Friday, December 11, 2009

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள= ராம்கி

தன்னம்பிக்கையே வெற்றிக்கு முதல்படி எனலாம். பல வழிகளில் நாம் தனன்ம்பி்க்கையை இழக்க நேரிட்டாலும் கீழ்கண்ட எளிய முறைகளை நாம் பின்பற்றினால் நமது லட்சியத்தை எளிதில் எட்டமுடியும்.

ஆடை
உங்கள் ஆடையில் கவனம் செலுத்த வேண்டும். மலிவு விலையில் ஆடைகள் பலவாங்குவதற்கு பதில் சந்தர்ப்ப சுழ்நிலைக்கு எற்றவாறு அணியக்கூடிய நல்ல தரமான ஆடைகளை உடுத்தலாம். அனை எளிதில் கிழியாது, பார்க்கவும் எடுப்பாக இருக்கும். ஆடையை மாற்றி எளிய ஸ்டைலுக்கு மாறினால் நீங்கள் நினைப்பது நடக்கும். தன்னம்பிக்கைகை ஊக்கப்படுத்தும் குணம் நாம் அணியும் ஆடைகளுக்கு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. உங்கள் காலணியிலும் கவனம் செலுத்தவும்.

வேக நடை
அட வேக நடையில் என்ன ஆகப்போகிறது என்று தானே நினைக்கிறீர்கள். ஒருவரது நடையை வைத்தே அவர் தெம்பாக வருகிறாரா சோம்பலாக வருகிறாரா என்று கண்டு பிடித்துவிடமுடியும், சற்று வேகமான நடையை பார்த்துமே எதிரே இருப்பருக்கு நம்மால் எதையும் சுறுசுறுப்பாக முடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும். ஆகவே இன்றிலிருந்து 25 சதவிகித வேகத்தை உங்கள் வழக்கமான நடையில் கூட்டுங்கள்.

நிமிர்ந்து நிலை
எப்போதுமே நிமிர்ந்த நிலையில் நிற்கவோ, அமரவோ வேண்டும், தோள்களை தொங்கியபடியே வந்தால் அவரால் தனனம்பி்க்கையோடு எதையும் செய்யமுடியாது என பார்ப்பர் எண்ணிவிடுவர்,. நிமிர்ந்து நிற்பது, தலையை தொங்கப்போடாமல்இருப்பது, எதிர் உள்ளவர்களின் கண்களை நேரே பார்த்து பேசுவது போன்றவை தன்னம்பிக்கை உள்ளது என்பதை சொல்லாமல் சொல்லும் குணமாகும், பார்ப்பவருகும் நாம் நல்ல தன்னம்பிக்கை உடையவர் என்ற உணர்வை உண்டாக்கும். ஆகவே சரியான நிலையில் நடப்பது, உட்கார்வது, நிர்ப்பது நல்லது.

கேட்பது
கேளுங்க கேளுங்க நல்ல பாசிடிவ் ஆன விஷயங்களையும் தன்னம்பிக்கை ஊட்டும் நல்ல பேச்சாளர்களின் பேச்சைஅடிக்கடி கேட்கவும், 30=60 நொடிக்குள் உங்களது லட்சியம் மற்றும் எதிர்காலத்தைப்பற்றி சிறு குறிப்பு எடுத்து கண்ணாடி முன்நின்று தினமும் சப்தமாக பேசி பழகுங்கள், அல்லது எவ்வப்போது தன்னம்பிக்கையை தூண்டவேண்டுமோ அப்போது இவ்வாறு பலமுறை சொல்லிப்பார்க்கவும்.

நன்றி
உங்களது வாழ்க்கையில் எவ்வளவோ நல்லதும் வெற்றியும் கிடைத்திருக்கும். அவற்றை பட்டியல் இடுங்கள் அது உங்களது படிப்பாகட்டும், உங்களது திறமையாகட்டும், நல்ல உறவாகட்டும், அவ்வாறு பட்டியல் இடும்போதுதான் எத்தனை விதமான நல்ல வாய்ப்புகள் மற்றும் தன்னம்பிக்கை ஊட்டக்கூடவை விஷயங்கள் நடந்து உள்ளது என்பது தெரியும், இவை நமது மனச்சோர்வை அகற்றி தன்னம்பிக்கையோடு வாழ உதவியாக இருக்கும்.
= ராம்கி

No comments:

Post a Comment