தலைமை ஓவியர் திரு. சங்கர் அவர்களிடம் அடிக்கடி காட்டி எவ்வாறு உள்ளது என கருத்து கேட்பேன். ரொம்ப நல்லா பண்ணுயிருக்கேங்க..இன்னும் நிறைய ஓவியங்கள் தொடர்ந்து வரையுங்க...என்று பாராட்டுவார்.



வனிதா எனும் தெலுங்குப் பத்திரிகையில் ஒரு நாள் ஓவியர் வராததால் கார்ட்டூன் வரைய எனக்கு திரு நரசு என்பவர் வாய்ப்பு கொடுத்தார். அதை சாப்பாட்டு இடைவேலையில் முடித்துக்கொடுத்தேன். மங்கையர் மலரில் ஒரு கட்டுரை எழுதி அனுப்பும்போது அதன் ஓரத்தில் ஒரு சில கார்ட்டூன்களை வரைந்து அனுப்பினேன். அட என்ன ஆச்சர்யம், அக்கட்டுரையோடு எனது கார்ட்டூன்களும் வெளியாகியிருந்தது என் ஊக்கத்தை அதிகமாக்கியது.



மும்பையில் 6 வருடங்கள் வேலைபார்த்தேன். அப்போது ஒரு நாள் தேனா வங்கியில் பணம் எடுக்கச் சென்றிருந்தேன். சற்று நேரமாகவே எனக்கு போர் அடித்தது. அதனால் கையில் செக்புக் போட்டு கொண்டுபோயிருந்த வெள்ளை கவரின் மீது ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தேன். அந்த கிறுக்கல் கார்ட்டூன்களாக இருந்ததை பார்த்து பக்கத்தில் இருந்த ஒரு இந்திக்காரர் அதை வாங்கி அப்படங்களை தன்னுடன் வந்தவர்களுக்கு காட்டி பகுத் அச்சாஹே என்று பாராட்டி கைகுலுக்கினார்.

மும்பையிலிருந்து வெளிவரும் பிரபல மும்மை தமிழ்டைம்ஸ் தினசரியில் எனது சிரிப்பு மற்றும் கார்ட்டூன்கள் வெளிவந்துள்து. இப்படி படிப்படியாக கார்ட்டூன்வரைவதில் ஆர்வம் அதிகமானது. தினமலர் வாரமலர் மற்றும் ஆனந்த விகடனில் எனது சிரிப்புகள் வெளிவந்துள்ளன.


எனது கார்ட்டூன்களை மிகப்பிரபல கார்ட்டூனிஸ்ட்களான திரு. திரயம்பக் ஷர்மா மற்றும் மும்பையை சேர்ந்த விவேக் போன்றவர்கள் பார்த்து பாராட்டி மேலும் வரைய ஊக்கமளித்தார்கள். அகில இந்திய கண் மருத்துவர்கள் சங்க மாநாட்டு அப்ஸ்ட்ராக்ட் புக்கில் எனது சேர்மென் டாக்டர் ராமமூர்த்தி அவர்கள் மாநாட்டின் போது போன் பேசுவது கூடாது போன்ற ஒரு கார்ட்டூன் தேவை என்றும், அப்புத்தகம் பிரிண்ட் செய்யும் அதிகாரியிடம் யாராவது கார்ட்டூனிஸிட் இருக்கிறார்களா என்று கேளுங்க என்று என்னிடம் கூறினார். சரி என்று அவரிடம் கேட்க, தற்போது கோவையில் எனக்கு தெரியந்தவர்கள் யாரும் இல்லை என கூறினார். இருப்பினும் எனது ஆர்வம் காரணமாக நானே ஒரு சில கார்ட்டூன்களை வரைந்து என் சேர்மெனிடம் காட்டினேன். அடி நீங்க கார்ட்டூனும் போடுவீங்களா... நல்லா வந்திருக்கே இதையே நம்ப புக்கில் போடலாம் என்று உற்சாகமளித்தார். புத்தகத்தில் வெளியானதும் பலர் என் படத்தை பார்த்து பாராட்டினர்.



அடுத்த ஒரு முறை என் சேர்மென் ஒரு மாநாட்டில் கண் மருத்துவத்தில் தமாஷ் (Humour in Ophthalmology) என்ற தலைப்பில் பேச அவருக்கு அழைப்பு வர, உடனே எனை அழைத்து எனக்கு கார்ட்டூன்கள் வரைய வாய்ப்பு அளித்தார். அப்போது, கார்ட்டூனில் சம்பந்தப்பட்டவர்களின் தலைப் பகுதியை மட்டும் போட்டோவாக வாங்கி, உடல் பாகத்தை கார்ட்டூனாக வரைந்தேன். அவர் த எனது கார்ட்டூன்களை பெரிய ஸ்கிரீனில் போட்டு பேசினார். பலரும் பார்த்து கைதட்டி சிரித்து மகிழ்ந்தனர். பலர் எனது கார்ட்டூன்களை பார்த்து என்னை வெகுவாக அம்மாநாட்டில் பாராட்டினர். முன்னால் தலைவர் டாக்டர் பாபு அவர்களும் எனது கார்ட்டூன் திறமையை பாராட்டி இமெயில் அனுப்பினார்.





ரயிலில் கோவைக்கும் சென்னைக்கும் அவ்வப்போது தனியே செல்லவேண்டியிருக்கும். அப்போது இரவு 9 முதல் 10.30 வரை மிகவும் போர் அடிக்கும். அதனால் எப்போதும் ஒரு நோட்டுபுத்தகமும், 3 கருப்பு ஸ்கெச் பேனாக்களையும் எடுத்துச்செல்வேன். போர் அடித்தால் உடனே ரயிலில் படம் வரைய ஆரம்பித்துவிடுவேன். சக பயணிகள் என் படத்தை பார்த்து பாராட்டுவார்கள். சார் நீங்க கார்ட்டுனிஸ்டா....நீங்க ஓவிய ஆசிரியரா என்று எல்லாம் கேட்பார்கள். அட இல்லைங்க போரடிக்காம இருக்க வரைஞ்சுகிட்டுவரேன் என்றதும், சார் ரொம்ப நல்லா வரையரீங்க...புத்தகங்களுக்கு அனுப்பலாமே என்பார்கள்.


ஒரு முறை வட மாநிலத்திலிருந்து ரயிலில் சென்னைக்கு வந்து கொண்டிருந்த போது ஒரு சமபயணி நான்வரையும் படத்தை பார்த்து, சார் என்னையும் வரைஞ்சுகொடுங்க என்றார். எப்படியோ ஒருவழியாக அவரைப்போலவே வரைந்து கொடுத்தேன். மிகவும் மகிழ்ந்தார். சார் ரயிலைவிட்டு இறங்குவதற்கு முன் நீங்க வரைஞ்ச அனைத்து படங்களையும் எனக்கு கொடுங்க சார். என் மகனிடம் கொடுத்து இதைப்பார்த்து அவனையும் வரையச் சொல்கிறேன் என்று வாங்கி சென்றார். வெளியே ஏதாவது போர்டையும் பேனாவையும் பார்த்தா என் கைகள் வரையத்துடிக்கும். எங்கள் மருத்துவமனையில் தினமும் ஒரு பாஸிடிவ் திங்கிங் தகவலுடன் அதற்கு ஏற்ற கார்ட்டூனையும் வரைந்து சிலசமயங்களில் தமிழாக்கமும் செய்து தகவல்பலகையில் போடுவேன். பலர் இதைப்பார்த்து, படித்து, இதன் நகல் எனக்கு வேண்டும் என்று கேட்டு வாங்கி எடுத்துச்சென்றுள்ளார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சி தரும் தகவல்.






கோவை தேனா வங்கிக்கு எனது கார்ட்டூன்களை போட்டுக்கொடுத்தேன். வங்கி மேனேஜர் வெகுவாக பாராட்டியதோடில்லாமல் பல இடங்களில் மாட்டியுள்ளார்.


கார்ட்டூன்கள் கோழிமுட்டையின் மீது எப்படி இருக்கு, இன்னும் நிறைய வரைய பயிற்சி எடுக்க வேண்டும் நான் என்பது தெரிகிறதல்லவா?
ராம்கி

Saturday, March 24, 2012

அப்போ....அப்போ, இப்போ...............இப்போ

அப்போ....அப்போ
இப்போ...............இப்போ
ராம்கி




அப்போ கையில் நோட்புக்

இப்போ (கம்யூட்டர்) நோட் புக்



அப்போ வகுப்பில் முதலாக வர ஆசை

இப்போ சிறந்த பணியாளராக வர ஆசை



அப்போ டீச்சரைப் பார்த்தாலும், தேர்வு என்றாலும் பயம்

இப்போ அதிகாரியை பார்த்தாலும், டார்கெட்டுக்கும் பயம்



அப்போ கையில் நோ போன்

இப்போ நோக்கியா போன்



அப்போ கையில் பாக்கெட் மணி

இப்போ சம்பளமே பாக்கெட் மணி



அப்போ பட்டாசுக்காக காத்திருப்பு

இப்போ தீபாவளி போனசுக்கு காத்திருப்பு



அப்போ ஸ்கர்ட்

இப்போ மினி கைக்ரோ ஸ்கர்ட்



அப்போ பாடிப்பாவாடை

இப்போ பாடியே ஆடை



அப்போ இரண்டை பின்னல்

இப்போ வாழ்க்கையே பின்னல்



அப்போ வாசலில் மெயிலுக்காக காத்திருப்பு

இப்போ கையில் இமெயிலுக்காக காத்திருப்பு



அப்போ நிறைய நோட்டீசு கல்யாணத்துக்கு

இப்போ நிறைய நோட்டீசு விவாகரத்துக்கு



அப்போ வாசலில் அம்மா காத்திருப்பு

இப்போ வாசலில் நம் குழந்தைக்கா காத்திருப்பு



அப்போ வீட்டிலேயே இனிப்பு

இப்போ இனிப்பு கடையை நம்பியே நம்இருப்பு



அப்போ எப்போதும் சிரிப்பு

இப்போ எப்போதும் கடுகடுப்பு



அப்போ கூட்டுக்குடும்பமே விசேஷம்

இப்போ விசேஷத்தில் தான் ஒன்றுகூடுது குடும்பம்



அப்போ கொஞ்சம் சம்பளம், நிறைய மகிழ்ச்சி

இப்போ கொஞ்சம் மகிழ்ச்சி, நிறைய சம்பளம்



அப்போ கொஞ்சமாய் வியாதிகள்

இப்போ எக்கச்சக்கமாய் மருத்துவமனைகள்



அப்போ காபிகொட்டைக்கு கியூ

இப்போ டாஸ்மார்க்கு கியூ



அப்போ கட்டையில் நம் எரிப்பு

இப்போ கட்டையானபின் எலக்ட்ரிக்கில் நம் எரிப்பு



ஆக எதுவும் மாறவில்லை…………

ஆக எதுவும் மாறவில்லை………………

ராம்கி

Thursday, March 22, 2012

POSITIVE THINKING ARTICLES IN TAMIL

இன்றே செய்
RAMKI

காலம் பொன்போன்றது. நாளை என்பது மிகவும் தாமதமாகும் எனவே, இன்றைய தினம் என்பது உங்கள் பொன்னான நேரத்தை பயனுள்ளதாக செலவு செய்ய அருமையா தருணம். இன்றே முடிக்கக்கூடிய வேலைகளை, நாளைக்கு என்று தள்ளிப்போடதீர்கள். முடிவு எடுக்க. முன்னேற்றமடைய, வேலை செய்ய ஏற்றது இன்றைய பொன்னாள் தான். நாளை நடப்பது யாருக்கும் தெரியும்?. ஆனால், இன்று என்பது உங்கள் உள்ளங்கையில் தயாராக, இப்போதே இருக்கிறது. ஒவ்வொரு வினாடியும், உங்களுக்குக் கிடைத்த பொக்கிஷமாக நினைத்து செயல்படுங்கள். அதற்கு ஈடுஇணை எதுவுமில்லை. தயக்கம் எதுவுமின்றி, இப்பொழுதுதே செயல்பட துவங்கவும். நீங்கள் துவங்கியதை வெற்றிகரமாக செய்துமுடிக்க அனைத்துச் சாத்திய கூறுகளும் தயாராக இன்றே இருக்கும் போது, ஏன் நாளைக்கு என தள்ளிப்போடுகிறீர்கள்? இன்று செய்ய துவங்குவது, இன்றே நல்லபடியாக முடியும். எதையும் நாளைக்கு செய்யலாம் என்று இருந்தவிட்டால், அது மறந்து போகலாம் அல்லது செய்ய முடியாமலும் போகலாம் அல்லவா? சாக்குபோக்குச் சொல்பவர்கள் தான், எல்லாவற்றையும் நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம், நாளை செய்யலாம் என வந்த நல்ல வாய்ப்பை தவறவிடுவார்கள். எனவே, நன்றே செய்வீர், அதை இன்றே, இப்பொழுதே, செய்து எடுத்துகாரியத்தில் வெற்றிபெற இப்பொழுது என் நல்வாழ்த்துக்கள்

*
திருப்பு முனை
RAMKI

உங்களது பிரச்சனைகளோ, பாதிப்புகளோ சில நேரங்களில் உங்களிடம் ஒரு பெரிய மாறுதலை ஏற்படுத்தலாம். பிரச்சனைகள் உங்களைப் பின்தொடர்ந்துவரும் பொழுது, அதனை சமாளிக்கவும், அதிலிருந்து தப்பிக்கவும் நீங்கள் முழு மூச்சில் முயற்சி செய்ய துவங்கிவிடுவீர்கள். உங்களின் பிரச்சனைகள், உங்களது பலவீனம் என்ன என்பதை உணர்த்திவிடும். அப்பொழுது பலவீனங்களை பின்தள்ளி முன்னேற தானாக செயல்பட ஆரம்பித்துவிடுவீர்கள். ‘புது பிரச்சனை வந்துவிட்டதே’ என நொந்து போவதை தவிர்த்து, அதனை சமாளிக்க பழகிக்கொள்ளவேண்டும். வாழ்வில் ஒவ்வொரு சவால்களும் உங்களது நிலையை உயர்த்திக்கொண்டே போகும்.
உங்கள் பிரச்சனைக்கு நீங்களும் ஒரு காரணமாக இருக்கும்பொழுது, அதிலிருந்து தப்பிக்க பாஸிட்டிவ்வாக எடுத்துக்கொண்டு, அதையே உங்கள் வாழ்வில் ஒரு ‘திருப்பு முனையாக’ நினைத்து சவால்களை முறியடிக்க முயலவேண்டும். சரித்திரத்தை எடுத்துக்கொண்டால், பல்லாயிரக்கணக்கான பிரச்சனைகளிலிருந்து தான் சமுதாயம் நன்கு முன்னேறியுள்ளதை தெரிந்துகொள்கிறோம். அதுபோன்று, உங்கள் வாழ்வில் நீங்கள் எதிர்கொண்ட சவால்களால் உங்களின் நிலையை உயர்ந்தியிருப்பதை உணர்வீர்கள். ‘எல்லம் நன்மைக்கே..’, ‘ஆல் இஸ் வெல்’ என்று எல்லாவற்றையும் பாஸிட்டிவ்வாக வாழ கற்றுக்கொண்டால், பிரச்சனைகள் என்றும் உங்களை நிழல்போல் தொடர்ந்து வராது என்று சொல்லவும் வேண்டுமோ?
*
மனிதன் மனிதன், அவனும் மனிதன்
RAMKI

உங்களுடன் ஒருவர் தொடாபில் இருக்கும் பொழுது அவரை முதலில் ஒரு மனிதனாக மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். அவர் உங்களது இமெயிலை பெறுபவராக இருக்கட்டும், அல்லது போனில் பேசுபவராக இருக்கட்டும், அல்லது ஒரு தனி தபர் உங்களை சந்திக்க வரிசையில் காத்திருப்பவராக இருக்கட்டும். இப்படி யாராக இருந்தாலும் அவரும் ஒரு மனிதன் என்பதை கவனித்தில் கொள்ளவேண்டும்.
ஒவ்வொருவருக்கும் பல நம்பிக்கைகள், கனவுகள். மகிழ்ச்சிகள், வலிகள், பிரச்சனைகள், சாமர்த்தியங்கள். விருப்பங்கள், செய்யவேண்டிய வேலைகள், தனிப்பட்ட கருத்துக்கள் என பல்லாயிரம் உள்ளன என்பதை மறந்துவிடாதீர்கள். அவரையோ அல்லது அவளையோ உங்களுக்கு பிடித்தும், பிடிக்காமலும் இருக்கலாம். அவரது கருத்து உங்களோடு ஒத்துப்போகலாம், போமாகலிருக்கலாம். இருப்பினும், அவர்களை மரியாதையோடு, புரிந்து கொண்டு உதவ முன்வரவேண்டும்.

இவவுலகில் உங்களோடு இருப்பவர்கள், உங்கள் வாழ்வு மேலும் பிரகாசிக்க வைப்பவர்களாக பாவியுங்கள். மற்றவர்களோடு உதவ, கவனித்துக்கொள்ள உங்கள் நேரத்தை ஒதுக்குங்கள். மற்றவர்களோடு செலவிடும் பொழுதை பொன்னான தருணமாக நினைத்து, அவர்கள் மீது தனிகவனம் செலுத்தி, அவர்களது கருத்துக்களுக்கு செவிசாய்க்கவும். உங்களது உறவுக்கு மதிப்பளித்து, தொடர்ந்து என்றும் அன்போடு பழகுங்கள். அவர்களை மதிப்பது, கவனிப்பது, பதிலளிப்பது, பாராட்டுவது, இடமிளிப்பது போன்றவந்றை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மட்டுமின்றி, உங்கள் வாழ்க்கைப் பாதையில் சந்திப்பவர்களுக்கெல்லாம் நீங்களாகவே முன்வந்து உதவ தயங்காதீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களுக்கு மதிப்பளித்து வாழ்வது, உங்கள் வாழ்க்கையில் ஒரு தனிஅர்த்தத்தை ஏற்படுத்தும் என சொல்லவும் வேண்டுமோ?

*