Monday, December 28, 2009

திப்பு கோட்டையில் ராம்கி.




திப்பு கோட்டையில் ராம்கி.

நானும் எனது பாலக்காடு ஆட்டோ நண்பர் திரு ஹைதர் அலியும் பாலக்காடு கோட்டைக்கு 27.12.09 அனறு சென்றுவந்தோம். இதோ அக்கோட்டை பற்றிய விவரங்கள்.

பாலக்காட்டில் அமைநதுள்ளது பாலக்காடு கோட்டை (அ) திப்பு கோட்டை. 15 ஏக்க்ர் நிலபரப்பில் கட்டப்பட்டுள்ளது. 1788 ஆம் ஆண்டு ஹைதர் அலியால் பிரான்ஸ் நாட்டு இன்ஜ்னீயர்களின் உதவியோடு கட்டப்பட்டது. அலியின் படைத் தலைமையகமாக இக்கோட்டை இருந்ததாம். பிறகு இக்கோட்டையை ஆங்கியேர்களிடமிருந்து ஹைதர் அலியின் மகன் திப்பு சுல்லதான் கைபற்றினான். சதுர வடிவில் அமைக்கப்ட்டுள்ள இந்தக்கோட்டைக்குள் எதிராளி எளிதில் உள்ளே நுழையாதவண்ணம் சுற்றிலும் ஆழமான தண்ணீர் தொட்டி உள்ளது, இதன் அருகில் உள்ள மைதானத்தில் தான் திப்பு சுல்தான் தனது யாணைகளையும் குதிரைகளையும் நிறுத்திவைப்பானாம், அதற்கு கோட்டை மைதானம் என்று பெயர், இந்த திறந்த வெளிமைதானத்தில் தற்போது மீட்டிங். சர்க்கஸ் மற்றும் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. இக்கோட்டைக்குள் ஒரு சிறிய அனுமான் கோவிலும் உள்ளது, அக்காலத்தில் கட்டப்பட்டதாம். உள்ளே நுழைந்த்தும், ஒரே வெண்ணை மணம். மேலும் சிறைச்சாலை, சமையல் அறைகளும் உள்ளே பாழடைந்துகிடக்கிறது,. மிகப்பெரிய, பழமையான மரங்கள் தன்கிளை வரித்து கோட்டைக்குள் நமக்கு குளிர்ச்சியூட்டுகிறது.

அனுமதி இலவசம். அக்கோட்டையின் மீது மேலே ஏறிப்பார்த்தால் பாலக்காட்டின் அழகை ரசிக்கலாம். வாக்கிங் செல்ல ஏற்ற இடம். தற்போது அங்கு படகுசவாரி இல்லை...ரசிக்க வேண்டிய புராதன கோட்டை இது. பாலக்காடு சென்றால் இனி இதை ஒரு முறையாவது பாராமல் வரமாட்டீர்கள் அல்லவா?

ராம்கி

1 comment: