Friday, December 11, 2009

நடராஜனும் நடிகர் வடிவேலுவும் சந்தித்தால்

கற்பனை:- ராம்கி

(ஒரு மாலைப் பொழுதில் மும்பை விமான நிலயத்தில் இருவரும் சந்திக்கிறார்கள்)

வடிவேலு: அட டாக்டர் சாரா எப்படி இருக்கீங்ககக, என் ராசா
நட்டி: நான் நல்லா இருக்கேன் வல்ஸ் . கிரேட்
வடிவேலு: ஆமா, எங்க தம்மாத்தூண்டு பெட்டிய எடுத்துகிட்டு கிளம்பிடீஹ
நட்டி: (ரஜினி ஸ்டைலில்) அமெரிக்கா
வடிவேலு: அமா, போனவாரம் தானே ஆங்காங்க்கு போய் வந்தா மாதிரி இருக்கு
நட்டி: போய் வந்தா மாதிரியா….. சத்தியமா போனேய்யா,,அதுக்கு முந்தய வாரம் உர்ஸ்பர்க் போனேன்
வடிவேலு: என்னது, என்னது, அதுக்கு முந்தய வாரம் உர்ஸ்பர்க் கா....
நட்டி: என்னய்யா இதுக்கே ஆடிபோயிட்டே.... அதுக்கு முந்தய வாரம் டர்க்கி போனேன்,,அதுக்கும் முன்னாடி வாரம் வயிநா
வடிவேலு: என்னங்க இது?? நாங்க என்னமோ டீக்கடைக்கு நாலுதபா போய்வந்தா மாதிரி சர்வ சாதாரணமா சொல்றீங்க
நட்டி: அட ஆமாயா இந்த வருஷம் அப்படித்தான் போய்வந்துகிட்டு இருக்கேன்
வடிவேலு: அப்போ நாடுநாடோ சுத்தரேன்னு சொல்லுங்க
நட்டி: நாடு நாடாவா, கண்டம் கண்டமா போய் வந்துகிட்டு இருக்கேய்யா
வடிவேலு:: அட என்னங்க சொல்றீங்க, எனக்கு தலைய சுத்துதே சாமி, என்ன வச்சு காமடி கீமடி எதுவும் பண்ணலயே?
நட்டி: அட இல்லயா....கேட்ட உனக்கே தலையை சுத்துதுன்னா, பறந்து பறந்து போய் வர எனக்கு எப்படி இருக்கும் பாத்துக்கோ....
வடிவேலு:: அப்போ மும்பையிலே இருக்கிறதே இல்லயா?
நட்டி:: எவன் சொன்னது அப்பப்போ மும்பையிலே என் பேஷன்டை பார்த்துகிட்டுதானே இருக்கேன்
வடிவேலு:: அட என்னங்க சொல்றீங்க, எல்லா நாடுக்கும் வாராவாரம் கிளம்பிடறீங்க, வாயிலே நுழையாத நாட்டுக்கெல்லாம் போய்வந்துகிட்டு இருக்கீங்களே சாமி
நட்டி:: ஆமாய்யா
வடிவேலு: அதனாலதான் அந்த ராம்கி உலகம் சுற்றும் வாலிபர் யார்னு நான் கேட்டப்போ உங்க பேரை சொன்னாரா...அடடா இப்பதானே அவர் சொன்னது புரியுது இந்த முட்டாபயலுக்கு
நட்டி: அவருக்கு தெரியாமயா,,,
வடிவேலு:: ஆமாமா எப்பபாத்தாலும் இரண்டு பேரும் சத்தம் போடாமா கம்யூட்டர்லே மேட்டரை ரவுண்டுஸ் விட்டுகிட்டு இருக்கீங்களா??
(நட்டிக்கு எஸ் எம் எஸ் வருகிறது)
வடிவேலு:: (தலையை எட்டி பார்த்த வாரே) யார்கிட்டேந்து எஸ்எம்எஸ்ஸு....அடுத்த வாரம் வெளிநாட்டு்க்கு கீட்டுக்கு ஏதாவது,,,,
நட்டி:: அட ஆமாய்யா
வடிவேலு: ஆரம்பிச்சுட்டாரய்யா ஆரம்பிச்சுட்டாரய்யா,, இவரு விடர டலயாக்கை கேட்க ஆள் இல்லையா,,, இப்பவே கண்ணை கட்டுதே சாமி அப்பப்பா என்னா நக்கலு, தாங்கமுடியலயே சாமி (மூச்சு வாங்குகிறார்)

நட்டி::: எங்கே போறீங்கன்னு கேக்கலயே
வடிவேலு:: அதைவேற நான் கேட்கனுமா..... ஜப்பானு கிப்பானு , ஜெர்மணி ஜெமினின்னு எதையாச்சம் சொல்லி எங்களை கவுப்பீங்க,,,
நட்டி:: அட அதலாம் இல்லய்யா
வடிவேலு: அப்ப ஹி ஹி ,,ஐய்யோ ஐய்யோ,,,, அப்ப லோக்கல்லே தானே அடுத்து போகப்போறீங்க....
நட்டி:: கீழ் லோக்கல் இல்லே, மேல் லோக்கல்
வடிவேலு:: என்னாது மேல் லோக்கல்னா,,, சொல்றதை சொஞ்சம் விவரமா சொல்றதுதுதுது....
நட்டி:: ஆமாய்யா, நாடு நாடா...கண்டம் கண்டமா போயிட்டு போர் அடிச்சிடுச்சு…..அடுத்த நான் டிக்கெட் போட்டிருப்பது (என்று மேலே கையை காட்டுகிறார்)
வடிவேலு: அட என்னங்க நீ்ங்க அறிஞர் அண்ணா மாதரி, எம்ஜியார் மாதிரி என்னமோ மேலே கையை காட்டீறீங்க, ஒன்னுமே புரியலயே,, ஆத்தா, என்ன பெத்த ஆத்....தா
நட்டி:: யோவ் மேலே என்னா தெரியுது?
வடிவேலு: அங்கிட்டு காக்கா தெரியுது, அப்பால வானம் தெரியுது
நட்டி:: அதுக்கும் மேல
வடிவேலு:: அதுக்கும் மேலயா? என்னா தெரியுதுதுதுதுதுது,,?,
நட்டி:: ஆம்மாய்யா வானத்திலே என்ன தெரியுது, நல்லா கண்ணை தொரந்துபாரு.....
வடிவேலு: என்னங்க குழப்பறீங்க, வானத்திலே இப்ப சந்திரன் தான் தெரியுது, அதுக்க என்ன இப்போ?
நட்டி:: அட அங்கத்தாய்யா அடுத்து வாரம் போகப்போறேன்
வடிவேலு: ஐயா ஐயா,,, என்னய்யா சொல்றீங்க.....நிசமாத்தா சொல்றீங்களா,,,,,ராசா என் ராசா ம்..... நீங்க போவீங்க நீங்க போவீங்கய்யா, உங்க மச்சம் அப்படி

(யப்பா,...யப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே என்றவாரே வடிவேலு தலைசுற்றி கீழே சாய, தன் பெட்டியோடு, நட்டி “உலகம் பிறந்தது எனக்காக…:” என்று பாடிக்கொண்டே “ஜல்சாரிக்கா” கண்டத்துக்கு “பஜன்ஜெட்” விமானத்தில் கால் வைக்க, விமானம் மேல் எழும்பும் சப்தத்தில் வடிவேலு துண்டைகானோம் துணியை கானோம் என்று தலைதெரிக்க அங்கும் இங்கும் ஓடி வானத்தில் பறக்கும் விமானத்தை பார்த்து “கிளம்பிடுச்சுப்பா.....கிளப்பிடுச்சு” என்றவாரே “புர் புர்…..அப்பா கிருகிருன்னு மேலே சுத்தி்கிட்டே இருக்காய்யா இந்த அளு” என்று தலை சாய்கிறார் மயக்கத்தில்),

No comments:

Post a Comment